Saturday, January 18, 2014

குட்டையாக இருக்கும் ஆண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்....!


குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இழந்த தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவார்கள். நீங்கள் அணியும் ஆடையுடன், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு உங்கள் வங்கி இருப்பை கரைக்க வேண்டும் என்று எண்ணி விடாதீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உணர்வுடைய முயற்சி இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தேர்ந்தேடுக்கும் ஆடைகள் உங்கள் தோற்றத்தை மந்தமாக காட்டாமல் உங்களை முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும்.

கொடகொடவென இருக்கும் பேண்ட்டிற்கு பதிலாக சரியான அளவிலான பேண்ட்டை தேர்ந்தெடுத்து அணிந்தால் உங்களை சற்று உயரமாக காட்டும். மாறாக கொடகொடவென இருக்கும் பேண்ட்டை அணிந்தால் குட்டையாக தெரிவீர்கள். அதே போல் சற்று உயரமான ஹீல்சை கொண்ட ஷூக்களை பயன்படுத்துங்கள். ஆனால் அவை பெண்கள் பயன்படுத்துவதை போல் மிகவும் உயரத்துடன் இருக்க கூடாது.

 அப்படி அணியும் போது அவர்களின் உயரம் சற்று அதிகரிப்பதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் என்று வரும் போது முடிந்த வரை நேர்கோடுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சட்டைகள் மற்றும் பேண்ட்களை பயன்படுத்துங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் குட்டையாக இருப்பது மறைக்கப்பட்டு, பார்ப்பதற்கு சற்று உயரமாக தெரிவீர்கள்.

 மேலும், குட்டையாக இருக்கும் ஆண்கள் இதர அலங்கார பொருட்களின் மீதும் கவனம் செலுத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த தோற்றமும் மேம்படும். பார்ப்பவர்களின் கவனத்தையும் உங்கள் மீது ஈர்த்து உங்களை உச்சி முதல் மாதம் வரை கவனிக்க செய்யலாம்.

நீட்டு வடிவில் இருக்கு வடிவமைப்புகள்

 நீட்டு வடிவத்தில் இருக்கும் வடிவமைப்புகள் உங்களை உயரமாக காட்டும். அதற்கு காரணம் நம் கண்கள் அந்த கோடுகளை உங்கள் உயரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கும். பாதியிலேயே துண்டித்து போகாமல் கடைசி வரை உள்ள நீட்டு வடிவு கோடுகளை கொண்ட ஆடைகளை கொண்டு உங்களை உயரமாக காட்டுவது ஒரு சிறந்த வழியாகும். நல்ல டிசைனோடு உள்ள ஆடையில் மேலயும் கீழேயும் விழுகின்ற நேர் கோடுகளை கொண்ட ஆடைகளை அணிவித்தால் பார்ப்பதற்கு உயரமாக மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் இருப்பீர்கள்.

சரியான அளவிலான ஆடைகள் முடிந்த வரைக்கும்,

 உங்கள் உடலமைப்புக்கு பொருந்துகின்ற சரியான அளவிலான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் அணியும் ஆடைகள் தொளதொளவென இருக்க கூடாது. ஒவ்வொரு ப்ராண்ட் ஆடைக்கும் தனித்துவமான அளவு இருக்கும். அதனால் ஸ்லிம் ஃபிட் வகை ஆடைகளை விற்கின்ற பிராண்டை தேர்ந்தேடுத்து, அது உங்கள் உடல் அமைப்புக்கு பொருந்துகிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஒரு வேளை, ரெடிமேட் ப்ராண்ட் எதுவுமே உங்களுக்கு பொருத்துமாக இல்லையென்றால் நல்லொதொரு டெய்லர் மூலமாக உங்கள் உடல் கட்டமைக்கு பொருந்துகின்ற வகையில் ஆடைகளை தைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

 ஒற்றை நிற ஆடைகள்


 பல விதமான நிறங்களை கொண்ட ஆடைகளை தவிர்த்தால் உங்கள் தோற்றம் நெறிப்படும். ஒரே குடும்பத்தை சேர்ந்த நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் ஒரே வகை நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கருமையான நிறத்தை தழுவி இருப்பது நல்லது. இது உங்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்டும்.

 சிறிய விகிதங்கள்

உங்கள் ஆடைகளின் சில பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மடிந்து இருக்கும் போது உங்கள் தோற்றத்தை எடுத்து காட்டுவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் மேல் பகுதியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் சட்டை காலர் மற்றும் ஜாக்கெட் முன்படிப்பு (நீங்கள் ஜாக்கெட் அணிந்திருந்தால்). இவை இரண்டையுமே குறுகலான பக்கம் வைத்திடுங்கள்.

 சரியான ஆடைகள்


 ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அல்லது சூட் வகை ஜாக்கெட் அணிந்தால் உங்கள் தோள்பட்டை கனமாக தெரியும். இப்படி இருக்கும் போது அது உங்கள் உயரத்தை அதிகரித்து காட்டும். பேண்ட் அணியும் போது இயற்கையான இடுப்பு கோடுகளில் நிருகுமாறு அணியுங்கள். மாறாக இடுப்புக்கு கீழே அணிவித்தால் உங்கள் கால்கள் குட்டையாக தெரியும். பொதுவாக குட்டையான ஆண்களுக்கு அவர்களின் மற்ற உயரமான பாகங்களை விட அவர்களின் கைகளும் கால்களும் சின்னதாக இருக்கும். அதனால் தான் அவர்கள் குட்டையாக இருக்கிறார்கள். அதனால் உங்கே உடம்பின் மேல் பகுதியில் அணியும் ஆடையின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 கொஞ்சம் உயரத்தை அதிகரித்திடுங்கள்


 அதிகமாக இல்லாமல், குறைந்த அளவில் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அப்படி உங்கள் உயரத்தை அதிகரிக்க சற்று உயரமாக இருக்கும் காலணிகளை அணியலாம். அல்லது லிஃப்ட், தடிமனான காலனி சோல், உயரமான ஷூ போன்ற உபகரணங்களை பயன்படுத்தலாம். இவை அனைத்தினாலும் உங்கள் உயரத்தை சிறு அளவிற்கு உயர்த்திடலாம்.

சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆச்சியாக நடிகை நளினி!



ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது.

அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.

இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.

நாமளா நாடிப்போனா குறைவு ; அதுவா தேடி வந்தா அதிகம்;



ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்..

ஹீரோயின்கள் செம சூப்பர் - கார்த்திக் பேச்சு....!


கடல் கவுதம் நடிக்கும்  படம் என்னமோ ஏதோ. ரகுல் பிரீத் சிங், நிகிஷா படேல் ஜோடி. ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். கார்கி பாடல். டி.இமான் இசை. பி.ரவிகுமார். பி.வி.பிரசாத் தயாரிப்பு.

 இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கவுதம் தந்தை நடிகர் கார்த்திக் பேசும்போது, இன்றைய தினம் திரையுலகம் இளைஞர்கள் வசம் இருக்கிறது. திறமையாக பணியாற்றுகின்றனர். சிறந்த படங்களை தருகின்றனர்.

 சாதனையாளர் வைரமுத்து மகன் கார்கி அருமையாக பாடல்கள் எழுத, டி.இமான் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். என் மகன் கவுதம் எனக்கு செல்லப் பையன்.

அவனுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும். இப்போது வரும் ஹீரோயின்கள் அழகாக செம சூப்பராக இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது என்றார்.

டப்பிங் படம் வெளியிடும் மாபியா கும்பல் பிரகாஷ்ராஜ் கட்டம்..?




கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ்  கண்டனம் தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. தமிழில் நடித்த பிறகுதான் தேசிய அளவில் பிரபலமாகி, இந்தி படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். கர்நாடகாவில் சமீபகாலமாக தமிழ் உள்பட பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 இது தொடர்பாக போராட்டம் நடத்தவும் கர்நாடக திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் பேசிய பிரகாஷ்ராஜ் டப்பிங் படங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது: டப்பிங் படங்கள் கன்னட படங்களை அழிக்கும் பேய். இதுபோன்ற படங்களுக்கு பெரிய மாபியா கும்பல் உடந்தை யாக உள்ளது.

டப்பிங் படங்களுக்கு கன்னட திரையுலகில் பெரிய ஆதரவு இருப்பதை கேட்டு வருத்தம் அடைகிறேன்.  இந்தநேரத்தில் ராஜ்குமார் உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரி இருந்திருக்கும். கன்னட படங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன்.

 கன்னட படங்களால் வாழ்வு பெற்றுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் டப்பிங் படங்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே கன்னட திரையுலகில் டப்பிங் படங்கள் வருவதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சில டிப்ஸ்..!



சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும் செலவுகளும் மிகவும் உயர்நது விட்டன.

ஆனால் இப்பொழுது, நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இதை செய்யும் முறையை நாம் கீழ் காணும் பகுதியில் பார்க்கலாம். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ஆபத்தில்லாமல் நீக்கும் வகையில் இயற்கையான கலவைகளை இப்பொழுது உங்களால் பெற முடியும். இதற்கு தேவையான பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து பயன்படுத்தினால் தான் நமக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான வழிமுறைகள்:


  •  இரண்டு கோப்பை சர்க்கரை, ¼ கப் தண்ணீர், ¼ கப் தேன், மற்றும் ¼ கப் புதிய எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு செப்பரேட்டரில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • அந்த சாஸ்பேன் அல்லது செப்பரேட்டரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். குறைந்த நெருப்பில் இதை கொதிக்க செய்யுங்கள். இதை ஏறத்தாழ அரை மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது இதன் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றது. 246 டிகிரி வரும் வரை கொதிக்க விடுங்கள். இப்போது அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து அறை வெப்பநிலையில் வைத்து குளிரச் செய்யுங்கள்.

  • உங்கள் அக்குள் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் கழுவியதும் நன்கு துடைத்து உலர வைத்து வியர்வை வராத அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரை அங்கு போடுங்கள். இது இவ்விடத்தில் உள்ள எஞ்சிய ஈரத்தையும் எண்ணை பதத்தையும் உறிந்து கொள்ளும்.

  • இப்போது இயற்கையாக செய்யப்பட்ட இந்த மெழுகு கலவையை ஒரு ஸ்பூன் அல்லது கைகளை வைத்தே அக்குளில் தடவ வேண்டும். ஒரு வேளை நீங்கள் இதை முதல் முறையாக பயன்படுத்தினால் உங்கள் உடம்பில் ஒரு சிறிய பகுதியில் முதலில் பயன்படுத்தி பாருங்கள். இவை எந்த விதத்திலாவது அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. முடி உள்ள கையின் மேல் பகுதி அல்லது கால் ஆகிய இடங்களில் இதை பயன்படுத்தி எவ்வாறு செய்வது என்று உறுதியாக கற்றுக் கொண்டு பின்னர் அக்குளில் பயன்படுத்தி தேவையற்ற முடியை எடுக்க முயலுங்கள். இது எந்தவிதமான அலர்ஜியையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த கலவையை உங்களுடைய அக்குளில் தைரியமாக தடவலாம்.

