Friday, September 26, 2014

ஜீவா (2014) - திரைவிமர்சனம்

ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் (சார்லி) வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா (மாரிமுத்து) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) இவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இவனும் அவளை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பா (டி.சிவா) வுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்.

அவளை பிரிந்த சோகத்தில் போதைக்கு அடிமையாகிறான் ஜீவா. அவனை போதையில் இருந்து மீட்டெடுக்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.

அங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இதற்கிடையில், ஜெனி எங்கு படிக்கிறாள் என்பதை ஜீவா தேடிக் கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக கூறுகிறார்.

இறுதியில், ஜீவா கிரிக்கெட்டில் சாதனை படைத்தாரா? கிரிக்கெட்டை தியாகம் செய்து ஜெனியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜீவாவாக வரும் விஷ்ணு, உண்மையான கிரிக்கெட் விளையாட்டு வீரருக்குண்டான தோற்றத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது.

இதுவரையிலான படங்களில் மீசை, தாடியுடன் பார்த்து ரசித்த விஷ்ணுவை, இப்படத்தில் பள்ளி சிறுவனாக காட்டுவதற்காக மீசையில்லாமல் காட்டியிருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.

ஜெனியாக வரும் ஸ்ரீதிவ்யா, குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்க குட்டைப் பாவடையுடன் வலம்வந்தாலும் அதிக கவர்ச்சி இல்லாமல் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்கிறார். கல்லூரி மாணவியாக வரும்போது பொறுப்பான பெண்ணாக அனைவர் மனதில் இடம்பிடிக்கிறார்.

ஜீவாவின் நண்பன் ரஞ்சித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண். கிரிக்கெட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட நேரத்தில் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மையே கலங்க வைக்கிறது.

சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. ஒருசில காட்சிகள் சிரிக்க முடிகிறதே தவிர, பெரும்பாலான காட்சிகள் போரடிக்கத்தான் வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டியிருக்கும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் பெறுகிறார்.

விஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து, கோச் ரவி, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் டி.சிவா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விளையாட்டை கதைக்களமாக கொண்ட படம் என்றாலே சுசீந்திரனுக்கு லட்டு சாப்பிடுகிற மாதிரி. கபடியை மையப்படுத்தி எடுத்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சுசீந்திரன், ஜீவா படத்தின் மூலம் உச்சம் தொட்டுவிட்டார்.

கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது. திறமையானவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படியெல்லாம் சிதறடிக்கப்படுகிறது என்பதை தைரியமாக எடுத்துக் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்.

மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மைதானத்தில் வீரர்களுடன் இவருடைய கேமராவும் இறங்கி விளையாடியிருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஜீவா’வில் ஜீவன் உண்டு.

Thursday, September 25, 2014

பெண்ணுக்கு மூன்றாவது மார்பு - பரபரப்பு தகவல்கள்..!

உலகிலுள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக கூட வழி தேடிக்கொண்டிருக்கும் நிலையில் பணத்தை வீணடிப்பதற்காகவே சிலர் வழி தேடிக்கொண்டிருக்கின்றனர். தற்போதுள்ள நடைமுறை பழக்கங்களை பார்த்தால் உலக அழிவு சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கின்றது.


பெண்ணொருவர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றில் நிகழச்சியொன்றுக்காக 20,000 அமெரிக்க டொலர் (இலங்கை பணம் ரூ.2,606,500) செலவு செய்து புதியதொரு மார்பை பொருத்தியுள்ளார் என்று கூறினால் நம்பவீர்களா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்மீன் எனும் பெண்ணே இவ்வாறு வித்தியாசமானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வளவோ சாதனையை செய்த வைத்தியத்துறையே இவ்வாறான சத்திரசிகிச்சையை செய்யமுடியாது என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 முதல் 60 வரையிலான வைத்தியர்களிடம் குறித்த பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இருந்தபோதிலும் வைத்தியர்களுக்கேயான நெறிமுறைகளை மீறக்கூடாது என்ற காரணத்தினால் இதனை செய்யமுடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அமெரிக்காவிலுள்ள சிறந்த வைத்தியொருவரினால் 2 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் குறித்த பெண்ணுக்கு 3ஆவது மார்பு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஜெஸ்மீனின் பெற்றோர் இவருடன் பேசுவதில்லையாம்.

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காகவே இவ்வாறு செய்துக்கொண்டேன். இதனை ஒரு அதிஷ்ட அங்கமாக நான் எண்ணுகிறேன். நான் பிரபல்யத்தை விரும்புகின்றேன்.

எனக்கு ஆண்களுடன் நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. இவ்வாறான எனது தோற்றம் கவர்ச்சியற்றதாகவே ஆண்களுக்கு தெரியும். அதனை நான் விரும்புகிறேன் என்று ஜெஸ்மீன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பிரபல நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்


விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார். கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இது தெலுங்கில் ரவிதேஜா நடித்து ஹிட்டான ‘கிக்’ படத்தின் ரீமேக் ஆகும்.

மேலும் ஆறு கன்னட படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. இவ்வளவு பிரபலமான கிரீத்தி விமான நிலையத்தில் மானபங்கம் செய்யப்பட்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கிரீத்தி கூறியதாவது:–

பெங்களூர் விமான நிலையத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரி ஒருவர் என்னை நெருங்கினார். திடீரென என்னிடம் சில்மிஷங்கள் செய்து கேவலமாக நடந்து கொண்டார். நான் தடுத்ததும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். இதை சில ஏர் இந்தியா ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எனககு உதவ வருவார்கள். என எதிர்பார்த்தேன் ஆனால் யாரும் வரவில்லை. எல்லோருமே அவர்களுடைய அதிகாரிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள். இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது..?

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தேகருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா..?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை  நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள். அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச்  சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை.


இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும் விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள்.  இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை  பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப்  போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும்,  மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால்  இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும்.  இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என  பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக்  குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா..? - இதைப்படிங்க..!

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.

தன்னம்பிக்கைக்கான பண்புகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.

2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.

3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள்.

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும்.

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது.

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

தொடர் முயற்சி

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண

ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.

''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்..!



''ஆவின் நிறுவனத்தின் எம்.டி. சுனில் பாலிவாலை டிரான்ஸ்ஃபர் பண்ணி காட்றேன் பாருங்க'' என சபதம் போட்டார் வைத்தியநாதன். ஆனால், சுனில் பாலிவாலுக்கு பதிலாகப் பதவியை பறிகொடுத்தார் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி.

