Thursday, November 14, 2013

மனோஜ் குமார் - வாழ்க்கை வரலாறு (Biography)




மனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை கருப்பொருளாக கொண்டு பல படங்கள் இயக்கி நடித்ததால், அவர் “திரு பாரத்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் திரைப்படத்துறையில் உயரிய விருதான “தேசிய திரைப்பட விருது” என மேலும் பல விருதுகளை பெற்று, இந்திய திரைப்படத்துறையில் இன்றளவும் சிறந்து விளங்கும் மனோஜ் குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 24,  1937

இடம்: அபோதாபாத், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில் உள்ளது)

பணி: நடிகர், இயக்குனர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு


ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற இயற்பெயர் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 1937  ஆம் ஆண்டு ஜூலை 24  ஆம் நாள், அப்போதைய இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அபோதாபாத் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


தன்னுடைய பத்து வயதில், புது தில்லிக்கு இடம் பெயர்ந்த அவர், புது தில்லியிலுள்ள “இந்து கல்லூரியில்” (தில்லி பல்கலைக்கழகம்) சேர்ந்து கல்விக் கற்று, இளங்கலைப் பட்டமும் பெற்றார். பிறகு, திரைப்படத்துறையில் ஏற்பட்ட அதிக ஈடுபாடு காரணமாக தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்கு பிறகு திரைப்படத்துறையில் நுழைய முடிவு செய்தார்.

திரைப்பட வாழ்க்கை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலிப் குமாரால், ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற அவருடைய பெயரை ‘மனோஜ் குமார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “ஃபேஷன்” திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மனோஜ் குமார் அவர்கள், 1960 ஆம் ஆண்டு வெளியான “காஞ்ச் கி குடியா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து “பஞ்சாயத்” (1958), “ஹனிமூன்” (1960),  “பியா மிலன் கி ஆஸ்” மற்றும் “ரேஷ்மி ருமால் (1961)” “ஹரியாலி அவுர் ராஸ்தா (1962), வோ கோன் தி (1964), ஹிமாலய கி கோத் மெய்ன் (1965) போன்ற மறக்கமுடியாத திரைப்படங்களை வழங்கினார்.

நாட்டுப்பற்று மிக்க நாயகனாக

பாரத தேசத்தின் மீது அதிக பற்று கொண்டவராக விளங்கிய அவர், தேசப்பற்று கதாபத்திரங்களில், மிகவும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1965 ஆம் ஆண்டு பகத்சிங் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஷாகித்” என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டுப்பற்று மிக்க நாயகனாக அவர் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த இயக்கத்தில் வெளியான “உப்கார்” என்ற திரைப்படம் இவரின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையமைப்பில் மகேந்திர கபூரால் பாடிய “மேரேதேஷ் கி தர்த்தி” என்ற பாடல் பாடல் மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான “தேசிய விருதையும்” மற்றும் சிறந்த இயக்குனருக்கான “ஃபிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது.

1970 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படங்கள்

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல வெற்றி படங்களை தந்த அவருக்கு, 1975 ல் வெளிவந்த “ரோட்டி கப்டா அவுர் மக்கான்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல், சிறந்த இயக்குனருக்காண இரண்டாவது “பிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது. பிறகு, அதே ஆண்டில் வெளிவந்த “சன்யாசி” திரைப்படம், ஒரு மத பின்னணியிலான திரைக்கதையை கொண்டு அமைந்தது. ‘கிளார்க்’ (1989) மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ போன்ற திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும், 1998 ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது’ வழங்கப்பட்டது.

பிற திரைப்படங்கள்

இதனை தொடர்ந்து, ‘பூரப் ஔர் பஷ்சிம்’ (1970),  ‘யாத்கர்’ (1970),  ‘பெஹ்சான்’ (1970), ‘மேரா நாம் ஜோக்கர்’ (1970), ‘பலிதான்’ (1971) , ‘ஷோர்’ (1972), ‘பே-இமான்’ (1972), ‘ரோட்டி கப்டா ஔர் மக்கான்’ (1974), ‘சன்யாசி’ (1975), ‘தஸ் நம்பரி’ (1976), ‘ஷீரடி கே சாய் பாபா’ (1977), ‘அமானத்’ (1977), ‘க்ரான்த்தி’ (1981), ‘கல்யுக் ஔர் இராமாயண்’ (1987), ‘சந்தோஷ்’ (1989), ‘கிளெர்க்’ (1989), ‘மைதான்-ஏ-ஜங்’ (1995)

அரசியல் வாழ்க்கை

மற்ற பாலிவுட் நட்சத்திரங்களைப் போல இவரும் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு’ நடைபெற்ற பொது தேர்தலில் “பாரதிய ஜனதா கட்சியுடன்” இணைந்து செயல்பட்டார்.

