Monday, January 20, 2014

தனது ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல்..! - லிங்குசாமி



ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி ரன் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் லிங்குசாமி தனது படங்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் அஞ்சான் திரைப்படம் குறித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கமல்ஹாசன் “ இத்தன வருட சினிமா அனுபவத்துல என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்ன பண்ணனும்னு தெரியல” என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிவருகிறார்.

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க..!



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான  பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா  என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்:

 கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்:

 கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை:

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட  வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை  பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: 

உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ,  அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு:


 சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா  உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி:

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில்  மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின்  போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு:

 பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.  இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்:


 மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்..!



மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகமான மருந்துகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம்தான் என்று குழுவினர் கண்டறிந்தனர் என்றனர்.இந்நிலையில், அவர் கடைசியாக எடுத்து கொண்ட உணவில் விஷம் கலந்துள்ளதா, மது குடித்திருந்தாரா என்று அறிய உடலின் பாகங்கள் சிலவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதற்கான தடயம் இல்லை என்பதால், அவர் குடித்திருக்கவில்லை என தெரியவந்தது.

மேலும், மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை அவர் அதிகமாக சாப்பிட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த மருந்து அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தூக்க மாத்திரைகளை போல் மயக்கத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவர் அறிக்கைகள், நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா, அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், சுனந்தா அறையில் தங்கியிருந்த போது அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள், டுவிட்டர்கள் ஆகியவற்றையும் சிறப்பு புலனாய்வு படையினர் சேகரித்துள்ளனர். இவற்றை சிறப்பு புலனாய்வு படை தலைவர் அசோக் சர்மா ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையையும், ரசாயன பரிசோதனை அறிக்கையையும் இன்று மாலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ரசாயன பரிசோதனை செய்த நிபுணர்கள் ஆகியோருடன் சிறப்பு புலனாய்வு படையினர் விவாதிக்கவுள்ளனர்.இதற்கிடையே, ரசாயன மருத்துவ நிபுணர் குழு தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், எங்களது ஆய்வுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

சுனந்தாவின் உடலில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இதயத்தை ஆய்வு செய்ததில் சில மருத்துவ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.மேலும் தடயவியல் நிபுணர்களும் அறையில் எடுத்த மருந்துகள், கைரேகைகள், வியர்வை துளிகள், ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்வர். பின்னர் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணை அறிக்கைகளுடன் சேர்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.


8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா..? தவறா..?



பல கல்லூரி மாணவிகள், மற்றும் இளைஞிகள் “காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் அணிய விரும்புகிறார்கள்.அந்த காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்களில் சில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மலர்கள், அல்லது விருப்பமான நிறங்களில் எல்லாம் கிடைக்கின்றன.” கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? என்றும் கேட்கிறார்கள்.கண்ணாடி அணிவதை தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப் பிரசாதம்.

அதே நேரம் எச்சரிக்கை, ஒரு தகுதி வாய்ந்த கான்டாக்ட் லென்ஸ் நிபுணரிடம், மையத்திற்கு சென்று அணிவதே சிறந்தது.

ஆன் லைனில் வாங்கி அணிவது கண்ணை இழப்பதற்க்கான முன்னுரை.

மேலும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை உங்களுக்கு வழங்கிய நிபுணர் சொன்ன அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு சமையல் வேலை செய்யக்
கூடாது.

நெருப்பின் அருகே செல்லக்கூடாது.

உங்கள் உங்கள் கான்டாக்ட் லென்ஸை நண்பர்கள் அணிந்து கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸை நம்ம கார்ப்பரேஷன் தண்ணீர், மினரல் வாட்டரில் எல்லாம் அலம்பக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் வாங்கியபோது அதற்கென்று கொடுத்த திரவத்தில் தான் அலம்ப வேண்டும்.

முக்கியமான விஷயம் – கண்ணாடி அணிவதற்கான கண் பரிசோதனையும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்க்கான கண் பரிசோதனையும் வேறு வேறு.

கண்ணாடிக்கான ப்ரிஸ்க்ரிப்ஷனை வைத்துக் கொண்டு உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வழங்க முடியும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஒருவேளை, உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வேண்டாம் கண்ணாடியே அணிந்து கொள்ளுங்கள் என்று கான்டாக்ட் லென்ஸ் நிபுணர் மறுத்து விட்டால், வேறொருவரை சந்தித்து அல்லது நீங்களாகவே ஒரு கண்ணாடிக்கடைக்கு சென்று கான்டாக்ட் லென்ஸ் வாங்கி அணிந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் கார்னியா (விழி வெண் படலம்) கான்டாக்ட் லென்ஸை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வலுவில்லாமல் மெலிதாக இருக்கலாம். ஒரு நல்ல ஃப்ரேம் செலக்ட் செய்து கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் கண்ணாடி உங்கள் அழகை மட்டுமல்ல, உங்கள் தன்னம்பிக்கையயும் அதிகரிக்கக்கூடும்.