'மாதவரம் மூர்த்தியின் தலை உருண்டதற்கு காரணம் ஒரே ஒரு ஆள்தான்’ என பெயர் குறிப்பிடாமல் 'பால் கடத்தலுக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?’ என்ற தலைப்பில் கடந்த 14.9.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அந்த ஆள் வேறு யாருமில்லை வைத்தியநாதன்தான். ஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரம் சந்தி சிரிக்க காரணமாக இருக்கும் வைத்தியநாதன் அ.தி.மு.க புள்ளி. அவரைப் பற்றிய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார்கள் ஆவின் ஊழியர்கள். ''தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன் 1985-ல் ஆவினில் தானியங்கி பால் நிலையத்தில் 10 ரூபாய் தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தார். இப்போது முக்கியப் பதவியில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலம்தான் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்போது தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் பெயரில் அந்த பூத்துகளை மோசடியாக கைப்பற்ற ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்படிப் பெற்ற பூத்துகளில் தண்ணீரைக் கலந்து கொள்ளை லாபம் பார்த்தார். இதில் ருசி கண்டதால் ஆவினை கரையான்போல அரிக்க ஆரம்பித்தார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது ஜனார்தனன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியநாதனுக்கு நெருக்கம். இப்போது அவர் முன்னாள் அமைச்சராக இருக்கிறார். அவர் மூலம் பால் வண்டி கான்ட்ராக்ட்டை கைப்பற்றினார் வைத்தியநாதன். அதன் பிறகு வைத்தியநாதனின் வளர்ச்சி கிடுகிடு என உயர்ந்தது. அடுத்து 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நந்தனம் ஏரியா பூத் ஒன்றில் ஸ்டாலின் அப்போது ரெய்டு செய்தபோது வைத்தியநாதனின் தகிடுதத்தம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே ஆந்திராவுக்குத் தப்பிப் போனார் வைத்தியநாதன். ஆவினை கைவிட்டுவிட்டு தீபிகா என்ற பெயரில் தனியாக பால் பண்ணை நடத்தி 'பூஜா’ என்ற பெயரில் பால் விற்றார். இதில் அந்த விழுப்புரம் பிரமுகரும் பார்ட்னராக இருந்தார்.
2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஆவினுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தார். அவருக்கு அனைத்து ஆசிகளும் கிடைத்தன. விழுப்புரம் பிரமுகரும் அவருடைய சகோதரரும் வைத்தியநாதனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். அப்போதுதான் டேங்கர் லாரிகள்மூலம் பால் சப்ளை நடைபெறத் தொடங்கியது. அதில் கால் பதிக்க ஆரம்பித்தார் வைத்தியநாதன். டேங்கர் லாரி ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் கமிட்டியில் உட்கார்ந்து யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2006-ல் தி.மு.க ஆட்சி வந்ததும் மதிவாணன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது கருணாநிதி அருகில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகரை பிடித்து படிப்படியாக ஆவின் நிறுவனத்தின் உச்சாணியில் ஏறத் தொடங்கினார்.
2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது டேங்கர் லாரிகள்மூலம் பால் கொண்டு வரும் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டிப் பறந்தார். இதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். டெண்டர் கமிட்டி, தரக் கட்டுப்பாட்டு பிரிவு என ஆவினில் எல்லா இடங்களிலும் வைத்தியநாதனின் ஆட்கள்தான் இருப்பார்கள். வைத்தியால் உண்டுகொழுத்த அதிகாரிகள் நிறைய பேர் ஆவினில் இருக்கிறார்கள். பிளாட்டுகள், கடைகள், ஆடம்பரப் பொருட்கள் என வாங்கித் தந்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் குளிர்வித்துவிடுவார் வைத்தியநாதன்'' என்று பழைய வரலாறுகளை புரட்டிப் போட்டனர்.
பால் கடத்தல் பற்றி விவரித்தார்கள் விவரம் அறிந்தவர்கள். ''ஆவின் பால் பண்ணைகளுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இப்படி பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளில் சீல் வைக்கப்பட்டிருக்கும். டேங்கர் லாரிகளை வழியில் எங்காவது நிறுத்தி அந்த சீலை லாகவமாகப் பிரித்துப் பாலைத் திருடுவார்கள். அதற்குப் பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீரையோ அல்லது பவுடரையோ கலப்பார்கள். பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலரும் வைத்தியநாதனுக்கு உடந்தையாக இருந்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.
100-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்தியநாதன் இயக்கி வந்தார். இதில் பல லாரிகள் ஒரே பதிவு எண் கொண்டவை. ஒவ்வொரு லாரியிலும் தினமும் 2 ஆயிரம் லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு வந்தது. பாலில் கலப்படம் செய்வதைக் கண்டுபிடிப்பதற்காகவே ஆவினில் விஜிலன்ஸ் பிரிவு உண்டு. ஆனால், இந்த முறைகேடுகள் பற்றி விஜிலன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் பால் திருட்டைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி உதவியை நாடினார் ஆவின் எம்.டி சுனில் பாலிவால். பால் திருட்டு தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். முதல்வரின் ஒப்புதலுடன் அவர் எடுத்த நடவடிக்கையில்தான் இவ்வளவு விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இப்படி நடைபெறும் முறைகேடுகளால் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லமுடியாமல் ஆவின் முடங்கிப் போயிருக்கிறது'' என்றார்கள்.
வைத்தியநாதனை கைதுசெய்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தார் என்கிற விவரங்களை எல்லாம் வைத்தியநாதன் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். திருடப்பட்ட பால் தனியார் பால் நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் 10 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆவின் பொது மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
''வைத்தியநாதனை கைது செய்துவிட்டு, ஆவின் ஊழியர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துவிட்டால் மட்டும் போதாது. இந்த மெகா மோசடிக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் சிலரையும் கைதுசெய்ய வேண்டும். அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியையும் விசாரிக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தவறு இழைத்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீதும் ஆக்ஷன் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பழைய சீல் முறையை மாற்றி நவீன சீல் முறைக்குத் திட்டமிட்டிருக்கிறோம். இப்படி புதிய யுக்திகளை பின்பற்றி தவறுகளையும் மோசடிகளையும் தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.
வெளுத்தது எல்லாம் பாலாகிவிடுமா என்ன...?

நன்றி - ஜூனியர் விகடன்

Wednesday, September 24, 2014

மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து சிகிச்சை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்த பெண் ராம் காலி பிரஜாபதி. பிரஜாபதியை கடந்த ஞாயிறு அன்று மாலை மின்சாரம் தாக்கியுள்ளது. அவர் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் அவரை மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். பெண்ணின் தலையை மட்டும் விட்டுவிட்டு பிற பகுதிகளை மண்ணுக்குள் புதைத்தனர். நேற்று காலை வரையிலும் பெண் மண்ணுக்குளே வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் அப்பகுதியை சேர்ந்த மீடியாக்களில் பரவியுள்ளது. ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி இந்த செய்தியை மீடியாவிற்கு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று பெண்ணை மின்சாரம் தாக்கியது. பின்னர் அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். செவ்வாய் கிழமை காலை அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மீடியாக்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசுக்கு பயந்து கிராம மக்கள் பெண்ணை மண்ணுக்குள் இருந்து எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை. நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று கூறியுள்ளா.ர்

ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது. என்று அவர் கூறியுள்ளார். இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலிவுட் வாய்ப்பை நானாக தேடிப் போக மாட்டேன் - சமந்தா..!

இந்திய சினிமாவில் எந்த மொழியில் நடித்தாலும், அவர்களின் அல்டிமேட் இலக்கு பாலிவுட்டாகத்தான் இருக்கும். இந்திப் படங்களின் மார்க்கெட், மவுசு, அங்கு புழங்கும் பணம் அப்படி. ஆனால் அங்கு காலூன்றுவது அத்தனை சுலபமில்லை. வலுவான சினிமா பின்னணி, பெரிய இயக்குநர்கள் ஆதரவெல்லாம் தேவை.

தென் இந்திய சினிமாவிலிருந்து அசின், இலியானா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன், தமன்னா உள்ளிட்டோர் இந்திக்குப் போனார்கள். இவர்களில் ஸ்ருதி மட்டும் உள்ளே வெளியே என்ற லெவலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கு பெரிய ப்ரேக் இதுவரை கிடைக்கவில்லை. அசினுக்கு முதல் படம் ஓடியதோடு சரி. தமன்னா நடித்தவை அடுத்தடுத்து ப்ளாப் லிஸ்டில் சேர்ந்துவிட்டன.

அடுத்து சமந்தாவும் பாலிவுட்டுக்கு போகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ரபாசா நல்ல வசூலைக் குவித்தது. எனவே சம்பளத்தையும் ஏற்றிவிட்டார். இந்த வெற்றி தந்த கையோடு பாலிவுட் போவார் சமந்தா என்று வந்த செய்திகளை அடியோடு மறுத்துள்ளார்.