  • அக்குளில் தடவிய கலவையை சிறிது நேரம் கழித்து அடுத்த கையை வைத்து எடுங்கள். ஆதை எடுக்கும் போது அக்குளின் தோலை மிக உறுதியாக இழுத்து பிடிக்க வேண்டும். அப்போது தான் வலி ஏற்படாது. விரைவாக அங்கு ஒட்டியிருக்கும் மெழுகு போன்ற கலவையை பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்வாறு அழுத்தமாக இழுக்கும் போது தான் அந்த இடத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

  •  அனைத்து முடியையும் எடுத்த பிறகு மெழுகு கலவை ஏதேனும் மீதமிருந்தால் அதை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கழுவி விட வேண்டும். இந்த காரியத்தை செய்த பின் நல்ல மாய்ஸ்ட்ரைஸரை பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் தோலை மிருதுவாகவும் மற்றும் மென்மையாகவும் வைக்கும்.
இந்த மெழுகு போன்ற இயற்கையான கலவையை குளிர்ந்த இடத்தில் வைத்து, எப்போதெல்லாம் முடியை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இதை எடுத்து பயன்படுத்த முடியும்.

இதை உங்கள் கால், கைகள் மற்றும் அக்குள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம்.

இதனை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து நெடுநாட்களுக்கு பயன்படுத்தலாம்.

மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்..!




வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்கு தான். பணம் சம்பாதிப்பது நம் தேவைக்காக, பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே மன அழுத்தமும் வந்து சேர்கிறது.

இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலா தனிமம் ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

புத்தகம் படிப்பது


புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

யோகாசனம்

 தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் போது, மனமானது சாந்தமாகி பின் அமைதி அடையும்.

இசையை கேட்பது

 கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு ரசிப்பதே. வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.

தோட்டக்கலை


 தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.

சமைப்பது


சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து, மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.

எழுதுவது

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணிப்பொறி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.

இது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுவதால், மன பாரம் குறையும். ஆதலால் மனம் விரும்பும் பொழுதுப்போக்கை தேர்ந்தெடுத்து, மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியுடன் இருங்கள்.

மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி..!



அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர்.

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

 இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர்.

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார்.

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

ஒரே படத்தில் 3 நிஜ சம்பவம்..!



3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது  கற்பவை கற்றபின். இதுபற்றி இயக்குனர் பட்ராம் செந்தில் கூறியதாவது:

 ஈழ தமிழர்கள் பிரச்னைக்காக உயிர் தியாகம் செய்த இளைஞர், தகாத உறவால் அவமானத்தில் தற்கொலை செய்யும் ஜோடி, கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் பெண் என 3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

 தற்கொலை செய்யக்கூடாது என்று அட்வைஸ் சொல்லும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்பவர்கள் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

  சந்தீப்-தருணா, மது - அபினிதா ஆகிய 2 ஜோடிகளுடன் சிந்துகுமாரி மற்றும் சிங்கம்புலி, விசித்ரன், அம்மு, யுவான் சுவாங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், செந்தில் தயாரிப்பு. ஊட்டி, திருச்சி மற்றும் ஆந்திராவில் ஷூட்டிங் நடந்துள்ளது.

என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் போதாது..! - கமல்



என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் பத்தாது என்றார் கமல்ஹாசன். விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் என்னுடன் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் தேதி ஒத்துவரவிரவில்லை.

ஒருவகையில் அது நல்லதுதான். இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்ருதியும் நானும¢ சேர்ந்து நடிப்பது என்பது போதிய அவகாசம் இல்லாத சூழலாக உள்ளது.

அப்படி சேர்ந்து நடித்தால் அது எங்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். சினிமாவில் அவர் இன்னும் சில காலம் அனுபவம் பெற்ற பிறகு என்னுடன் நடிப்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 படத்தில் அவர் எனது மகளாகவே நடிக்கவிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிப்பார். இதற்காக 3 பேரை தேர்வு செய்துவைத்திருக்கிறோம். அவற்றில் பொருத்தமானவர் நடிப்பார். எனது மகனாக புதுமுக நடிகர் நடிப்பார். இவ்வாறு கமல் கூறினா

பெண்களே உஷார் உஷார்...

பெண்களே உஷார் உஷார்...
 

வெளி இடங்களில் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்...!

துபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டின் பெண்கள் பயன் படுத்தும் டாய்லெட்க்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண் ஒருவர், உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி அடிப்பதை கேட்டு திடுக்கிட்டார்.

செல்போனை எடுத்து பார்த்த அந்த பெண் , அதில் டாய்லெட்டை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாண படபதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து, சூப்பர் மார்கெட்டின் நிவாகியிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணிபுரியும் ஒரு இந்தியருக்கு சொந்தமானது என்று தெரியவந்து,

அவர் கைது செய்யப்பட்டு 3 மாதம் ஜெயில் என்றும் தீர்ப்பாகியது, அதுக்குபிறகு துபாயை விட்டும் வெளியேற்ற படுவார்.

வெளியே எந்த இடங்களிலும் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்.

பட்டன் சைஸ் கேமராக்கள் எல்லாம் உலா வரும் காலம் இது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் கூட வெளி ஆட்களை கொண்டு ரிப்பேர் போன்ற வேலைகள் (குறிப்பாக டாய்லெட், பெட்ரூம் போன்ற இடங்களில்) முடிந்தபின்பு அந்த இடங்களை சோதனை செய்து பார்த்துகொள்ளுங்கள்.
நன்றி:முக்கியசெய்திகள்

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம் ..!



தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

* முதன்முதலில் ஒருவரிடம் பேசும்போது, தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச வேண்டும்.

* அதேபோன்று, புதிய நபரிடம் பேசும்போது, தாங்கள் பேசும் நபர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற வேண்டும்.

