Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Thursday, October 23, 2014

உடலில் எந்த உறுப்புகளை தானமாக பெற முடியும்..?

கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புகளையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.


ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்),

அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.

Friday, October 3, 2014

மார்பு பகுதிக்கு வலிமை தரும் செஸ்ட் ஃப்ளை இயந்திரம்


ஜிம்மில் பல்வேறு உபகரணங்கள் மார்பு பகுதி விரிவடைய இருக்கின்றன. அவற்றுள் இந்த செஸ்ட் ஃப்ளை இயந்திரம் விரைவில் பலன் தரக்கூடியது. செஸ்ட் ஃப்ளை இயந்திரம் மார்பு பகுதியிலுள்ள‌ தசைகளை மட்டும் குறிவைத்து பயிற்சி செய்ய‌ உதவுகிறது.

இவ்வகை இயந்திரங்கள் மல்லாந்து படுத்து (அ) உட்கார்ந்து பயிற்சி செய்யக்கூடிய‌ இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த இயந்திரங்கள் வசதியை அதிகரிக்க‌ பட்டைகள் (பேடுகள்) கொண்டுள்ளன‌. இதில் பயிற்சி செய்யும் போது பேடுகள் இடையேயான‌ தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்..

இந்த உடற்பயிற்சி இயந்திரம் கொண்டு டிரைசெப்ஸ்கள் மற்றும் தோள்களில், கூட பயிற்சிகள் செய்ய‌ முடிந்தாலும் இவை முழுக்க‌ முழுக்க‌ மார்பு தசைகளை வலுப்படுத்தவே இந்த உபகரணம் உதவுகிறது.

அழகான, வலிமையான மார்பகங்களை வேண்டும் என நினைக்கும் ஆண், பெண் இருபாலரும் இந்த உபகரணத்தை பயன்படுத்தலாம். வீட்டில் இதை வாங்கி செய்ய விரும்புபவர்கள் முதலில் ஜிம்மில் பயிற்சி பெற்ற பின்னர் நிபுணரின் ஆலோசனையின் பேரில் இதை பயன்படுத்தலாம்.

Thursday, October 2, 2014

அதிக நேரம் தூங்குவது நல்லதா..? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!


அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.

இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.

அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

Tuesday, September 2, 2014

உடல் பருமனாக இருக்கிறதா..? கவலையை விடுங்க..!


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

4. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும்.

5. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.

6. காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும், உடல் இளமை பெறும்.

Sunday, August 24, 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இதோ உங்களுக்காக..!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

முதுமையிலும் இளமை வேண்டுமா..? அப்போ இதைப்படிங்க…!

அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்.

சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம் கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கேல் கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம். பசலைக் கீரை ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய் குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.

பால் பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.

 தக்காளி தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும். 

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறைகள்..!

ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை. ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது.

ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி! மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும். 

Saturday, August 23, 2014

நீரிழிவு நோய் குறித்த கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!

நீரிழிவு என்பது ஒரு தொற்று நோய்... அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் இவ்வியாதி வரும்... இந்த நோய் வந்தால் சர்க்கரையே சாப்பிடக் கூடாது... இது ஒரு பரம்பரை வியாதி, பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது... இந்த நோய் வந்தவர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரம் அது ஆறாது... நீரிழிவைக் குணப்படுத்த வல்லது இன்சுலின்...

இப்படி நீரிழிவு நோய் குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசுவதுண்டு. ஆனால், இவற்றில் எது உண்மை? எது கட்டுக் கதை? இது குறித்து நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில மருத்துவர்கள் கூட நீரிழிவு என்பது ஒரு நோயே கிடையாது என்று கூறுவார்கள். இன்சுலின் பற்றாக்குறையால் தான் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரித்து இருக்கும். இந்த அதிகப்படியான சர்க்கரையைக் குறைக்கவே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வார்கள்.

இனி, நீரிழிவு குறித்த சில கட்டுக் கதைகளையும், உண்மைகளையும் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுக் கதை: அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு ஏற்படும்.

உண்மை: இன்சுலின் பற்றாக்குறையால் மட்டுமே நீரிழிவு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இன்சுலின் குறைவதால் டைப்-1 நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலினை நம் உடல் பொதுவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதற்குப் பெயர் தான் டைப்-2 நீரிழிவு. பெரும்பாலும், டைப்-2 நீரிழிவு பரம்பரை பரம்பரையாகத் தான் ஏற்படும். உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவுகள் மூலம் நீரிழிவை சரிக்கட்டலாம். இனிப்புகளைக் குறைவாக உண்பது நலம்.

கட்டுக் கதை: நீரிழிவு ஒரு தொற்று வியாதி ஆகும்.

உண்மை: கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறைவால் மட்டுமே நீரிழிவு ஏற்படுகிறது. இதை ஒரு நாளமில்லா நோய் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கட்டுக் கதை: நீரிழிவு ஏற்பட்டால், இனி வாழ்க்கையில் சர்க்கரையே சாப்பிடக் கூடாது.

உண்மை: நீரிழிவு உள்ளவர்கள் தாராளமாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அளவோடு மட்டுமே. சர்க்கரை மட்டுமல்ல, கார்போஹைட்ரேட் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமப்படும்.

