Tuesday, January 14, 2014

விஜய் சேதுபதியின் '' வசந்தகுமாரன் '' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் ஃபர்ஸ்ட் லுக்..!


கோலிவுட்டின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் வசந்தகுமாரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ 9 தயாரித்துவரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். ஆனந்த்குமார் இப்படத்தினை இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயனண் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி திரைப்படம் ஜனவரி 24லிலும், பண்னையாரும் பத்மினியும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதியும் வெளியாகவுள்ளன.

விஜய் சேதுபதி தற்பொழுது ஆர்யா மற்றும் ஷ்யாமுடன் புறம்போக்குபடத்திலும், இடம் பொருள் ஏவல், வன்மம், மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார்.

சூர்யாவின் அஞ்சான்..!

சூர்யாவின் அஞ்சான்..!


சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

சிங்கம் -2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு மன்னார் அல்லது ராஜு பாய் என்று தலைப்பிடப்படலாம் என்று வதந்திகள் பரவிவந்தன. மேலும் இப்படத்தின் டைட்டிலை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது. முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுபோல இப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!




முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).

ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது விஜய் சம்பளத்தைவிட இரண்டு கோடி அதிகமாக ரூ 20 கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். இதை கேட்ட விஜய் முதலில் அதிர்ந்து போனாராம்.

பின்னர் இதையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருப்பது தான் நல்லது என அமைதியாக போய் விட்டாராம். ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் எம்.ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் அறிமுகமானார். அறிமுகப் படமே அட்டகாசமான வெற்றியைத் தந்ததால், அப்படத்திற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

சசிக்குமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது கதிர்வேலன் காதல். உதயநிதி ஸ்டாலினுக்கும் இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா உதயநிதியின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தினைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் ”காதலித்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்ககூடாது; இது பசங்களுக்கும் சரி, பொண்ணுங்களுக்கும் சரி நல்ல விசயம்தான்” என்று விளையாட்டாகத் தெரிவித்தார்.

இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது.

கணினியில் இருந்து கண்களைக் காக்க ..!

கணினியில் இருந்து கண்களைக் காக்க..!


கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.

3. மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4. கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்.   

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி..

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி..


கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாத மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒன்றாகவே இருக்கும். மாட மாளிகை, செல்வ செழிப்பு, என்று மானுட உலகில் சகல செல்வங்களும் பெற்றிருந்தாலும் மழலை செல்வம் இல்லாதவர்களின் வாழ்க்கை என்பது கானல் நீருக்கு சமமானதாகும்.

பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கையில் குழந்தை பேறை தள்ளி போடும் தம்பதிகளும் இன்றைய நவ நாகரீக உலகில் உள்ளனர். ஐ.டி. நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளில் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்ட லட்சியங்களை மனதில் கொண்டு கர்ப்பம் தரிப்பதை விரும்புவதில்லை.

பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது லட்சியங்கள் பூர்த்தியான பின்பே குழந்தையை பெற்றெடுக்க விரும்புகின்றனர். 27 வயதில் திருமணம் செய்த ஒரு பெண் தனது நிறுவனத்தில் பதவி உயர்வை பெற்றபின் 35, 37 வயதுக்குப்பின் கருத்தரிப்பது என்பது மருத்துவ உலகில் 100-க்கு 20 சதவீதம்தான் சாத்தியமாகும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கணிப்பாகும்.

27 வயதில் பெண்ணின் கரு முட்டையானது அதிக எண்ணிக்கையுடன் வீரிய மிக்கதாக இருக்கும். ஆனால் 35 வயதை கடந்த பெண்ணின் கரு முட்டை வளர்ச்சி என்பது குறைந்த எண்ணிக்கையில் வீரிய மற்று இருக்கும். இதனால் அவர்கள் கருவுரும் வாய்ப்பு 100-க்கு 20 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பேறை தள்ளி வைக்கும் பெண்களுக்கு வரப் பிரசாதமாக தற்போது கரு முட்டை சேமிப்பு வங்கி வந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரில் கரு முட்டை சேமிப்பு வங்கி உருவாக்கப்பட்டு உள்ளது.

