Monday, August 25, 2014

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள்..?

1. மது அருந்துதல்

எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும்.


சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி


"Light ஐ போட்டு வண்டி ஒட்டு'

Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..."


சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக பெண்கள் வீதிகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்...


வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்பொது நான் கூறுவது எனது சொந்த அனுபவம் ...


நீங்கள்  motor cycle  ஓட்டும் போது எதிரில் வருபவர் முன் உங்கள்  headlight ஐ சற்று டிம் பண்ணுங்க... அப்பிடி டிம் பண்ணாம வந்த ஒருத்தரோட நான் மோதியிருக்கேன் நல்ல வேளை இப்போ உயிரோட இருக்கேன்... so நான் சொன்னது விளங்கியிருக்கும்......


அடுத்து வீதி ஒழுங்குகளை பேணி பாதையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்குகளைக் கருத்திட் கொண்டு உங்கள் வாகன சாகசங்களை தொடர்ந்து மேட்கொள்ளுமாறு கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

பாம்பை கொன்று சூப் வைத்த பின் 20நிமிடம் கழித்து சமையல்காரரை கொன்ற பாம்பு..!

சீனாவில் வடமேற்கு பிராந்திய மக்கள் பாம்பு நாய் பூனை உள்ளிட்ட உயிரினங்களினி உணவுகளை விரும்பி உண்பர். அதிலும் பாம்பு உணவுகள் என்றால் இங்குள்ள மக்களுக்கு கொள்ளை பிரியம்  மேலும் பாம்புகறி  மற்றும் பாம்பு சூப் சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை இதனால் இந்த பகுதியில் ஏராளமான பாம்புக்கறி உணவகங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு உணவகத்திற்கு உயிருடன் பிடித்து வரப்பட்ட ராஜநாகத்தை சமையல்காரர் பெங் பென், சமையலுக்காக அதன் தலையை வெட்டினார். அப்போது வெட்டப்பட்ட தலை அருகேயே துடித்துக்கொண்டிருந்தது. இந்நிலையிட்ல  உடலை எடுத்து சூப் வைத்தார். 20நிமிடத்திற்கு பின் சூப் தயாரானபிறகு  கழிவுகளை எடுத்து குப்பையில் வீசப்போனார். அப்போது பாம்பின் தலையை எடுக்க அவர் முயன்றார்.

 இந்நிலையில் பெங் பென்ன் கையை துடித்துக்கொண்டிருந்த ராஜநாகம் திடீரென கவ்வி கடித்தது. இதில்அவரது உடல் முழுவதும் விஷம் ஏறி  கீழே விழுந்தார். வலியால் துடித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு உடன் இருந்தவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பொதுவாக ராஜநாகம் உள்ளிட்ட பாம்புகள் தலைவெட்டப்பட்ட பிறகு ஒரு மணி நேரம் வரை உயிருடன் துடித்துக்கொண்டு இருக்கும். இதனை சரியாக கவனிக்கமால் சமையல்காரர் பெங் பென் தொட முயன்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரிஸ்க் எடுக்க வேண்டாம் - விக்ரம் பிரபுவுக்கு ரஜினி அட்வைஸ்..!

‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு கூறியதாவது:‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்கள் வெவ்வேறு களத்தில் அமைந்தன. ‘வெள்ளக்கார துரை’யில் முதல்முறையாக காமெடி செய்துள்ளேன்.

அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் கதையாக ‘சிகரம் தொடு’ உருவாகியுள்ளது. அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்டி மெண்ட் கலந்த படம். எனக்கு போலீஸ் வேடம். கவுரவ் இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகிறது. தவிர, விஜய் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.

இந்த மாதிரி படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று விதி வகுத்துக் கொள்ளவில்லை. என் தாத்தா நடிகர் திலகம் சிவாஜி மாதிரி அனைத்து விதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். படம் இயக்க வேண்டும் என்பது லட்சியம். நடிகனாகி விட்டதால், இப்போது படம் இயக்கும் எண்ணம் இல்லை.

சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்ற கவலை குடும்பத்தின ருக்கு இருக்கிறது. ‘ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று ரஜினி அட்வைஸ் செய்துள்ளார். எனக்கு டூப் போடுவதில் உடன்பாடில்லை. டூப் இல்லாமல் முரட்டு யானையுடன் நடித்ததால், ‘கும்கி’ படம் பாராட்டப்பட்டது. ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ படங்களின் சண்டைக் காட்சி பேசப்படுகிறது. தாத்தா மற்றும் அப்பா பிரபு பெயரை காப்பாற்றும் வகையில், அதிக கவனத்துடன் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்..

காப்பகம்