கட்டுக் கதை: நீரிழிவு வந்துள்ள குழந்தைகள் இனிப்பே சாப்பிடக் கூடாது.

உண்மை: குழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்பட்டால், அவர்களுடைய கட்டுப்பாடான உணவில் குறிப்பிட்ட அளவு சர்க்கரை கலந்த உணவையும் சேர்த்துக் கொள்ளலாம். முழுவதும் இனிப்பே சாப்பிடக் கூடாது என்ற கட்டாயம் கிடையாது.

கட்டுக் கதை: இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாக உள்ளது என்று உங்களுக்குத் தோன்றினால், டாக்டரிடம் செக்கப் செய்ய போக வேண்டியதில்லை.

உண்மை: நீரிழிவை ஒரு நோயாக எடுத்துக் கொள்ளக் கூடாதே தவிர, அதை நாம் கண்டிப்பாக சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும். அடிக்கடி டாக்டரிடம் சென்று செக்கப் செய்து கொள்ள வேண்டும். வழக்கமான உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் கண்டிப்பாகத் தொடர வேண்டும்.

கட்டுக் கதை: நீரிழிவு உள்ளவர்களால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கூடியுள்ளதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

உண்மை: சர்க்கரையின் அளவை சும்மா ஃபீல் பண்ணி நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தாகம், உடல் சோர்வு ஆகியவற்றின் மூலம் சிலர் இதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பலருக்கு இதுப்போன்ற அறிகுறிகள் தோன்றுவதில்லை. எனவே, கண்டிப்பாக இது குறித்து பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுக் கதை: சிலருக்கு இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பது இயல்பு தான். அதுவே நீரிழிவுக்கான அறிகுறி அல்ல.

உண்மை: இரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருப்பது சாதாரண விஷயமில்லை. நீரிழிவு இல்லாதவர்களுக்கு சில நேரங்களில் தற்காலிகமாக அதிக சர்க்கரை இரத்தத்தில் தோன்றும். ஆனாலும், நீரிழிவு உள்ளதா இல்லையா என்பதைப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

கட்டுக் கதை: சிறிதளவு மட்டுமே நீரிழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வாய்ப்புள்ளது.

உண்மை: அப்படி சிறிது, பெரிது என்றெல்லாம் கிடையவே கிடையாது. ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா, அது டைப்-1 அல்லது டைப்-2 என்பதுதான் முக்கியம்.

கட்டுக் கதை: இது ஒரு பரம்பரை வியாதி, உங்கள் பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது.

உண்மை: உங்கள் பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புக்கள் மற்றவர்களை விட அதிகம். பரம்பரையாக நீரிழிவு இல்லாத சிலர் கூட இந்தக் காலத்தில் இந்தக் குறைபாட்டால் அவதிப்படுவதை நாம் காண முடியும். உடல் எடை மற்றும் வாழ்க்கை முறைகள் தான் பெரும்பாலும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கட்டுக் கதை: நீரிழிவை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது.

உண்மை: நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்றக் குறைபாடு என்பதால் அதைக் கட்டுப்படுத்த நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. முறையான உடற்பயிற்சிகள், கட்டுப்பாடான உணவுகள், சரியான மருத்துவம்... இம்மூன்றையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து, நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் நிறைய உண்டு.

கட்டுக் கதை: நீரிழிவை இன்சுலின் குணப்படுத்துகிறது.

உண்மை: நீரிழிவு ஒரு வளர்சிதை மாற்றக் குறைபாடு என்பதால், அது ஒரு குணப்படுத்தக்கூடிய நோயல்ல. தொடர்ந்து இன்சுலினை எடுப்பதால், அதைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை இன்சுலின் ஊசி கட்டுப்படுத்துகிறது, அவ்வளவே. இன்சுலின் குறைபாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.

கட்டுக் கதை: நீரிழிவு உள்ள அனைவரும் இன்சுலின் எடுத்துக் கொள்வது அவசியம்.

உண்மை: இன்சுலினை கணையம் சுரக்காததால், டைப்-1 நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் சில டைப்-2 நீரிழிவு கொண்டவர்கள், இன்சுலினுடன் சில மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்.

கட்டுக் கதை: நீரிழிவுக்கான இன்சுலினை மாத்திரைகள் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை: இன்சுலினை மாத்திரைகளாகப் போட்டுக் கொள்ள முடியாது. இன்சுலின் என்பது ஒரு புரதம். அதை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளவே முடியாது. அது இன்சுலினை சுரக்க உதவாது. ஊசிகள், இன்ஹேலர்கள் மூலம் மட்டுமே இன்சுலினை இரத்தத்தில் சுரக்க வைக்க முடியும்.

கட்டுக் கதை: இன்சுலினை அதிக அளவு எடுத்துக் கொண்டால், நீரிழிவு இன்னும் மோசமாகி விடும்.

உண்மை: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கும் வகையில், இன்சுலினை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு டோஸ் என்பதை உங்கள் டாக்டர் கூறுவார்.

கட்டுக் கதை: குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு விரைவில் சரியாகும்.

