Monday, October 14, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 3...!

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும்.




 

துருக்கியர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போன்று இது வரையப்பட்டிருகிறது




 


                       கி.பி 1040 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்




 

Isidorean mappamundi,11th century 

 

 

Y-O map, from Macrobius' Commentarium in somnium, 11th century.

 

 

 

T-O map, from 11th century MS. edition of Beatus' Commentary

 

 

St. Sever world map after Beatus, 1030 A.D.

 

 

al-Biruni world map of the distribution of land and sea, 1029 A.D.

 

 

Ibn al-Wardi world map, 1001 A.D.

 


பன்னிரெண்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




 


                                  கி பி 1192 இல் வரையப்பட்ட உலக வரைபடம்




 


      12 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆசிய கண்டத்தின் வரைபடம்


 

             ஜெர்மானியர்களால் கி.பி 1190 இல் வரையப்பட்ட உலக வரைபடம்




 
இத்தாலியர்களால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் 
 


Abu Abd Allah Muhammad al-Idrisi என்னும் அரபியரால் கி பி 1154 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம் 
 

Macrobian World Map from a French MS, 12th century

 

 

Map of Jerusalem, 12th century

 

 

Beatus world map, London copy, 1109 A.D.

 

 

Beatus world map, Turin copy, 1150 A. D.

 

 

Beatus world map, Altamira copy, 12 th century.
(oriented with East at the top)

 

 

zonal world map, Lambert of St. Omer, Martianus Capella,Ghent copy,1120 A.D.

 



[Map of China and the Barbarian Countries]
.1137 A.D.

தொடரும்...

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வரலாறு!



சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.



கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.



நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

பொருளாதாரத்துக்கான நோபல்பரிசு : 3 பேர் அறிவிப்பு!



2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். யூஜின் பாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். சொத்துமதிப்பை நிர்ணயிக்கும் கொள்கையை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் பரிசு ஸ்விடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இருந்து அறிவிக்கப்பட்டது.

வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!

    வெற்றித்திருநகர் ஹம்பி
ர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.
ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இப்போது இல்லை.
 
ஹம்பியின் தெய்வீக அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் விரூபாக்ஷா கோவில் மிகவும் பழமையானது. மூன்று கோபுரங்களைக் கொண்டது. கோவிலை சீரமைத்து மண்டபம் கட்டியவர் கிருஷ்ணதேவராயர். விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் விரூபாக்ஷர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பியில் உள்ள விட்டல் கோவிலும் கிருஷ்ணதேவராயர் கட்டியதே. கலைநுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் இங்குள்ளன. இதே போல கோதண்டராமர் கோவில், தாமரை கோவில் போன்றவையும் சிறப்பு வாய்ந்தது. ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
 
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
 
ஹம்பியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கர்நாடக அரசு சார்பில் விஜயநகர விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் - மார்ச் மாதங்கள் வரை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் முக்கிய நகரங்களான ஹாசன்,  மைசூர் போன்ற இடங்களில் இருந்தும் ஹம்பிக்கு நல்ல சாலைவசதி இருக்கிறது. ஹம்பியில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவில் உள்ள ஹோஸ்பேட் வரை ரயில்வசதி உண்டு. பெங்களூருவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.

இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம்!

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்ற பொறியியல் வல்லுநர் பணிநிமித்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார். அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது.

13 - womb

 


குறிப்பிட்ட தேதியைத் தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை. மேலும், குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தம்பதியர் உடனடியாக வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் அண்ட் சேஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். 


அங்கிருந்த இடைநிலை மருத்துவப் பணியாளர் அவரைப் பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார். 12 மணி நேரம் சென்றபின் மீண்டும் குழந்தையின் நிலை குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தபோதும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. 


முதல்நாள் நிரஞ்சனாவிற்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கவில்லை என்றும், பின்னர் மருத்துவமனையில் இருந்த இதயத்துடிப்பு அறியும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்றும் ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு அவர் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். 


இரண்டு நாட்களுக்கு மேல் இறந்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு மிக்க வலியுடனும், வேதனையுடனும் எந்தவிதமான மருத்துவ கவனிப்பும் இல்லாமல் அதனை அவர் பிரசவித்துள்ளார். இறந்த குழந்தையின் தலை நசுங்கியிருந்ததற்கும் மருத்துவமனை சரியான விளக்கம் அளிக்கவில்லை.
அதைவிட வேதனை தரும் விஷயமாக அந்தக் குழந்தையின் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடிய பொறுப்பாளரை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறிய நிர்வாகம் நான்கு நாட்கள் கழித்துதான் அதனையும் செய்துள்ளது. 