கர்ப்பம் தரிப்பதை தள்ளி போடும் பெண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பெண்கள் ஆகியோரின் கரு முட்டைகள் இங்கு உறைய வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் இயக்குனர் டாக்டர் பம்மி எஸ்.ஆர். மூர்த்தி கூறும் போது, நான் இங்கிலாந்து நாட்டில் கருவியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளேன். 25 ஆண்டுகள் இந்த துறையில் பணிபுரிகிறேன்.







வெளிநாடுகளில் உள்ளது போன்று கருத்தரித்தல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறையை நமது நாட்டு மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் 2008-ம் ஆண்டு கரு முட்டை சேமிப்பு மையம் தொடங்கப்பட்டது.

கரு முட்டை சேமிப்பு, சோதனை குழாய் குழந்தை, கரு முட்டைகள் முழு வளர்ச்சி ஆய்வகம் வசதி எங்களிடம் உள்ளது. கரு முட்டை சேமிப்பு வங்கி என்பது தமிழ்நாட்டில் எங்களிடம் மட்டுமே உள்ளது. திருமணத்துக்கு பின் 4, 5 வருடத்துக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களின் கரு முட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்படும்.

மேலும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்கள், பெண்களின் கரு முட்டைகள் அல்லது சினை திசுவின் (ஓவரி) ஒரு சிறிய பகுதி சிகிச்சைக்கு முன்பாக எடுக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது. ரேடியேசன் சிகிச்சைக்கு பின் உடல் ஆரோக்கிய மடைந்த கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற விரும்பினால் உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் அவரது சினைத்திசுவில் (ஓவரி) வைக்கப்பட்டு கருத்தரிப்பு சிகிச்சை நடைபெறும்.

இது போல் 4, 5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு கரு முட்டை வங்கியில் சேமித்து வைத்துள்ள அவர்களது கரு முட்டை மூலம் கருத்தரிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படும். மேலும் வளர்ந்த கரு முட்டையில் உள்ள திசு பாய்மம் (சைட்டோபிளாசம்) வளர்ச்சியடையாத முட்டையில் செலுத்தி வீரிய மிக்கதாக மாற்றும் சிகிச்சை வசதியும் எங்களிடம் உள்ளது. இத்தகைய சிகிச்சை முறையில் 80 சதவீதம் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்புக்கு: 044-26610809, 25321767, 9841772853

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

 

இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.

 ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும். அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.

 * பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.

 * உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.

 * எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.

 * சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!
 

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான்.

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது.

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

உடல் எடையை குறைக்கும் பாதாம் சூப்....!




பாதாமைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவும்.
அதுமட்டுமின்றி இந்த சூப் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது அந்த பாதாம் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்...


தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/4 கப்

 வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்

 தண்ணீர் - 4 கப்

 பால் - 1 கப்

 உப்பு - தேவையான அளவு

 மிளகு தூள் - 1/8 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 குங்குமப்பூ - 1 சிட்டிகை


 செய்முறை:


முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ளதை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பொன்னறிமாக வறுக்க வேண்டும்.


பின்பு அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி, பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.


கலவையான நன்கு கொதித்ததும், அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து, உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே குங்குமப்பூவை தூவினால், சுவையான பாதாம் சூப் ரெடி

சிவகார்த்தி கேயனைவிட நான் மட்டமா என்ன..? – தயாரிப்பாளரிடம் சீறித்தள்ளிய ஜீவா..!



கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்..புகழடைய வேண்டும்..! என்பதே சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு லட்சியமாக இருக்கும்.

ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா நடிகரானதற்கு இவை எதுவுமே காரணமாக இல்லை போலிருக்கிறது.

அவரைப் பற்றி காதுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சொல்வதென்றால்…

முன்னணி கதாநாயகிகளை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே காமத்தினால்… ஸாரி…காரணத்தினால்தான் இவர் கதாநாயக நடிகரானாரோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இப்படி சொல்லுமளவுக்கு என்ன நடந்தது?

‘ஆசைஆசையாய்’ படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஜீவாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறது.