உண்மை: ஒருபோதும் இல்லை. இன்சுலின் அளவு குறையும் போது, டைப்-1 நீரிழிவு உள்ள குழந்தைகளுக்கு, குணமாகும் வரை எப்போதும் இன்சுலினைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேப்போல், டைப்-2 நீரிழிவுக் குழந்தைளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்துக் கொண்டே போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். எனவே, அதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல!

7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...!

நண்பர்களே! உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்கு ஆரோக்கியமான வழியை பின்பற்ற ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு டயட் முறையை உங்களுக்காக கொடுத்துள்ளது.

மேலும் இந்த முறையை படிக்கும் போது நீங்கள் இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளையும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் பொய். ஏனெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு வாரம் பின்பற்றி வந்தால், நிச்சயம் 7 நாட்களுக்கு பின்னர் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதை காண்பீர்கள்.

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை தவறாமல் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். இதனால் உங்களை 'குண்டுமணி' என்று கிண்டல் செய்தவர்கள், ஒரு வாரம் கழித்து கிண்டல் செய்யாத வகையில் மாற்றத்தைக் காணலாம்.

முதல் நாளில் சூப் டயட்டை பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த எந்த சூப்பை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அசைவ சூப் குடிக்கும் போது மட்டன் சூப் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக சூப்பில் உப்பை அதிகம் சேர்க்காமல், முடிந்தால் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இரண்டாம் நாளில் முட்டைக்கோஸை பலவாறு செய்து சாப்பிட வேண்டும். இதனால் முட்டைக்கோஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

கிரேப் ஃபுரூட்டில் கொழுப்புக்களை கரைக்கும் நொதிகள் அதிகம் இருப்பதால், மூன்றாம் நாளில் கிரேப் ஃபுரூட் டயட்டை பின்பற்றுங்கள். இதனை அப்படியே அல்லது ஜூஸ் என்று எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

ஆம், வெறும் பழங்களை சாப்பிட்டாலும் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதற்கு நான்காம் நாளில் விருப்பமான பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.

காய்கறிகளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே ஐந்தாம் நாளில் பசலைக்கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு என்று வெறும் காய்கறிகளை விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக அப்படி சமைத்து சாப்பிடும் போது உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். மேலும் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ தான் சாப்பிட வேண்டும்.

ஆறாம் நாளில் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். எனவே ஆறாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், சுடுநீரை குறைந்தது 6-8 லிட்டராவது குடித்து விட வேண்டும். இதனால் சுடுநீரானது கொழுப்புக்களை கரைத்துவிடும்.

ஏழாம் நாளில் நல்ல விருந்துணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக அப்படி விருப்பமான உணவுகளை உட்கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக வயிறு நிறைந்து வழியும் அளவு சாப்பிட வேண்டாம். மேலும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

மேற்கூறியவாறு ஒரு வாரம் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். ஆனால் எந்த ஒரு செயலை செய்யும் போது, நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், அந்த செயல் வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமட்டுமின்றி பலருக்கு இந்த டயட் ஒர்க் அவுட் ஆகாது, ஏனெனில் இதை மட்டும் எப்படி சாப்பிட்டால் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கக்கூடியவை. எனவே நம்பி மேற்கொள்ளலாம்.

Thursday, August 21, 2014

அஜீரண பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம் - இதோ உங்களுக்காக...!

நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.

மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். இந்த அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பலன் அடைய முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்.

• வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமநிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. இதில் குறைவான அமிலத் தன்மை இருப்பதால் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

• துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

• பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது.

எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

• புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவையூட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்றில் அமிலத்தைக்குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.

Monday, August 18, 2014

பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா..? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது.

இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.

காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும்.

அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது.

தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.

இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது.

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும்.

குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைப்பதற்கு நொறுக்குத்தீனி சிறந்த வழி தானா..?

இன்று பெருகி வரும் நவீன உலகத்தில் நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுகின்றோம். இதனால் நமது உடல் வலிமை குறைந்து பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது. ஆகவே, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மனவலிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது எல்லோர் வாழ்விலும் மன அழுத்தம் என்பது அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. மனஅழுத்தம் ஒரு நோயாகவே மாறி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்சனைகளை உருவாக்குகின்றது. இந்த நோய்க்கு காரணமாக இருப்பது அதிக வேலைப்பளு, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஊட்டச்சத்து இல்லா உணவு பழக்கவழக்கங்கள் தான். இதுவே அதிக மன அழுத்தம், மன மற்றும் உடல் வலுக்குறைகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு போன்றவற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறாக, மன அழுத்தம் ஒருவரது வாழ்வில் பெரிதான பிரச்சனையாக மாறி வருகின்றது. அதனால் இதனை தவிர்த்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் நொறுக்கு தீனி. நீங்கள் டென்சனாகவோ சோகமாகவோ இருக்கும் போது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்க ஏதாவது சாப்பிட வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி நொறுக்கு தீனி சாப்பிடுவது தான். குறிப்பாக, இனிப்பு வகைகள் மிகுந்த பலனை அளிக்கும். இதனை சிலர் நம்ப மறுப்பார்கள். ஆனால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நொறுக்குத்தீனி உங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ஊக்கிகள்