பாலிவுட்டில் ‘சுப்பிரமணிபுரம்’..!



இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது சசிகுமாரின் சுப்பிரமணிபுரம்.

கடந்த மூன்று வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம்.

கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன.
இந்தப்படத்தினை சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் பாதிப்பில் நிறைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாயின.

அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் சமீபத்தில் தெரியப்படுத்தினார்.

இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார். பலர் கேட்டும் சுப்பிரமணியபுரத்தின் ரீமேக் உரிமையை அவர் தரவில்லை.

சுப்பிரமணியபுரம் இந்தி ரீமேக்கில் அனுராக் காஷ்யபும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் வசனத்தில் பங்களிப்பு செலுத்துவார் என தெரிகிறது.

மேலும், அனுராக்கின் தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்..!



தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.

படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள்.

 அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.

இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.

லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருகின்றனர் – ஆய்வில் தகவல்..!



லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் நூதனமாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதன்படி 5 மற்றும் 10 நாட்கள் முக சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்கள் போட்டோவை பெண்களிடம் காட்டினர். இவர்களில் உங்களை கவருபவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 351 பெண்கள் மற்றும் 177 திருநங்கைகளிடம் இதற்கு பதில் அளிக்கும்படி கோரப்பட்டது.

அதற்கு 10 நாட்களாக முகச்சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்களே தங்களுக்கு பிடித்ததாக பெண்களும், திருநங்கைகளும் தெரிவித்தனர். 5 நாள் தாடி வளர்த்து இருந்த ஆண்களை பிடித்ததாக மிக குறைந்த அளவிலான பெண்கள் கருத்து கூறியிருந்தனர்

சிம்புக்கு ஏன் இந்த வம்பு..?




சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி  என்பது போல் ஆகப்போகிறது நம்ம சிம்புவின் வாலு படத்தில் உள்ள லேட்டஸ்ட் சாங்.

புதுசு புதுசா புது ட்ரெண்ட்களை தன்னுடைய பாடல்கள் முலம் முதன்முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான்.

தன் வழியை பின்பற்றி இன்று  உலகளவில் சில பேர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீண்ட நாள் கனவான லவ் அந்தம் என்ற ஆல்பத்தை மாபெரும் உலக இசைக் கலைஞர்  எகான் வைத்து எடுத்தும் முடித்து விட்டார்.

பிறகு என்ன? தற்போது நடித்து முடித்து இருக்கும் வாலு படத்தின் ஒரு பாடலில்  அவரின் வால் தனத்தை காட்டி விட்டார் சிம்பு.

தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

அதில் நயன்தாரா வேண்டாம், அண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்து உள்ளன என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ஏற்கனவே எவன் டி உன்ன பெத்தன் பெத்தன் என்ற பாடலை ரசிகர்களின் மத்தயில் பலத்த வரவேற்பு பெற்றுது போல் இந்த பாடலும் மிக பெரிய ஹிட் ஆகும் என  நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சிம்பு.  இப் பாடலை சிம்புவின் பிறந்த நாளான பிப்வரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  விவகாரத்துக்கு பேர் போன சிம்பு விவரமான ஆளும் கூடங்க!!!!

வில்லனிடம் இருந்து ஹீரோவை காப்பாற்றிய நயன்தாரா…



பொதுவாக தமிழ்ப்படத்தில் கதாநாயகியை வில்லன் கடத்திக்கொண்டு சென்றுவிடுவார். ஹீரோ அவரை கஷ்டப்பட்டு பல சண்டைகள் போட்டு காப்பாற்றுவார். முடிவில் சுபம் என்றுதான் இதுவரை நாம் தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கின்றோம். முதல்முறையாக ஹீரோவை வில்லன் கடத்திக்கொண்டு செல்கிறார். அவரை பல சாகசங்கள் செய்து ஹீரோயின் காப்பாற்றுகிறார். இப்படி ஒரு கதைதான் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடத்தப்பட்ட காதலனாக கணேஷ் வெங்கட்ராமனும், அவரை மீட்கும் காதலியாக நயன்தாராவும், கடத்தும் வில்லனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்த த்ரில்லிங் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது பெங்களூரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்குகிறது.

நயன் தாரா முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெயம் ரவியுடன் அவர் மோது அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளும் க்ளைமாக்ஸில் இருக்கின்றதாம். வில்லன் வேடத்தை அதுவும் நயன் தாராவுடன் மோதும் வில்லன் வேடத்தை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என ஜெயம் ரவியிடம் கேட்டால் படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த கேரக்டரை நான் எதற்காக ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் செல்வகுமார் கலையில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு பொருத்தமான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா. -

சிம்புவின் காதலை சொல்லும் பாடல்..!



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

மீண்டும் நேசன் இயக்கத்தில் விஜய்....



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த சிறுமி...!!!



தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்’ அல்லது 'ஜிங் ஜிங் நோய்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

சிரிப்போம்! சிரிப்போம்!!



வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வாய்விட்டுச் சிரிக்கிறோம்? குழந்தைகள் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்ட தடவை சிரிக்கின்றனவாம்.

ஆனால், பெற்றோர்கள் வெறும் 12 தடவைதான் சிரிக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. சிரிப்பதால் உடலில் உள்ள தசைகளில் அசைவேற்பட்டு, உடலிலும், மனதிலும் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைகிறது. இதனால் மனதிலிருந்து கவலைகள் வெளியேறி புத்துணர்வு கிடைக்கிறது.

சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்திருந்தும், அதை வெளிக்காட்டுவதில் பலருக்குத் தயக்கம் உண்டு. வீடு, அலுவலகம், வீதிகளில் தினமும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வின்போது இதுபோன்ற பலரை காண்பதுண்டு. அப்போது அவர்களைப் பார்த்து சிலர், சிடுமூஞ்சி என்று தமாஷாகக் கூறுவதுண்டு.

 வீடு, அலுவலகம் என நாம் இருக்கும் இடத்தில் மனஅழுத்தத்துடன் (ஸ்டிரஸ்) இருப்பதை விட்டு, சிரிப்பை வெளிப்படுத்த வேண்டிய வேளையில், பணிக்குப் பாதிப்பில்லாமல் சிரிக்கலாம். நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிரிக்க வைக்கலாம். இதனால், கவலைகள் நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். சிரிப்பதால் எதனையும் நாம் இழக்கப் போவதில்லை.

மகிழ்ச்சியோடு வேலை வாங்குவதிலும், அதிகாரத்தால் வேலை வாங்குவதிலும் கிடைக்கும் முடிவில் வேறுபாடு உள்ளது.

வீட்டில் குழந்தைகளிடம் அன்பாக சிரித்து கொண்டே, பேசியபடி அவர்களை படிக்க வைப்பதிலும், கையில் பிரம்பை எடுத்து விரட்டி படிக்க வைப்பதிலும் உள்ள வேறுபாடு குழந்தைகளின் தேர்வு முடிவில் தெளிவாகக் காணப்படும்.

இதுபோன்று அனைத்திலும் முடிவு சரியாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் தயக்கமின்றி வெளிப்படுத்துங்கள் (சிரியுங்கள்).

எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் “அ’, “ஆ’ என இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுக்கும் உள்ள வகுப்பாசிரியர்கள் ஒரே தகுதியுடைவர்கள்தான். இருவரின் கற்பித்தலும் சிறப்பாகத்தான் இருக்கும்.

இவர்களில் “அ’ பிரிவு ஆசிரியர் மிகவும் அன்பானவர். அவரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், “ஆ’ பிரிவு ஆசிரியர் கொஞ்சம் சிடுசிடுப்பானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்துவிட்டால் இந்த உலகமே அவரின் கீழ் உள்ளதை போன்று நினைத்துக் கொண்டு மாணவர்களை அதட்டி உருட்டுவார்.

இதனால் மாணவர்களும் பயந்து படிப்பதுபோன்று (அவருக்காக) நடிப்பார்கள் (சிலர் தூங்கிக் கொண்டும் இருப்பார்கள்). அவரும் ஏதோ சாதனை படைத்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்.

ஆனால், அந்த ஆண்டின் இறுதித் தேர்வில் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் 60 சதவீதம் பேர் அந்த குறிப்பிட்ட ஆசிரியர் எடுத்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அருகில் இருந்த, “அ ‘ பிரிவில் உள்ள மாணவர்களில் 100 சதவீதம் பேர் அதே பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அப்போது “ஆ’ பிரிவு ஆசிரியர், “அ’ பிரிவு ஆசிரியரிடம் “நானும் நன்றாகத்தானே பாடம் நடத்தினேன், அப்புறம் ஏன் என் வகுப்பில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்தது’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு “அ’ பிரிவு ஆசிரியர், “நீங்கள் பாடத்தை மட்டுமே நடத்தினீர்கள். நான் மாணவர்களின் மனதிற்குள் பாடத்தை கொண்டுச் சென்றேன்’ என்றார். “அது எப்படி’ என்றார் “ஆ’ பிரிவு ஆசிரியர்.

“அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அன்றாடம் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் சிரித்தும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டும் பாடத்தை நடத்தும்போது அவர்கள் தங்களுக்கு எது தேவையோ, அதனை மனத்திற்குள் நிறுத்திவிடுவார்கள்.

மேலும், மாணவர்களுடைய மனதும், உடலும் வலிமையாகி புத்துணர்வுடன் இருப்பார்கள். அதன்பிறகு நாம் நடத்தும் எவ்வித கடினமான பாடமாக இருந்தாலும், அதனை எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்றார்.

சிரிப்பின் தேவையை உணர்ந்தவர்கள் (வெளிநாட்டிலும், நம்மூரிலும்) சிலர் ஓரிடத்தில் ஒன்றுகூடி வாய்விட்டு சிரித்து மகிழ்வார்கள்.

இதுபோன்று நாம் ஒன்றுகூடிதான் சிரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் போதுமே.