அவரிடம் கதை சொல்லப்போகும் இயக்குநர்களிடம், கதை என்ன, சம்பளம் என்ன என்ற கேள்விகளுக்கு முன் ஜீவா கேட்கும் ஒரே கேள்வி… ‘ஹீரோயின் யாரு?’ என்பதுதான்.

கதாநாயகி விஷயத்தில் அறிமுகநிலையிலேயே இப்படி அநியாயத்துக்கு ‘ஆர்வம்’ காட்டிய ஜீவா வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும்?

ராம், டிஷ்யூம், ஈ போன்ற படங்களில் நடித்த பிறகு தன்னை புக் பண்ண யார் வந்தாலும், ‘எனக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயினாக கமிட் பண்ணுங்க’ என்பதை ஓட்டை ரெக்கார்டு போல சொல்லிக் கொண்டே வந்தார்.

அப்போது அவரது மார்க்கெட் இருந்த லட்சணத்தில், ‘உன்னை வச்சு படம் எடுக்கிறதே பெரிய விஷயம்.. இதுல உனக்கு பெரிய ஹீரோயின் கேக்குதா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஜீவாவின் இந்த ஆசையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பிறகு, ‘த்ரிஷாவை கமிட் பண்ணுங்க’ என்று திரி கொளுத்த ஆரம்பித்தார்.

ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஜீவாவின் இந்த ஆசை அண்மையில்தான் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் நிறைவேறியது.

ஜீவாவின் கேரியரிலேயே ‘என்றென்றும் புன்னகை’ படம் சுமாரான வெற்றிப்படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. ப்ளாப் படங்களில் நடித்தபோதே த்ரிஷாவைக் கேட்டவர், சுமாரான வெற்றிப்படம் கொடுத்துவிட்டு சும்மா இருப்பாரா?

தற்போது அவரை அணுகும் இயக்குநர்களிடம் காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அமலாபால் ஆகியோரது பெயர்களைச் சொல்லி இவர்களில் ஒருத்தரை எனக்கு ஜோடியாக கமிட் பண்ணுங்கள் என்கிறாராம்.

‘நீங்க சொல்ற ஹீரோயின்ஸ் சம்பளம் எல்லாம் ஒரு கோடிக்கு மேல இருக்கு..நம்ம பட்ஜெட்டுக்குக் கட்டுப்படியாகாது’ – என்று ஒரு தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்டதும் ஜீவா டென்ஷனாகிவிட்டாராம்.

‘நேத்து வந்த சிவகார்த்திகேயன் எல்லாம் ஹன்சிகா, அமலாபால்னு போய்க்கிட்டு இருக்காங்க. நான் என்ன சிவகார்த்திகேயனைவிட மட்டமா?’ என்று எகிறியவர், ‘அப்ப ஒண்ணு பணணுங்க..சில வருஷம் வெயிட் பண்ணுங்க. நான் இன்னும் பெரிய ஹீரோவா ஆனப்புறம் வாங்க. அப்ப கால்ஷீட் தர்றேன்.’ என்று கடுப்படித்துவிட்டு போனை கட் பண்ணிவிட்டாராம் ஜீவா.

நடிகைகங்களை கட்டிப்புடிக்கிறதுக்காக இப்படியா கண்ணு மண்ணு தெரியாம நடந்துக்கிறது?

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!


பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.

 * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.

 * மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

 * ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

 * குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

வீட்டில் செய்யக்கூடிய சிக்ஸ் பேக் பயிற்சி முறைகள்..!



ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை பின்பற்றி தான், சிக்ஸ் பேக் பெறுவது நல்லது. ஜிம்முக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமோ, உங்கள் அடிவயிற்றை கடினமாகவும், திண்மையாகவும், கட்டுடனும் வைத்திருக்க முடியும். வயிற்றிற்கு செய்யப்படும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து, தினசரி சரிவர செய்வதன் மூலம், அபூர்வமான மற்றும் அருமையான சிக்ஸ் பேக்கை பெறலாம்.

 * நேராக படுத்து முழங்காலை மடித்து, கைகளை உங்களுக்கு பின்னால் நேராக நீட்டவேண்டும். பிறகு நீட்டிய கைகளை தலைக்கு மேல் தூக்க வேண்டும். இது பாரம்பரியமான உடற்பயிற்சி. அசைவு கொடுக்கும் போது, மெதுவாகவும், கட்டுப்பாட்டோடும் செய்ய வேண்டும்.

