Sunday, September 21, 2014

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூர் வடக்கு டி.தாசரஹள்ளி புவனேஸ்வரி நகரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தவர் லல்லன்குமார் (வயது 28). பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தும்கூர் ரோடு சோழதேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதே போல இவரது சகோதரி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் லதாகுமாரி(31). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால், லல்லன்குமாருக்கும், லதாகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17–ந் தேதி லல்லன்குமார் கல்லூரி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். தேர்வு நேரத்தில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என லல்லன்குமார், அவரிடம் கூறியுள்ளார்.

இருப்பினும் மீண்டும் மீண்டும் லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்த உறவு பற்றி உன் சகோதரியிடம் கூறிவிடுவேன் என்றும், மேலும் என்னை கற்பழித்ததாக போலீசில் புகார் தெரிவிப்பேன் எனவும் லல்லன்குமாரை, லதாகுமாரி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லல்லன்குமார், லதாகுமாரியை சமாதானப்படுத்தி அவருடன் உல்லாசம் அனுபவிப்பது போல நடித்து துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழதேவனஹள்ளி போலீசார் லல்லன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு விசாரணை பெங்களூர் முதன்மை சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொலை வழக்கில் நீதிபதி விஸ்வநாத் வி.அங்காடி தீர்ப்பு கூறினார். அதில், உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற லல்லன்குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

காப்பகம்