Sunday, September 14, 2014

குழந்தை-பாட்டி உள்பட 8 பேரை கொன்ற காமக்கொடூரன் சிக்கியது எப்படி..? - பரபரப்பு தகவல்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேறிப்பட்டி கிராமத்தில் பீடா கடைக்காரர் செல்வத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கொள்ளையன் சுப்பராயன் (25) போலீசில் சிக்கினான். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்திரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவன் லாரி கிளீனராக வேலை செய்து வந்தான்.

அவனிடம் போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காமக் கொடூரனான அவன் கொடூர கொலையாளி என்பதும், தனது சொந்த பாட்டி உள்பட 8 பேரை கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதில் 3 பெண்களை கொடூரமாக கற்பழித்து கொன்றுள்ளான்.

இதுபற்றிய திடுக்கடும் தகவல்கள் வருமாறு:–

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த கல்லக்குடியில் ஜெயமேலு (வயது 82) என்ற மூதாட்டியை பணத்துக்காக கொலை செய்துள்ளான்.

கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சரகத்தில் முத்துலட்சுமி (25), அவரது தாயார் சாவித்திரி ( 50) ஆகியோரை கொன்றான்.

முத்துலட்சுமியை கற்பழித்தபோது அதை அவரது தாயார் சாவித்திரி பார்த்து விட்டார். இதனால் இருவரையும் தீர்த்து கட்டினான்.

கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் 2–ந் தேதி சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தனது பாட்டி அய்யம்மாளிடம் பணம் கேட்டான். அவர் தர மறுக்கவே அவரையும் கொன்று விட்டு காதில் கிடந்த அரை பவுன் தோடை திருடி சென்றான்.

அப்போது ஏத்தாப்பூர் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த அவன் மீண்டும் கொலைகளை செய்து உள்ளான்.

கடந்த ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளைக்கல் குவாரியில் லாரி கிளீனராக வேலை பார்த்த சுப்பராயன், வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றான். அவரிடமிருந்து ரூ 6 ஆயிரத்து 500–யையும் பறித்தான்.

கடந்த 5–ந் தேதி அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் வேல்முருகன் (33), அவரது மனைவி பார்வதி (25), அவர்களது ஒன்றரை வயது குழந்தை கீர்த்தனா ஆகிய 3 பேரை கொன்று உள்ளான்.

வேல்முருகனின் வீட்டுக்குள் புகுந்த சுப்பராயன் முதலில் பார்வதியை தாக்கி கற்பழித்து கொன்றுள்ளான். இப்படி அடுத்தடுத்து 8 கொலைகளை செய்த நிலையிலும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துள்ளான். இதுவே இவனுக்கு வசதியாக போய்விட்டது.

தம்மம்பட்டி போலீசில் சிக்கிய பின்னர்தான் இவன் 8 கொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டான்.

இன்று ஆத்தூர் மாஜிஸ் திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைக்கோ கொலையாளி சுப்பராயன் சிறையில் அடைக்கப்பட உள்ளான்.

அரியலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்ட போலீசார் கொலையாளி சுப்பராயனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பல கொலைகளை செய்து தமிழகத்தை கலக்கிய ஆட்டோ சங்கர். சேலம், கிருஷ்ணகிரி மற்றம் கர்நாடக மாநிலத்தில் பல பெண்களை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன் ஜெய்சங்கர் ஆகியோர் போன்று சுப்பராயன் பல கொலைகளை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவன் தமிழகம் முழுவதும் மேலும் பல கொலைகளை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் துப்பு துலங்காமல் உள்ள பல கொலைகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து சுப்பராயனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

சுப்பராயன் சைக்கோ கொலையாளியாக மாறியது எப்படி என்பது பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:–

எனது தந்தைக்கு 4 மனைவிகள். இதில் 3–வது மனைவியின் மகன்தான் நான். என் தந்தை அவரது மனைவிகளிடம் சந்தோஷமாக இருப்பார். இதை பார்த்த எனக்கும் அது போல இருக்க ஆசை வந்தது.

அவர் சந்தோஷமாக இருக்க என்னை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பிவிட்டார். வேலை பார்த்து விட்டு நான் வாங்கி வரும் பணத்தை எனது சித்தியும், தந்தையும் என்னிடம் இருந்து வாங்கி கொள்வார்கள். அடிக்கடி அவர்கள் என்னிடம் பணம் கேட்பார்கள். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நான் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். ஈரோட்டில் முதலில் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். தமிழகம் முழுவதும் லாரியில் சென்று வந்தேன்.

யாராவது பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அதை பிடுங்க வேண்டும் என்று நினைப்பேன். முதலில் அவர்களிடம் பணத்தை கேட்பேன். அவர்கள் தர மறுத்தால் கொன்று விடுவேன். பணம் பறிக்கும் போது பெண்ணை கற்பழித்து கொல்வேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

காப்பகம்