விருதுகளும் மரியாதைகளும்

•1968 ஆம் ஆண்டு “உப்கார்” என்ற திரைப்படத்திற்காக “இந்திய தேசிய விருதும்” நான்கு “ஃபிலிம்பேர் விருதும்” வழங்கப்பட்டது.

•1972 ஆம் ஆண்டு “பே-இமான்”, மற்றும் 1975 ஆம் ஆண்டு “ரோட்டி கபடா ஔர் மக்கான்” போன்ற திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

•1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

•1999 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

•2008 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநில அரசால் “தேசிய கிஷோர்குமார் விருது” வழங்கப்பட்டது.

•2009 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே அகாடமியிடம் இருந்து ‘பால்கே ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

•2010 ஆம் ஆண்டு மகராஷ்டிர மாநில அரசால் “தேசிய ராஜ்கபூர் விருது” வழங்கப்பட்டது.

மேலும் 1968ல் பி.எஃப்.ஜெ.ஏ விருதும், 2001ல் வாழ்நாள் சாதனையாளருக்கான கலாக்கார் விருதும், 2008ல் ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2012ல் வாழ்நாள் சாதனையாளருக்கான அப்சரா விருதும், 2012ல் நாசிக் சர்வதேச திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது என மேலும் பல விருதுகளை பெற்ற மனோஜ் குமார் அவர்கள் இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்.

Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய!


 ஆம் சகோதர்களே இன்று நாம் பார்க்கப் போவது Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்வது எவ்வாறு? என்று.


 அநேகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் தான்.

Microsoft நிறுவனம் தனது  பயனாளர்களுக்கு புதியதை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கு.

அந்த வகையில் நாமும் Windows 8.1பதிப்பை Crack உடன் இலவசமாக Download செய்துகொள்வோம்.

Windows இனை பணம் கொடுத்து வாங்குவது என்றால்  $119 கொடுத்து வாங்க வேண்டும். 


இவ்வளவும் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு எம்மைப்போன்ற சாதரனமானவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான்.


இருந்தாலும் நாம் இம்மென்பொருளை crack உடன் இலவசமாக தரவிறக்குவதால் இதனை இலகுவாக பயன்படுத்தலாம்.


நான் கீழே கொடுத்துள்ள Crack ஐ active செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.


இது கீழேயுள்ள link இல் உங்களுக்கு விருப்பமானதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.






Download: 
 
 கீழேயுள்ள link இல் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
 
 


இதோ கீழே Crack உள்ளது அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
 
 
 
 

தனது பயனர்களுக்காக Gmail வழங்கும் மற்றுமொரு புதிய வசதி!



 முதற்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் Gmail ஆனது தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.



அதாவது மின்னஞ்சல்களில் இணைக்கப்படும் கோப்புக்களை கணனியில் தரவிறக்கம் செய்துகொள்ளும் அதேவேளை, நேரடியாகவே கூகுள் ட்ரைவினுள் சேமிக்கும் வசதியையும் தற்போது வழங்குகின்றது.




இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம் புகைப்படங்கள், வீடியோக்கள், எக்ஸெல் கோப்புக்கள் மற்றும் PDF கோப்புக்களை இவ்வாறு கூகுள் ட்ரைவினுள் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

தூக்கமின்மை சரியாக!


 
 
*தூக்கமின்மை சரியாக

சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.

*மனநலக் கோளாறு விலக

கீழாநெல்லினதும் மஞ்சகாமலைக்கு மருந்தெனத் தோன்றும். ஆனால், மனநலக்கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்கு என்பது ஆச்சர்யம் தானே! கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்கநிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில், காலை நேரத்தில் இதைப் பூசணும்.
 
 
 இரண்டரை மணியில் இருந்து மூணு மணி நேரம் கழித்து, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினைந்து நாளைக்கு ஒரு தடவை ச்எய்தால், நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு இல்லனா மூணு தடவை செய்தாலே போதும். இதே மாதிரி ‘நல்லவேளை இலை’யை கல் உரலில் போட்டு மையாக அரைத்து தலையில் பூசி, இரண்டரை மணியில் இருந்து மூணூ மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்து வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.

*நினைவாற்றல் பெருக

திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும். வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். 
 
 
 அமுக்கிராங்கிழங்கு சூரணம் இரண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ந்த திராட்சை ஒரு ஸ்பூன் எடடுத்து, 200 மில்லி பசும்பாலில் போட்டுக் காய்த்து, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 
 
 
வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வைத்துவிட வேண்டும். இதில் அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலை-மாலை என சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூடும். இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டால் சிலநாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?


சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று
: கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு
: எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு... மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!


கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!


கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ...‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!


நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!

1. சாலையில் எச்சில் துப்புதல் :


இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

3. குப்பைகளை கொட்டுவது :

நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

4. வரிசையை முந்தியடித்தல் :


இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

5. விட்டுகொடுக்காத பழக்கம் :

அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :


நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.

8. ஜாதி வெறி- மத வெறி - இன வெறி:


நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்

சென்னையின் வரலாறு!


சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம்  நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான  கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு  அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம்  பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.

ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வரலாறு

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது  உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக  கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு  துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. 

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்  இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.

1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா  விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.

புவியியல்

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன

கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை  உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது மாநகராட்சியின் தலைவர் மேயர் - சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.
தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். மேலும் சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை மாநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.

பொருளாதாரம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது.

மக்கள்

சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் விகிதம் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.

கலாச்சாரம்

சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.

சென்னையில் கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும், சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.

சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

போக்குவரத்து

சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.

சென்னையில் பறக்கும் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை புறநகர் இருப்புவழி மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.

கல்வி

சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.

சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது. செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது; 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி செலவில் கட்டப்பட்டது.

விளையாட்டு

சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் : சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

உயிரியல் பூங்காக்கள்


கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

பட்டுப் புடவையும் பராமரிப்பு முறையும்!

 

பெண்கள் பட்டுப் புடவை எடுப்பதற்குள் கடை ஒரு வழி ஆகிவிடும் என்று பரவலாக கிண்டலடிப்பது உண்டு. பட்டுப் புடவை விலை அதிகம் கொடுப்பதால், அதை அவ்வளவு சிரத்தையுடம் எடுப்பார்கள். அது மட்டும் அல்ல, அதனை பராமரிப்பதற்கும் நிறைய வேலை இருக்கிறது.

அதாவது,

பீரோவில் திறந்த நிலையில் பட்டுப்புடவைகளை வைக்கக் கூடாது துணிப் பையில் போட்டு அதனை கவரில் வைத்து வைக்கலாம்.

நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். எனவே, பட்டுப் புடவைகள் மீது வேறு ஏதேனும் துணிப் போட்டு அதன் மீது ஐயர்ன் செய்யலாம்.

அதுபோல பட்டுப் புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுப் புடவையைக் களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட சில மணி நேரங்கள் உலரவிட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

பருத்தித் துணியால் ஆன பைகளில் பட்டுப் புடவைகளைப் போட்டு பராமரித்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும்.

எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவையைச் சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்துத் துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒருமுறை, மடித்து வைத்ததற்கு எதிர்ப்புறமாக மடித்து வைக்க வேண்டும். இல்லை என்றால், மடித்த இடங்களில் இருக்கும் ஜரிகைகள் அவ்விடத்தில் தளர்ந்து போய்விடும்.

பட்டுப் புடவையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறை இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர்விட்டு அலச வேண்டும். சாதாரண கறைகள் ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்.

பட்டுப் புடவைகளை அடித்து பிரஸ் போட்டு துவைக்கக்கூடாது. முதலில் அலசும்போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு பட்டுப்புடவை நீண்டநாள் உழைக்கும்.

பட்டுப் புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

பட்டுப் புடவைகளைத் துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். காரமான சோப் கூடவே கூடாது.

பட்டுப் புடவைகளை அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன்  செய்யக்கூடாது.

பட்டுப் புடவைகளை தண்ணீரில் நனைப்பதைவிட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

பட்டுப் புடவையைக் கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்க வேண்டும்.

பாசிப் பருப்பை ஊறவைத்து நீர் விட்டு அரைத்து பட்டுப்புடவையின் கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கி விடும்.

பட்டுப் புடவையில் துருக்கறைபட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாய் மறைந்துவிடும்.

பட்டுப் புடவைகளுக்கு இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு நிழலில் காய வைத்துப்பின் இஸ்திரி செய்தால் புதியதுபோல் பளபளக்கும்.

ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டைபோல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

முதல் தரம் பட்டுப் புடவையை அலசும்போது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு ஐந்து நிமிஷம் பட்டுப் புடவையை முக்கி வைத்து அலசுங்கள். பட்டுப்புடவையின் எக்ஸ்ட்ரா சாயம் எல்லாம் நீங்கிவிடும்.

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்!

 

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

மெலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னா: சிவகார்த்திகேயனுக்கு அடிக்கும் லக்!

 

ஹன்சிகாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் கால்பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நடிகராக இருந்து கதாநயாகனாக உயர்ந்தவர். தற்போது கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வெற்றிகரமாக ஓடின.

தற்போது ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகா மொத்வானியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னாவும் விரைவில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப்போகிறாராம். இந்த படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்.