பாலசந்தர் பாராட்டிய த்ரிஷ்யம்....!






 மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்திவிட்டு இயக்குநர் பாலசந்தர் அப்படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பலர் பல்வேறு மொழிகளில் ரீமேக் உரிமைக்கு போட்டியிட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் 'த்ரிஷ்யம்'படக்குழுவினரைப் பாராட்டி இ-மெயில் ஒன்றினை அனுப்பியிருக்கிறார்.

அதில், " பார்வையாளனைக் குறைவாக மதிப்பிடாமல் புத்திசாலித்தனத்தோடு எடுக்கப்பட்ட படம். நடிகர்களும் இயக்குநரும் இணைந்து ஒரே நோக்கில் பணியாற்றினால் படம் எவ்வளவு நன்றாக வரும் என்பதற்கு உதாரணம் ‘த்ரிஷ்யம்’. " எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சகர்கள் மத்தியில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் 'த்ரிஷ்யம்' பெறும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஜாக்கிங் செல்பவரா நீங்கள்? - எச்சரிக்கை..!!!




உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஜாக்கிங் செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது:-

உடல் எடையை குறைக்க பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) எப்போதும் சிறந்ததாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது.

எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும். அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செலவிடப்பட்டு சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

" மாமியாரின் அன்புப் பரிசு...!!!




ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்
ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு
படகுப் பிரயாணம் போனாள்..
நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா வ
விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம்
புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..

அதன் கண்ணாடியில்
ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
" மாமியாரின் அன்புப் பரிசு..

"ரெண்டாவது மருமகனுக்கும்
இந்த சோதனை நடந்தது.. அவரும்
ஒரு மாருதி கார் வென்றார்.."
மாமியாரின் அன்புப் பரிசாக..
".
மூன்றாவது மருமகனுக்கும் இந்த
சோதனை நடந்தது.. அவர்
கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு'
உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார்-லாம் வேணாம்.. சாவுற வரைக்கும்
சைக்கிள்ல போயிக்கிறேன்..த்து பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன்
வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ROLLS ROYCE கார்
நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு"
என்ற அட்டையோட….!

மீண்டும் அஜீத்துடன் இணைகிறார் சிவா....




பொங்கலுக்கு வந்த 'வீரம்' ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஜோடியாக அனுஷ்காவை தேர்வு செய்துள்ளார்கள். முதல் தடவையாக இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.

இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்தும் டைரக்டர் சிவாவும் மீண்டும் இணையப் போகிறார்களாம்.

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்!




”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ”என்று மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், தனது சம்பள விபரத்தை தெரிவிக்க கூடாது என பெண்ணின் கணவர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து பெண்ணின் கோரிக்கையை அலுவலகம் நிராகரித்தது.

இதனால் அந்த பெண், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ கணவரின் சம்பள விவரத்தை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இது போன்று வரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் நிராகரிக்க கூடாது.

அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது. மேலும், அபராதத்திற்குரிய செயல் என டெல்லி உள்துறை அலுவலகத்திற்கு தகவல் ஆணையர் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மக்களின் வரி பணத்திலிருந்து தான் வழங்கப்படுகி றது. மேலும், அவர்களின் சம்பள பட்டியலை தெரிவிப்பது ஆர்டிஐ சட்டத்தின்படி கட்டாயமாகும். எனவே, இதுபோன்று சம்பளவிபரத்தை தெரியபடுத்துவது மூன்றாவது நபருக்கு தெரிவிப்பதாக கருத இயலாது.

இது போன்று சம்பள விபரம் கேட்டு வரும் விண்ணப்பங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்க இயலாது என கூறி நிராகரிக்க முடியாது”என்று அவர் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு...



தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சனிக்கிழமை இரவு அன்று தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனிவிமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

உணவுப் பழக்கம் தனிமனித உரிமை..!



 நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான்.

கண்ணப்ப நாயனாரின் பன்றிக்கறி

சைவ மதத்தின் பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக்கறி படைத்தவர்), சிறுத்தொண்ட நாயனாருக்கும் (பிள்ளைக்கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்துவிட்டு, கடவுளரைச் சைவமாக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் காளத்திநாதனிடம் வேண்டுவதாக இவ்வாறு பாடப்பட்டுள்ளது:

“நாதனே! அமுது செய்ய
  நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
  கொண்டிங்கு வருவே னென்பார்!”

சைவ உணவுமயமாக்கல்

சமீப காலங்களில் சைவ, அசைவ உணவுகள் பற்றிய பட்டிமன்றங்கள் பொதுவெளிகளில் பிரபலமாகியுள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவைச் சத்துணவுத் திட்டம் என்று அறிவித்த அரசு, ஏழைக் குழந்தைகளின் புரதச்சத்து போதாமையைக் கருதி, வாரத்தில் மும்முறை, அவித்த முட்டைகளை அளித்து வருகிறது. இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பேதும் இல்லாதது மட்டுமன்றி, தமிழகக் குழந்தைகளின் உடல்நலம் பெரிதும் முன்னேறியுள்ளது. முட்டை எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கப்பட்டுவருகிறது. எனினும் மதிய உணவில் முட்டையைத் தவிர்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சொற்பமே.

பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தும் மத்தியப் பிரதேசத்திலும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தைச் சீராய்வு செய்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், வாரம் மும்முறை அவித்த முட்டைகள் அளிக்கப்பட்டன. இந்து மதத்தின் பாதுகாவலன் என்று அவதரித்துள்ள அந்த அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டைகள் போடுவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையானோர் சைவர்கள் என்றும், பெற்றோர்கள் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்றும் விளக்கம் கூறினார். இதைப் பற்றி விமர்சனம் செய்த ஊடகங்கள் மத்தியப் பிரதேசத்தில் 35 சதவீதத்தினரே சைவர்கள் என்று கூறியது. இந்து மதத்தை ஒருமுகப்படுத்தும் செயல்திட்டத்தில் சரஸ்வதி வந்தனம், சூரிய நமஸ்காரம், கோ பூஜை என்று தொடர்ச்சியாகப் பள்ளிக்கூடங்களைத் தங்களது சோதனைக்கூடங்களாக்கியுள்ள பா.ஜ.க-வினரின் அடுத்த முயற்சியே சைவ உணவுமயமாக்கல் திட்டமாக இருக்கலாம்.

சம்ஸ்கிருதமயமாக்கல்
சைவ, வைணவ மதங்களில் மறுமலர்ச்சி என்று சொல்லக்கூடிய 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சமண மதத்துடன் கருத்துப் போர் நடத்திய பின் ஏற்பட்ட புதிய மாறுதலே சைவ உணவையும் மத வழக்கங்களுடன் பிணைக்கும் செயல். பக்தி மார்க்கத்தைப் பலதரப்பட்டவர்களிடமும் எடுத்துச் சொல்லும் முயற்சியில் எழுதப்பட்டவையே நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வாழ்க்கைப் புராணங்கள். அனைத்துச் சாதியினரையும் இணைக்கும் வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை, புராணங்களாக்கப்பட்டது. இன்றும் சைவ உணவுப் பழக்கம் என்பது, சாதிக்கட்டுமானத்தின் உயர்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில சாதியினரைத் தவிர்த்து, மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. சாதிக்கட்டுமானத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களை அடுத்த உயர்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதை ‘சம்ஸ்கிருதமயமாக்கல்’ என்று சமூகவியல் அறிஞர் எம்.என். னிவாஸ் குறிப்பிட்டுள்ளார். அசைவ உணவு உண்டுவந்த சில சமூகத்தினரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். அதுபோலவே “நீங்களும் உஜாலாவுக்கு மாறவில்லையா?” என்று கேட்பது தவறு.

பிராமணர்கள் அசைவம் உண்பார்களா?

உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதைச் சமயக் கட்டுப்பாடாக ஆக்கவும் அதையொட்டி மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதும் ஏற்கத் தக்கதல்ல. வேத காலத்திய பிராமணர்கள் புலால் உண்டிருக்கிறார்கள். அதேபோல், இன்றைக்கும் வடஇந்திய பிராமணப் பிரிவுகள் சிலவற்றில் மீன் மற்றும் ஆட்டுக்கறி உண்பது பழக்கத்தில் உள்ளது. அதையெல்லாம் மூடிமறைத்து, சைவ உணவுப் பழக்கத்துக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திருப்ப முனைவது வீண் செயல். ‘சர்வதேச சைவர்கள் காங்கிரஸ்’ கூட்டங்களில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட பிரமுகர்களைப் பேசச் சொல்வதும் அது மட்டுமே உலகத்தின் மிகச் சிறந்த நெறிமுறை என்று பிரச்சாரம் செய்வதும் பலரது மனதையும் புண்படுத்தும். வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மிருகங்களைப் பலியிடுவதைத் தடைசெய்யச் சட்டம் இயற்றிய தமிழக அரசு, மக்களின் கோபக் கனலைக் கண்டு விரைவிலேயே அந்தச் சட்டத்தை ரத்துசெய்ததை இங்கு நினைவுகூரலாம்.

உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களைத் தனிமைப்படுத்துவதும், அந்தப் பழக்கங்களைக் கேலிசெய்வதும் விரும்பத் தக்க செயல் அல்ல. இன்றைக்குச் செய்திப் பத்திரிகைகளில் ‘வாடகைக்கு வீடு’பற்றி வரும் வரி விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும். நகர வீட்டு உரிமையாளர் பலர் தங்கள் வீட்டில் குடியிருக்க வருவோர் சைவமாக இருக்க வேண்டும் என்ற விளம்பரங்கள்தான் பெரும்பான்மையானவை. உணவுப் பழக்கத்தை வைத்து பிராமணர் அல்லாதவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களைத் தவிர்க்கவே இத்தகைய புத்திசாலித்தனமான ஏற்பாடு. அசைவர்கள் வாடகை வீடு பிடிக்க எங்கு செல்வார்கள்? என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறுவதில்லை. அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், நிறுவனங்களின் குடியிருப்புகள் போன்றவற்றில் குடியிருப்போருக்கு இடையே இந்தப் பிரச்சினைகள் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைவ நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் மதுரை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி விடுதிகளில் அசைவ உணவு கிடைப்பதில்லை என்று அங்குள்ள வக்கீல்கள், வழக்கறிஞர் ரத்தினத்தின் தலைமையில் போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்களது கோரிக்கைக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை எதிர்த்து வளாகத்தில் உள்ள விடுதியில் ஒரு நாள் அவர்களே அசைவ உணவை விநியோகிக்க முற்பட்டனர். ஈத் பண்டிகை அன்று ஒட்டகங்களை வெட்டக் கூடாதென்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஒட்டகங்கள் மிருகங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராததோடு மட்டுமல்லாமல், மதச்சார்பான பண்டிகைகளின்போது வெட்டப்படும் மிருகங்களுக்கு அந்தச் சட்டத்தில் விதிவிலக்கு உண்டென்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தது. சிறைக் கைதிகளை எல்லாம் அரசு சைவபட்சியாக மாற்றிவிடாமல் இருக்கவும், அந்தக் கைதிகளுக்கும் புரதச் சத்து தேவை என்பதாலும் தமிழகச் சிறைகளிலும் வாரம் ஒருமுறை அசைவ உணவு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவை ஏற்று சிறைக் கைதிகளுக்கும் இப்போது அசைவ உணவு வழங்கப்படுவது பாராட்டத் தக்க செயல்.

மத உணர்வும் கறிக் கடைகளும்

சமண மதத்தினரின் ‘பர்யூஷான்’ விரதத்தின்போது 18 நாட்கள் கறிக் கடைகளை மூடச் சொல்லி அகமதாபாத் நகராட்சி போட்ட உத்தரவை எதிர்த்து, கறிக் கடைக்காரர்கள் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் 2008-ல் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பில் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கறிக் கடைகளை மூடும்படியான உத்தரவு ஒரு சிறுபான்மை மதத்தினரைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக என்பதால், அதில் தவறில்லை என்றும் அதே சமயம், ஆண்டு முழுவதும் மக்கள் எவ்வித உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் நிர்ப்பந்திக்க முடியாது என்றும், அது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டதென்றும் கூறப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட கறிக் கடைகளில் மாமிசம் வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள், அதற்காகத் தொலைதூரங்களுக்குச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டது.

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீனும் கோழியும் விற்பனைசெய்த கடைகளை மூடிவிட்டு, பேரூராட்சிக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு போட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சாதாரண முட்டை வாங்குவதற்குக்கூட ஊருக்கு வெளியில் போக வேண்டும் என்று வற்புறுத்துவது தவறென்றும், அது பொருட்களின் விலையை உயர்த்தவே தூண்டுமென்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஈரோடு மாவட்டத்தில், கவுந்தம்பாடி வாரச் சந்தையில் மாட்டுக்கறி விற்ற அருந்ததியர் குடும்பத்திடம், கடையை மூடச்சொன்ன ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடைசெய்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததோடு மட்டுமல்லாமல், உணவுப் பழக்கங்களில் அரசின் தலையீட்டைக் கண்டித்தது.

வேறு மாநிலங்களிலிருந்து சுகாதாரக் கேடான மாமிசங்கள் நகராட்சிப் பகுதிக்குள் வருவதை, சுகாதாரத் துறை தடைசெய்வதுடன், உள்ளூரில் உள்ள ஆட்டுத்தொட்டியை நவீனப்படுத்தி, உடல்நலக் கேடு விளைவிக்காத வகையில் நல்ல சுகாதாரமான மாமிசப் பொருட்களை வழங்கும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளும் மாநகராட்சிகளும் சட்டப்படி கடமைப்பட்டுள்ளன.

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி..!



கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.

அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.

இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது 110 கோடி குறைவு. மேலும் இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது “வாட்ஸ்அப்”, “டுவிட்டர்” மற்றும் “ஸ்நாப்ஷாட்” போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில் ”தங்களுடைய பெற்றோரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொள்வதால்.ஏனைய வலைதளங்களில் இதே போன்ற கணக்குகளை துவக்கி தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

‘எனக்கான இடம் காத்திருக்கிறது’ - விதார்த் நம்பிக்கை



 புதிதாக வரும் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் விதார்த். ‘மைனா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அனைவரது பாராட்டையும் பெற்றவர், தற்போது வீரம் படத்தில் அஜித் ‘தல’ ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறார். “சினிமாவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் தவறிப் போகாது” என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் விதார்த்தை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘மைனா' பார்ட் 2-ல நடிச்சுட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்?
‘மைனா’ பார்ட் 2-ல்லாம் கிடையாது. ‘மைனா ‘ மாதிரி ஒரு கதையில நடிச்சிட்டிருக்கேன், அவ்வளவுதான். இன்னைக்குத்தான் ஷுட்டிங் தொடங்குச்சு. ‘காடு’ன்னு படத்துக்கு பெயர் வச்சிருக் கோம். ‘மைனா’ படத்துல என்னோட நடிச்ச தம்பி ராமையா கூட திரும்பவும் நடிக்கிறேன். ஸ்டாலின் ராமலிங்கம் தான் இயக்குநர். அவரோட வாழ்க்கையை சினிமாவா எடுக்கிறார். ‘மைனா’ மாதிரியே காட்டுக்குள்ளே நடக்குற காதல் கதை தான். இந்தப் படத்துல சமூகத்திற்கான ஒரு விஷயத்தையும் பதிவு பண்றோம்.