 * உங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி, 90 டிகிரி வளைந்து வரும் வரை கொண்டு வாருங்கள். பாதம் நேராக இருந்தாலும், சாய்வாக இருந்தாலும் பரவாயில்லை.

உங்கள் வயிற்று சுருக்கத்தின் மூலம் இடையை தரையில் வலுபடுத்தி, உங்கள் காலை மேல் நோக்கி நேராக தூக்கவும். பிறகு காலை இறக்கி அதன் பழைய இடத்தில் வைக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பாதம் தரையில் படாமல் இருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவுகிறது.

 * தரையில் பாயை விரித்து, பின்னால் சாய்ந்து உங்கள் கைகளை தலைக்கு மேல் நீட்டவும். பிறகு ஒரே நேரத்தில் உங்கள் கையையும், காலையும் உயரே தூக்க வேண்டும். உங்கள் கை விரல் நுனி, கால் விரல்களை தொடும் வரை செய்ய வேண்டும். பிறகு பழைய நிலைக்கு கொண்டுவந்து விடவும்.

 *  உங்கள் கைகளை உங்கள் தோள்பட்டையை சுற்றி 10 இன்ச் தூரத்தில் வைக்கவும். ஷூவில் உள்ள பாத நுனி, தரையில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் பின்பகுதியை நேராக வைத்துக் கொண்டு,இயல்பாக மூச்சு விட முயல வேண்டும்.

 *  மிருதுவான பரப்பளவில் படுத்து கொண்டு கால்களை(யோகா விரிப்பு) சைக்கிளில் செய்வதை போல பெடலிங்கை காற்றில் செய்ய வேண்டும். மாறுதலுக்கு உங்கள் கணுக்காலை நோக்கி உங்கள் தோள் பட்டையை உயர்த்தவும். இரண்டு பக்கமும் சரிசமமாக இதை செய்ய வேண்டும். இரண்டையும் 12 முறை செய்வது நல்லது.

 *  உட்காரும் நிலையில் வைத்து டம்பெல்ஸ் அல்லது மருத்துவ பந்தை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முழங்காலை மடக்கி, பாதங்களை தரையில் வைக்க வேண்டும். அடிவயிற்றை இறுக்கிக் கொண்டு, சிறிது பின்னால் சாய வேண்டும்.

முழங்கையை மடக்கி, எடையை உங்களுக்கு உட்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின், பக்கத்திற்கு பக்கம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு சுழற்சியின் போதும், அந்தந்த நிலையில் சிறிது நேரம் நிலைத்து இருக்க வேண்டும்.

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்



கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.

காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.

இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.

மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!

கமல்ஹாசனுடன் நடிகராகிறாரா லிங்குசாமி..?




விஷ்வரூபம் -2 படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு இயக்குனராக தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமி சமீபமாகப் பல படங்களைத் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற தனது அடையாளங்களைத் தாண்டி, கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் ஒரு நடிகராகவும் மாறுவார் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் உத்தமவில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தைத் தயாரித்து, இயக்கிவருகிறார். இப்படத்தின் தலைப்பு
விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

முஸ்லிம்கள் தொப்பி, பர்தா அணிந்து படமெடுத்தால் அடையாள அட்டை இல்லை...!



அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். (13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விஷயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2014ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை, இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.

எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!


இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!



இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:


 * இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

 * இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

 * இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.


இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய் முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:


இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:


தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது.

சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

  • தூய இரத்தம் – 35 நாட்கள்
  •  இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
  •  இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்
  •  பிளாஸ்மா – 1 வருடம்

 இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றனர். தமிழ் நாட்டில் நிறைய தன்னார்வ அமைப்புகள் உள்ளன அவற்றில் சத்யா சாய்(www.sathyasai.org) என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து தமிழ் நாட்டில் இரத்த தானத்தில் முதலிடம் வகித்தது ,ஆனால் தற்போது தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்(TNTJ - www.tntj.net) என்ற முஸ்லிம் அமைப்பு கடந்த ஏழு வருடங்காளாக முதலிடம் வகிக்கிறது , இந்த அமைப்பின் சாராம்சம் என்னவென்றால் நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியிலும் இருந்தாலும் சரி , இவர்களுடைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி எந்த சாதி மதம் இனம் பாராமல் எந்த பொருள் செலவையும் எதிர் பாராமல் ரத்த தானம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

சந்தானத்தை மிரட்டிய தாதா...?