எனக்கு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களே போதும். கைவசம் நல்ல படங்கள் உள்ளன. இந்திப் படம் வேண்டும் என்று நானாக தேடிப் போக மாட்டேன். ஒருவேளை அதுவாக அமைந்தால் பார்க்கலாம், என்றார்.

இப்போது தமிழில் கத்தி, பத்து எண்ணுறதுக்குள்ள, எண்ணி ஏழு நாள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை - சுருதிஹாசன்..!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்..?

"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"

சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில் பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல் இரண்டு வரிகள்.

அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப் பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும் நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து வருகின்றன.

திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி. ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப் பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.

ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும், நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி, பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.

அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான போக்கு தானா?

இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும், சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய் இருப்பதை அனுமதிப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்..?

Monday, September 22, 2014

பாலியல் பொம்மைக்குரிய உடல்வாகு கொண்ட பெண்..? - இதைக்கொஞ்சம் கேளுங்க..!

பாலியல் பொம்மைக்குரிய உடலமைப்பு வேண்டும் என்பதற்காக பெண்ணொருவர், 30,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை செலவு செய்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கெனன் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த விக்டோரியா வைல்ட் எனும் 30 வயதுடையு பெண்ணே; இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவரது, உதடு பிதுங்கி இருக்கும்படியும் மார்பு பெரிதாக இருக்கும்படியும் இவர் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல், கண் இமைகளையும் இவர் பெரிதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்புகளை பெரிதாக்குவதற்காக 25,000 பவுண்டும் மூக்குக்கு 3,000 பவுண்டும் கண் இமை மற்றும் நெற்றிப்பரப்புக்கு 2,000 பவுண்டுக்களும் இவர் செலவு செய்துள்ளார்.

பெஷன் ஷோக்களில் கிடைத்த பணம் மற்றும்  காதலனது உதவியுடனுமே இவர் இச்சிகிச்சைகளை செய்துள்ளார்.

'தற்போது, எனது உடலமைப்பு பாலியல் பொம்மை போல காட்சியளிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னை பார்த்து பலர் முறைக்கின்றனர். ஆனால் நான் எனது அழகையெண்ணி பெருமையடைகின்றேன்.

சிறுவயதிலிருந்தே இவ்வாறானதொரு பொம்மை போன்று காட்சியளிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் இவ்வாறான உடலமைப்பை பெறுவதற்கு எனது காதலுனும் சம்மதித்தார்.

'என்னை காணும் ஆண்களை நான் கவர்ந்து விடுகின்றேன். எனது காதலனும் மற்றையோர் என்னை பார்த்து ரசிப்பதை விரும்புகின்றார். நான் பிரபலமாக இருக்கவே விரும்புகின்றேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் முதல் தடவை இதுதான்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மகளை கட்டாயப்படுத்தி 2,000 பேருடன் உறவுகொள்ள வைத்த தாய்..!

பெண்ணொருவர், தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவுகொள்ள வைத்த கொடூர சம்பவம் வட இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஜக்குலின் மார்லிங்க் என்ற பெண்ணே இத்தகைய கொடூர செயற்பாட்டில் தனது மகளான ஆனாபெல்லை ஈடுபடுத்தியுள்ளார்.

ஜக்குலின் மார்லிங் பாலியல் குழுவொன்றுக்கு தனது மகளை அடிமையாக்கியுள்ளார்.

ஆனாபெல்(48) தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர், 'தி டெவில் ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் கொலின் பேட்லியுடன் ஜாக்குலின் மார்லிங் உறவு கொள்வதை 7 வயதில் ஆனாபெல் கட்டாயப்படுத்தலின் கீழ் பார்த்துள்ளார்.

ஆனாவுக்கு 11 வயது இருக்கையில் பேட்லி அவரை 2 முறை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

ஆனாவுக்கு 13 வயது இருக்கையில் அவரை அவரது இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு கொள்ளும் செயற்பாட்டில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைத்துள்ளனர்.

பேட்லி, ஆனாவை முதல் முறை வல்லுறவுக்குட்படுத்தும்போது 'இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் நீ நரகத்திற்கு செல்வாய்' என்று கூறி மிரட்டியுள்ளார்.

அந்த பாலியல் குழுவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்க ஆனா போன்ற சிறுமிகள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

'பகலில் பாடசாலை மாணவியாகவும் இரவில் பாலியல் அடிமையாகவும் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்றேன்' என்று ஆனாபெல் தெரிவித்துள்ளார்.

17 வயதில் கர்ப்பமான ஆனா குழந்தையை பெற்ற பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வழக்கில், பேட்லிக்கு 11 ஆண்டுகளும் ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தற்போது ஆனா இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்து அசத்திய அஜீத்..!


தல அஜீத்தோட மனிதாபிமானம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத். ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருடைய கார் டிரைவர் விலை மலிவான செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்ததை அஜீத் பார்த்துள்ளார். அவர் முன்னால், அந்த போனை வைத்துக்கொண்டு அப்போது வந்த அழைப்பைகூட எடுத்துபேச ரொம்பவும் தயங்கியுள்ளார்.

அதனை புரிந்துகொண்ட அஜீத், உடனே அருகிலுள்ள செல்போன் கடையில் காரை நிறுத்தச் சொல்லி, விலையுயர்ந்த ஐ போன் ஒன்றை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், கார் ஓட்டும்போது ஹெட் செட் அணிந்து வண்டியை ஓட்டுமாறு டிரைவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

5-வது முறையாக போலீஸ் உடை அணிகிறாரா அஜீத்..?


அஜீத் போலீஸ் உடையில் நடித்த ‘ஆஞ்சநேயா’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் ஒரு சில படங்கள்  அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. இதுவரை 4 படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்துள்ள அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் போலீஸ் உடையில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் துப்பறியும் காட்சிகளில் வரும் அஜீத், போலீஸ் உடையணிந்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து, மிகவும் அழகான தோற்றத்துடன் வலம் வருகிறாராம்.

அஜீத்தின் 55-வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக ஆடியோ வெளியீடை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க..!

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்... இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும்.

இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும்.

கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு 'எம்பிரியோ’ என்று பெயர். மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் 'ஃபீட்டஸ்’ என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது.

எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது; மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க..!

அது இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ். பல வருடங்களாக அந்த ஒரே பஸ், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மார்க்கமாக சென்று கொண்டிருப்பதால், அந்த பஸ் ரொம்பவே தள்ளாடிவிட்டது. இழுத்து இழுத்து அது செல்வதால் விவரம் தெரிந்த பயணிகள் அதில் ஏறமாட்டார்கள். அநேகமாக நாலைந்து பயணிகள் ஏறுவார்கள். ஏறியதும் ஆளுக்கொரு சீட்டில் கால் நீட்டி படுத்துவிடுவார்கள்.

அன்று இரவு பத்து மணி இருக்கும். மழை இதோ இப்போதே வந்துவிடுவேன் என்பதுபோல் மிரட்டிக்கொண்டிருந்தது. 60 வயதைக் கடந்த முதியவர், அந்த பஸ்சில் ஏறினார். முன் பகுதி இருக்கைகளில் நாலைந்து பேர் இருந்தும், படுத்தும் தூங்கிக்கொண்டிருக்க இவர் பின்பகுதியில் போய் அமர்ந்துகொண்டார்.

பஸ் 10, 15 கிலோமீட்டர் கடந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை ஏற்றிவிட்டார்கள். அவளுக்கு 30 வயதிருக்கும். நாகரிக தோற்றம். அங்கும் இங்கும் பார்த்தவள் முகத்தை சுழித்தாள். அந்த முதியவரை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். பாதுகாப்பு தேடுபவள்போல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள். அவருக்கும் தூக்கம் வரும் வரை பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம்.   கண்டக்டர் வந்தார். சற்று தூரத்தில் உள்ள ஊர் ஒன்றுக்கு டிக்கெட் எடுத்தாள்.