 நாம் அதிக டென்சனாகவோ, வேலைப்பளு அதிகமாக இருந்தாலோ, கலக்கம் இருந்தாலோ நமது உடல் சில மனஅழுத்தம் உண்டாக்கும் ஊக்கிகளை உற்பத்தி செய்யும். இந்த ஊக்கிகளின் காரணமாக நமது உடலில் மனஅழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் நமது உடல் மிகவும் தளர்வடைந்து சக்தியின்றி மாறிவிடும். இந்த சமயங்களில், இனிப்பு நொறுக்குத் தீனி நமது மனஅழுத்தத்தை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இருக்கும். இனிப்பு நொறுக்கு தீனிகள் மனஅழுத்தம் தொடர்பான ஊக்கிகளை குறைக்கச்செய்யும். குறைவான ஊக்கிகள் உற்பத்தியினால் மனஅழுத்தம் குறையக்கக்கூடும்.

சுகாதாரம்:-  நொறுக்குத் தீனி என்பது மனஅழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழிமட்டும் அல்லாது மிகவும் சுகாதாரமான வழியாகும். ஆம், நீங்கள் மனஅழுத்தத்தின் போது உட்கொள்ளும் உணவு சுகாதாரமாக இருந்தால் தான் நன்மையை அளிக்கும். ஊட்டச்சத்து உணவுகளான பழங்கள், பெர்ரீஸ், டார்க் சாக்லேட், பால் பொருட்கள் போன்றவை மனஅழுத்தத்தை குறைக்க உதவும். மனஅழுத்தம் தொடர்பான ஒழுங்கின்மையையும் சரிசெய்யும்.

அமைதியாக்குதல்:- நொறுக்குத் தீனி மனஅழுத்தத்தை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாது நமது மூளையையும் உடலையும் அமைதிப்படுத்துக்கின்றது. உங்கள் மனதை அமைதிப்படுத்துவது மற்றும் தணிப்பது என்பது மிகவும் அவசியமானதாகும். எதிர்பாராமல், மனஅழுத்தத்தின் போது உங்கள் மனதிற்கு ஓய்வு கிடைப்பது இல்லை. அதனால், நொறுக்கு தீனி உங்கள் மனதை எளிதாக்கும்.

மெட்டபாளிசத்தை மேம்படுத்துதல்:- ஊட்டச்சத்து உள்ள உணவை நொறுக்கு தீனியாக உட்கொண்டால், மனஅழுத்த ஊக்கிகளால் குறையும் மெட்டபாளிசத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளுவதால் நமது உடல் பழைய நிலையை அடைவதோடு பழுதடைந்துள்ள நிலையில் இருந்து நமது உடலை மீட்கச்செய்யும். மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலில் உள்ள ஊட்டச்சத்தை மேம்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கும் சக்தியைத் தரும். அதனால், மனஅழுத்த நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது மிகவும் நன்று.

மனநிலை மாற்றங்கள்:- கொடிய மனநிலைக்கு மனஅழுத்தமே காரணமாகும். இது ஒருவரை நிலைகுலைய வைத்து கவலையில் ஆழ்த்தும். இந்த சமயங்களில் டார்க் சாக்லேட் போன்றவை மனநிலையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். மனஅழுத்தம் தொடர்புடைய ஊக்கிகளை குறைத்து நல்ல மனநிலைக்கு கொண்டு வரும். நீங்கள் இந்த மனநிலை மாற்ற பொருட்களை கவலையாக இருக்கும் போது உபயோகிக்கலாம். இவ்வகை உணவினால் மனநில அளவுகள் மாறுபட்டு மனஅழுத்தத்தை குறைக்கும். இதனால், மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் இந்த நொறுக்குத் தீனி சிறந்த முறையாகும்.

மேற்கூறிய இவை அனைத்தும் நொறுக்குத் தீனி தான் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக இருக்கின்றது என்பதை கூறுகின்றது. மனஅழுத்தத்தை குறைக்கும் வேறு சில வழிகள் : புத்தகம் படிப்பது, தூங்குவது, பாட்டு கேட்பது, சுற்றுலா செல்லுவது போன்றவை ஆகும். மற்றவரிடம் பகிர்தல் அல்லது பேசுதல் போன்றவையும் மனஅழுத்தத்தை குறைக்கும்.

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து முதுகு வலி பின்னி எடுக்குதா..?

மனம் மயங்க வைக்கும் கார்பரேட் உலகத்திற்கு உங்களை தாரை வார்த்து விட்டவரா நீங்கள்! நாள் முழுவதும் இதற்காக கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருப்பதால் சோர்ந்திருப்பவரா?

கம்ப்யூட்டருக்கு முன்னால் முறையான நிலையில் அமராத போது, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் உங்களுடைய கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் கடுமையான வலி உணர்வுகள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நல்ல நிலையில் கம்ப்யூட்டருக்கு முன்னர் அமரும் நிலையையும், மேலும் சில நல்ல பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க உதவும்.

நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும் அல்லது படுக்கும் போதும் உங்களுடைய உடலை சரியான நிலையில் வைத்திருப்பதும் மற்றும் தசைகள் அல்லது மூட்டுகளில் வலி வராமல் இருக்கச் செய்வதும் தான் நல்ல நிலை எனலாம்.

தசைகளை திறமையாக பயன்படச் செய்ய விரும்பினால், எலும்புகளையும், மூட்டுகளையும் நேராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சரியான நிலையில் இவ்வாறு வைத்திருப்பதன் மூலமாக மூட்டுகளில் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும். குறிப்பாக நீங்கள் கம்ப்யூட்டர்களுக்கு முன்னால் நெடுநேரத்திற்கு அமர நேரும் வேளைகளில், சரியான நிலையில் அமர்வது உங்களுடைய முதுகெலும்பை அழுத்தம் உணராத இடமாக வைத்திருக்கவும் மற்றும் தசை வலி மற்றும் முதுகு வலி வராமல் வைத்திருக்கவும் உதவும். சிறந்த பார்வைக்கு மட்டுமல்லாமல், சரியான நிலையில் அமர்வதால் தசை வலிகள் குறைவதுடன், உடலில் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவிட வைக்கவும் முடியும்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய முதுகையும் மற்றும் தோள்பட்டைகளையும் நேராக வைத்திருக்கப் பழக வேண்டும். மேலும், உங்களுடைய பிட்டங்கள் நாற்காலியின் பின்புறத்தை தொட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும்.

உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை சாதாரணமாக இருக்கச் செய்யும் வகையில் குஷன்களையோ அல்லது சுருட்டி வைக்கப்பட்ட டவல்களையோ பயன்படுத்தலாம். சரியான நிலையில் உட்கார்வதற்காக, உங்களுடைய நாற்காலியின் முனையில் அமர்ந்து கொண்டு, முன்னோக்கி மெதுவாக சாய்ந்து கொள்ளுங்கள். பின்னர், உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை முடிந்த வரையில் நேராக வரச் செய்யுங்கள். இந்த நிலையிலேயே சில நொடிகளுக்கு இருக்கவும். அதன் பின்னர், உங்களுடைய இடுப்பு பகுதிக்கு உடலின் எடையை தள்ளியவாறு, சுமார் 10 டிகிரிகளுக்கு வளைந்து உட்காராலாம்.

கம்ப்யூட்டரின் திரையிலிருந்து கையை நீட்டும் தொலைவில் அமர்ந்து கொள்வதன் மூலம், உங்களுடைய பார்வையின் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும். வலது புறமாக உங்களுடைய முழங்கால்களை மடித்து உட்காரலாம் மற்றும் கால்களை குறுக்காக வைத்தவாறு அமர்வதை தவிர்க்கவும். உங்களுடைய கால் பாதங்கள் தரையை தொடுமாறு வைத்திருக்கவும் மற்றும் உங்களுடைய கண்களை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வைத்திருக்காமல் நேராக வைத்திருக்கவும். உங்களுடைய புஜங்கள் மற்றும் முழங்கைகளை நாற்காலியில் ஓய்வு நிலையில் வைத்திருங்கள் மற்றும் தோள்பட்டைகளையும் ஓய்வாக வைத்திருங்கள்.

அவ்வவ்போது ஓய்வு இடைவேளை எடுத்துக் கொள்வதும் அவசியமானது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஒரே நிலையில் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும். நீண்ட நேரம் வேலை செய்ததாக நினைத்தால், சற்றே கழுத்துக்கான பயிற்சிகளை செய்திடுங்கள் - உட்கார்ந்த இடத்திலேயே இந்த பயிற்சியை செய்யலாம். உங்களுடைய கழுத்தை முன்பக்கமிருந்து, பின்பக்கமாக திருப்பவும் மற்றும் பக்கவாட்டில் இடப்பக்கமிருந்து, வலப்பக்கமாக திருப்பவும். உங்களுடைய கைகள் இரண்டையும் பின்பக்கமாக வைத்துக் கொண்டு, ஃபார்வார்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பேக்வார்ட் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளையும் கூட நீங்கள் செய்யலாம். இந்த நிலையிலேயெ ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு உங்களை நிலைநிறுத்தி வைத்திருங்கள்.

30 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்கவும் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, கழிவறைக்கு சென்று வருவது, அருகில் பணியில் உள்ளவரின் இடத்திற்கு சென்று வருவது அல்லது கால்களை நீட்டி முழக்கப் பயன்படும் வகையில் உள்ள அலுவல் இடததிற்கு செல்வது போன்ற செயல்களை செய்யுங்கள். இவ்வாறான சரியான நிலைகளை கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது, ஒவ்வொரு நாள் வேலையின் போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதையும் மற்றும் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பதையும் உணர்வீர்கள்.

எலும்புகளை மட்டுமல்ல... இதயத்தையும் பாதிக்கும் மூட்டுவலி..!

ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான உடல் வலி...ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வலி... ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம். சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியின் தீவிரம் எல்லை மீறும் போதுதான் அதை நாம் கவனிப்போம். ‘ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டீர்கள்?’ என்று ஆரம்பிக்கிற மருத்துவர், வலியின் தொடக்கத்தில் நாம் உணர்ந்து, அலட்சியம் செய்த அறிகுறிகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அப்போது காலம் கடந்திருக்கலாம்.