தாதாவை நேரில் சந்தித்து ஷூட்டிங் பர்மிஷன் கேட்ட சந்தானத்துக்கு கண்டிஷன் போடப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் என காமெடி நடிகர்கள் ஹீரோக்களுக்கு நண்பர்களாக நடிக்கும்போது அவ்வப்போது தாதாக்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவதுபோல் காட்சிகள் வருவதுண்டு.

 அந்த அனுபவத்தை நிஜத்தில் பெற்றார் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் டைரக்டு செய்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங்கிற்காக கடப்பாவுக்கு பட குழு சென்றது. அப்பகுதியில் ஷூட்டிங் நடத்த வேண்டுமென்றால் உள்ளூர் தாதாவின் அனுமதி பெற்றால்தான் முடியும் என்று கூறிவிட்டனர்.

பிறகு சந்தானம் தானே அந்த ரிஸ்க்கை எடுப்பதாக கூறி தாதாவை அவரது வீட்டில் சந்தித்து அனுமதிகேட்டார். அவரிடம் தாதா, பர்மிஷன் தரணும்னா ஒரு கண்டிஷன் என்றார். என்னன்னு சொல்லுங்க என சந்தானமும் பயத்துடன் கேட்டார். ஷூட்டிங் முடிந்து பட குழுவினர் ஊர் திரும்புவதற்கு முன் என் வீட்டிற்கு எல்லோரும் வரவேண்டும்.

என்னுடன் அமர்ந்து சாப்பிட்ட பிறகுதான் செல்ல வேண்டும் என்று காமெடி பீஸ் பாணியில் தாதாபோட்ட கண்டிஷனை கேட்டு மனதுக்குள் சிரித்த சந்தானம்,எங்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் உங்களுக்காக வர்ரோம் என்று பிகுகாட்டிக்கொண்டு புறப்பட்டார். 

பொங்கல் பரிசுக்கு நன்றி...! நெகிழ்ந்த விஜய் ....!!!




விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படம் 10ம் தேதி ரிலீசானது. இப்படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது விஜய் பேசியதாவது:பொதுவாக நான் படத்தின் வெற்றி சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. என்றாலும், ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்காக இதில் கலந்துகொண்டேன்.

 என் நண்பர்கள் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு சென்று, அங்கு எடுத்த வீடியோ காட்சிகளை எனக்கு காட்டினார்கள். அதில் என் ரசிகர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதை பார்த்து நெகிழ்ந்தேன்.

படத்துக்கான நல்ல ஓப்பனிங்கும், வெற்றியும் அவர்கள் கொடுத்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்தான். அனைவருக்கும் என் நன்றி.

‘வீரம்’ படமும் நன்றாக இருப்பதாகவும், நன்றாக ஓடுவதாகவும் சொன்னார்கள். அஜீத், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளருக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு விஜய் பேசினார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் மஹத், சூரி, இசையமைப்பாளர் இமான் உடனிருந்தனர்.

மணிரத்னமா...? ஓடும் பைனான்சியர்கள் .....




கடல் படத்தையடுத்து புதிய படம் தொடங்க உள்ளார் மணிரத்னம். இதற்காக 3 ஸ்கிரிப்ட் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தற்போது அவை முடிவடையும் தருவாயில் உள்ளது.

தமிழ், மலையாளத்தில் இயக்கவுள்ள காதல் கதை அம்சம் கொண்ட படத் தில் மல்லுவுட் ஹீரோ பஹத் பாசில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதேபோல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்கிரிப்ட்டில் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.

