Saturday, January 11, 2014

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஜோடி..!



திரையுலகை பொறுத்தவரை ஏதாவது ஒரு ஜோடி முதன் முறையாக இணைந்து நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம்.

உடனே அந்த ஜோடிக்கு ராசியான ஜோடி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதோடு நில்லாமல் மீண்டும் அந்த ஜோடியை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கங்கனம் கட்டிகொண்டு வருவார்கள். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்து பட்டித் தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றிய ”பொன்ராம்” இயக்கியிருந்தார்.

இந்த வெற்றியைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யாவை ஜோடியாக்கி மீண்டும் ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார்களாம். இந்த படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சிவகார்த்திகேயனின் அண்ணன் தனுஷ்தான். தனுஷ் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ”எதிர்நீச்சல்” என்ற படத்தை தயாரித்து இருந்தார்.

முதலில் இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமன்னா, அமலா பால் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கதான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், சம்பள விஷயத்தில் இருவரும் ஒத்து வராததால் இறுதியில் ஸ்ரீதிவ்யாவையே மீண்டும் ஜோடியாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். எனவே, சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடியின் வெற்றி 2014ஆம் ஆண்டிலும் தொடருமா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யக்கூடாதது



ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. 

(கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். 

இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். 

காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். 

அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

“கல்லா கட்டவில்லை ஜில்லா''

 


விஜய் நடித்து வெளியான ஜில்லா படம், கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் செலவு செய்து படத்தை வாங்கி வெளியிட்டுள்ள மதுரை விநியோகஸ்தர்கள், எதிர்பார்த்த அளவு ஜில்லா படம் கல்லா கட்டாததால், தகவல் தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாகவும், தேவையற்ற காட்சிகளை நீக்கி, படத்தை விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததால், ஒரு குழு சென்னையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது.


அதே நேரம் அஜீத் நடித்து வெளியாகியுள்ள வீரம் படம் மதுரை பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், அஜீத்தின் முந்தைய ஆரம்பம் படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்காவிட்டாலும், விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ரசிகர்களிடையே, “கல்லா கட்டவில்லை ஜில்லா; சோரம் போகவில்லை வீரம்” என்ற குறுஞ்செய்திகள் அதிக அளவில் பரப்பப் பட்டு வருகின்றன.

காப்பகம்