இதன்பின்னர் சென்ற மாதம் 24 ஆம் தேதி மருத்துவமனையின் அலட்சியப் போக்கு குறித்த புகார் மனு ஒன்றினை இந்தத் தம்பதியினர் அந்நாட்டு தேசிய சுகாதார மையத்தில் அளித்துள்ளனர். 


மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தேசிய சுகாதார மையத்தின் விசாரணைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Indian woman in UK forced to carry dead fetus in womb for two days

***************************************


An Indian woman in the UK was forced to carry a dead fetus in her womb for two days after doctors at the hospital ignored signs of its death and sent her back home.

ஏர்டெல், ஐடியா சர்வதேச அழைப்புக் கட்டணங்கள் விர்ர்ர்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 80% உயர்த்தியுள்ளது. அதேப்போல, ஐடியா நிறுவனம் தனது சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன.


14 - tec phone rate high
 


இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது சர்வதேச அழைப்புக்களின் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி விட்டது.


அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செய்யப்படும் அழைப்பிற்கு நிமிடத்திற்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு ரூ.6.40 ஆக இருந்தது நினைவு கூறத தக்கது.


Airtel raises ISD rates up to 80%, Idea Cellular by 25%

*************************************


I: Telecom major Airtel has increased international call rates by up to 80 per cent this month mainly due to the impact of depreciation in rupee. Another leading operator Idea has also hiked international call rates by up to 25 per cent, according to the company’s website.

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்!

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.


14 - odisa

 


இதன் காரணமாக பாய்லின் புயல் தாக்குதலில் இருந்து மாபெரும் உயிரிழப்பை ஒடிசா மாநில அரசு வெற்றிகரமாக தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்கள் பாய்லின் கோரத் தாண்டவத்தால் பலத்த சேதத்தை சந்தித்து நிலை குலைந்து போய் உள்ளன.


பாய்லின் புயல் தாக்குதலில் சிக்கி 23 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாய்லின் புயல் நேற்று காலை ஒடிசாவில் இருந்து பீகாருக்கு சென்றது. இதைத் தொடர்ந்து ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


மக்களின் உயிரைக் காப்பாற்றவே மீட்புப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்படும் என்று ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்ப ராணுவ வீரர்களும், தேசிய மேலாண்மை பேரிடர் மீட்புக் குழுவினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.


பாய்லின் புயலால் ஒடிசாவில் மட்டும் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்ட மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.


பாய்லின் நடத்திய கோரத்தாண்டவத்தில் சுமார் 2½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக அழிந்து விட்டன.


பாய்லின் சீற்றத்துக்கும், மழை வெள்ளத்துக்கும் 14,500 கிராமங்களில் மக்களின் சொத்துக்களுக்கு கடும் நாசம் ஏற்பட்டுள்ளது. 15 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புயல் வேகத்தால் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டன. மீனவர்களின் வாழ்வா தாரங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2400 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவு, உடைக்கு ஏங்கியபடி உள்ளனர். ஒடிசா மாநில அரசு இத்தகைய சேதத்தை எதிர்பார்த்து 5 டன் உணவு தானியங்களை கை இருப்பு வைத்திருந்தது.


அந்த உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒடிசா மாநில அரசு மிகத் திறமையாக எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருந்ததால், மாபெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


அதோடு நிவாரண பணிகளும் திட்டமிட்டப்படி தொடங்கி நடந்த வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொடுத்து விடுவோம் என்று ஒடிசா மாநில அரசு அறி வித்துள்ளது.

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய பிறந்தநாள் அன்று நடக்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கூட்டத்தை நடத்தவிடாமல் அதிமுக ஆட்சியும் கடந்த ஆட்சி போல தொந்தரவு செய்தது.



 தலைவா படத்துக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்து படத்தை சிறிதுகாலம் முடக்கி வைத்தது என ஆட்சியாளர்களிடம் படாதபாடு பட்டுவந்தார் விஜய்.இதற்கிடையில் சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் என்ன பேசப போகிறார் என்பதை முன்னரே எழுதி வாங்கி படித்துப் பார்த்துதான் அனுமதித்தார்களாம்.