சின்ன அறிகுறியுடன் உங்களை சீண்டிப் பார்க்கிற வலிகளை சீக்கிரமே அடையாளம் கண்டு கொண்டால், அதன் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் வலி நிர்வாக மருத்துவர் குமார். அந்த வகையில் பரவலாக எல்லோரையும் பாதிக்கிற மூட்டுவலிகளைப் பற்றி, அவற்றின் அறிகுறிகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகளுடன் விரிவாகப் பேசுகிறார் அவர்.

மூட்டுவலி என்பது பொதுவான பெயர். இதில் ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆங்கிலோசிங் ஆர்த்ரைட்டிஸ், கவுட் ஆர்த்ரைட்டிஸ் எனப் பல வகைகள் உள்ளன. எலும்பு மூட்டுகளைப் பாதிக்கும் நோய்கள் இவை எல்லாம்.

ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்:- இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குழப்பத்தின் காரணமாக, மூட்டுத்திசுக்களை நோய்க்கிருமிகளாக நினைத்து, நம் உடலிலிருந்தே சில ரசாயனங்களை உண்டாக்கி, மூட்டுத்திசுக்களைப் பாதிக்கிறது. 30 முதல் 60 வயதுக்காரர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிற இந்த நோயின் அறிகுறிகள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை.

உடல் முழுவதும் வலி, குறிப்பாக மூட்டுகளில் அதிக வலி, சோர்வு, மூட்டு வீக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, காலையில் எழுந்ததும் கால்களில் விரைப்பு, ஓய்வுக்குப் பிறகும் கை, கால்களில் விரைப்பு நீடிப்பதும், சோர்வு தொடர்வதும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உணரப்படலாம். இந்த நிலையிலேயே மருத்துவரை அணுகினால், நோயின் தீவிரத்தை கண்டறிந்து, குணப்படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தினால், மூட்டுகளில் வீக்கம், அதிக வலி, மூட்டுகள் தேய்வடைந்து முற்றிலும் பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும், நோயின் தீவிரம் எப்படியிருக்கிறது என்பதையும் சில ரத்தப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகையான மூட்டுவலி ஒருவரது எலும்புகளை மட்டுமின்றி, இதயத்தையும் பாதிக்கக் கூடியது. மூட்டு மட்டுமின்றி, முதுகெலும்பு, முழங்கால், கணுக்கால்களிலும் வலி உணரப்படும். எனவே, சிகிச்சையையும் பயிற்சிகளையும் பாதியில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக பயிற்சிகளை முறையாகச் செய்து வந்தால் எலும்புகள் நெகிழ்வுடன் காணப்பட்டு, வலி குறையும். பயிற்சிகளை ஆரம்பக் கட்டத்திலேயே மெதுவாக, குறைவாகத் தொடங்கவும்.

உணவில் மூன்றில் 2 பங்கு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்தது. அசைவத்தில் மீன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் சாலமன் மற்றும் டுனா மீன்கள் சிறந்தவை. அவற்றில் உள்ள ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் வலியைக் குறைக்க உதவும். காய்கறிகள் தவிர, பழங்கள், தானியங்களும் முக்கியம். ஸ்ட்ராபெர்ரி பழமும், ஆலிவ் ஆயிலும் நல்லவை. உணவில் கால்சியம், செலினியம், வைட்டமின் டி சத்துகள் நிறைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கோழி இறைச்சி, வாட்டப்பட்ட உணவுகள் (க்ரில்), துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்திய உணவுகள் போன்றவை வலியை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நோய்க்கு, இதய நோயுடன் தொடர்புண்டு என்பதால் கொழுப்பு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்:- மிகப்பரவலாகக் காணப்படுகிற முக்கியமான நோய் இது. முழங்கால், இடுப்பு, இடுப்பு மூட்டு, முதுகெலும்புப் பகுதிகளில் வலி இருக்கும். வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிற இது, 90 சத விகிதம் எலும்புத் தேய்மானத்தால் வருகிறது. வயதின் காரணமாக எலும்புகளில் உண்டாகிற தேய்மானம், மூட்டில் எப்போதோ ஏற்பட்ட விபத்து, அடி, காயம், பருமன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை போன்றவையே பிரதான காரணங்கள். வலி மருந்துகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் நிவாரணம் பெறலாம். தேவைப்பட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இப்போது தீவிர வலி நிவாரண சிகிச்சையின் மூலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைக் கூடத் தவிர்க்க முடிகிறது. ரேடியோ அலை சிகிச்சை முறை மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறைகளும் உதவியாக இருக்கும்.


ஆங்கிலோசிங் ஸ்பான்டிலைட்டிஸ்:- முதுகெலும்பிலுள்ள சிறு சந்திப்புகளிலும் இடுப்பிலும் உணரப்படுகிற வலி இது. முக்கியமாக இடுப்புவலி என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகிற குழப்பம் காரணமாகவே வரும். அதி தீவிர வலி நிவாரண சிகிச்சை முறையின் மூலம் வலியைக் குறைத்து, பயிற்சிகளையும் தொடர்வதன் மூலம் வேதனையிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இடுப்பெலும்பில் மருந்தைச் செலுத்தியும் வலியைக் குறைக்கலாம்.