இது பற்றி லிங்குசாமி, தமன்னாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். விஷயத்தை காதில் வாங்கிய அடுத்த வினாடியே யெஸ்… என்றாராம் தமன்னா.

மூளைச்சாவடைந்த கர்பிணியின் வயிற்றில் வளர்ந்த குழந்தை!

 
ஹங்கேரியில் கர்பிணி மூளைச்சாவடைந்த நிலையில், மருத்துவ உபகரணங்களின் உதவியோடு தாய் உயிரோடு இருக்கும் வகையில் கரு, தாயின் வயிற்றிலேயே வளர்க்கப்பட்டு பிரசிவிக்கப்பட்டுள்ளது.

15 வார கர்ப்பிணியாக இருந்த 31 வயது பெண், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவடைந்தார். ஆனால், பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்த கரு ஆரோக்கியமாக இருந்தது. அந்த கரு 27 வாரங்கள் வரை தாயின் கருவறையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்த மருத்துவர்கள், சுமார் 3 மாதங்கள் மருத்துவமனையில் உபகரணங்களின் உதவியோடு தாயை உயிரோடு வைத்திருந்தனர்.

பிறகு, கருவுக்கு 27 வாரங்கள் ஆன நிலையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

பிறக்கும் போது 1.42 கிலோ எடை இருந்த அந்த ஆண் குழந்தை தற்போது ஆரோக்கியமாக அவர்களது உறவினர்களிடம் வளர்ந்து வருவாதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணம் அடைந்த தாயின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்ததாகவும், இதுபோல மருத்துவ உபகரணங்களின் உதவியோடு வாழ்ந்தவர்களின் உடல் உறுப்புகளை பொதுவாக பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும், ஆனால், இந்த தாயின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா - உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், 'சிலந்திவலை சிக்கலில் எனது நாடு' என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

 "படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை" என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, 'வில்லேஜ் விஞ்ஞானி'யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை

 மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, 'கொடிசியா'வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், "இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்

 வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு

 தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.





கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 'பிரியாணி'?

 

கிறிஸ்துமஸ் விடுமுறையை மனதில் கொண்டு, 'பிரியாணி' படத்தினை வெளியிடலாமா என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் 'பிரியாணி'. இது யுவன் இசையமைத்திருக்கும் 100 வது படம். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

'பிரியாணி' படம் தான் கார்த்திக்கு முதலில் வெளிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை வேகமாக தயார் செய்து தீபாவளிக்கு வெளியிட்டார்கள். படம் படுதோல்வியைச் சந்தித்தது.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் தீபாவளிக்கும், 'பிரியாணி' படம் பொங்கலுக்கும் வெளியாகும் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொங்கலுக்கு 'ஜில்லா', 'வீரம்', 'கோச்சடையான்' என பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்து, கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.

டிசம்பர் 20ம் தேதி வெளியிட்டால், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதால், சீக்கிரமாக பிரியாணியை பரிமாறி, கல்லா கட்டலாம் என்ற முடிவில் இருக்கிறது படக்குழு.

செல்வாக்கான இளைஞர் பட்டியலில் மலாலா, ஒபாமா மகள் தேர்வு!



நியூயார்க்கில் இருந்து வெளிவரும் டைம் இதழ் 2013ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த 16 இளைஞர்கள் பட்டியலை கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ளது.


 இந்த பட்டியலில் ஒபாமா வின் மகள் மாலியா (15), பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (16) மற்றும் சமூக சேவை, இசை, விளையாட்டு, தொழில்துறை விஞ்ஞானம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்  இடம்பெற்றுள்ளனர்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவின் பேச்சு மற்றும் செயல்பாடு கள் பெரியவர்களின் செயல்பாட்டுக்கு ஒப்பாக அமைந்துள்ளது என்று டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


மலாலாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடியவர், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.


இதைத்தவிர பாடகர்கள் லார்டு (17), ஜஸ்டின் பைபர் (19), ஒலிம்பிக் நீச்சல் வீரர் மிஸ்ஸி பிராங்க்ளின் (19) உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சச்சின் பற்றி சில சுவாரசியங்களும்!


* சச்சின் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருபோதும் 3வது வீரராக களம் இறங்கியது இல்லை.

* இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் மீதான அபிமானத்தால், தன்னுடைய மகனுக்கு அப்பெயரை சேர்த்துக்கு கொண்டார் சச்சின் டெண்டுல்கரின்   தந்தை.