முதியவரிடம் பேசிக்கொண்டே வந்தாள். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். தனது நண்பர் ஒருவர் கிராமத்தில் இறந்துவிட்டார். இறுதிக் காரியம் முடித்துவிட்டு திரும்பி வருகிறேன் என்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் அவர் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் தெரிவித்து விட்டார். அந்த அளவுக்கு பக்குவமாக கேள்விகளைப் போட்டு பதில்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவருக்கு தூக்கம் வருவது போலிருந்தது. அவளுக்கு ஒன்றிரண்டு முறை போன் வந்துகொண்டிருந்தது. அதை எடுத்து பேசாமல் அவள் மெசேஜ் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தாள். பஸ் அப்போதுதான் திணறி திணறி இருட்டான பகுதிக்குள் புகுந்து சற்று வேகமெடுத்திருந்தது.

திடீரென்று அவள் புடவை முந்தானையை சரிய விட்டாள். ஜாக்கெட்டின் முதல் பட்டன் பகுதியை இழுத்து கிழித்தாள். முதியவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, அவரோடு நெருக்கமாக அமர்ந்தாள். ‘உங்களை பற்றிய முழுவிவரமும் எனக்கு தெரியும். சமூகத்தில் மரியாதையான ஆள் நீங்க. என் உடை இப்படி ஆவதற்கு நீங்கதான் காரணம் என்று இப்பவே என்னால் கூச்சல்போட்டு பஸ்சை நிறுத்த முடியும். பஸ் போலீஸ் நிலையத்திற்கு போகும். உங்க மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்திடும்..’ என்று மிரட்டும் தொனியில் பேசினாள்.

அவர் கெட்ட கனவு கண்டவர்போல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெலவெலத்து போனார். அந்த இரவு நேரத்திலும் வியர்த்தது.

‘மரியாதையாக கையில் கிடக்கிற வாட்சையும், மோதிரத்தையும் கழற்றி கொடுங்க..’ என்றவள், அவரது சட்டை காலரை நீக்கி கழுத்தை பார்த்தாள். பளிச்சென்ற தங்க சங்கிலியும் கிடந்தது. ‘எல்லாத்தையும் கொடுத்திடுங்க. நான் அடுத்த பஸ் ஸ்டாப்பில் சைலண்டாக இறங்கி போயிடுறேன்..’ என்றாள்.

‘தராவிட்டால் என்ன பண்ணுவே?’ பயத்துடன் வாய் குழற கேட்டார்.

அடுத்த ஊர் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்திடும். அங்கே என்னை எதிர்பார்த்து என் ஆட்கள் நிற்கிறார்கள். இப்பவே நான் கூச்சலை ஆரம்பித்து, அந்த நிறுத்தம் வரும் வரை தொடருவேன். அங்கே பஸ்சில் ஏறும் அவர்கள், உம்மை நையப்பு டைத்துவிடுவார்கள். தட்டிக்கேட்கக்கூட நாதி இருக்காது. கிழவன் பஸ்சில் இளம் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்டான் என்றால் ஊரே நம்பும். உடம்பை புண்ணாக்க போகிறாயா?’ என்று அவள் ஒருமையில் பேசி, தான் கைதேர்ந்த திருடி என்பதை அவருக்கு புரியவைத்தாள்.

அவர் அப்படியே குத்துக்கல் போல் இருக்க, அவளே மோதிரம், தங்க சங்கிலி, வாட்ச் எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டாள்.

அமைதியாக இருந்த அவர் கூச்சல் போட்டு எல்லோரையும் எழுப்பிவிடலாமா? என்று யோசித்தபோது அவள், ‘கண்டக்டர் ஸ்டாப் வந்துடுச்சி’ என்று கத்தினாள்.

பஸ் மெல்ல மெல்ல குலுங்கி நிற்க முயற்சிக்க, தூரத்து வெளிச்சத்தில் ரோட்டில் மூன்று தடியன்கள் நின்றிருந்தனர். அவர்கள் அருகில் ஒரு காரும் நின்றிருந்தது. ‘சத்தம் போட முயற்சிக்காதே. மூன்று பேரும் பஸ்சில் ஏறி உன்னை பந்தாடிவிடுவார்கள். நீ கிழித்த ஜாக்கெட் அப்படியே இருக்கிறது பார்த்தாயா!’ என்றாள்.

பஸ் நின்றது. வேகமாக இறங்கிய அவள், அந்த தடியர்களிடம் இவரை அடையாளங்காட்டினாள். அவர்கள் சைகையால் ‘வாயை பொத்திக்கொண்டு செல்’ என்று சைகையால் மிரட்டினார்கள். அவள் தடியர்களோடு காரில் ஏறினாள். இவர் இருந்த பஸ்சும் கிளம்பியது.

அவர்கள் திட்டமிட்டு காரில் வந்து, அவளை பயன்படுத்தி வழிப்பறி செய்திருக்கிறார்கள். காரியம் முடிந்ததும், அதே காரில் முந்திச் சென்று காத்திருந்து, அவளை ஏற்றிச்சென்றுவிட்டார்கள்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க!

Sunday, September 21, 2014

அரண்மனை (2014) - திரைவிமர்சனம்

ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.

அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் ராய் லட்சுமி ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.

இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை காமெடி கலந்து திரில்லராக மீதிக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சுந்தர்.சி அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் வினய். இரண்டு கதாநாயகன்கள் இருந்தாலும் நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை. ராய் லட்சுமி கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ஹன்சிகா.

சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்கிறது. மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இதுவரை காமெடி படங்களில் வெற்றி கண்டு வந்த இயக்குனர் சுந்தர்.சி, இப்படத்தில் காமெடியுடன் திரில்லரையும் சேர்த்து வெற்றி கண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் திரைக்கதை அமைத்து காமெடி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். அரண்மனை செட்டை அருமையாக அமைத்த கலை இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘அரண்மனை’ கலகலப்பான திகில் வீடு.

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூர் வடக்கு டி.தாசரஹள்ளி புவனேஸ்வரி நகரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தவர் லல்லன்குமார் (வயது 28). பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தும்கூர் ரோடு சோழதேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதே போல இவரது சகோதரி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் லதாகுமாரி(31). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால், லல்லன்குமாருக்கும், லதாகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17–ந் தேதி லல்லன்குமார் கல்லூரி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். தேர்வு நேரத்தில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என லல்லன்குமார், அவரிடம் கூறியுள்ளார்.

இருப்பினும் மீண்டும் மீண்டும் லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்த உறவு பற்றி உன் சகோதரியிடம் கூறிவிடுவேன் என்றும், மேலும் என்னை கற்பழித்ததாக போலீசில் புகார் தெரிவிப்பேன் எனவும் லல்லன்குமாரை, லதாகுமாரி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லல்லன்குமார், லதாகுமாரியை சமாதானப்படுத்தி அவருடன் உல்லாசம் அனுபவிப்பது போல நடித்து துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழதேவனஹள்ளி போலீசார் லல்லன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு விசாரணை பெங்களூர் முதன்மை சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொலை வழக்கில் நீதிபதி விஸ்வநாத் வி.அங்காடி தீர்ப்பு கூறினார். அதில், உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற லல்லன்குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆள் (2014) - திரைவிமர்சனம்

ஆமீர். சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல... அவருடைய காதலி.

