Tuesday, September 2, 2014

உங்கள் CV, RESUME, BIO DATA என்ன வித்தியாசம்..? - இதைப்படிங்க..!

முதன் முதலில் இன்டர்வியூ செல்பவராக இருந்தாலும் சரி, இல்லை இதுவரை 10-15 முறை இன்டர்வியூவை சந்தித்தவராக இருந்தாலும் சரி. சிலருக்கு இன்னமும் நாம் கொடுக்கும் நம் தகவல்கள் அடங்கிய பக்கத்தை எப்படி பெயரிடுவது என்பது குழப்பமாகவே இருக்கும்! அதனை CV, RESUME, BIO DATA இப்படி மூன்றில் எப்படி குறிப்பிடுவது என்பது தீராத குழப்பமாக உள்ளது. சிலர் இது மூன்றும் ஒன்று தானே, இதில் பெயரிடுவது தான் வேறு என்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த மூன்றுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் என்னவெனில்...

பயோ-டேட்டா (BIO-DATA)

*  ஒரு பக்க அளவில் நம் பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தத் துறையில் எந்தப் பிரிவில் ஆர்வம், கல்வி தகுதி அடங்கிய அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பது தான் பயோ-டேட்டா!

* இது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறு அறிக்கையாக இருக்கும். இதனை பெரும்பாலும் ஒரு சந்திப்பின் போது அறிமுகத்திற்காக பயன்படுத்துவார்கள்.

* முதல் முறையாக இன்டர்வியூவிற்கு செல்லும் செல்பவர்கள் அதனை எடுத்து செல்வது தான் சிறந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் ரெஸ்யூம் என்று இதனை குறிப்பிடுகிறார்கள் ஆனால் இது வெறும் பயோ-டேட்டா தான்.

ரெஸ்யூம் (RESUME)

* ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வி தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையாகும். இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம்.

* இதனை பெரும்பாலும் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது துறை மாறி விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது தனித்திறன், அவரது கல்வித்தகுதி அடிப்படையில் முன்னுரிமை கிடைக்க இது வழிவகுக்கும். 

CV எனும் கரிக்குலம் விட்டே,

* இது சற்று பெரியது, பயோ-டேட்டா அல்லது ரெஸ்யூம்வை போல அல்லாமல் சற்று விரிவாக இருக்கும். இதில் ஒருவரை பற்றிய விரிவான சிறு விளக்கம் மற்றும் அவரது திறன், அனுபவம் பற்றிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* இதனை வேலைக்கு செல்பவர் அல்லது பெரிய பதவியில் இருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தப்படும்.

இவை தான் இந்த மூன்று தகவல் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! இதனை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்தாலே உங்களை மதிப்பிடுபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அணுகுமுறையை உண்டாக்கும். 

அதனால் இதனை தயார் செய்யும் போது கவனமாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உங்கள் தகவல்களை அளிக்க பழகுங்கள்.

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்...!

உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" (“Invisible Text”) எனும் இந்த செயலி, பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், "இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து..!


மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத் மிகவும் பாதிக்கப்பட்டார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என கோரி மும்பை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.

வழக்கில் கூறி இருந்ததாவது:-

திருமணமான நாள் முதல் என் மனைவி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாள். அவள் அளவு கடந்த செக்ஸ் ஆசை கொண்டிருந்தாள். பிடிவாத குணம் கொண்டு, மூர்க்கத்தனமாகவும், சர்வாதிகாரி போலவும் நடந்து கொண்டாள். காரணமே இல்லாமல் என்னுடன் சண்டை போட்டு வந்தாள். எனக்கு போதை ஊசி போட்டு வந்ததுடன், மது பானம் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினாள். பாலுறவுக்கு மறுத்தபோதெல்லாம், தரக்குறைவான வார்த்தைகளால் என்னைப் பேசினாள். அவளது வார்த்தைகளுக்கு பயந்தே பல நேரங்களில் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.