3வது ஸ்கிரிப்ட்டை இந்தியில் இயக்க எண்ணி உள்ளார். சில வருடங்களுக்கு முன்பே மகேஷ் பாபு நடிக்க பொன்னியின் செல்வன் என்ற படத்தை மணிரத்னம் இயக்குவதாக இருந்தது. அப்போது பேட்டி அளித்த மகேஷ்பாபு,மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது எனது கனவு. அது நிஜமாகும் நேரம் வந்திருக்கிறது என்றார்.

பின்னர் அது கைவிடப்பட்டது. தற்போது இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இதன் ஷூட்டிங் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

மணிரத்னம் படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறாரா என்று கேட்டதற்கு அவரது மனைவி நர்மதா ஷிரோட்கர் கூறும்போது, ஆமாம். இது பற்றி இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என் றார்.

ஆனால் அடுத்தடுத்து தோல்வி படங்கள் தந்ததால் மணிரத்னம் படத்துக்குபைனான்ஸ் பிடிப்பதில் சிக்கல் இருக்கிறதாம். இதை போக்கவும் அவர் தரப்பில் முயற்சி நடக்கிறதாம் 

இருநூறு ப்ளஸ் கோடி...



இனி அந்த பருப்பு வேகாது. 2013ம் ஆண்டு அதை சுத்தமாக மாற்றிவிட்டது. யெஸ், இனி நூறு ப்ளஸ் கோடி வசூலை எந்தப் படம் கடந்தாலும் அது சுமாரான வெற்றிதான். எந்தப் படம் குறைந்தது 200 ப்ளஸ் கோடியை கடந்து கல்லாவை நிரப்புகிறதோ அதுவே சூப்பர் ஹிட் மூவி.

இதை ஆரம்பித்து வைத்தப் புண்ணியம் ஷாருக் கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை சாரும். இதை உறுதிப்படுத்திய பெருமை சென்ற ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3ஐ போய்ச் சேரும்.

நம்புங்கள் ஸ்வாமி, முதல் மூன்றே நாட்களில் தூம் 3 நூறு ப்ளஸ் கோடி ரூபாயை வசூலில் கடந்துவிட்டது. அதுவும் இந்தியத் தாய்த் திருநாட்டில் மட்டும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்றெல்லாம் நரம்பு புடைக்க சவுண்ட் விட்டது சினிமாவுக்கு பொருந்தாது போல.

ரைட், இப்படியாக சென்ற ஆண்டு குத்த வைத்து வசூலில் கும்மிய இந்தித் திரையுலகம் இந்த வருடம் எப்படியிருக்கும்? அதே ஜெகஜோதியாகத்தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். லேசாக கண்களுக்குத் தெரியும் கீற்றுகள் அந்த பிரகாசத்தைதான் மெய்ப்பிக்கின்றன.

சென்னை எக்ஸ்பிரஸ் கொடுத்த எனர்ஜியில் ஹேப்பி நியூ இயர் என களம் இறங்குகிறார் ஷாருக் கான். இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடி அதே தீபிகா படுகோன்தான். இயக்கியிருப்பவர் ஷாருக்கானின் ஆருயிர் தோழியும், இந்தியாவின் முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவருமான ஃபாரா கான். ஓம் சாந்தி ஓம் ப்ளாக் பஸ்டருக்கு பிறகு அதே கூட்டணி கைகோர்த்திருப்பதால் ஏரியா பரபரவென இருக்கிறது.

வழக்கமாக ரம்ஜான் பண்டிகை சல்மான் கானின் பட ரிலீஸ் இல்லாமல் பூர்த்தியாகாது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் நிலை. சல்மான் கானே நம்பிக்கை வைக்காத பாடிகாட் கூட ரசிகர்களின் வரவேற்பில் சக்கைப்போடு போட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செல்போனும் சிம்கார்டும் போல் இருந்த ரம்ஜானும் சல்மான் கானும் சென்ற ஆண்டு கா விட்டுக் கொண்டார்கள். சல்லு பாயின் படம் கடந்த ஈத்தில் வெளியாகவில்லை. இதை பிரஸ்டீஜ் இஷுவாக நினைப்பவர், 2014ல் வட்டியும் முதலுமாக அதை ஈடுகட்ட வருகிறார். தெலுங்கில் கிக் என பம்பர் ஹிட் ஆகி தமிழில் தில்லாலங்கடி என சூப்பர் ஹிட் ஆன படம், இப்போது சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலேயே தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டெலிவரியை ரம்ஜான் அன்றுதான் குறித்திருக்கிறார்கள். இதுபோக மென்டல் என்னும் படமும் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. வெளியாகும்போது இந்த டைட்டில் மாறலாம்.