சிக்கிமில் தனியாக வசித்து வரும் ஆமீருக்கு எப்படியாவது தனது குடும்பத்தை சிக்கிமிற்கு கொண்டு வந்து செட்டிலாகி விடவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பணியாற்றி வரும் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கிடையே சண்டை வருகிறது. முஸ்லீம் மாணவனான ரிஸ்வானை சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவன், தான் முஸ்லீம் என்பதால்தான் தன்னை சக மாணவர்கள் கேலியாகவும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள் என்று ஆமீரிடம் கூறுகிறான்.

இதனால் அவன்மீது இரக்கம் காட்டும் ஆமீர், அவனை தன்னுடன் வந்து தங்குமாறு கூறுகிறார். ரிஸ்வானும் அவருடன் வந்து தங்குகிறான். இருவரும் ஆசிரியர்-மாணவன் பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆமீர்-மீனாட்சியின் காதல் மீனாட்சியின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. அவர்கள் ஆமீரை சென்னை வந்து தங்களை சந்திக்குமாறு அழைக்கின்றனர். அதன்படி, ஆமீர் சென்னை போக ஆயத்தமாகிறான். தன்னுடைய காதலி பரிசாக அளித்த கோட்-சூட்டுடன் சென்னை புறப்பட்டு வருகிறான்.

சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கும் ஆமீருடைய செல்போன் சார்ஜ் இல்லாததால் தன்னை வரவேற்க வந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது, ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்து ஒரு செல்போனை இவரிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

அப்போது, அந்த செல்போனுக்கு ஒரு நம்பர் தெரியாத போனில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்து பேசும் ஆமீருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியான செய்தி என்ன? அந்த செல்போனால் அவன் என்னென்ன அவதிப்பட்டான்? என்பதே மீதிக்கதை.

ஆமீர் கதாபாத்திரத்தில் விதார்த், வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார். இதுவரை விதார்த்தை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கோர்ட்டும் சூட்டும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. கோபம், சோகம், அழுகை என இவரது முகத்தில் எல்லாமே சரளமாக வருகிறது.

ஆனால், தனக்கு இடையூறாக வரும் நபர்களை இவர் துரத்தும் காட்சிகளில்தான் ஓடமுடியாமல் தவித்திருக்கிறார். கடைசி காட்சியில் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

நாயகி கார்த்திகா ஷெட்டிக்கு படத்தில் சிறு வேடம்தான். ஒரு சில காட்சிகளே வருகிறார். அதனால் மனதில் நிற்கவில்லை. படத்தில் வில்லனாக வரும் விடியல் ராஜூவின் நடிப்புதான் பலே. உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிரட்டி பேசி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் நம்மை மிரட்டியிருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனின் பலவீனத்தை புரிந்து வைத்துக்கொண்டு அவனை வைத்து தீவிரவாதிகள் தங்கள் காரியங்களை எப்படி சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ள இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுக்கு சபாஷ். படத்தின் முதல்பாதி சற்று தொய்வுதான். ஆனால், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. அதே விறுவிறுப்பை இறுதிவரை மாறாமல் கொடுத்திருப்பது இயக்குனரின் தனி சிறப்பு.

உதய்குமார் ஒளிப்பதிவில் சிக்கிமின் அழகை அழகாக படமாக்கியிருப்பது சிறப்பு. மலையில் அடுக்குமாடி வீடுகளை தனது கேமராவால் அழகாக படமாக்கியிருக்கிறார். கதையை விறுவிறுப்பாக நகர்த்த இவரது கேமராவும் உதவியிருக்கிறது. ஜான் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘ஆள்’ அழகுராஜா.

'வேலியே பயிரை மேய்ந்தது:' பெண்களை வைத்து விபசாரம்; போலீஸ்காரர் கைது...!

நகரில் பல இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்த போலீஸ்காரர் செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருபவர் பாலமுருகன் (வயது 23). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ஆகும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு கடலூர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது மதுரை மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரிமுத்து (34) என்பவர் பேச்சு கொடுத்தார். தனது வீட்டில் அழகிய பெண்கள் இருப்பதாகவும், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி பாலமுருகனை அழைத்து வந்ததாக தெரிகிறது. அங்கு வந்த அவர் பெண்களுடன் செல்ல மறுத்ததுடன் இதுகுறித்து செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து புரோக்கர் மாரிமுத்து, அவரது வீட்டில் இருந்த சதீஷ் மனைவி கலைச்செல்வி(37), கார்த்தி மனைவி பிரியா (எ) ராதா(32) ஆகிய 3 பேரை¬யும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலர் பாலமுருகன் என்பவர் மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்தது தான் இதற்கு காரணம். இதேபோன்று நகரில் பல இடங்களில் வாடகை வீடு பிடித்து இந்த தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்லூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் உண்மை என்று தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் போலீசாரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டிய போலீஸ்காரரே பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, September 16, 2014

ஹாலிவுட், தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை: ரஜினி புகழாரம்

ஹாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை என்று 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறினார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி முடியும் முன்பே தனது உரையை நிகழ்த்திவிட்டு அர்னால்ட் கிளம்பினாலும், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து சிறப்பித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது, "'ஐ' இசை வெளியீட்டு விழா போல் அல்லாமல் வெள்ளி விழா நடைபெறுவது போல் உள்ளது. இப்படத்தை எப்போது பார்ப்பேன் என்று ஆவலாக உள்ளது. சீக்கிரம் காண்பியுங்கள்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு செல்லும் பணியை ஷங்கர் மேற்கொண்டு வருகிறார். இந்தப் படம் அவரை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஷங்கர் இந்திய சினிமாவை, ஹாலிவுட்டிற்கு நிகராக கொண்டு செல்வதற்கான கண்ணாக செயல்பட்டு வருகிறார்.

'ஐ' படம் 'சீயான்' விக்ரமை, 'ஐ' விக்ரமாக மாற்றியுள்ளது. படத்திற்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னை வருத்தி நடிப்பவர். இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம். தமிழ் சினிமாவிலும் சரி, ஹாலிவுட்டிலும் சரி விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை. சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கும் விக்ரமுக்கு நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.

Monday, September 15, 2014

பணக்கார தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்: ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ.18.3 கோடி..!

உலக வரலாற்றிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்: ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ.18.3 கோடி:-


ஐஎஸ்ஐஎஸ் தான் மிகவும் பணக்கார தீவிரவாத அமைப்பாம். அதன் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690 ஆகும்.

ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இருப்பதிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு என்பதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த அமைப்பு ஒரு நாளில் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690க்கும் அதிகமாக சம்பாதிக்கிறதாம்.

எண்ணெய் கடத்தல், மனிதர்களை கடத்தி பணம் பறித்தல், திருட்டு ஆகியவை மூலம் தான் தீவிரவாதிகள் ஒரு நாளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பெர்சிய வளைகுடா நாடுகளில் இருந்து தான் பணம் வந்துள்ளது. அது தான் அவர்களின் முக்கிய பண வரவாக இருந்திருக்கிறது.

உலக வரலாற்றிலேயே ஐஎஸ்ஐஎஸ் தான் அதிக சொத்துக்கள் வைத்துள்ள பணக்கார தீவிரவாத அமைப்பு என்று கூறப்படுகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் மட்டும் 11 எண்ணெய் வயல்கள் உள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்ததாலும், அங்குள்ள அரசுகள் வலுவாக இல்லாததாலும் தான் ஐஎஸ்ஐஎஸ் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது.

பழமை வாய்ந்த விலை மதிப்பற்ற பொருட்களை விற்பதன் மூலமும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பணம் வருகிறது. சில பொருட்கள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாம்.

ஈராக்கின் முக்கிய நகரான மொசுலை கைப்பற்றும் முன்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சொத்து மதிப்பு 875 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதன் பிறது அது வங்கிகளை கொள்ளையடித்தும், ராணுவ பொருட்களை கொள்ளயடித்தும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது. தற்போது அந்த அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலராகும்.