இடைவிடாமல் 3 ‘ஷிப்டு’ களில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது கூட செக்ஸ் தொல்லை கொடுத்தாள். நான் அதற்கு இணங்காவிட்டால், வேறு ஆணைத் தேடிப்போய் விடுவேன் என மிரட்டலும் விடுத்தாள். என் உணர்வினைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எனது மனைவி அவளது சகோதரி வீட்டில் நாம் இருந்து கொள்ளலாம் என கூறி கட்டாயப்படுத்தினாள். அங்கும் அவள் எனக்கு செக்ஸ் தொல்லை தந்தாள். அவளது நிலையை உணர்ந்து நான் அவளை மன நல மருத்துவரிடம் அழைத்துச்சென்று, சிகிச்சை அளிக்க விரும்பினாலும், அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. யாரிடமும் என்னைப்பற்றி சொன்னால், நடப்பதே வேறு என மிரட்டினாள். இனியும் அவளுடன் இணைந்து என்னால் வாழ முடியாது. எனவே எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது யாமினி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சரத்துக்கு யாமினியிடமிருந்து விவாக ரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பில் நீதிபதி, “இந்த வழக்கில் வழக்குதாரரின் மனைவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்குதாரரின் வாக்குமூலத்தில் மாற்றம் இல்லை. எனவே அவரது வாக்குமூலத்தை ஏற்று, அவருக்கு விவாகரத்து வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக பேசும் வசதி..?

குறுஞ்செய்தி அனுப்புவதற்காக பயன்படும் ஆண்ட்ராய்டு செயலியான வாட்ஸாப் விரைவில் இலவச வாய்ஸ் காலிங் சேவையை தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. வாட்ஸாப்பில் சில நாட்களாக மாறிவரும் அமைப்புகள் இந்த வாய்ஸ் காலிங் சேவை விரைவில் இடம்பெறுவதற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


தற்போது இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியில், குறுஞ்செய்தி, புகைப்படங்கள், சிறிய வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், வாட்ஸ் ஆப் மூலம், தொலைபேசி அழைப்பைப் போல பேச முடியாது. இப்போது அந்த அம்சமும் சேரப்போகிறது எனத் தெரிகிறது. அடுத்து வரப்போகும் வாட்ஸ்ஆப் பதிப்பின் மாதிரி பக்கத்தில் (ஸ்க்ரீன்ஷாட்), வாட்ஸ் ஆப் வழியாக பேசுவதற்கான அழைப்பு வரும்போது, அந்த அழைப்புக்கான எழுத்துகள், மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது என thefusejoplin.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் போலவே ஃபேஸ்புக்கிலும் இலவச அழைப்புக்கான வசதி வருமா என எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் பயன்பாடு 15 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியீட்டால் பரபரப்பு..!

நடிகை ஜெனிபர் லாரன்ஸ் உள்பட 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியானது

பிரபல ஹாலிவுட் நடிகைள்  தங்கள் செல்போனில் வைத்திருந்த அவர்களின் அந்தரங்க படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. வரலாற்றில் ஆன் லைனில் இவ்வளவு அதிகமான நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும். 100க்கும் மேற்பட்ட   நடிகைகள் இதில் அடங்கி உள்ளனர்.இவை அனைத்தும் ஆன் லைனில் சேர் செய்யபட்டு உள்ளது . இந்த படங்கள்  அனைத்தும் 4சேன் என்ற இணையதளத்தில் ,வெளியாகி உள்ளது.. இந்த இணையதளம்  படங்களை  பகிர்ந்து கொள்வதற்கான இணையதளம் இது 2003 இல் தான் தொடங்கபட்டு உள்ளது. இது ஜப்பானை சேர்ந்த இணையதளம் ஆகும்

இந்த இணையதளம் மேலும் பல பிரபலங்களின் ஹக்கிலும் தொடர்புடையது.சாராபாலின்  இ.மெயிலை  கடந்த 2008 ஆம் ஆண்டு ஹேக் செய்து படங்களை வெளியிட்டது.  2010 இல் பிரபல் பாப்பாடகர் ஜஸ்டின் பைபர் படங்கள் வெளியானதிலும் தொடர்புடையது என கூறப்படுகிறது

இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து பயனாளர்களும் உண்மையான முகவரி இல்லாதவர்கள் ஆவார்கள். போட்டோக்கள் அனைத்தும் ஆப்பிள் ஐகிளவுடு மூலம் பெறபட்டு இந்த இணையதளத்தில் பதியப்பட்டு உள்ளது.பயனாளர்களின்   போட்டோ மற்றும் டேட்டாக்களை ஐகிளவுடு தானாகவே  பதிவு செய்து கொள்ளும்.