* ஒருமுறை பிரபல குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் பேட் பட்டு, பந்து உடைந்து தெரிப்பது போன்ற நடிக்க வேண்டும் என்று சச்சினிடம்   கேட்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட்டின் மீதுள்ள அபிமானத்தால் தன்னால் அதுபோன்று நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

* 1990ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து மும்பை திரும்பியபோது, விமான நிலையத்தில் முதல் முறையாக தன்னுடைய வருங்கால   மனைவி அஞ்சலியை சந்தித்தார்.

* அணியினர் பயணம் செய்யும் பஸ்சில், எப்போதுமே முதல் வரிசையில் இடதுபுறம் உள்ள ஜன்னலோர இருக்கையில்தான் சச்சின் அமர்வார்.

* 1987ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து உலகப்கோப்பை அரையிறுதிப் போட்டியின்போது, பவுண்டரி லைனில் பந்தை எடுத்துப்போடும் சிறுவனாக   சச்சின் இருந்துள்ளார்.

* 2002ல் பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் ஸ்டம்பிங் ஆனார். டெஸ்ட் போட்டியில் இதுதான் அவரது   ஒரே ஸ்டம்பிங்காக பதிவாகி உள்ளது.

சிகரத்துக்கு கிடைத்த கவுரவங்கள்!


* சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தொடர்ந்து, இதன் நினைவு தபால்தலை இன்று வெளியிடப்படுகிறது. இந்தியாவில்   முதல் முறையாக உயிருடன் இருக்கும் நபருக்கு தபால்தலை வெளியிடப்பட்ட பெருமையை பெற்றவர் அன்னை தெரசா மட்டுமே (1980 ஆகஸ்ட்   27).   இதற்கு அடுத்தபடியாக சச்சின் இப்பெருமையை பெறுகிறார்.

* 1999ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வென்றார்.
* விஸ்டனின் உலக லெவன் நிரந்தர கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை சச்சினையே சாரும்.

* விமானப்படையின் பின்னணி இல்லாமல், குரூப் கேப்டன் என்ற கவுரவ பதவியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சச்சினுக்கே   கிடைத்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடனான போட்டியில், குறைந்தபட்சம் 2 செஞ்சூரிகளை அடித்த இந்தியர் என்று பெருமை.

* டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களை கொண்டவர் என்ற பெருமை பெற்ற இந்தியர்.

வான்கடே அதிர களமிறங்கினார் சச்சின்!


தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களமிறங்கினார். வான்கடே அதிர அவர் களமிறங்கிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. அவர் களமிறங்கிய போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி சச்சினை உற்சாகப்படுத்தினர். மேற்கு இந்திய தீவு அணி வீரர்களும் ஒன்று சேர்ந்து கைதட்டி சச்சினை வரவேற்றனர். அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி பேட்டிங்கில் அசத்தினார். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பதால், அவரது சரித்திர சாதனையில் தாங்களும் பங்கு கொண்டதற்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை பார்ப்பதற்காக வான்கடேயில் இன்று குவிந்தனர்.

மும்பை வான்கடேவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சச்சினின் கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவு அணி ஓஜா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய ஓஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

சச்சின் 38 ரன்களுடனும், புஜரா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சச்சின் சந்தித்த ஒவ்வொரு பந்துகளும் ரசிகர்கள் கர ஒலிகளில் அரங்கமே அதிர்ந்தன. இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி அடித்து அசத்தினார்.

நாளையும் வான்கடேவில் திருவிழா தான்...

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் சச்சின் இருப்பதால் நாளை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் எந்த வித சந்தேகமும் இல்லை.

சதம் அடிப்பாரா சச்சின்

தற்போது சிறப்பாக ஆடி வரும் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்று உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கோடி கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை சச்சின் நாளை நிறைவேற்றார் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சினின் கடைசி ஆட்டம் இன்று ஆரம்பம்!


                                        nov 14 -sachin1_

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.இது சச்சினுக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியுடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். தங்களுள் ஒன்றாகக் கலந்து விட்ட சச்சினை, இப்போட்டியுடன் ஆடுகளங்களில் இனி காண முடியாது என்தே ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர்.இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




கிரிக்கெட் உலகில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள, இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இன்று தன்னுடைய கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறார். இத்துடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.


சச்சினுக்கு சிறு குழந்தைகள் முதல், வயதான தாத்தாக்கள் வரையில் பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. சினிமா நட்சத்திரங்கள், மிகப்பெரிய வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வி.வி.ஐ.பி.க்கள் இதில் உள்ளனர். அவரது ஒவ்வொரு ஆட்டத்தையும் இவர்கள் ரசித்து பார்த்துள்ளனர்.


1989ம் ஆண்டில் முதல் தர போட்டியில் களம் இறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளார். இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பிராட்மேனுக்கு நிகரான ஒரு ஜாம்பவானின் கடைசி ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் முதல் இதுபற்றி கேள்விப்பட்ட சாதாரண மக்கள் வரையில் ஆர்வமாக உள்ளனர்.
இதன் காரணமாக, வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.