இன்றைய தேதி வரையில் அதிக நூறு ப்ளஸ் கோடி வசூல் படங்களை இயக்கியிருப்பவர் என்ற பெருமைக்குரிய இயக்குநர் ரோஹித் ஷெட்டி, இந்த ஆண்டும் தன் பங்குக்கு ஓர் படத்தை சமூகம் முன் படைக்கப்போகிறார். அதுதான் சிங்ஹம் 2. சந்தேகமே வேண்டாம். தமிழ் சிங்கம் 2வின் ரீமேக்தான். முதல் பார்ட்டில் ஹீரோவாக நடித்த அஜய் தேவ்கன்தான் இதிலும் நாயகன்.

போலவே ரவுடி ராத்தோர் படத்துக்கு பிறகு எந்த ப்ளாக் பஸ்டரையும் கொடுக்காத அக்ஷய் குமார், இந்த ஆண்டு சொல்லி அடிக்கும் கில்லியாக இரு படங்களுடன் களம் இறங்குகிறார். இரண்டுமே வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் ரீமேக்தான் என்பதால் நாம் காலரை உயர்த்திக் கொள்ளலாம். அதில் ஒன்று ரமணா ரீமேக். தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கும் இந்த நேரத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக ஒரு பேராசிரியர் தன் மாணவர்களை திரட்டி போராடியதை சரசரவென விவரிக்கும் இந்தப் படம் தோற்கவா செய்யும்? அதே போல் விஜய்யின் இமேஜை சர்வதேச அளவில் உயர்த்திய துப்பாக்கி படமும் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் தயாராகிறது. இயக்கம் அதே ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

இந்த நிமிடம் வரை ஆமிர் கானின் அடுத்தப் படம் எதுவென்று மீடியாவுக்கு தெரியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3 இன்னும் மூன்று மாதங்களுக்கு இண்டு இடுக்கெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். எனவே ரிலாக்ஸாக அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு செல்வார். ஒருவேளை அது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு
தொடக்கத்தில் வெளியாகலாம்.

பிறகு இருக்கவே இருக்கிறார் நம்ம பிரபுதேவா. இந்தி சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி மினிமம் கேரண்டி இயக்குநர். ஒருவகையில் 1980களில் தமிழ்ச் சினிமாவில் வீடு கட்டி அடித்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் எக்ஸ்டென்ஷனாக இவரை சொல்லலாம். தப்பில்லை. கடந்த ஆண்டு ராமய்யா வஸ்தாவய்யா, ஆர்... ராஜ்குமார் என இரு படங்களை கொடுத்தார். இரண்டுமே முறையே அறிமுக நாயகன், மூன்றாம் நிலை நாயகன் என்று அறியப்பட்டவர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக உயர்த்திய படங்கள். நூறு ப்ளஸ் கோடியை எல்லாம் வசூலிக்கவில்லைதான். ஆனால், பி, சி சென்டர்களை இரண்டுமே வாழ வைத்தது. தயாரிப்பாளர்களையும் காப்பாற்றியது. எனவே இவரும் தன் பங்குக்கு எதையாவது கொடுப்பார் என்று தீர்மானமாக நம்பலாம். அதிகபட்சம் நான்கு மாதங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யும் வித்தையை கற்றவர் அல்லவா இவர்?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஆண்டு தொடக்கத்தில் ஷோலே படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதுவும் 3டியில். இந்திய திரையுலக வரலாற்றிலேயே குறைந்தது 15 வெளிநாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரு படத்தை உருவாக்கலாம் என்பதை நிரூபித்த முதல் படமும் இதுதான். பரந்த அளவில் மெகா ஹிட் அடித்த மெகா பட்ஜெட் படமும் இதுவேதான். அப்படிப்பட்ட லேண்ட் மார்க் படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மறு வெளியீடு காண்பது ஒருவகையில் எதிர்கால இந்தி சினிமாவின் போக்கை கட்டியங்கூறும் விஷயம்தான்.