14 - vijay

 


இதையெல்லாம் எண்ணிப்பார்த்த விஜய், இனிமேல் அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தால்தான் தன்னுடைய எதிர்காலத்திற்கு நல்லது என்று முடிவு செய்துள்ளார் என்றும் எந்த ஆட்சி வந்தாலும் நம்மை வளரவிட மாட்டார்கள். எனவே இப்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்தே தீரவேண்டும் என்ற முடிவில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன..


எனவே ரசிகர் மன்ற தலைவர்களுடன் ஒரு ரகசிய மிட்டிங் நடத்த திட்டமிட்டார். தமிழ்நாட்டில் எங்கு மீட்டிங் நடந்தாலும் சிக்கல் என்பதை அறிந்து, ஜில்லா பட ஷூட்டிங் நடக்கும் கேரளாவிற்கு ரசிகர் மன்ற தலைவர்களை மட்டும் ரகசியமாக வரவழைத்து கேரள தலைநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிகிறது.அபபோது “நாம் யார் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய சக்தியை வெளிக்காட்டினால்தான் தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நம்மை பார்த்து பயப்படும். அதற்கு இப்போதிருந்தே நம்மை நாம் தயார் செய்ய வேண்டும்” என ரசிகர்களிடையே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளாராம்.


இந்த ரகசிய மீட்டிங் முடிந்து கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில். இப்போதுதான் கோலிவுட்டில் சிறிதுசிறிதாக ரகசியம் கசிந்து வருகிறது என்பது அடிசினல் தக்வல்.

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்!.

எப்போது? எப்போது? என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார்


24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிற‌து.

13 - sachin god

 


இந்திய கிரிக்கெட்டில் ,ஏன் உலக கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரையும் விட அதிகமாக சாதித்து அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய டெண்டுல்கரை கொண்டாடி மகிழும் வகையில் அவரைப்பற்றிய பத்து சிறந்த இணையதளங்களை இங்கே தொகுத்திருக்கிறோம.


1. சச்சின் வாக்கு.( http://www.brainyquote.com/quotes/authors/s/sachin_tendulkar.html)


எண்கள் தான் சச்சனுக்கு நெருக்கமானவை. டெஸ்ட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளின் எண்ணிக்கை ,சச்சின் எனும் கிரிக்கெட் அற்புதத்துக்கு சாட்சி. ஆனால் சாதனைகளை விட வியப்பை ஏற்படுத்தும் விஷயம் சச்சினின் பணிவு.கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. சச்சினின் வார்த்தைகள் மூல்மே இவை பலமுறை வெளிப்பட்டுள்ளன. பல்வேறு பேட்டிகளில் சச்சின் கூறிய கருத்துக்கள் மேற்கோள்களாக புகழ் பெற்ற பிரைனிகோட்ஸ் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு இந்த மேற்கோளை பாருங்கள்; “என் வாழ்க்கை முழுவதும்,பள்ளியில் கூட, நான் ஓடுவதற்கு யாரையும் வைத்து கொண்டது இல்லை, காரணம் பந்தை அடிக்கும் போது அது எத்தனை உறுதியாக் செல்லும் ,எங்கே செல்லும் என்று எனக்கு மட்டுமே தெரியும்,ஓடுபவருக்கு தெரியாது”. மேலும் பல சச்சொஇன் மொழிகளை இங்கே படித்து சச்சின் எனும் மனிதரின் மகத்துவத்தை வியந்து போற்றுங்கள்.


2. சச்சின் பற்றி ஒபாமா.


சச்சின் பற்றி பாராட்டாத கிரிக்கெட வீரர்கள்,விமரசகர்களே கிடையாது.மேத்யூ ஹைடன் “நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் நான்காவது நிலையில் ஆடுகிறார் ” என கூறியது அவரைப்பற்றிய மேர்கோள்களின் சிகரம். சரி அமெரிக்க அதிபர் ஒபாமா சச்சின் பற்றி கூறியிருக்கிறாரா? இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வி புகழ்பெற்ற கேள்விபதில் தளமான குவோராவில் எழுப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதில் இல்லை என்பதே. குவோராவில் சச்சின் பற்றி கேட்க்ப்பட்டுள்ள மற்றொரு கேள்வி ‘சச்சின் இஸ்லாமியராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டிருப்பாரா? என்பது. இந்த கேள்விக்கான பதில் இந்தியாவின் பெருமையை உணர்த்துகிறது. ஆம் என்பதே அந்த பதில் விரிவான பதிலுக்கு பார்க்க… ( http://www.quora.com/If-Sachin-Tendulkar-were-a-Muslim-would-he-get-the-same-adulation)


3.சச்சின் \பிராட்மேன்.


கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சச்சின் பல மக்த்தான வீரரோடு ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளார். லாரா, பாண்டிங் என நீளும் இந்த பட்டியலில் அதிக அளவில் இடம் பெறுவது கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் தான். சச்சின்\பிராட்மேனில் யார் சிறந்தவர். இந்த ஒப்பீட்டுக்கு எண்ணிக்கைகளால் பதில் அளிக்கிறது தி ரோர்.காம் கட்டுரை. பிராட்மேனே சிறந்தவர் என புள்ளிவிவர ஒப்பீட்டால் இந்த கட்டுரை நிறுவினாலும் அது ஒரு பகுதி உண்மையே என்பதை இதில் இடம்பெறாத சச்சினின் சாதனைகள் சொல்லும். ( http://www.theroar.com.au/2011/02/28/sachin-tendulkar-and-don-bradman-theres-no-comparison/)


4. யார் இந்த சச்சின்?


சச்சின் யார் என்று யாரேனும் கேட்பார்களா? இன்டெர்ட்டில் கேட்டிருக்கின்றனர். ஆனால் இதில் கோபப்பட ஏதுமில்லை. கிரிக்கெட்டை அதிகம் அறியாதவர் கூட சச்சின் பற்றி கேள்விபடும் நிலை இருப்பதால் , சச்சினை அறியாதவர்களுக்கு அவரை அறிமுகம் செய்வதற்காக இந்த கேள்விகளும் பதில்களும் . ( http://www.ask.com/question/sachin-tendulkar-homepage)


5. சச்சின் சாதனை படங்கள்.


சச்சினின் கம்பீர புகைப்படங்களை பார்த்து ரசிப்பதை வித சச்சின் அபிமானிகளுக்கு உற்சாகம் தரக்கூடியது எது? அல்ஜசிரா சச்சினின் மிகச்சிறந்த புகைபப்டங்களை தொகுத்து தந்திருக்கிறது. ( http://www.aljazeera.com/indepth/inpictures/2013/10/cricket-tendulkar-announces-retirement-20131010135416699995.html)


6. சச்சின் வீடியோ.


சச்சின் பேட் செய்வதை பார்ப்பதை விட பரவ‌சம் ஏது. சச்சின் பற்றிய யூடியூப் வீடியோ தொகுப்பு இந்த பரவசத்தை தருகிறது. (http://www.youtube.com/channel/HCESYF1LiffFய் ) இதே போல் ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதத்தை கண்டு மகிழ‌… http://www.youtube.com/watch?v=aGNSU_Y_5IM


7. என்ன ஒரு வீரர்.


சச்சின் ஓய்வு பெற்றது பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு. (http://www.thatscricket.com/news/2013/10/10/who-said-what-on-sachin-s-retirement-069501.htm )


8. சச்சின் சரிதை.


சச்சின் பற்றி விக்கிபீடியா கட்டுரை விரிவாக இருக்கிற‌து. கிரிகின்போ அறிமுகம் புள்ளிவிவரங்களை துல்லியமாக தடுகிறது. திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபியிலும் சச்சின் பற்றிய அறிமுகம் இருக்கிற‌து தெரியுமா? (http://www.imdb.com/name/nm1340094/ )


9. சச்சின் விமர்சிக்கப்படுவது ஏன்?


சச்சின் கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர் விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார். சச்சின் விமர்சிக்கப்படுவது ஏன்? இந்த கேள்விக்கு உளவியல் நோக்கில் பதில் தருகிறது இந்த வலைப்பதிவு. ( http://senantixtwentytwoyards.blogspot.in/2011/10/why-do-people-criticise-sachin.html)


10.சச்சினுக்கு பிறகு?


ஒவ்வொரு கிரிக்கெட ரசிகனும் கேட்கும் கேள்வி தான். இந்த கேள்விக்கான கொஞ்சம் சுவாரஸ்யமான பதில் இதோ… http://cricketwithballs.com/2011/07/23/after-sachin/
சச்சின் பற்றி செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அவை பற்றி தனிப்பதிவே எழுதலாம்.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்!

அடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. Samsung Galaxy Fame:

3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.



2. LG Optimus L4 II Dual: 

இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3.8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.



3. Nokia Lumia 520:

இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன்.
மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.


4. Panasonic T11:

நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.


5. Micromax Canvas Fun A76:

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் ஆனது தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.


இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. 


இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல் பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்தது. 


அதே போல தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக கடந்த வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.


காப்பகம்