டுவிட்டர் இணையதளம்  இந்த படங்கள் சேர் செய்த அனைத்து கணக்குகளை நீக்கி உள்ளதாக கூறி உள்ளது

குறிப்பாக நடிகை ஜெனிபர் லாரன்சின்  நிர்வாண படங்கள் வெளியாவதற்கு  பின்னணியாய் ஹேக்கர்கள் இருக்ககூடும் என கூறப்படுகிறது. அவரது  செக்ஸ் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.இதை லாரன்ஸின் செய்து தொடர்பாளர் உறுதி படுத்தி உள்ளார்..

நடிகை கேத்தேவின் வழக்கறிஞர் இது ஒரு மூர்க்கதனமான செயல் என கூறி உள்ளார்.

நடிகை மேரி எலிசபெத்  உண்மையில் அது தன்னுடைய புகைப்படம் தான் என உறுதி செய்து உள்ளார்.அரினா கிராண்டி இந்த புகைப்படங்கள் அனைத்து, போலியானவை என கூறி உள்ளார்.

ஆப்ரி பிளாசா, காண்டைஸ் ஸ்வேனி போல்l, கரா டெலிவிங்னி, கேத் டீலே  ஹிலாரி டப், கெல்லி புரூக், மைக்கேல் கீகன், செலினா கோம்ஸ், ரிஹானா மற்றும் வனேசா ஆகியோரின் படங்கலும் வெளியாகி உள்ளது

தயாரிப்பாளரின் 'பர்ஸை' பதம் பார்த்த சமந்தாவின் பிகினி..?

அஞ்சான் படத்தில் நடிகை சமந்தாவை பிகினி காட்சியில் கவர்ச்சியாக காட்ட ஏகப்பட்ட செலவாகியதாம்.

அஞ்சான் படத்தில் நடிகை சமந்தா பிகினி அணிந்து நடித்திருந்தார். அந்த காட்சியில் நடித்ததன் மூலம் அவருக்கு சரும வியாதி இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தான் பிகினி காட்சி குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.


பிகினி காட்சியில் அதிகமாக லைட் வைக்காமல் படமாக்கியிருக்கிறார்கள். சமந்தாவுக்கு சரும பிரச்சனை இருந்ததால் ஓவராக லைட் வைத்தால் அது தெரிந்துவிடுமோ என்று நினைத்துள்ளனர்.

சிஜி என்ற கலர் கரெக்ஷன் பணி மூலம் பிகினி காட்சியில் சமந்தாவின் மேனி பளபளவென தெரியும்படி செய்தார்களாம்.

சமந்தாவின் தோலை பளிச்சென்று காட்ட மட்டும் மாதக்கணக்கில் பணியாற்ற ஏகப்பட்டு செலவு செய்துள்ளார்களாம்.

அஞ்சான் படத்தை பார்த்த தெலுங்கு திரை உலகினர் சமந்தாவுக்கு பிகினி போட்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

அஞ்சான் படத்தில் சமந்தாவை கவர்ச்சியாக காட்ட ஆன செலவு குறித்து அறிந்த டோலிவுட்காரர்கள் அவ்வளவு பணத்தை செலவு செய்து அவரை பிகினியில் நடிக்க வைக்க வேண்டுமா என்ற யோசனையில் உள்ளார்கள் என்று செய்திகள்...

உடல் பருமனாக இருக்கிறதா..? கவலையை விடுங்க..!


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

4. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும்.

5. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.

6. காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும், உடல் இளமை பெறும்.

காப்பகம்