இந்த ஆண்டும் இருநூறு ப்ளஸ் கோடி ரூபாயை அனைத்துப் படங்களும் வசூலிக்க வாழ்த்துகள்.

ரசிகர்கள் கொடுத்த வெற்றி - விஜய் நெகிழ்ச்சி



 விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படம் 10ம் தேதி ரிலீசானது. இப்படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது விஜய் பேசியதாவது:பொதுவாக நான் படத்தின் வெற்றி சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. என்றாலும், ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்காக இதில் கலந்துகொண்டேன். என் நண்பர்கள் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு சென்று, அங்கு எடுத்த வீடியோ காட்சிகளை எனக்கு காட்டினார்கள்.

 அதில் என் ரசிகர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதை பார்த்து நெகிழ்ந்தேன்.

படத்துக்கான நல்ல ஓப்பனிங்கும், வெற்றியும் அவர்கள் கொடுத்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்தான்.

அனைவருக்கும் என் நன்றி.‘வீரம்’ படமும் நன்றாக இருப்பதாகவும், நன்றாக ஓடுவதாகவும் சொன்னார்கள். அஜீத், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளருக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு விஜய் பேசினார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் மஹத், சூரி, இசையமைப்பாளர் இமான் உடனிருந்தனர்.

ஷங்கர் தான் இனிமேல் இந்தியாவின் எதிர்கால அரசியல்..!



ஷங்கரின் கணிப்பு நிரூபணமாகிவிட்டது என்று சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

பத்து வருடங்களுக்கு முன் வெளியான முதல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைவரும் இயக்குனர் ஷங்கரை பாராட்டினார்கள்.

ஆனால் சிலரோ இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் கிண்டலடிக்கவும் தவறவில்லை.

இந்தியிலும் கூட ‘நாயக்’ என்ற பெயரில் இந்தப்படத்தை ரீமேக் செய்தார் ஷங்கர்.

ஆனால் அந்தப்படம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிட்டு டெல்லியின் முதல்வராக பதவியேற்று இருப்பது கிட்டத்தட்ட ‘முதல்வன்’ படத்தின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் பலரும்.

இப்படி ஒருநாள் நடக்கும் என அப்போதே கணித்த ஷங்கரின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும் ஷங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.

ஷங்கரின் கணிப்பு நிரூபணமாகிவிட்டது என்று சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
பத்து வருடங்களுக்கு முன் வெளியான முதல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைவரும் இயக்குனர் ஷங்கரை பாராட்டினார்கள்.
ஆனால் சிலரோ இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் கிண்டலடிக்கவும் தவறவில்லை.
இந்தியிலும் கூட ‘நாயக்’ என்ற பெயரில் இந்தப்படத்தை ரீமேக் செய்தார் ஷங்கர்.
ஆனால் அந்தப்படம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிட்டு டெல்லியின் முதல்வராக பதவியேற்று இருப்பது கிட்டத்தட்ட ‘முதல்வன்’ படத்தின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் பலரும்.
இப்படி ஒருநாள் நடக்கும் என அப்போதே கணித்த ஷங்கரின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும் ஷங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20140113101195/#sthash.gi5Szebt.dpuf

அதுதான் நல்ல நட்பு ..! -



வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது .

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும் அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்..

தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி.பி., சுகர்..!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி..! சுகர்..!



காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே!

என்றும் பாகற்காய்! எதிலும் பாகற்காய்!...




நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக..? எச்சரிக்கை..!



நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?

நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது.

பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

‘ஜில்லா’வில் மாற்றம்..?


ஜில்லா படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட 10 நிமிட காட்சி குறைக்கப்பட்டுள்ளது.

இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான்.

நேற்று படம் பார்த்த பல ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளத்தை தற்போது 10 நிமிடம் குறைத்துள்ளனர்.

நீளம் குறைக்கப்பட்ட படம் இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது.

காப்பகம்