Sunday, September 14, 2014

விபச்சாரம்தான் குடும்பத்தைக் காக்க ஒரே வழி என்றால் என்ன தவறு அதில்..? - தீபிகா..!

விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதா பாசுவுக்கு நடிகை குஷ்பு மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை சுவேதா பாசு. இவர் தமிழில் ‘ராரா', ‘சந்தமாமா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘மக்தே' படத்திற்காக தேசிய விருது பெற்றவரான சுவேதா பண நெருக்கடியாலும், குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுவேதா பாசுவுக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் தீபிகா படுகோனேவும் சேர்ந்துள்ளார்.

தன்னையும், குடும்பத்தையும் காப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இதுதான் (விபசாரம்) ஒரே வழி என்றால், அதை செய்வதில் தப்பில்லை.

எனவே மக்கள் கூறுவதைப்போல அவரைப்பற்றி இழிவாக பேசுவது நியாயமற்றது என நான் நினைக்கிறேன்.

அப்படி பார்த்தால், அவரை இந்த செயலில் ஈடுபடுத்தியவர்கள் குறித்து நாம் ஏன் பேசவில்லை? தற்போது வரை சுவேதாவை நம் எல்லோருக்கும் தெரியும். எனினும் நாம் ஏன் அவருக்கு உதவி செய்யவில்லை?

எனவே அவரைக்குறித்து தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே?' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், ‘விபசார தொழில் குறித்த விஷயங்களில் முதலில் பெண்களை மட்டும் தான் மையப்படுத்துகின்றனர். பாலியல் தொழிலில் ஆண்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே? ஆனால் ஆண்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன.

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் போது, அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகின்றன. ஆனால் அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது.

இந்த குற்றத்தில் அந்த ஆணுக்கும் சம பங்கு இருக்கிறதுதானே? ஏன் இந்த பாரபட்சம்? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்?

பெண்களை கைது செய்யும் போது புகைப்படம் எடுக்க போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களையும் புகைப்படம் எடுக்க வேண்டியதுதானே? அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை' என இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஆர்யா-நயன், சித்து-சமந்தா: இவர்களுக்குள் காதல் இருக்கு, ஆனால் இல்லை..!

ஆர்யா-நயன்தாரா, சித்தார்த்-சமந்தா, த்ரிஷா-ராணா ஆகியோர் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. காதல் என்று வந்தால் திரை உலக பிரபலங்கள் அவ்வளவு எளிதில் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

எங்கு பார்த்தாலும் ஜோடியாகவே வருகிறீர்களே காதலா என்று கேட்டால் சீச்சீ நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பார்கள். இந்த நல்ல நண்பர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது காதல் தான் என்பது ரசிகர்களுக்கே தெரிந்துவிட்டது. அப்படி காதல் என்று கூறப்பட்டாலும் நாங்கள் எல்லாம் நண்பர்கள் என்று கூறும் சில பிரபலங்களை பார்ப்போம்,

நயன்தாரா எப்போது மீண்டும் நடிக்க வந்தாரோ அதில் இருந்து அவருக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. காதலை அவர்கள் மறுத்தாலும் நிகழ்ச்சிகளில் ஜோடியாக காணப்படுகின்றனர்.

சித்தார்த், சமந்தா காதலிப்பது ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரியும். ஆனால் அது குறித்து கேட்டால் மட்டும் நைசாக நழுவிவிடுவார்கள்.

ராணா, த்ரிஷா அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். இவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை ரகம்.

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துவிட்டனர்.

நம்ம ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலிக்கையில் நாங்கள் எல்லாம் நண்பர்கள் டயலாக்கை தான் அடிக்கடி கூறினார். இறுதியில் ரித்தேஷை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்: பாடலாசிரியர் கபிலனின் ‘ஐ’ அனுபவங்கள்

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் விரும்பும் பாடலாசியர், கபிலன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மூன்று பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வருகிறது. ‘உன் சமையல் அறையில் உப்பா? சர்க்கரையா?’, ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’, ‘கரிகாலன் காலப் போல’ ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?’ இப்படி கணக்கிட முடியாத வெற்றிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பாடலாசிரியர் கபிலன் ‘தி இந்து’ வுக்காக அளித்த கவித்துவப் பேட்டி..

‘ஐ’ படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது?

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ‘அந்நியன்’ படம் வழியே ஹாரிஸ் ஜெயராஜிடமும் என்னை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் ஷங்கர். நான் அடுத்தகட்ட உயரத்துக்குச் செல்ல காரணமாக இருந்தவரும் அவரே. ‘ஐ’ படத்துக்காக

‘‘என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே..
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத்தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர்போல
உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா?

இப்படியான வரிகளோடு பயணிக்கும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலை பெண் பாத்திரத்துக்கான சிறு மாற்று வரிகள் சேர்த்தும் மற்றொரு பாடலாக எழுதி யிருப்பேன்.

இன்னொரு பாடல் சென்னை பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்த அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பாடல், வடசென்னையைச் சேர்ந்த காதலன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அவர்கள் மொழியிலேயே பாடலை எழுதினேன். கொடக்கானல் மலை உச்சியில் ஷங்கருடன் அமர்ந்து இப்பாடலை எழுதினேன். பாடல் முழுவதும் தயாரானதும் இயக்குநர் ஷங்கர், ‘‘உங்களை உச்சத்துக்குக் கொண்டு போகப்போகிற பாடல் இது’’ என்றார். அந்த வரிகள்தான்..

‘‘நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா மூட்டை
ஒரு மாட்டுக்கொம்பு மேல
பட்டாம்பூச்சிபோல..’’ இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கரோடு நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி?

எளிமையான வரிகளைப் பெறுவதில் இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருடன் அமர்ந்து பாடலுக்கான பல்லவியைப் பிடிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். என்னைக் கேட்டால் பல்லவி என்பது உயிருக்குத் தலை மாதிரி; ரயிலுக்கு இன்ஜின் மாதிரி. அது பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் அடுத்தடுத்து வரிகளைப் பிடிப்பது எளிது. ‘ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டாங்களா!’ என்று ஒரு குழந்தைக்கு கதை சொல்வதைப்போல எளிமையாகப் பாடலுக்கான சூழலை விளக்குபவர், ஷங்கர். ஒரு பாடலை எப்படி படமாக்கத் திட்டம் என்பதில் தொடங்கி பென்சில் பிடித்து படம் வரைந்து விவரிப்பார். பாடலில் நாயகன், நாயகியின் அணிகலன், ஆடைகளின் வண்ணங்கள் இவற்றையெல்லாம் பகிர்வார். அந்த சூழலே நம்மை அற்புதமான மனநிலைக்குக் கொண்டுபோய்விடும்.

‘தெகிடி’ படத்தின் பாடலில் ஓர் இடத்தில் காதல் இரண்டெழுத்து என்று எழுதியிருக்கிறீர்களே?

‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என்று தொடங்கும் பாடல் அது.

மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு…

மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு

இனி நீயும், நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால் காதல் இரண்டெழுத்து…’

இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் நகரும். பலர் என்னிடம் அது எப்படி காதல் இரண்டெழுத்து? என நேரடியாகவும், சமூக வலைதளங்களின் வழியாகவும் கேட்கிறார்கள். சங்க இலக்கியத்தில் ‘கா’ என்பதற்கு சோலை என்ற ஒரு பொருள் உள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் காதலர்கள் சோலையில்தான் சந்திப்பார்கள். அடுத்து ‘த’ என்றால் தந்து பெறுதல். காதலர்கள் அன்பைத் தந்து பெறுபவர்களாச்சே. ‘ல்’ என்பது இல்லறம், இல்வாழ்க்கை, குடும்பம். இந்தப்படப்பாடலின் சூழலில் நாயகன், நாயகி இருவரும் காதலர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்காமல்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் ‘காதல்’ இரண்டெழுத்து என்பது சரிதானே.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் போன்ற கவிஞர்கள் இருந்த சூழலைப் போல இப்போதும் பாடலாசிரியர்கள் மீது அதே மதிப்பு உள்ளதா?