ரெண்டு வருஷத்திற்கு முன்னாடியே இந்தப் படத்தோட கதை தெரியும். கடைசியா பார்த்தப்போ, இந்த படத்தோட முழுக்கதையையும் ஸ்டோரி போர்டு பண்ணிட்டார். அதுக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் எல்லாத்தையும் இப்படித்தான் எடுக்கப் போறேன்னு அனிமேஷன் பண்ணி எனக்கு லேப்டாப்புல போட்டு காண்பிச்சார். எனக்கு புதுசா இருந்தது. எல்லாரும் படம் முடிஞ்ச உடனே பண்ற வேலைகள் எல்லாத்தையும், இவரு படத்துக்கு முன்னாடி பண்றதைப் பார்த்து பிரமிச்சு போயிட்டேன். இப்போ ஷுட்டிங் தொடங்கியாச்சு. ‘வீரம்’ வெற்றிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தோட ஷுட்டிங்ல புது வருஷத்தை தொடங்கியிருக்கேன்.

வீரம் ஹிட் ஆன பிறகு அஜித் உங்ககிட்ட பேசினாரா?

பட ரிலீஸுக்கு முந்தின நாள்தான் சென்னைக்கு வந்தார் அஜித். பட ரிலீஸ் அன்னைக்கு காலைல 7 மணிக்கு எல்லாம் போன் பண்ணிட்டார். நியூ இயர், பொங்கல் வாழ்த்துகள் எல்லாம் சொல்லிட்டு, படம் பாத்திட்டீங்களான்னு கேட்டார். ‘இல்ல சார்.. ஷுட்டிங்ல இருக்கேன். நாளைக்கு தான் போறேன்’னு சொன்னேன். முதல் ஷோ பாத்தவங்க எல்லாம் நெட்ல நல்லாயி ருக்குன்னு எழுதினதைப் பார்த்து அவரு பயங்கர உற்சாகமாக பேசினார். எல்லாம் பேசிட்டு முடிச்சிட்டு, ‘நீங்க ஒரு தனி ஹீரோ. என்கூட சேர்ந்து நடிச்சதுக்கு ரொம்ப நன்றி’ அப்படினு சொன்னார். ‘சார்.. உங்களோட தீவிர ரசிகன் நான். உங்க கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்ததிற்கு நான் தான் நன்றி சொல்லணும்’னு சொன்னேன். போனை கட் பண்ணும் போது கூட, ‘படம் முடிஞ்சுருச்சுனு விட்றாதீங்க. அப்பப்போ போன் பண்ணுங்க. சென்னை வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வாங்க’ன்னு சொன்னார்.

நீங்க ஒரு ஹீரோ. ‘வீரம்’ படத்துல 4 தம்பிகள்ல ஒருத்தரா நடிக்க எப்படி சம்மதிச்சீங்க?
நான் அஜித்தோட தீவிர ரசிகன். இயக்குநர் சிவா என்கிட்ட கதை சொல் றேன்னு சொன்னப்போ கூட, ‘அஜித் கூட நடிக்கிறேன். போதும் கதை எல்லாம் வேண்டாம்’னு சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு அஜித்தை அவ்வளவு பிடிக்கும். ‘மைனா' படத்துக்கு பிறகு அவரை சந்திச்சு பேசணும்னு ஆசைப்பட்டேன். அவர்கூட நடிக்க வாய்ப்பு வரப்போ எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும்.

‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ படத்துல காமெடில பட்டைய கிளப்பியிருக்கீங்கனு இயக்குநர் சொல்லியிருக்காரே?

காமெடி படங்கள் பண்றது எனக்கு பிடிக்கும். ஏன்னா காமெடி எனக்கு நல்லா வரும். 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' படம் 100 சதவீதம் காமெடி படம்தான். நானும் சூரியும் சேர்ந்து செம காமெடி பண்ணியிருக்கோம். எனக்கு காமெடியும் வரும்னு நம்பிக்கையை கொடுத்த படம். கண்டிப்பா என்னை விட சூரிக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும்.

‘மைனா’ படத்தோட வெற்றிக்குப் பிறகு பெரியளவிற்கு உங்களோட படங்கள் ஹிட்டாகல. அதுக்கு என்ன காரணம்?