கவுட் ஆர்த்ரைட்டிஸ்:- உடலிலுள்ள யூரிக் அமிலம் எனப்படுகிற ரசாயனம், மூட்டில் படிவதே இந்த வலிக்கான காரணம். கை, கால்களில், கால் பெருவிரல்களில், கணுக்கால்களில், முழங்கை சந்திப்புகளில் அதிக வலி தெரியும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைச் சரி பார்த்து, அதைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பயிற்சிகளும் அவசியம். அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இந்த வகை நோய்க்கு வழி வகுக்கலாம் என்பதால் அதுவும் வேண்டாம். குடிப்பழக்கம் கூடாது. அதிக இனிப்பு சேர்த்த உணவுகள், மைதாவில் செய்த உணவுகள் போன்றவையும் ஆபத்து.

இவற்றுக்குப் பதிலாக, சுத்தமான பழச்சாறுகள், முழு தானிய உணவுகள், காய்கறிகள், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த பால் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 16 டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்:- அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது.

உடற்பயிற்சிகள் மிக முக்கியம். அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். 

Sunday, August 17, 2014

உஷார்.. உஷார்... உயர் ரத்த அழுத்தம் - உங்களுக்கு 40 வயசாகிடுச்சா..?

மிதமிஞ்சிய ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்க வாதம், மூளையில் ரத்தக்குழாய் வெடிப்பு, அறிவுத்திறன் குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்தாலும், கால் தசைப்பிடிப்பு, தலைசுற்றல், உறக்கமின்மை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

 அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவர்களால் தங்களுடைய ரத்த அழுத்தத்தை மருந்தில்லாமல் இயற்கையாகவே குறைக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. மருந்துகளுக்கு பதிலாக இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


ரத்த அழுத்தம் குறைக்கும் முறை குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது, 

மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற தியானப் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைக்க இந்தப் பயிற்சிகள் உதவும். மெதுவாக மூச்சு விட்டபடி மென்மையான பாரம்பரிய இசையை தினமும் அரை மணி நேரத்திற்கு கேட்டால் ரத்த அழுத்தம் குறையும். ‘காஃபின்‘ நீக்கப்பட்ட காபி, சோயா, கொழுப்பில்லாத பால் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களையோ, காய்கறிகளையோ சாப்பிடுவது ரத்த அழுத்தம் குறைய உதவும்.

ஒருநாளைக்கு 3 கப் செம்பருத்தி டீ குடித்தவர்களுக்கு இதயத்தை பாதிக்கும் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள், ஆக்ஸிஜனை அதிகத் திறனோடுப் பயன்படுத்த இதயத்துக்கு உதவுகிறது. இதனாலும் இரத்த அழுத்தம் குறைகிறது. உணவில் உப்பைக் குறைப்பது ரத்த அழுத்தத்திற்கு மிக நல்லது. மேற்சொன்ன விஷயங்களை கடைபிடித்து ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற கொடுமையான நோய்களிலிருந்து உங்களை உஷாரா பார்த்துக்கோங்க.

Saturday, August 16, 2014

நீங்கள் அதிகம் பதற்றமடைகிறீர்களா?- உங்கள் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளை சற்று கண்காணியுங்கள்

ஒருவர் அதிக பதற்றத்துடன் காணப்படுவதற்கும், அவர் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். இது குறித்து லண்டனில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில்: "ஒருவர் அதிகமான பதற்றத்துடன் காணப்படுவதற்கும், பேஸ்புக்கில் புகைப்படங்களை மிக அதிக அளவில் அப்லோட் செய்வதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. பிறரால் கண்டுக்கொள்ளப் பட வேண்டும், அதிகமான “லைக்ஸ்” வேண்டும் என்று எண்ணுபர்களே இப்படி அதிக அளவில் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுபவராக இருப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பதில் தேர்ந்தவராகவும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகஜமாக பழகுபவர்கள் vs பதற்றமானவர்கள்:


பிறரிடம் சகஜமாக பழகும் எக்ஸ்ட்ரோவெர்டுகள் பேஸ்புக்கில் அவ்வப்போது தங்கள் புரொபைல் பிக்சரை மட்டுமே மாற்றுகின்றனர். ஆனால், பதற்றம் நிறைந்த நியூரோடிக்ஸ் அதிகமான புகைபடங்களை ஒரே அல்பம் உள்ளே அடிக்கடி அப்லோட் செய்கின்றனர்.

இதற்கு காரணம், அவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டன் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அஸார் எஃப்தெகார் கூறியுள்ளார்.

