Thursday, September 11, 2014

காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேட கூகுளின் பெர்சன் ஃபைண்டர்..!

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூகுள் சார்பில் ஒரு தேடுதல் பொறி உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாகக் கொட்டித் தீர்த்த மழையால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த பாதிப்பு நிலவி வருகின்றது.  இந்த வெள்ளத்தால், தொலைத்தொடர்புகள் கூட துண்டிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் பெர்சன் பைண்டர் என்ற சிறப்பு தேடு பொறி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.  இந்த இணைய பொறியின் மூலமாக தனியொருவர் தங்களைப் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும், தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு என்ன நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும் அறிய முடியும். ஒருவேளை பாதிக்கப்பட்ட பகுதியில் உங்கள் உறவினர் இருந்தால், நான் ஒருவரைத் தேடுகின்றேன் என்ற லிங்கை அழுத்தி, அவர்களுடைய பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

மற்றவர்கள் நீங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும் என்றால், அல்லது யாரைப் பற்றியேனும் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னிடம் சில தகவல்கள் உள்ளன என்ற லிங்கை அழுத்தி பெயர், விவரங்களைத் தெரிவிக்கலாம்.  பெயர் குழப்பங்கள் வராத வகையில் தேடுபவர்களை ஒன்றிணைத்து கூகுள் தகவல்களை தெரிவிக்கும். இந்த பொறியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

விபசார வழக்கில் சுவேதாபாசுவுடன் சிக்கிய தொழில் அதிபர்..!

விபசார வழக்கில் சுவேதாபாசுவுடன் சிக்கிய தொழில் அதிபர் பெயரை அறிவிக்க வேண்டும் என நடிகைகள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த சுவேதாபாசு, சமீபத்தில் ஐதராபாத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.

பணம் சம்பாதிப்பதற்காகவே விபசாரத்தில் ஈடுபட்டதாக சுவேதா தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுவேதாவுக்கு ஆதரவாக அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை சாக்ஷி கூறியது:நடிகை சுவேதாவை மட்டும் போலீசார் குறி வைத்து செயல்படுவது ஏன்? மும்பை தொழில் அதிபரும் இதில் சிக்கி இருக்கிறார். அவர் பெயரை வெளியிடாதது ஏன்? அவரைப் பற்றி எந்த குற்றச்சாட்டும் சொல்லாமல் போலீசார் மௌனம் காப்பது ஏன்? அவர்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றனர். இதற்கு பின்னால் என்ன இருக்கிறது.


சுவேதா எந்த காப்பகத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது தாயார் சமீபத்தில் சுவேதாவை சந்திக்க சென்றிருக்கிறார் ஆனால் அனுமதிக்கப்படவில்லை. அவரிடம் பேசியபோது, ‘என் மகள் கிரிமினல் குற்றவாளி கிடையாது என கூறி அழுதார். சுவேதா பெயரை பிரபலப்படுத்துவது ஏன்? இதை தாங்க முடியாமல் அவர் எதிர்மறை முடிவு எடுத்தால் யார் பொறுப்பு.

இவ்வாறு சாக்ஷி கூறினார். அதேபோல் நடிகை குஷ்புவும் சுவேதாவை குற்றம் சொல்பவர்கள், அவருடன் பிடிபட்ட தொழில் அதிபர் யார் என்பதையும் சொல்ல வேண்டும் என கூறி இருக்கிறார். மற்ற ஹீரோயின்களும் இதற்கு ஆதரவாக இணைய தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவன்-இவனுக்கு பிறகு மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா..!


தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்ட விஷால் சினிமாவுக்கு வந்து இன்றோடு 10 வருடங்கள் முடிவடைந்து விட்டது. தற்போது ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடித்து வரும் விஷால், சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளார். இதுதவிர சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.

விஷால் நடிப்பு மட்டுமின்றி விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தில் தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.

பாலா இயக்கத்தில் அவன்-இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். தற்போது இப்படத்தில் விஷால்தான் நாயகன் என்றாலும், ஆர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து நடிக்கவுள்ளாராம். இப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்..!

ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.

ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு நேராக முடியாது என ஆண்களால் கூற முடிவதில்லை. அதனால் அதற்கு சாமர்த்தியமான வழிகளை கையாளுகின்றனர். ஆணுறை என்பது உடலுறவு இன்பத்திற்கு தேவையற்ற இடைஞ்சல் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அதனை தவிர்க்க அவர்கள் கூறும் காரணங்கள் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது.