* பிறருக்கு வந்த அழைப்பை நாம் பெற நேரும்போது, பேசியவரை, தயவுசெய்து காத்திருக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவரை அழைத்து வருவதாக கூற வேண்டும். அதை செய்யாமல், தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே, கூப்பிட வேண்டிய நபரை சத்தமாக அழைக்கக்கூடாது.

* தொலைபேசியில் ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள நேர்ந்தால், அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவும், அரைகுறையாகவும் கேட்டுக் கொண்டு தவறான தகவல்களை தந்துவிடக்கூடாது.

* பேசிவிட்டு, தொலைபேசியை வைக்கும்போது, நன்றி என்று மறக்காமல் கூறிவிட்டு வைக்க வேண்டும்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - IGNOU



இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்பு:-

பி.ஏ.,
பி.காம்., வணிகவியல்
பி.எஸ்.சி., கணிதம்
பி.எஸ்.சி,. வேதியியல்
பி.எஸ்.சி., இயற்பியல்
பி.எஸ்.சி,. விலங்கியல்
பி.எஸ்.சி., தாவரவியல்
பி.எஸ்.டபிள்யூ., சமுகப் பணி (சோசியல் வொர்க்)
பி.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.எட்., கல்வி
பி.டெக்., கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மென்ட்
பி.டெக்., வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம்
பி.எஸ்சி (ஹானர்ஸ்)., ஆப்டோமேட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னீசியஸ்
பி.ஏ., டூரிசம் ஸ்டடீஸ்
பி.பீ.பீ ., பிரிப்ரேட்டரி புரொகிராம்
பி.பி.ஏ., ரீடைலிங் வித் தி மாடுலர் அப்ரோச்

முதுநிலை பட்டப்படிப்புகள்:-

எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., ஹிந்தி
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பப்ளிக் பாலிசி
எம்.காம்., வணிகவியல்
எம்.எஸ்.சி., டயட்டெடிக்ஸ் மற்றும் புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட்
எம்.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
எம்.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
எம்.எச்.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் அட்மினிஷ்ட்ரேஷன்
எம்.ஏ., தொலைநிலைக்கல்வி
எம்.ஏ., சுற்றுலா மேலாண்மை
எம்.பி.ஏ., மனிதஆற்றல் /நிதி/ ஆப்ரேஷன்ஸ்/மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி
எம்.ஏ., கிராமப்புற மேம்பாடு
எம்.ஏ., கல்வி
எம்.காம்., நிதி மற்றும் வரி விதிப்பு
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ்
எம்.ஏ., பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
எம்.ஏ., உளவியல்
எம்.எஸ்சி., கவுன்சிலிங் அண்ட் பேமிலி
எம்.ஏ., எக்ஸ்டென்ஷன் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (மாடுலர் புரோக்ராம்)
எம்.ஏ., அடல்ட் எஜுகேசன்
எம்.ஏ., மானிடவியல்

டிப்ளமோ படிப்புகள்:-

கிரியேட்டிவ் ரைட்டிங் இன் இங்கிலீஷ்
கிரியேட்டிவ் ரைட்டிங் இன் ஹிந்தி
ஏர்லி சைல்டுஹுட் கேர் மற்றும் எஜூகேஷன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பிரைமரி எஜூகேஷன்
மேனேஜ்மென்ட்
டூரிசம் ஸ்டடீஸ்
யூத் இன் டெவலப்மென்ட் வொர்க்
அக்வாகல்ச்சர்
நாட்டிக்கல் சயின்சஸ்
வுமன்ஸ் எம்பவர்மென்ட் மற்றும் டெவலப்மென்ட்
சிவில் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
வேல்யூ ஏடெடு புராடக்ட்ஸ் இன் புரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ்
டெய்ரி டெக்னாலஜி
மீட் டெக்னாலஜி
புரொடக்சன் ஆப் வேல்யூ ஏடெட் புராடக்ட்ஸ்
நர்சிங் அட்மினிஷ்ட்ரேஷன்
டிப்ளமோ
உருது
பிஷ் புராடெக்ட் டெக்னாலஜி

அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிப்புகள்:-

கன்ஸ்டரக்டிவ் மேனேஜ்மென்ட்
வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பவர் டிஸ்டிரிபூசன் மேனேஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:-

லைப்ரரி ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங்
மொழிபெயர்ப்பு
ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
ரேடியோ பிராசரன்
ஆடியோ புரொகிராம் புரொடக்சன்
மெட்டேனல் மற்றும் சைல்டு ஹெல்த்
ஆஸ்பிட்டல் மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட்
ஜிரியேட்டிரிக் மெடிசின்
ரூரல் டெவலப்மென்ட்
ஹையர் எஜூகேஷன்
டிஸ்டன்ஸ் எஜூகேஷன்
ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பினான்சியல் மேனேஜ்மென்ட்
ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்
மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்
இன்டலச்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ்
என்விரான்மென்ட் மற்றும் சஸ்டைனபில் டெவலப்மென்ட்
கம்யூனிட்டி கார்டியோலஜி
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
புட் சேப்டி அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட்
பிளாண்டேஷன் மேனஜ்மென்ட்
பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
இன்டர்நேஷனல் பிசினஸ் ஆப்ரேஷன்ஸ்
அனல்டிகல் கெமிஸ்ரிட்
எஜூகேஷ்னல் டெக்னாலஜி
ஸ்கூல் லீடர்ஷிப் அண்ட் மேனஜ்மென்ட்
எஜூகேஷ்னல் மேனஜ்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்
டீச்சிங் ஜெர்மன் அஸ் எ பாரின் லேங்குவேஜ்
சமூக சேவை