இப்போது பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக வருபவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இசை தெரியாதவர்கள் இசையமைப்பாளராக முடியாது. இன்றைக்கு வேறு துறையில் இருப்பவர்கள் பலர் பொழுதுபோக்காகப் பாடல் எழுதுகிறார்கள். அதற்குப் பெரிதாகத் தொகை எதுவும்கூட வாங்குவதில்லை. ஒரு கவிஞனிடம் அந்தப் பாடலைக் கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பெரியும். இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே இன்று நல்ல பாடல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

அடுத்த உங்களது புதிய படைப்புகள்?

‘குறில் நெடில்’, ‘நகர்ப்பறை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற கட்டுரைத் தொகுப்பும். எழுதி முடித்துத் தயாராக உள்ளன. இன்னும் வடிவமைப்பு உட்பட சில பணிகள் மட்டும் மீதமுள்ளது.

கவிஞர் வாலியின் பிரிவு தமிழ்த் திரைத்துறை யில் எந்தமாதிரியான வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது?

ஐந்து தலைமுறைக்குப் பாடல் எழுதிய கவிஞர். எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியவர். நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாக வைத்திருந்தவர். கார்கில் யுத்தம், மின்வெட்டு, நிலக்கரி ஊழல் இப்படி எதையும் பாடல் வழியே பேசியவர். இறுதி நாட்கள் வரைக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடியே போனது. அவரது மறைவின்போது நான் எழுதிய வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..

கடவுள் இருந்திருந்தால்
ஒரு விபூதி சாம்பலாகியிருக்காது.

உங்கள் பாடல் வரிகள் படத்தின் தலைப்பாக வரும்போது எப்படி உணர்வீர்கள்?

மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். சமீபத்தில்கூட ‘உன் சமையல் அறையில்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வந்தது. என்ன ஒரே ஒரு வருத்தம் மட்டும் உண்டு. ஒரு கவிஞன் எழுதிய பாடல் வரிகளைப் பயன்படுத்தும்போது அந்தக் கவிஞனை அழைத்து அந்தப்படத்தில் பாடல் எழுதச் சொல்லலாமே என்பதுதான் அது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் - வரலாறு, சாதனைகள்..!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அதே பாணியில் கிரிக்கெட்டில் உள்நாட்டில் 20 ஓவர் போட்டியில் சாதித்த அணிகள் வெளிநாடுகளில் வலுவாக உள்ள அணிகளுடன் மோதுவதே சாம்பியன்ஸ் லீக் போட்டி.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டி அறிமுகப்படுத் தப்பட்டது. 2008-ம் ஆண்டில் முதல்முறை யாக சாம்பியன்ஸ் லீக் நடத்த திட்டமிடப் பட்டது. எனினும் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து 2009-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்பட்டது. இப்போது 6-வது ஆண்டாக போட்டி நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற 5 சாம்பியன் லீக் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள் ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், நியூசவுத் வேல்ஸ் புளு, சிட்னி சிக்ஸர் ஆகிய அணிகள் தலா ஒருமுறை சாம்பியனா கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அணிகள் தவிர பிற அணிகள் சாம்பியன் ஆனதில்லை. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகள் இந்தியாவிலும், 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலும் சாம்பியன்ஸ் லீக் நடைபெற்றது. இப்போது தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் போட்டி நடைபெறவுள்ளது.

ரெய்னா முதலிடம்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர் 608 ரன்கள் குவித்துள்ளார். 94 ரன்கள் அடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன் ஆகும். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 33.77

மும்பை இண்டியன்ஸ், ட்ரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள போல்லார்ட் இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் 25 ஆட்டங்களில் 592 ரன்கள் எடுத்துள்ளார்.

டெல்லி டேர் டெவில்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் 556 ரன்களுடன் (13 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் 497 ரன்களுடன் (19 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

வெற்றிகளை குவித்த சூப்பர் கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுவரை 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சூப்பர் கிங்ஸ் 11 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மும்பை இண்டியன்ஸ் உள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் பங்கேற்று 10 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. இரு ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை. மூன்றாவது இடத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணி 7 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஹைவேல்ட் லயன்ஸ், வாரியர்ஸ் ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளை பெற்றுள்ளன.

அதிக விக்கெட் எடுத்தவர்கள்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளில் விளையாடிய டேயன் பிராவோ முதலிடத்தில் உள்ளார். அவர் 18 போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடரஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள சுனில் நரைன் 15 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்திய 2-வது இடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வின் 25 விக்கெட்டுகளுடன் (19 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், மும்பை இண்டியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 24 விக்கெட்டுகளுடன் (14 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணி வீரர் ரவி ராம்பால் 23 விக்கெட்டுகளுடன் (18 ஆட்டங்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

குழந்தை-பாட்டி உள்பட 8 பேரை கொன்ற காமக்கொடூரன் சிக்கியது எப்படி..? - பரபரப்பு தகவல்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேறிப்பட்டி கிராமத்தில் பீடா கடைக்காரர் செல்வத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கொள்ளையன் சுப்பராயன் (25) போலீசில் சிக்கினான். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்திரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவன் லாரி கிளீனராக வேலை செய்து வந்தான்.

அவனிடம் போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காமக் கொடூரனான அவன் கொடூர கொலையாளி என்பதும், தனது சொந்த பாட்டி உள்பட 8 பேரை கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதில் 3 பெண்களை கொடூரமாக கற்பழித்து கொன்றுள்ளான்.

இதுபற்றிய திடுக்கடும் தகவல்கள் வருமாறு:–

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த கல்லக்குடியில் ஜெயமேலு (வயது 82) என்ற மூதாட்டியை பணத்துக்காக கொலை செய்துள்ளான்.

கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சரகத்தில் முத்துலட்சுமி (25), அவரது தாயார் சாவித்திரி ( 50) ஆகியோரை கொன்றான்.

முத்துலட்சுமியை கற்பழித்தபோது அதை அவரது தாயார் சாவித்திரி பார்த்து விட்டார். இதனால் இருவரையும் தீர்த்து கட்டினான்.

கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் 2–ந் தேதி சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தனது பாட்டி அய்யம்மாளிடம் பணம் கேட்டான். அவர் தர மறுக்கவே அவரையும் கொன்று விட்டு காதில் கிடந்த அரை பவுன் தோடை திருடி சென்றான்.

அப்போது ஏத்தாப்பூர் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த அவன் மீண்டும் கொலைகளை செய்து உள்ளான்.

கடந்த ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளைக்கல் குவாரியில் லாரி கிளீனராக வேலை பார்த்த சுப்பராயன், வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றான். அவரிடமிருந்து ரூ 6 ஆயிரத்து 500–யையும் பறித்தான்.

கடந்த 5–ந் தேதி அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் வேல்முருகன் (33), அவரது மனைவி பார்வதி (25), அவர்களது ஒன்றரை வயது குழந்தை கீர்த்தனா ஆகிய 3 பேரை கொன்று உள்ளான்.

வேல்முருகனின் வீட்டுக்குள் புகுந்த சுப்பராயன் முதலில் பார்வதியை தாக்கி கற்பழித்து கொன்றுள்ளான். இப்படி அடுத்தடுத்து 8 கொலைகளை செய்த நிலையிலும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துள்ளான். இதுவே இவனுக்கு வசதியாக போய்விட்டது.