டிக்கெட்டுகளை விற்ற இணையதளமே முடங்கிப்போகும் அளவுக்கு ரசிகர்கள் அதில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெற வான்கடே மைதானத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் சச்சினை வாழ்த்தும் போஸ்டர்களையும், பேனர்களையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இப்பகுதியே சச்சின் என்ற தனிநபருக்காக விழாக்கோலம் பூண்டுள்ளது என்றால், அது மிகையாகாது.


இன்றைய போட்டியை காண்பதற்காக நண்பர்கள், உறவினர்களை அழைத்து வருவதற்காக சச்சினுக்கு மட்டும் பிரத்யேகமாக 200 டிக்கெட்டுகள் தரப்பட்டுள்ளன. சச்சினின் போட்டியை காண வரும் முக்கியமான விஐபி அவரது தாய் ரஜ்னி. அவரால் நடக்க முடியாது என்பதால், வீல்சேரில் அழைத்து வர சச்சின் ஏற்பாடு செய்துள்ளார்.


கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிராட்மேன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார். அதனால் அவரை வாழ்த்தக்கூட யாரும் அப்போது இல்லை. கலங்கிய கண்களுடன் அவர் மைதானத்தைவிட்டு வெளியேறினார். ஆனால், இப்போது காட்சிகள் மாறிவிட்டது. சச்சினுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காகவே, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்து. மேலும், அவர் தன்னுடைய சொந்த மண்ணில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவர் 10 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும், இன்று தொடங்க உள்ள தன்னுடைய கடைசி போட்டியில் அவர் கவனத்துடன் விளையாடி சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுபோன்று, 2வது டெஸ்டிலும் மாபெரும் வெற்றியை பெற்று அதை சச்சினுக்கு அர்ப்பணிக்க இந்திய அணி வீரர்கள் தயாராகி உள்ளனர். கடந்த 2 நாட்களாக வலைப் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். இதில் சச்சினுடன், அவரது மகன் அர்ஜுனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியை பொருத்தவரையில் இன்றையப் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்கள்தான் இதிலும் விளையாட உள்ளனர். ஆனால், முதல் போட்டியில் தங்களை மோசமாக தோற்கடித்ததற்கு பழிக்குப்பழியாக 2வது டெஸ்டில் வெற்றி பெறும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் என்பதும அதில் கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் கோபுரத்தின் உச்சி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே கையில் கிரிக்கெட் மட்டையுடன் சச்சின், தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் முழு உயர பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் வரும் ஜனவரி மாதம் இந்த கோயிலை திறக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை – கூகுள் முகப்பில் இடம் பெற்ற இந்திய மாணவியின் ஓவியம்!


                                              nov 14 - doodle_for_google_2013.

இணைய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் நிறுவனம் விசேஷ நாட்களில் வெளியிட்டு வரும் Doodle-கள் தொடர்பாக ஆண்டுதோறும் சில போட்டிகளை நடத்தி வருகின்றது.குறிப்பாக சிறுவர்களுக்காக நடைபெற்று வரும் Doodle என்ற போட்டியானது இந்த முறை நடைபெறுவது 4-வது முறையாகும். இதில் இதில் GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்படும் Doodle – னை தனது சர்ச் தளத்தின் முகப்பு பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கூகுள் 30,000 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வழங்குவதுடன்.


வெற்றி பெறுபவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டாலர்கள் மதிப்புள்ள தொழில்நுட்ப வசதிகளையும் குகூள் நிறுவனம் ஏற்படுத்தித் தர போவதாகவும் அறிவித்து இருந்தது இந்நிலையில் இப்போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த சித்திரத்துக்கு “Sky’s the limit for Indian women”- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர் என்பது அடிசினல் தகவல்.

Children’s Day: Pune student’s Doodle 4 Google winning entry on Google India homepage

**********************************************


The Children’s Day doodle on the Google India home page has been designed by a class 10 student from Pune. The doodle titled “Sky’s the limit for Indian women” has been designed by Gayatri Ketharaman for the fifth edition of Doodle 4 Google competition with the theme celebrating Indian women.

‘கோச்சடையான்’ பொங்கல் ரிலீஸ்!

                                         nov 14 - kochadaiyan

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிற ந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.அதே தினங்களில்தான் விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ‘எங்கே போகுதோ வானம்’ என்று எஸ்.பி.பி பாடிய பாடல், படத்தின் டீஸர் ஆகியவை வெளியாகி விட்டன. வெளியான டீஸரின் முடிவில் இசை வெளியீடு அக்டோபர் 2013 என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால், அக்டோபர் மாதம் படத்தின் இசை வெளியீடு நடக்கவில்லை. இதனால் பட வெளியீடு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான 12-12-2013 அன்று வெளியாகும் என்றும், படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10, 2014ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து ரஜினி ரசிகர்களை உற்சாகபடுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகள் தினம் - சிறப்புக் கட்டுரை!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடச் சொன்னார் .  உலகநாடுகளில் பட்டம் பெற்ற நேருவுக்குள் குழந்தை மனம் இருப்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .


சிறப்பு தினங்கள் என்று ஏராளமான நாட்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன . அதில் துக்ககரமான நினைவு நாட்களும் வருவது குறிப்பிடத்தக்கது .

இப்படி சிறப்பு தினங்கள் எல்லாம் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன ?

மனிதர்கள் , சிறப்பு அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் , அதை மகிழ்ச்சியின் குறியீடாகவும் கொண்டாடுவதற்கும் வழி வகை ஏற்படுகிறது.

அந்த வகையில் , குழந்தைகள் தினத்தை எத்தனை பேர் உணர்ந்து கொண்டாடுகிறார் என்பது தெரியவில்லை . பெரிய ஜம்பவான்கள் எல்லோருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள்  பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் .

தேவையான வசதிகளையும் சுதந்திரத்தையும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் வழி தவறி செல்லாமல் இருக்கிறார்கள் .

இப்போதெல்லாம் நடைமுறையில் குழந்தைகள் சாதிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் . இதற்கெல்லாம் வசதி வாய்ப்புகள் ஊடகத்தில் கொட்டிக் கிடக்கின்றன .

உரிய நேரத்தில் குழந்தைகளை வெற்றிப் பெறச் செய்வதே பெற்றோர்களின் முதல் கடமையாகும்  . ஆனால் , தான்தோன்றியா பிள்ளைகளை விட்டு விடும் பெற்றோர்கள் இருப்பதால் தான் , ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தெருவுக்கு வந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .

கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை கைதிகள் போல வளர்க்கும் போக்கை நிறுத்தி விட்டு குழந்தைகள் மொழியில் திருத்த கூடுதலான திறமை ஒவ்வொரு பெற்றோருக்கும் நிச்சியம் வேண்டும் .

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வதற்காக ஐந்திலே இளம் மூங்கில்களை ஒடித்து விடுகிறார்கள் .

குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தைகளாகவே மாறினால் மட்டும் தான் , இன்றைய குழந்தைகள் நாளைய வெற்றியாளராக முடியும் .

உலக சதுரங்கம் (செஸ்) - கார்ல்செனின் கை சற்று(4–வது சுற்று) ஓங்கி இருந்தது!

சென்னையில் நடந்து வரும் உலக சதுரங்க (செஸ்) போட்டியில் ஆனந்த்–கார்ல்சென் இடையிலான 4–வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது.

                                            
உலக சதுரங்கம்
தமிழக அரசின் ஆதரவுடன் நடப்பு சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையேயான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் 6.5 புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை பெறுவர்.

இதில் முதல் 3 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இந்த நிலையில் 4–வது சுற்று ஆட்டம் நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கினார். ராஜாவின் முன்னால் உள்ள சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ‘ரய் லோபஸ்’ முறையில் ஆனந்த் ஆட்டத்தை ஆரம்பித்தார். அதே பாணியைத்தான் கார்ல்செனும் கடைபிடித்தார்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். 6–வது நகர்த்தலில் ஆனந்த், எதிராளியின் குதிரையை வெட்டி தனது இரண்டு மந்திரிகளில் ஒன்றை விட்டுக்கொடுத்தார். 8–வது நகர்தலில் ராணியையும் (குயின்) அடிக்கு அடி என்று வெளியேற்றினர்.

18–வது நகர்த்தலில் ஒரு சிப்பாயை விட்டுக்கொடுத்து கார்ல்செனின் மந்திரியை கைப்பற்ற ஆனந்த் முயற்சித்தார். ஆனால் கார்ல்சென் ஆனந்தின் சிப்பாயை விழுங்கியதோடு, சாதுர்யமாக தனது மந்திரியையும் காப்பாற்றிக் கொண்டார். ஆனந்திடம் ஒரு சிப்பாய் குறைவாக இருந்ததால் கார்ல்செனின் கை சற்று ஓங்கியது.

டிரா ஆனது

இதனால் ஆனந்த் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட போதிலும், அதில் இருந்து தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக மீண்டார். கார்ல்செனின் யுக்திகள் அனைத்தையும் முறியடித்தார். இறுதியில் 64–வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. அப்போது ஆனந்திடம் ராஜாவுடன் ஒரு யானையும், கார்ல்செனிடம் ராஜாவுடன் யானை, சிப்பாயும் எஞ்சி இருந்தன. ஏறக்குறைய 6 மணி நேரம் போட்டி நீடித்த போதிலும் இந்த முறையும் முடிவு கிடைக்கவில்லை. டிரா ஆனதால் இருவருக்கும் அரை புள்ளி வீதம் வழங்கப்பட்டது. இருவரும் தற்போது தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள்.