சான்றிதழ் படிப்புகள்:-

கம்ப்யூட்டிங்
லிட்ரசி கரிக்குலம் மற்றும் இன்ஸ்டரக்சன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
நீயூட்டிரசன் மற்றும் சைல்டு கேர்
புட் மற்றும் நியூட்ரிசன்
புட் சேப்டி
ரூரல் டெவலப்மென்ட்
கைடன்ஸ்
டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்
டீச்சிங் ஆப் இங்கிலீஷ்
பிரைமரி டீச்சிங்
சூ அப்பர் ஸ்டிச்சிங்
சூ அப்பர் கட்டிங்
சூ லாஷ்டிங் மற்றும் பினிசிங்
டூரிசம் ஸ்டடீஸ்
கிராப்ட் மற்றும் டிசைன்
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் ஸ்டடீஸ்
ஹூமன் ரைட்ஸ்
கன்ஸ்யூமர் புரொடக்சன்
லேப்ரேட்ரி டெக்னிக்ஸ்
காம்பெடன்சி என்ஹேன்ஸ்மென்ட் பார் ஏ.என்.எம்/எப்.எச்.டபிள்யூ
ஹெல்த்கேர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்
மோட்டார் சைக்கிள் சர்வீஸ் மற்றும் ரிப்பேர்
ஜெர்மன் லாங்குவேஜ்
பிசினஸ் ஸ்கில்ஸ்
நியுபார்ன் மற்றும் இன்பேன்ட் கேர்
மெட்டர்னல் மற்றும் சைல்டு ஹெல்த் கேர்

முதுநிலை சான்றிதழ் படிப்புகள்:-

பார்ட்சிபேடரி மேனேஜ்மென்ட் ஆப் டிஸ்பிலேஸ்மென்ட் ரீசெட்டில்மென்ட் மற்றும் ரீஹெபிலேஷன்
காப்பிஎடிட்டிங் மற்றும் புரூப்ரீடிங்
ரைட்டிங் பார் டெலிவிஷன்
ரூரல் சர்ஜரி

விழிப்புணர்வு படிப்புகள்:-

இன்டெலெக்சுவல் ப்ராப்பர்ட்டி ரைட்ஸ்
அப்ரிசியேஷன் கோர்ஸ் ஆன் என்விரான்மென்ட்

தொடர்புகொள்ள:-

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)
மெய்டன் கார்ஹி, டெல்லி 110 068

தொலைபேசி : 011 29532321
பேக்ஸ் : 011 29536588
வெப்சைட் : www.ignou.ac.in


காணவில்லை..! - உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது



 வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே.

நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்...

சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி இன்று வரை கண்ணீர் விடும் ஒரு தாயிடம் கண்டிருக்கிறேன்.

ஓர் ஐந்து வயது குழந்தையோ ஐம்பது வயது குழந்தையோ, மறைந்து விட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ, பெற்றவர் படும் வேதனை மற்றவருக்குப் புரியாது, என் குழந்தை இந்த மடியில்தான் உறங்கியது, இங்கேதான் விளையாடியது, இப்படித்தான் என்னிடம் கொஞ்சியது, உணவுக் கிடைத்ததோ, இல்லையோ, அதன் உறுப்புக்கள் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ, பால் குடித்ததோ, பசியால் அழுகிறதோ, விபச்சாரத் தொழிலில் விட்டனரோ, இல்லை கொன்றுப் புதைத்தனரோ என்று ஒரு பெற்றவளின், தந்தையின் மனம் படும் பாடு திருடுபவனுக்கும், தேடும் கடமையில் இருக்கும் சிலருக்கும் புரிவதேயில்லை.

இந்தச் சோகத்தைக் கண்டும் காணாமல், புகார் பதியாமல், அல்லது இதுபோல் எத்தனையோ? இதில், இது வேறா என்று சில அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்கள் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிச்சைகாரர்களைப் போல் துரத்தியடிக்கும் சிலரின் அலட்சியம் இவைகள்தான் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது.

1,17,480 குழந்தைகள், 352 மாவட்டங்களில் இருந்து, கடந்த ஜனவரி 2008 முதல், ஜனவரி 2010 வரை, காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 41,546 குழந்தைகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது, அது நீதிக் கேட்டுப் போராட்டம் தொடங்கியபிறகும், தமிழ்நாடு, குஜராத், மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்கள் இன்னும் வழக்குக்காக நேரில் செல்லவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அட இங்குதான் ஒரு பசுவின் கன்றைக் கொன்றக் குற்றத்திற்கு, தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்திருக்கிறான்.

நாட்டில் முக்கியமான அறிக்கை விடும் செயல்கள் பல இருக்க, குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். முக்கியஸ்தர்கள் வீட்டில் இதுபோல் நிகழ்வுகள் நடப்பதில்லை, காரணம் திருடுபவனுக்கு ஒரு பயம் இருக்கலாம், செய்தால், கண்டுபிடித்துக் கழுத்தைத் திருகிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். யாரைக் கொலை செய்தாலும், எந்தக் குழந்தையைத் திருடினாலும் நாட்டில் நீதி எல்லோருக்கும் பொது என்ற நிலை இருந்தால், இங்கே குற்றங்களும் குறைந்து விடுமே.

இருக்கும் நீதியை நிலைநாட்டுவதில், நினைவுப்படுத்துவதில் உள்ள போராட்டம், குழந்தையைத் தேடி அலையும் அலைச்சலை விட மிகக் கொடுமையானது.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தைத் தட்டி எழுப்ப, குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஒரு போராட்டம், வேறொரு நாட்டில், அநீதியான ஒரு சட்டத் தீர்ப்புக் கண்டு ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வயதான பெண் குழந்தை 'லாமியா காம்தி'யைக் கற்பழித்துக் கொலை செய்த 'ஃபையான் காம்தி' என்ற சவூதியரேபிய மத குரு. இவன் பெற்ற தண்டனை, "குருதிப் பணம்" என்று சொல்லப்படுகிற வெறும் அபராதம் மட்டுமே, அதுவும் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்கு.

