Friday, September 12, 2014

வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை..!

நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள வானவராயன்-வல்லவராயன் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் காஜல், ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா, தம்பிராமைய்யா உட்பட பலர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படத்தை மகாலட்சுமி மூவிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ளார்.

இவர், இந்த படத்தின் காப்புரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறி பல்வேறு தேதிகளில் ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மே 5-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெரும் தொகை செலவு செய்தோம். இதன்பின்னர், கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில், வானவராயன் வல்லவராயன் படத்தின் உரிமத்தை வேறு சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மகாலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக்கேட்டோம். அவருக்கு எதிராக போலீசிலும் புகார் செய்தோம். இதையடுத்து ரூ.25 லட்சம் மட்டும் திருப்பிக்கொடுத்தனர். ரூ.85 லட்சம் இதுவரை திருப்பித்தரவில்லை. இதற்கிடையில், இவர்கள் செய்த இந்த மோசடியை தாங்கிக்கொள்ள முடியாமல் என் கணவர் சுரேஷ் சத்தியா மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இந்த சூழ்நிலையில், எங்களுக்கு தரவேண்டிய ரூ.85 லட்சத்தை தராமல், வானவராயன் வல்லவராயன் படத்தை செப்டம்பர் 12-ந் தேதி (இன்று) திரையிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.கோவிந்தராஜன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன். எனவே, வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். ஒருவேளை மனுதாரருக்கு தரவேண்டிய தொகையை எதிர்மனுதாரர் கொடுத்துவிட்டால், படத்தை அவர்கள் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார்.

கள்ளசாவி (2014) - திரைவிமர்சனம்

பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம் ராகேஷ் மட்டுமில்லாது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அவளை பிடித்துப் போய்விடுகிறது.

நெடுநாளாக தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தாம்பத்ய சுகம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார் ராகேஷ். இவருடைய வீட்டிலேயே இருந்து மனைவிக்கு பணிவிடை செய்துவரும் வர்ஷா மீது இவரது பார்வை விழுகிறது. ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் அவளை பலாத்காரம் செய்துவிடுகிறார் ராகேஷ்.

மறுநாள் காலையில் தனது கற்பு போய்விட்டதாக சொல்லி புலம்பும் வர்ஷாவை சமாதானம் செய்கிறார் ராகேஷ். ஆனால், வர்ஷா சமாதானமாக மறுக்கிறாள். தன்னுடைய மானம் அவளால் பறிபோய்விடுமோ என பயப்படும் ராகேஷ் அவளை வேலையிலிருந்து தூக்கிவிட முடிவெடுக்கிறார். ஆனால், அவளுடைய மனைவி அவள் மீது அதிக பாசமாக இருப்பதால் அவளை வேலையிலிருந்து தூக்க முடியவில்லை.

இறுதியில் ராகேஷ் என்ன முடிவெடுத்தார்? என்பதே மீதிக்கதை.

‘திருடா திருடி’ படத்தில் தனுஷுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வர்ஷா, இந்த படத்தில் சற்று உடல் பெருத்து கூடுதல் கவர்ச்சியுடன் களமிறங்கியிருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரவில்லை. செல்வந்தருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் இவருடைய முகபாவணைகள் நம்மையும் கிரங்க வைக்கின்றன. படம் முழுக்க சேலையுடன் வந்தாலும் கவர்ச்சியில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

ராகேஷ் கதாபாத்திரத்தில் வரும் கவின் மற்றும் அவரது மனைவியும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். ராகேஷின் மகளாக வருபவர் மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவர் அணிந்திருக்கும் உடை நம்மை கிளுகிளுப்பாக்குகிறது.

காமம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் அவசியமான ஒன்று. ஆனால், அந்த காமம் அளவுக்கு மீறி சென்றால் அது நமக்கே ஆபத்தில் முடியும் என்ற ஆழமான கருத்தை சொல்ல வந்த இயக்குனர் ராஜேஷ்வரன், கதையில் ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ராகேஷ் மது குடிக்கும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

ராஜ் பாஸ்கர் இசையில் பாடல்களை கேட்கவே முடியவில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. என்.கிருஷ் ஒளிப்பதிவு ஓரளவு பரவாயில்லை.

மொத்தத்தில் கள்ளசாவி களவாடவில்லை

காப்பகம்