தம்மம்பட்டி போலீசில் சிக்கிய பின்னர்தான் இவன் 8 கொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டான்.

இன்று ஆத்தூர் மாஜிஸ் திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைக்கோ கொலையாளி சுப்பராயன் சிறையில் அடைக்கப்பட உள்ளான்.

அரியலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்ட போலீசார் கொலையாளி சுப்பராயனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பல கொலைகளை செய்து தமிழகத்தை கலக்கிய ஆட்டோ சங்கர். சேலம், கிருஷ்ணகிரி மற்றம் கர்நாடக மாநிலத்தில் பல பெண்களை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன் ஜெய்சங்கர் ஆகியோர் போன்று சுப்பராயன் பல கொலைகளை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவன் தமிழகம் முழுவதும் மேலும் பல கொலைகளை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் துப்பு துலங்காமல் உள்ள பல கொலைகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து சுப்பராயனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

சுப்பராயன் சைக்கோ கொலையாளியாக மாறியது எப்படி என்பது பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:–

எனது தந்தைக்கு 4 மனைவிகள். இதில் 3–வது மனைவியின் மகன்தான் நான். என் தந்தை அவரது மனைவிகளிடம் சந்தோஷமாக இருப்பார். இதை பார்த்த எனக்கும் அது போல இருக்க ஆசை வந்தது.

அவர் சந்தோஷமாக இருக்க என்னை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பிவிட்டார். வேலை பார்த்து விட்டு நான் வாங்கி வரும் பணத்தை எனது சித்தியும், தந்தையும் என்னிடம் இருந்து வாங்கி கொள்வார்கள். அடிக்கடி அவர்கள் என்னிடம் பணம் கேட்பார்கள். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நான் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். ஈரோட்டில் முதலில் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். தமிழகம் முழுவதும் லாரியில் சென்று வந்தேன்.

யாராவது பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அதை பிடுங்க வேண்டும் என்று நினைப்பேன். முதலில் அவர்களிடம் பணத்தை கேட்பேன். அவர்கள் தர மறுத்தால் கொன்று விடுவேன். பணம் பறிக்கும் போது பெண்ணை கற்பழித்து கொல்வேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

'ஐ' எதைப் பற்றியது..? - விக்ரம் சூசகம்

'ஐ' படத்தின் கதை எதைப் பற்றியது என்று நடிகர் விக்ரம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசையினை அர்னால்ட் வெளியிட இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ் திரையுலக பிரபலங்கள் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.15ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது.

இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'.

இது ழுழுக்க முழுக்க ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான். ஒரு நடிகனாக, நடிப்பதற்கு எனக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். மூன்று முறை இப்படத்திற்காக எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

Saturday, September 13, 2014

சிகரம் தொடு (2014) - திரைவிமர்சனம்

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.

விக்ரம் பிரபுவுக்கு எப்படி போலீசாக வேண்டும் என்பது பிடிக்கவில்லையோ, அதேபோல் மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்னசெய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறான்.

மோனல் கஜ்ஜாரிடம் பொய் சொல்லிவிட்டு போலீஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள செல்கிறான். ஆனால், அங்கு மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் மோனல் கஜ்ஜாரின் அப்பா இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார். மாறாக, தனது நண்பனான சத்யராஜுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.

இதற்காக விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால், விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார்.

இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.

அப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.

படத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.

இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சத்யராஜ் பொறுப்பான தந்தையாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜை போலீசாக பார்ப்பது சிறப்பு.

முதன்முதலாக போலீஸ் கதாபத்திரத்தை ஏற்று அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பா மீதுள்ள சென்டிமெண்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியான மோனல் கஜ்ஜார் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். திரையில் பார்க்க அழகாக இருக்கும் இவர் வெகுவாக ரசிகர்களை கவர்கிறார். மகேஷ், சதீஷ் இருவரும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.

மொத்தத்தில் ‘சிகரம் தொடு’ சிறந்த முயற்சி.

வானவராயன் வல்லவராயன் (2014) - திரைவிமர்சனம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.

வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால், எந்த பெண்ணும் இவரை காதலிக்கவில்லை. ஒருநாள் தனது தம்பி வல்லவராயனுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்துக்கு போகிறார் வானவராயன்.

அந்த திருமணத்தில் அஞ்சலி (மோனல் கஜ்ஜார்)யை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்கிறார். அவளும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறாள்.

இருவரும் காதலிக்கும் விஷயம் அஞ்சலியின் அண்ணன் சிவராஜு(எஸ்.பி.சரண்)க்கு தெரிய வருகிறது. அஞ்சலியை அடித்து கண்டிக்கிறான். இதையறிந்த வானவராயன் அஞ்சலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்று அவளை சந்திக்கிறான்.

இருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது ஊர்க்காரர்கள் திரண்டு வரும் சத்தத்தை கேட்டு இருவரும் ஓடுகிறார்கள். இருவரும் ஊரைவிட்டுத்தான் ஓடுகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்ட ஊர்க்காரர்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். வானவராயனை அடித்து அந்த ஊரை விட்டே அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் அஞ்சலியின் அப்பாவான வேலு நாயக்கர் (ஜெயபிரகாஷ்) வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டறிந்த வேலு நாயக்கர், தனது மகளை சமாதானப்படுத்தும் விதமாக வானவராயனையே அவளுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்.

இதற்கிடையில், தனது அண்ணன் வானவராயனை அடித்து அவமானப்படுத்தியதால் அஞ்சலி குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வல்லவராயன் குடித்துவிட்டு அஞ்சலியின் வீட்டுக்கு சென்று அவளது அப்பா மற்றும் அவளது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறான்.

இதனால் கோபமடைந்த வேலு நாயக்கர் தனது மகளை வானவராயனுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கிறார். இருந்தாலும் வானவராயன் நினைவாகவே இருந்து வருகிறாள் அஞ்சலி. ஒருகட்டத்தில் தன் தவறை உணர்ந்த வல்லவராயனும் வேலுநாயக்கரை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.

இறுதியில், வேலுநாயக்கரை சமாதனம் செய்து வானவராயன்-அஞ்சலி காதலில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வானவராயன் வல்லவராயனுமாக வரும் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்தும் படம் முழுக்க செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. அண்ணனுக்காக எதையும் செய்யக்கூடிய தம்பியாக நம் கண்முன்னே நிற்கிறார் மா.கா.பா. ஆனந்த். அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்து இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு ரொம்ப ஜாலியான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார்.

அஞ்சலியாக வரும் மோனல் கஜ்ஜார் திரையில் அழகாக பளிச்சிடுகிறார். கிராமத்து பெண் வேடத்துக்குத்தான் சரியாக பொருந்தவில்லை. நடிப்பிலும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்.

நாயகியின் அண்ணனாக வரும் எஸ்.பி.சரணுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கண்டிப்பான அண்ணனாக மனதில் பதிகிறார். தம்பி ராமையா, கோவை சரளா வரும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. கோவை தமிழில் இருவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பாசக்கார அப்பாவாக பளிச்சிடுகிறார்.

படத்தில் 15 நிமிட காட்சிகளில் சந்தானம் வருகிறார். இவர் வரும் அந்த 15 நிமிடத்தையும் கலகலப்பாக்கிவிட்டு போயிருக்கிறார்.

குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன். காமெடி ஓரளவுக்கு இருந்தாலும் படத்தில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, நாயகியின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் ரொம்பவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் படத்தை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர்.

யுவன்சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பழனிகுமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி அழகை அழகாக படமாக்கியிருப்பது குளுமை.

மொத்தத்தில் ‘வானவராயன் வல்லவராயன்’ போட்டியில்லை

காப்பகம்