அந்தக் குழந்தைப் பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறது, பாலூட்டும்போது இறந்த குழந்தைக்காக ஒரு சிறுமியைக் கொன்ற சட்டம், பெற்ற பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு, தாய்க்குப் பணம் கொடுத்தால் போதும் என்கிறது! திரைப்படத்தில் காட்டும் நிழலுக்காய் பொங்கியவர்கள், இந்த உண்மை சுடுகிறது என்று ஒளிந்து கொண்டனரோ?

நீதி கேட்டுப் போகும் இடத்திலும், பெண்ணைப் புணர்ந்து வதை செய்கின்றன சில காவல் நிலையங்கள். ஆந்திராவில், சித்தூரில், விசாரணை என்ற பெயரில் ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்திருக்கிறான் ஒரு வெறிப் பிடித்த காவலன். இன்னும் எத்தனை எத்தனையோ வேதனை தரும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணென்றால் புணர்ச்சி, ஆண் குழந்தை என்றால் பணம், குழந்தையைக் கடத்தி வதைக்கும், பெண்களை நாசமாக்கும் ஒருவனுக்கு, அவனின் தாயோ அவன் வீட்டுப் பெண்களோ நினைவிற்கே வரமாட்டார்களா? சில நிமிடங்களில் அடங்கிப் போகும் உணர்விற்கு இத்தனை மிருகத்தனமா?

குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டுபவர்கள் யாரும் வாழத் தகுதி இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளே.

இப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் நாட்டில், தாய்மை உணர்வு மதிக்கப்படாத நாட்டில், ஒரு குழந்தைக் காணாமல் போனால், அந்தத் தாய்ப் படும் பாடு, எந்தப் பண, உடல் வெறிபிடித்த எந்த அயோக்கியர்களுக்கும் தெரியாது.

எந்த மதமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த நாடோ, குழந்தைகள் எல்லோரும் பறிக்கும் பூக்கள் இல்லை, முகர்வதற்கும், பின் வாடவிட்டுக் கொல்வதற்கும்! எத்தனையோ பந்தங்களை உடையாமல் காத்து, ஒரு புதிய உலகை படைக்கவிருக்கும் அழகான சிற்பிகள் அவர்கள்!

ஒருவரிடம் இருந்து அவர் சொத்தைக் களவாடினால், அவரின் சோகம் இழந்தப் பொருளின் மீது சிறிது காலத்திற்கே, மீண்டும் உழைத்துச் செல்வத்தைச் சேர்த்திடுவார். ஆனால் ஒருவரின் குழந்தையைக் களவாடினால், அவர் உயிரையே களவாடுவது போலத்தான், அந்தக் குழந்தைக் கிடைக்கும்வரை அங்கே உயிரே இருக்காது.

நிச்சயமாய் நாம் மனு நீதிச் சோழனைக் கேட்கவில்லை, மனசாட்சி கொண்ட மனிதர்களைத்தான் வேண்டுகிறோம். குழந்தையைத் தின்னும் நாகரிக மிருகங்கள் நாசமாய்ப் போகட்டும், இனியேனும் இங்கே தாய்மையும் மனிதமும் மலரட்டும்!

உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது, தன் வீட்டில் நெருப்பெரியும் வரை தீயின் கருகும் வாசம் அவர்களைச் சேராது. ஆள்பவர்களும், சட்ட அமைப்புகளும் நீதியை எல்லோருக்கும் சமமாய் வழங்கினால், பணத்தை விட உயிர் பெரிது என்று நினைத்தால், இழந்தவர் நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்தால், இங்கே குற்றம் குறையும், கண்ணீர் குறையும், இல்லையென்றால் இது போன்ற சட்டப் போராட்டங்களே நம் வாழ்க்கையாய் மாறிப்போகும், போராடுவோம், நாளை சந்ததியேனும் நிம்மதியாய் வாழட்டும்!

வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்..!



தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதேபோல், அதிக அளவில் நீலம் கலந்த டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளீச் செய்வதுபோல, கைகளையும் அது ப்ளீச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.

இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!


ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் பளிச்சென்று ஆகும்.

மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

சாதாரணமாகவே கைகள் இறுக்கிப் பிடிக்கும்போது கன்னிப் போவது சகஜம். டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை.

நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பந்தா பேச்சுகள்தான் இன்னமும் குறையாத சிம்பு..!




விரல்வித்தை நடிகர் நடித்த படம் ஓடி ரொம்ப காலமாயிற்று. இருப்பினும் நடிகர் பேசும் பந்தா பேச்சுகள்தான் இன்னமும் குறைந்தபாடில்லை. தற்போது இரண்டு படங்களில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படங்கள் எப்போது திரைக்கு வரும் என்பதே புரியாத புதிராக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பசங்க டைரக்டரின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் விரல்வித்தை, அப்படத்தில் தானே தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். என்றபோதும், கையிலிருந்து காசை இறக்கத்தான் ரொம்ப கஷ்டப்படுகிறாராம்.

என் படத்துக்கு மார்க்கெட்டில் ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. என் படங்களின் வியாபாரம் குறைந்தபட்சம் 40 கோடி வரை செல்கிறது. அதனால், உள்ளூர், வெளியூர் மற்றும் தொலைக்காட்சி ரைட்சுக்கான பணத்தை வாங்கியே படத்தை முடித்து விடலாம் என்கிறாராம்.

இதையடுத்து, விநியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். என்றபோதும் கடைசியாக நடிகரின் நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே ஊத்திக்கொண்டதை காரணம் காட்டி, தம்பியின் படத்தை நம்பி இறங்கி வர தயங்கி நிற்கிறார்களாம்.

