Sunday, August 25, 2013

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!














   







ஜேர்மனியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு 100,000 மக்கள் உயிரிழக்கின்றனர்.

இதனையடுத்து பிரெஞ்சு நோல் என்னும் தொழில்நுட்ப குழுவானது இந்த ஆளில்லா விமானத்தை கண்டுபிடித்துள்ளது.

அவசர ஊர்தியை விட இந்த விமானமானது மிக வேகமாக பறக்கும் தன்மை கொண்டது.

அதாவது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளியை அவசர ஊர்தியில் ஏற்றிச்செல்வதற்கு பதிலாக இந்த விமானத்தில் ஏற்றிச்சென்றால் மிக வேகமாக மருத்துவமனையை நெருங்கி விடலாம் என்று கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தின் விலையானது 20,000 யூரோவாகும்.

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!




பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக்கின் எனப்படும் ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கணணி நிபுணர் கலீல் ஷ்ரியாதே ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளமை பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை ஃபேஸ்புக் குழு அவதானத்தில் கொள்ளவில்லை.

வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சினையே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் சினம்கொண்ட கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

தனது பெயர் கலீல் ஷ்ரியாதே என்றும் தான் தகவல் தொழில்நுட்பத்தில் கடைநிலை பட்டம் பெற்றுள்ளதாக ஜக்கர் பர்கின் பக்கத்தில் கலீல் குறிப்பிட்டுள்ளார்.

ஜக்கர் பர்கின் www.facebook.com இணையதளத்தில் ஒரு பிரச்சினையை கண்டுபிடித்துள்ளதாகவும், அது குறித்து முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாகவும் எழுதியுள்ளார்.

அந்த பிரச்சினை மூலம் ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொரு பயனரின் பக்கத்தில் எழுத முடிகிறது.

தான் சாரா குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர் பர்க்குடன் ஹார்வர்டில் கல்வி கற்ற சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!

கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!




கூகுள் நிறுவனம் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் சேவைகளில் இருக்கும் செக்கியூரிட்டி குறைபாடுகளை கண்டுபிடித்து தகவல் குடுப்பவர்களுக்கு 5000 டாலரை பரிசாக தர உள்ளது. அதாவது கிட்டதிட்ட 3,21,675 ரூபாய் பரிசாக வழங்கப்படும். டெக்கனாலஜியில் அதிகம் திறமை உள்ளவர்கள் கூகுள் சேவைகளில் உள்ள பக்ஸ்களை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்து பரிசை வெல்லாம். ஒவ்வொரு பக்ஸ் ரிப்போர்ட்டுக்கும் பரிசு தனித்தனியாக உண்டு.
 

கூகுள் நிறவனம் இதுவரை கிட்டதிட்ட 13கோடிகளை பரிசாக வழங்கியுள்ளதாம். சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் உலகின் முன்னனி நிறுவனமான மைக்கிரோஷாப்ட் போன்றைவைகளும் இது போன்ற பரிசுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. அண்மையில் கூட ஹலீல் என்பவர் பேஸ்புக் ஓனரின் அக்கவுன்டையே ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாடுகளை தெரிவித்தார். அவருக்கு 500 டாலரை பரிசாக பேஸ்புக் வழங்கியது. இது போன்ற வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!

ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!




ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.


ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது வெப்சைடில், ஜெர்மனியின் பெடரல் அரகசாங்க ஏஜென்சி இந்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்ந பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் வின்டோஸ்8 கம்பியூட்டரில் டிரஸ்டெட் பிளாட்பார்ம் மாடியூல் (Trusted Platform Module) என்ற சிப் உள்ளது. இது கம்பியூட்டரின் பாதுகாப்புக்காக வின்டோஸ்8 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

வின்டோஸ்8 மற்றும் TPM சிப் இணையும் பொழுது ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர்களின் கட்டுபாட்டை இழந்து விடுகிறது இதனால் பிரச்சனை ஆரம்பிக்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மறுத்த மைக்கிரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ்8 கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் TPM சிப்பை வேண்டுமானால் செயல் இழக்க செய்துவிடலாம் அந்த வசதி அதில் உள்ளதாக தெரிவித்தது.