ஆண்கள் ஆணுறை அணியவில்லை என்றால், அவர்களிடம் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் மற்றும் கர்ப்பமாகி விட்டால், அவர்களை முதலில் குறை கூறுவதும் ஆண்களாக தான் இருக்கும். பெண்களுக்கு உண்டாகும் STD பிரச்சனைகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அதனால் பெண்களின் பாதுகாப்பும் வருங்காலமும் ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. சரி அதனை பயன்படுத்தாமல் இருக்க, அப்படி என்ன காரணங்களை தான் ஆண்கள் அடுக்குகிறார்கள் என பார்க்கலாமா?

ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும் பிளாஸ்டிக் உணர்வு உடலுறவின் சுகத்தை முழுமையாக அழித்து விடுகிறது என்பது பல ஆண்கள் கூறும் காரணமாகும். அதனால் ஆணுறை இல்லாமல் தொடர பெண்களை அவர்கள் சமாதானப்படுத்த முயல்வார்கள்.

பாதுகாப்பான நாட்கள் தான்; ஆனால் STD பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ஆண்களே? பெண்களுக்கு பாதுகாப்பான நாட்கள் இருக்கிறது என்பதை காரணம் காட்டி ஆண்கள் ஆதாயம் தேட முயல்வார்கள். இதனால் அவர்கள் அந்த நாட்களில் ஆணுறை பயன்படுத்த வேண்டியதில்லை பாருங்கள்.

ஆணுறைகள் 3% தோல்வி வீதத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆண்கள் அந்த வீதத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இதை ஒரு காரணம் காட்டி, என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும், அது கடவுள் கையில் தான் உள்ளது என தத்துவமும் பேசுவார்கள்.

ஆனால் STD-க்கு எதிராக மாத்திரைகள் பாதுகாப்பை அளிக்காது தானே? மேலும் அதில் 20% தோல்வி வீதமும் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த சூட்டில் இருக்கும் ஆணிடம் இதை கூறி பாருங்கள்; கண்டிப்பாக அவருக்கு காது கேட்காது.

இந்த அனைத்து பொய்யான சாக்குகளுக்கு பிறகு, பெண்களின் திருப்தியின் மீது அக்கறை உள்ளவரை போல் ஆண்கள் நடிப்பார்கள். ஆண்கள் ஆணுறை அணிந்து கொண்டால், பெண்களால் முழுமையான திருப்தியை அடைய முடியாது என்றும் நம்ப வைப்பார்கள்.

உங்களால் முடியலாம், ஆனால் உங்கள் கட்டுப்பாடுகளின் தரத்தின் மீது சோதனை மேற்கொள்வது நல்லதாகும். தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற பெரிய ஈகோவை ஆண்கள் கொண்டுள்ளனர். அதனால் விந்தணு வெளிப்படும் வேளையில் தங்கள் ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதாக மார்த்தட்டி கொள்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்வகையான விஷயங்களை சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்; செய்வதற்கு???

'காதல்' மற்றும் 'பாதுகாப்பான உடலுறவு' ஆகிய இரண்டும் தனித்தனி கருத்துக்கள் ஆகும். ஆனால் ஆணுறை பயன்பாட்டில் இருந்து தப்பிக்க வேண்டி வரும் போது, ஆண்கள் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்திடுவார்கள்.

என்னங்க இது; கண்டிப்பாக குழந்தையை வளர்க்கும் செலவை விட அல்லது கரு கலைப்பு செய்யும் செலவை விட ஆணுறையின் செலவு குறைவு தான்.

சில நேரங்களில் புத்தியில்லாமல் பைத்தியகாரத்தனமாக ஆண்கள் நடப்பார்கள். இயல்பாக பயன்படுத்தும் கருத்தடை தோல்வியில் முடியும் போது அவசர சூழ்நிலைகளுக்கு மட்டும், காலை நேரத்திற்கு பின் இந்த மாத்திரைகள் உண்ண வேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விரிவாக சொல்லுங்களேன். நினைத்த நேரம் இந்த மாத்திரைகளை விழுங்க முடியாது.

உங்கள் ஆணிடம் பாதுகாப்பைப் பற்றி பேச தொடங்கினால், உடனே நம்பிக்கை பற்றிய பிரச்சனையாக்கி விடுவார்கள். இந்த பிரச்சனையை இழுத்தால் அதற்காக நீங்கள் ரொம்பவும் வருத்தப்படாதீர்கள். ஆணுறையை தவிர்க்கவே இந்த சீனெல்லாம் போடுகிறார்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்..!

22 - ravi temple 2
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?
அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

22 - ravi temple 1
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.


கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

காப்பகம்