``கலவரம்`` - திரை விமர்சனம்..!



மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனிராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது.

தணிகாலபரணி, தன் ஆதரவு ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோரை அழைத்து, என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார்.

கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார். இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து அந்த அறிக்கையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.

இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவொருவரும் இவர்களுடன் சேர்கிறார். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார்.

இறுதியில் இவர்களை பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார். வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ரவுடிகளை பழிவாங்கும் நினைக்கும் அஜய்ராகவ், அஜய், யாசர், ராகவேந்தர் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை சுரேஷ், கட்டத்துரை எனும் கதாபாத்திரத்தில் மிரளவைக்கிறார்.

படத்தை சந்திரன் ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. 2 பாடல்கள்தான் என்றாலும் பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் பைசல். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களை திறம்பட வேலையை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

மொத்தத்தில் ‘கலவரம்’ கொலைக்களம்.

உயர்க்கல்விக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?



 உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாட்டில் கல்வி கற்க வேன்டும் என்பது படிக்கும் மாணவர்கள் பலரின் கனவாக இருந்தாலும், வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிலருக்குத் தான் நனவாகிறது.

வெளிநாட்டுக் கல்வியானது திட்டமிட்டவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகிவிடுகிறது. திட்டமிடாமல் கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்களுக்கு பதட்டத்தோடு, பண விரயமும் அதிகமாகிறது. கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்கள் பலரும் உதவித்தொகைகளை பெறுவதற்கான காலத்தை கடந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

நாட்டைத் தேர்ந்தெடுங்கள்


நீங்கள் குறிப்பிட்ட பாடம்தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் அந்த படிப்பிற்கு எந்த நாடுகள் சிறந்த நாடுகள் என்பதை முடிவு செய்யுங்கள். சில பாடங்களுக்கு சில நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எதோ ஒரு நாட்டில் படிக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம் அது தவறான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

நாட்டைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? அந்த பல்கலைக்கழகங்களின் கட்டண விபரங்கள், பகுதி நேர வேலை விபரங்கள் மற்றும் குறிப்பாக அந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித்தொகைகள் குறித்த விபரங்களை முதலில் அறியுங்கள்.

சேகரித்த தகவல்களையெல்லாம் கொண்டு ஒரு அறிக்கை தயார் செய்யுங்கள். உங்களுக்கு தேர்ந்தெடுப்பது எளிதானதாக இருக்கும்.

விண்ணப்பியுங்கள்

உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும்பொழுது இதற்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பிரிக்கும் வேலையில் இறங்க வேண்டும். உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என கருதும் உதவித்தொகைக்கும் தயங்காமல் விண்ணப்பியுங்கள்.

உதவித்தொகைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகளை வைத்திருக்கும். அஞ்சல் வழியாக விண்ணப்பங்களைப் பெறலாம் என்று காலத்தை வீணாக்காதீர்கள். அதே போன்று விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கூர்ந்து படியுங்கள்.

வெற்றிகரமாக எழுதுங்கள்

உதவித்தொகையை பெறுவதற்காக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு வரக்கூடிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமான அளவு இருக்கலாம். உங்கள் விண்ணப்பம் தனித்து தெரியவேண்டும் என்றால் நீங்கள் உங்களைப் பற்றிய ஒரு கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் எழுதும் கடிதத்தில் உங்களின் தனித்திறன்கள், இதற்கு முன் கல்வியில் நீங்கள் சாதித்த சாதனைகள், உங்கள் விருப்பங்கள், எதிர்கால லட்சியங்கள், மொழித்திறன், உங்களின் உறுதி போன்றவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நீங்கள் பெறப்போகும் உதவித்தொகை உங்களுக்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விவரித்து எழுதுங்கள். ஏனெனில் ஒரு சிறந்த சுய விபரக் கட்டுரை உதவித்தொகை எளிதாகப் பெறுவதற்கு துணை புரியும்.

பரபரப்பு வேண்டாம்

உங்கள் விண்ணப்பத்தை சிறப்பாக கட்டமைத்தப் பின்னர் உடனடியாக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்புங்கள். முதலாவதாக வரும் விண்ணப்பங்களை ஆழந்து படித்து முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கடைசி நேரத்தில் பரபரப்புடன் சரியாக பூர்த்தி செய்யாமலோ, இறுதி நாளுக்குப் பிறகோ அனுப்பினால் உங்களுக்கு உதவித்தொகை கிடைப்பது அரிதான காரியமாகிவிட வாய்ப்பிருக்கிறது.

காத்திருங்கள்

உதவித்தொகைகள் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு உதவித்தொகை வழங்கும் நிறுவனத்தை தொடர்புகொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம், அமைதியாக காத்திருங்கள்.

நீங்கள் தகுதியுள்ள நபராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

‘ சிப் ' - ஐ வைத்து சீப்பா நடக்கும் நாடுகள்...!



இனிமேல் ஒரு பயல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பான்? ஓலைச்சுவடியில் கோட் வேர்ட்ஸில் கடுதாசி எழுதி மஞ்சள் பொடி போட்டு, மெழுகு தேய்த்து டீகோட் செய்து வாசித்துக்கொள்ள வேண்டியதுதான். கணக்கு வழக்குகள் இதர விவரங்கள் அனைத்தையும் கையாலெழுதும் காலம் திரும்பி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள். கோப்புகளை டிஜிடல் வடிவில் சேமித்து வைத்தால் சாவு கிடையாது என்று எண்ணியிருந்தால் நீங்கள் செத்தீர்கள். மானசீக மர்ம தேசத்தில் பட்டுத்துணி சுற்றி ஏதாவது பாதாள அறைக்குள்தான் புதைத்து வைக்கவேண்டியிருக்கும்.

