Sunday, September 21, 2014

'வேலியே பயிரை மேய்ந்தது:' பெண்களை வைத்து விபசாரம்; போலீஸ்காரர் கைது...!

நகரில் பல இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்த போலீஸ்காரர் செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருபவர் பாலமுருகன் (வயது 23). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ஆகும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு கடலூர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது மதுரை மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரிமுத்து (34) என்பவர் பேச்சு கொடுத்தார். தனது வீட்டில் அழகிய பெண்கள் இருப்பதாகவும், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி பாலமுருகனை அழைத்து வந்ததாக தெரிகிறது. அங்கு வந்த அவர் பெண்களுடன் செல்ல மறுத்ததுடன் இதுகுறித்து செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து புரோக்கர் மாரிமுத்து, அவரது வீட்டில் இருந்த சதீஷ் மனைவி கலைச்செல்வி(37), கார்த்தி மனைவி பிரியா (எ) ராதா(32) ஆகிய 3 பேரை¬யும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலர் பாலமுருகன் என்பவர் மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்தது தான் இதற்கு காரணம். இதேபோன்று நகரில் பல இடங்களில் வாடகை வீடு பிடித்து இந்த தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்லூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் உண்மை என்று தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் போலீசாரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டிய போலீஸ்காரரே பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

காப்பகம்