இந்த ஆய்விற்காக அய்வாளர்கள் 17 வயது முதல் 55 வயது வரை கொண்ட 100 பேரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது தோற்றத்தைப் பற்றி அவரது சுய கருத்து உள்ளிட்ட இன்னும் சில கேள்விகள் கேட்டக்கப்பட்டன. அதன் பின்னர், இவர்கள் எப்படி புகைப்படங்களை அப்லோட் செய்கிரார்கள், ஃபேஸ்புக் நன்பர்களிடம் எப்படி உரையாடிகிறார்கள் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

அய்வின் முடிவில் தெரிந்தது என்னவென்றால், இவர்கள் தங்களது சமூகத்திடையே அதிகமான அங்கீகாரத்தையும், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 15, 2014

புரதம் - இதன் முக்கியத்துவமும், புரதத்தின் செயல்பாடுகளும்..!

புரதம் - இதன் முக்கியத்துவம்:-புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

புரதத்தின் செயல்பாடுகள்:- புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு

இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன.

பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

உணவுப் பொருட்கள் சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள
புரதத்தின் அளவு (கிராம் / 100 கிராம் /)

சோயாபீன்ஸ் 43.2

கொண்டைக்கடலை,
உளுந்து, பச்சை பயறு 22
மற்றும் துவரை

நிலக்கடலை, முந்திரி 23
மறறும் பாதாம் பருப்பு

மீன் 20

இறைச்சி 22

பசும்பால் 3.2

முட்டை (ஒரு முட்டையில்) 13.3

வாய் புண் அறிகுறிகளும் மற்றும் அதனை தவிர்க்கும் முறைகளும்...!

வாய்புண் என்பது வாய், உள் உதடு, கன்னத்தின் உட்பக்கங்களில் ஏற்படுவது. உணவு உண்ணும் போதும், ஏதாவது குடிக்கும் போதும், பல்தேய்க்கும் போதும் இது அதிக வலியினை ஏற்படுத்தும். ஐந்தில் ஒருவருக்கு அடிக்கடி வாய்புண் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வாய் புண்ணின் பிரிவு வகைகள்…

சிறிய புண் : 2-6 மில்லிமீட்டர் வரை இருக்கும். இரு வாரங்களுக்குள் தானே ஆறிவிடும்.

பெரிய புண்: அகலமாகவும், ஆழமாகவும் இருக்கும். ஆறுவதற்கு பல வாரங்கள், மாதங்கள் ஆகும்.

குண்டூசி முனை போன்ற ஹெர்பஸ் வகை சிறு சிறு புண்கள்.

அதிக வேலை பளு, சரியான தூக்கமின்மை, மன உளைச்சல், உணவு போன்றவையும், பொய்பல் சரியாக இல்லாததும் வாய் புண் ஏற்பட பொதுவான காரணங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

இரும்பு சத்து குறைவு வைட்டமின் பி12 குறைவு மற்றும் உணவுப் பாதை குடல் நோய்கள் போன்றவையும் வாய் புண்ணுக்குக் காரணமாகும். புகை பழக்கத்தை விடும் போது முதலில் சற்று அதிகமான வாய் புண் ஏற்படும். ஆனால் அது எளிதில் மறைந்து விடும். சில மருந்துகளாலும் வாய் புண் ஏற்படலாம்.

வாய் புண் அறிகுறிகள்:-உதடுகளின் உள்ளே, நாக்கு, வாயின் உள்ளே மேல் பக்கம், உள் கன்னங்களில் வலியுடன் கூடிய புண் தோன்றும். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்துடன் வட்டமாக சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் ஜுரத்துடன் நெறி கட்டி இருக்கும். இதன் தீவிரத்தினைப் பொறுத்து உங்கள் மருத்துவரோ, பல் டாக்டரோ சிகிச்சை அளிப்பார்.

வாய்புண் தவிர்க்கும் முறைகள்:-

சர்க்கரை பாகில் ஊறிய, காரம், எண்ணையில் மிதக்கும் ஆசிட் தன்மை மிக்க உணவுகளை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

வாயில் `சூயிங்கம்’ மெல்லுவதை நிறுத்துங்கள்.

புகையிலை, புகை பிடித்தல் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.

அதிக காபி, டீ வேண்டாம். புண் சற்று பெரிதாய் இருப்பின் மருத்துவ சிகிச்சை அவசியம்.

ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் - தெரியலனா இதைப்படிங்க..!

நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண் டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண் டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல்படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட் டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற் றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோ யால் அவதிபடுபவர் களுக்கு சிறந்த தீர் வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்தாவும் பயன்படு கிறது. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட் டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது.

கருப்பை பலவீனமாக இருந்தால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சினை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.

Thursday, August 14, 2014

உடலை குறைக்கும் வீட்டு உணவுகள் - இதோ உங்களுக்காக…!

இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பாக இருப்பது தான். இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.வேளியே வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்த வரை உடல் உழைப்பு குறைந்து போகும் போதும், மேலும் சத்தான உணவு இல்லாததாலும். இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைத்து உடல் வடிவம் அழகு பெறும். மேலும் நாம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக் காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மெலியும். இது மற்றுமின்றி மந்தாரை வேரை நீர்விட்டு காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் மெலியும். கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தாலும் உடல் எடை குறையும். தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும் அது மட்டுமின்றி சுரைக்காய் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தால் சதை போடுவதைத் தடுக்கலாம்.

முக்கியமாய் இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால்  கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கலாம்.

காப்பகம்