எல்லாம் கலியின் சதி. மீண்டும் அமெரிக்கா ஓர் அக்கப்போரில் சிக்கியிருக்கிறது. அயோக்கியத்தனத்தின் அடுத்த நீட்டல் விகாரம் ஒரு பெரும் விவகாரமாக வெடித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து பரதேசங்களுக்கு சப்ளையான சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலா ஒரு ரகசிய 'சிப்' சொருகி அனுப்பியிருக்கும் சங்கதி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இணையத் தொடர்பே இல்லாதிருக்கும் கம்ப்யூட்டர்களையும் இந்த திருட்டு வசதியின்மூலம் ஹேக் செய்ய இயலும். உள்ளே இருக்கிற சங்கதிகளை எடுத்துப் படித்துக் கள்ளத்தனம் செய்யலாம்.

மேற்படி ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் இடங்களைப் பாருங்கள். பிரதானமாக சீன ராணுவம். அடுத்தபடியாக ரஷ்ய ராணுவம். மூன்றாவதாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள். கட்டக்கடைசியாக சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற தேசங்களைச் சேர்ந்த உளவுத்துறை அலுவலகங்கள். இதில் இந்தியாவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர்களுக்கு முன்னதாகவே தாலி கட்டி அனுப்பிவைக்கிற சங்கதி. எந்தெந்தக் களவாணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இதில் உடந்தை என்று இனிமேல்தான் தெரியவரும். இது இவ்வாறிருக்க, இந்தத் திருப்பணியை அமெரிக்காவுக்கு முன்பாகவே சீனா ஆரம்பித்துவிட்டது என்றும், அமெரிக்காவுக்கே அவர்கள் பலமுறை இவ்வித இனிய அல்வா கொடுத்ததன் விளைவாகவே அமெரிக்கா இந்த ரகசிய சிப் சொருகல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது என்றும் சொல்கிறார்கள்.

எப்படியானாலும் இந்த அருவருக்கத்தக்க, அபாயகரமான அத்துமீறல் நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருப்பதை மறுக்க முடியாது. டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடங்கி கம்ப்யூட்டர் ஹேக்கிங் வரை சகலமான சாத்தியங்களிலும் அமெரிக்கா தனது அழுகிய உளவுக் கரங்களை உலகெங்கும் நீட்டுவது தாங்க இயலாத அபாய எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதைக் கேட்டாலும், என்ன கேட்டாலும் தேசியப் பாதுகாப்பு என்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஒரே பாட்டை ஒரே சுருதியில் பாடிவிடுவார்கள். இல்லாவிட்டால் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று ஆத்ம சுத்தியுடன் பொய் சொல்லவும் ரெட்டை ரெடியாக நிற்பார்கள். இந்த விவகாரத்திலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதைத்தான் செய்திருக்கிறது. விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த மறுகணமே, அதெல்லாம் இல்லை; சுத்தப் பொய் என்று மறுத்துவிட்டார்கள். காசா பணமா? ஒரு மறுப்பு. தீர்ந்தது விஷயம்.

ஆனால் அமெரிக்க அச்சு மீடியாவே இந்தா இந்தா என்று ஆதாரங்களை எடுத்து வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் NSA வின் மறுப்பு அர்த்தமற்றதாகவே உள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் அமெரிக்காவின் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்கு எதிராக உடனடியாகத் திரண்டு எழாத பட்சத்தில், நாளைக்குக் கூடி உட்கார்ந்து ஒப்பாரி வைக்க நேர்ந்தால் அதுதான் கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும்.

ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் 'வீரம்'..!



அஜீத், தமன்னா, சந்தானம், நாசர் மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 10ம் தேதி வெளியாகி தொடர்ந்து ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகளாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியா தவிர, யு.எஸ்.ஏ, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் இப்படம் வெளியாகியது.

ஆந்திராவில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் ‘வீரம்’ திரைப்படம் ‘ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸ்’-ல் வெளியான முதல் வாரத்தில் 20 படங்களில் ஒன்றாக இடம் பிடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

76,320 டாலர்களை வசூலித்துள்ள இப்படம் ஹாலிவுட் திரைப்படங்களுடன் போட்டி போட்டு 16வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு தமிழ்ப் படம் ஆஸ்திரேலிய நாட்டின் ‘பாக்ஸ் ஆபிஸ் – டாப் 20’ல் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



ஆஹா கல்யாணம் ஆடியோ வெளியீடு



நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழில் நன்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துவரும் ஆஹா கல்யாணம்
திரைப்படத்தின் இசை வருகிற ஜனவரி 21ல் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா இப்படத்தினை தயாரித்துவருகிறார். அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கிவரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டுவருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மனீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளியாகி வெற்றிவாகை சூடிய ஹிந்திப் படமான பாந்த் பஜா பாரத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் முதல் படம்பிடிக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற பிப்ரவரி 7ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 20ல் இப்படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தரண்குமார் போடா போடி, விரட்டு, தகராறு, இங்க என்ன சொல்லுது முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகிறதா வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்..?



அறை எண் 305ல் கடவுள் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களுக்குப் பிறகு சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

கடந்த 2010ல் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும்வெற்றியடைந்த மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்ப்படத்தினை பி.வி.பி.சினிமாவுடன் இணைந்து  தயாரித்துவருகிறார். இப்படத்தினை நகைச்சுவை நடிகரும், முத்திரைதிரைப்படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத் இயக்கிவருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. மும்பை மாடலான ஆஷ்னா சவேரி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

புதுமுக இயக்குனர்களின் மிக முக்கியப் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் இப்படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு ரிலீசாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பகம்