உலகிலுள்ள ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து சாதித்த முதல் இந்தியப் பெண்!

உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.அந்த சாதனையைத் தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால் ஏறி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால். ஜாம்ஷெட்பூரில் வாழ்ந்துவரும் இவர், 13 வருடங்களுக்கு முன்னால், தனது 35 வயதில், மேற்கு வங்கத்தில் உள்ள தல்மா மலையேறக் குழுவினருடன் இணைந்தார். இந்த மலையேற்ற நிகழ்ச்சி மூலம், தார் பாலைவனத்தில் நடத்தப்படும் ஒட்டகங்களின் சாகசப்பயணம் பற்றி அறிந்து, அதில் பங்குகொண்டார். இதற்குப்பின்னர், ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும், கிளிமாஞ்ஜெரோ சிகரத்தை அடையும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டை அடைந்து, இந்திய நாட்டின் தேசியக் கொடியை அங்கு நாட்டினார்.

1-Indian-woman-achiver

இந்த முயற்சி, அவருக்கு பிற நாடுகளின் உயரமான சிகரங்களையும் அடைந்து, அங்கும் இந்தியக் கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.
அந்த சாதனையையும் தற்போது பிரேமலதா நிகழ்த்தியுள்ளார். இந்த வருடம் மே மாதம், வடஅமெரிக்காவில் உள்ள மெக்கின்லே மலையின் தெனாலி சிகரத்தை அடைந்து, அங்கு இந்திய நாட்டுக் கொடியைப் பறக்கவிட்டதன் மூலம், தனது கனவை அவர் நிறைவு செய்துள்ளார்.

இதற்கு, அவருக்கு உறுதுணையாக இருந்தது, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் ஆவார். தற்போது, டாடா ஸ்டீல் குழுமத்தின் சாகச அமைப்பின் தலைவராக விளங்கும் இவர், பிரேமலதாவிற்கு மன மற்றும் உடல் ரீதியான பயிற்சிகளை அளித்து, இந்த சாதனையைப் புரிய அவருக்கு உதவிகரமாக இருந்தார்.மேலும்
மற்ற பெண்களும் தங்களுடைய குடும்பச்சூழலில் இருந்து வெளிவந்து, இதுபோன்ற சாகச அனுபவங்களைப் பெறவைப்பது என்பதே தனது அடுத்த விருப்பமாக இருக்கும் என்று பிரேமலதா தெரிவித்தார்.

உலகம் அழியும் போது அழியா வரம் பெற்ற அதிசய பூச்சி


 Last-living-creature-bed-bug


                இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே கடிதத்தில் ‘நாசா’ வை கலக்கிய சிறுவன்!


இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், வருங்காலத்தில் தான் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென ‘நாசா’ மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார். 7 வயது சிறுவன் டெக்ஸ்டர், இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்பதுதான் லட்சியம். இது தொடர்பாக இவர் அண்மையில் அமெரிக்காவின ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி ‘நாசா’ மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும், விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.

நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன், ‘‘அன்புள்ள நாசா, எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு 2 பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன். எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு 7 வயது தான் ஆகிறது. எனவே, நான் வருங்காலத்தில் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன். நான் ஒரு விண்வெளி வீரர் ஆக என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலதித்த நாசா, சிறுவனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்திருந்தது. இது டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Parents News, Boy Mars Letter, Boy Nasa Mars, Boy Nasa Mars Letter, Dexter Nasa Mars, Dexter Nasa Mars Letter, Katrina Anderson, Nasa Mars Letter, Photos, Parents News

இதுக்குறித்து தெரிவித்த டெக்ஸ்டரின் தாய் கத்ரினா, டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு ‘நாசா’அளித்துள்ள பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் டெக்ஸ்டர் மகிழ்ச்சி அடைந்தான். அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான் எனக் கூறினார்