என்னை பொறுத்தவரை படங்களை சரியா கொண்டு போய் சேர்க்கலைன்னுதான் நினைக்கிறேன். ‘மைனா’க்கு பிறகு நான் நடிச்ச படங்கள் வந்ததே நிறைய பேருக்கு தெரியல.அதுமட்டுமல்லாம, ‘மைனா’ படத்துக்குப் பிறகு நிறைய பேர் அதே பாணியில் என்கிட்ட படங்கள் எதிர்பார்க்கு றாங்க. இது எனக்கு மட்டுமல்ல.. எல்லா ஹீரோக்களுக்கும் இதே மாதிரி நடக்குது. ஒரு படம் ஹிட்டாயிட்டா உடனே அதே சாயல்ல படம் பண்ணுங்கனு சொல்றாங்க.

என்னை பொறுத்தவரை ஒரு படம் நடிச்சா, ஒரு நடிகனா நல்லா பண்ணியிருக்கனா அதை மட்டும்தான் பாக்குறேன். 'மைனா' வெற்றிக்கு நிகரா ஒரு படம் கொடுக்கல அப்படிங்குறது உண்மை தான். அதை ‘ஆள்', 'காடு' படங்கள் கண்டிப்பா பூர்த்தி பண்ணும்.

படத்துல நடிக்க உங்க வீட்ல எதிர்ப்பு வந்திருக்குமே? எப்படி சமாளிச்சீங்க?

எங்க வீட்டுல எங்கப்பாதான் எல்லாமே. வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்த குடும்பம்தான். சிங்கப்பூர், மலேசியா, கனடால எல்லாம் எங்கப்பா வேலை பார்த்துதான் கொஞ்சம் மேலே வந்தோம். அதனால எங்கப்பா எப்போதுமே, எல்லாமே பசங்க விருப்பம்தான் அப்படினு விட்டுருவார். உனக்கு என்ன தோணுதோ பண்ணுனு சொல்லிடுவார். முதல்ல டிரைவராகப் போறேன்னு சொன்னேன். சரினு லைசன்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அப்புறமா.. நடிகனாக போறேன்னு கூத்துப் பட்டறைல சேர்ந்தேன். சரிப்பானு சொன்னார். குடும்பத்துல இருக்குறவங்கதான் நடிகன் எல்லாம் வேண்டாம் சொன்னாங்க. எங்கப்பா என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தார். நான் நடிகனாக ஆனதற்கு எங்க வீட்டுல இருந்து எதிர்ப்புனு எதுவுமே இல்ல.

இப்போ சினிமால உங்களோட வளர்ச்சியைப் பார்த்து உங்கப்பா என்ன சொல்றார்?

ரொம்ப சந்தோஷமாக இருக்கார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தை நான் நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு போனேன். எங்கப்பா படம் பாத்துட்டு தூங்காம காத்திருந்தார். நான் கதவை திறந்து உள்ளே போனதுமே, என்னை கட்டிப்பிடிச்சு “நல்லா பண்ணிருக்கடா... சூப்பர்.. பிரமாதம்.. இன்னும் பண்ணணும். விட்டுறதே..” அப்படினு சொல்லிட்டு தூங்க போயிட்டார். எங்கப்பா சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் அன்றைக்கு தூங்கவே இல்லை. அந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அது தான் எனக்கு உரம். கண்டிப்பா எனக்கான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

டயாபட்டிக்ஸ் பிரச்சினையை நொடிக்கு நொடி அறிய உதவும் கான்டெக்ட் லென்ஸ்.!



உலகத்தில் 19 பேரில் ஒருவருக்கு இருக்கும் இலுப்பு நீர் (டயாபட்டிக்ஸ்) பிரச்சினையை நொடிக்கு நொடி அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்..ரெடியாகியுள்லது..கூகுள் கண்ணாடிக்கு பிறகு கூகுள் ஒரு புரோட்டோ டைப் கான்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளது.

இதை கண்ணில் அணிந்தால் இதனுள் இருக்கும் அப்டிக்கள் சென்ஸார் மற்றூம் சர்க்யூட் மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு நிம்ட சர்க்கரை லெவல் மாற்றத்தை கண்டு கொள்ள முடியும்.


தற்போது நிறைய பேர் மருத்துவ பர்சோதனை செய்து கொள்வது இல்லை. இன்னும் பல பேர் ரத்தம் குத்தி சோதனை செய்ய தயக்கம். இன்னும் சில பேருக்கு ரத்த மாதிரி எடுக்கும் போது சரியாக இருக்கும் அப்புறம் வேலை காட்டும். அவர்கள் அடுத்த முறை எடுக்கும் போது டயாபாட்டிக்ஸ் அதிகரித்து இருக்கும்.

இன்னிலையில் இனிமேல் இதெல்லாம் இல்லாமல் லென்ஸை போட்டா தனக்கே தெரியும். இதில் எல் ஈ டி லைட் பொருத்தி சுகர் லெவலுக்கு ஏற்ற மாதிரி ஏற்ற லைட் எரியும்படி செய்ய போகிறார்கள். இனிப்பான செய்தி தானே.

காப்பகம்