‘மை லார்ட்’ சொல்வது தவறா?

நீதிமன்றங்களில் நீதிபதிகளை பார்த்து வக்கீல்கள், ‘மை லார்ட்’ என்று விளிப்பதும், ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று சொல்வதும் வெள்ளைக்காரன் காலத்து அடிமைத்தனம் என்று கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 75 வயது மூத்த வக்கீல் ஷிவ் சாகர் திவாரி தொடர்ந்த இந்த பொது நலன் வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகய் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்வி, ‘மை லார்ட் என்று அழைக்குமாறு எந்த வக்கீலையும், எந்த நீதிபதியும் கட்டாயப்படுத்துவதில்லையே, பின் எதற்காக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்பதுதான். அதற்கு திவாரி, ‘சில நீதிபதிகள் தங்களை அப்படி அழைக்காத வக்கீல்களின் வழக்குகளை டிஸ்மிஸ் செய்து விடுகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். இதன்பின், நீதிபதி கோகய் இந்த வழக்கு விசாரணையில் இருந்து ஒதுங்கி விட்டதால், வேறொரு பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளைக்காரர் ஆட்சியின் போது, நமது நீதிமன்றங்களில் வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்ததால், அவர்களை இந்திய வக்கீல்கள், ‘மை லார்ட்’ என்று அழைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. 19ம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்து நாட்டில் நீதிபதிகளை எல்லோரும் அப்படி அழைப்பது பழக்கமாக இருந்துள்ளது. ஒரு வேளை, எல்லா மதத்திலும் இறைவன் நியாயவானாக உள்ளதால், நீதிபதிகளும் அப்படி நியாயவானாக இருக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டவே ‘லார்ட்’ என்று அழைத்திருக்கலாம்.

இங்கிலாந்து நாட்டில் நீதிமன்றங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தும் முன்பே, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா பயணிகளை கவுரவமாக மதித்து ‘மி லார்ட்’ என்று விளிப்பார்களாம். அதன்பின், பெருமைக்குரியவர்களை ‘மி லார்ட்’ என அழைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது ஆங்கிலத்தில் நுழையும் போது ‘மை லார்ட்’ ஆனதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதையெல்லாம் பார்க்கும் போது ‘மை லார்ட்’ என்று அழைப்பது அடிமைத்தனத்தின் சின்னமாக தெரியாது. ஆனாலும், இந்த காலத்திற்கு ஏற்ப நீதிபதிகளையும், மற்றவர்களை போல் ‘மிஸ்டர் ஜஸ்டிஸ்’ என அழைக்கலாம்.

 நீதிபதிகளை ‘மை லார்ட்’ என அழைப்பது கட்டாயம் இல்லாத போது, அதற்கு வழக்கு அவசியமா என தலைமை நீதிபதி கேட்டது சரியானதுதான். இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே 2006ல் ஒரு தீர்மானம் போட்டுள்ளது. நீதிமன்றங்களில், ‘மை லார்ட், யுவர் லார்ட்ஷிப்’ என வக்கீல்கள் அழைக்கத் தேவையில்லை என்பதே அந்த தீர்மானம். வக்கீல்கள் இதை பின்பற்றினாலே போதும்.   

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிரடி மாற்றம்!



வரும் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கல்வித்துறை  அறிமுகம் செய்கிறது.

ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.  கடந்த பொதுதேர்வுகளில் தேர்வு எழுத மாணவர்களுக்கு மெயின் சீட் வழங்கப்பட்டது.

மேலும் கூடுதலாக அடிஷனல் ஷீட் வழங்கப்பட்டது. புதிய நடைமுறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30 பக்கங்களும் வழங்கப்பட உள்ளது. இவை மொத்தமாக பைண்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு அடிஷனல் ஷீட்டிற்கு எழுந்து நிற்க தேவையில்லை.

 தேர்வு எழுதும் மாணவரின் முன் அல்லது பின் அமர்ந்துள்ள மாணவர்கள் அடிஷனல் ஷீட் வாங்கி காப்பி அடிக்கும் நிலை தடுக்கப்படும்.  ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சமாக 400 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். அதற்கு மேல் மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும்.

தற்போது, ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே மட்டுமே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் வெளியாகிவிடும் என்ற குற்றசாட்டும் எதிர்காலத்தில் நிகழாது. இந்த புதிய நடைமுறைகள் வருகின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமல்படுத்தப்படும் என பள்ளி, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காப்பகம்