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)


இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது. இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று நம்பிக்கை இல்லாதவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)

அந்த தேவதை தரையில் இறங்கி பின்னர் மின்னல் வேகத்தில் மேலே எழும்பி பறந்து போவதைப் பார்த்து சாலையில் சென்ற சிலர் வேகமாக ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரே ஒரு விநாடிதான் அந்த தேவதை காட்சி தந்தது. ஆனால் அந்த ஒரு விநாடியிலும் கூட தேவதை முழுமையாக காட்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோ 2011ல் பதிவானதாக இருந்தாலும் தற்போதுதான் இது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.
WATCH VIDEO……



 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=oDubUuplR5g

குழந்தையின் உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் (பரபரப்பு காணணொளி)!

 


உலகில் எத்தனையோ விசித்திரங்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புலப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்கள் அனைத்துங்கும் இதயம் உள்ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப்பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்கள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காணமுடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத்தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று சொல்லித்தான் புரியவேண்டுமா  என்ன.


இந்தியாவில் பிறந்துள்ள ஒரு குழந்தைக்கு இதயதம் உடலுக்கு வெளியே அமைந்துள்ளது அனைவரையும் கடந்த காலங்களில் மட்டுமன்றி இன்றும்  மருத்துவ அதிசமாக நோக்கப்படுகிறது. உடலுக்கு வெளியில் துடிக்கும் அந்த பச்சிளம் குழந்தையில் இதயத்தினை பார்க்கும் ஒவ்வொருவரது இதயங்களும் கணத்துப்போகும் என்பதே உண்மை. மெடிகல் மிராகல் என்று ஆங்கிலத்தில் அழைப்பது இது போன்ற சில  வழமைக்கு மாறான மருத்துவ அதிசயங்களைத்தான். துடிக்கும் இதயத்தை காணளொயில் காணலாம்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=64UpzlPkDP4




ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு!


 Night of a thousand years of ancient parrots discovery

100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன. அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது. இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன. இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


புதைத்து 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய பெண்!




 Returning girl buried alive after 2 weeks



அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்திருந்த போலீசார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.


உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன், திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா ? என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். உங்கொப்பரான்னே… சத்தியமா வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை ? என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போலீசார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர். புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம் ? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



பால்வெளியில் பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்!


குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு பூமியியைப் போன்ற ஒரு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர். 

இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியின் அளவான, குறைவான சுற்றுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆறில் ஒரு நட்சத்திரத்தில் பூமியின் அளவான கிரகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

எனினும் இதன் மூலம் எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை உறுதி செய்ய முடியாது எனவும் வானியலாளர்கள் கூறியுள்ளனர்.

உயிர் வாழத் தகுதியாக இருப்பதற்கு குறித்த கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சூழல் தேவை என்பதோடு தற்ப வெப்பநிலை அதிக சூடாகவும் அதிக குளிராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர ஒளி பட்டுத் தெறிப்பதன் ஊடே கண்டறிந்து வருகின்றது. கெப்லர் தொலைநோக்கியின் முதல் 16 மாத அவதானிப்பில் சுமார் 2,400 கிரகங்களை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமெரிக்க வானியலாளர் சமூகத்தின் மாநாட்டில் மேற்படி ஆய்வு முடிவு சமர்ப்பிக்கப்பட்டது. 

இதில் பால் வெளியில் இருக்கும் 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியை விட 0.8 முதல் 1.25 வரை அளவு பெரிதான கிரகங்கள் 85 நாட்கள் அல்லது அதனைவிட குறைவான சுற்றுப்பாதையைக் கொண்டதாக அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

மறுபுறத்தில் நாஸா செய்மதி தொலைநோக்கி அவதானிப்பு பிரிவு தாம் 461 கிரகங்களை இது வரை அவதானித்திருப்பதாக அறிவித்துள்ளது.

காப்பகம்