Friday, August 15, 2014

முதல் முத்தம்.. எப்படித் தரனும் தெரியுமா...?

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத்திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்லவா? முதல் முத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு காரணம் அது அந்த ஆண் அல்லது பெண்ணின் மீது கடைசி வரை அழியாத ஒரு முத்திரையை பதிக்கும். முதல் முத்தம் என்று வரும் போது முதலில் முன் வர பெண்கள் தான் பொதுவாக தயங்குவார்கள். அதே போல் பெண்களுக்கு தான் பயமும், நடுக்கமும் அதிகமாக இருக்கும்.

முதல் முத்தம் என்பது எப்போதும் மென்மையாக, மறக்க முடியாத, எல்லாவற்றையும் விட உணர்ச்சி ரசம் பொங்க இருக்க வேண்டும். உங்கள் காதலன் அல்லது காதலியை முதல் முறை முத்தமிடும் போது, வெறிகொண்ட நோக்கத்துடன் வலுக்கட்டாயமாக நடக்காதீர்கள். அமைதியாக, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை உங்கள் காதலன் அல்லது காதலி லேசாக யூக்கிக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு முதல் முத்தம் கொடுத்து ஆச்சரியப்படுத்த போகிறீர்களா? அப்படியானால் அதற்கான டிப்ஸை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? எனவே அதைத் தெரிந்து கொண்டு உங்கள் சேட்டைகளை தொடருங்கள்.

முதல் முத்தத்திற்கான டிப்ஸ்களை படித்து விட்டு, உங்கள் உறவின் மீது அதிக நாட்டத்தை உண்டாக்குங்கள். இதனை மென்மையான தருணமாக மாற்றுங்கள். உங்களுக்கும் சரி உங்கள் காதலன் அல்லது காதலிக்கும் சரி கஷ்டத்தை கொடுக்காதீர்கள். அது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதோ முதல் முத்தம் கொடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் முத்தத்திலேயே ஆண்கள் தங்களின் நாக்கை பெண்களின் வாய்க்குள் ஒட்டிக் கொண்டால் அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் முதல் முத்தம் கொடுக்கும் போது உங்கள் நாவின் சுவையை அவர்கள அறிய வேண்டாமே!

இது சற்று எரிச்சலை கூட ஏற்படுத்தும். முதல் முறை முத்தமிடும் போது உங்கள் காதலன் அல்லது காதலியின் வாயில் அதிகளவிலான எச்சிலை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்திய பழைய சாக்ஸ் போல உங்கள் சுவாசம் இருந்தால், யாருக்கு தான் உங்களுக்கு முத்தம் கொடுக்க பிடிக்கும். அதனால் முத்தமிடும் போது, உங்கள் சுவாசம் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முத்தத்தை நீண்ட நேரத்திற்கு வளர்க்காதீர்கள். முதல் முத்தம் எப்போதும் சிறிய மற்றும் இனிய முத்தமாக இருக்க வேண்டும். ரொமான்ஸ் விஷயத்தில் உங்களை நன்கு அறிய அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு அளியுங்களேன்.

முதல் முத்தம் கொடுக்கும் போது, கைகளை அங்கே இங்கே என அலைய விடாதீர்கள். முதல் முத்தம் கொடுக்கும் போது பலரும் செய்யும் தவறு இது தான். உங்கள் கைகளை அவர் கழுத்தில் அல்லது முகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பேருக்கும் சற்று இடைவெளி இருப்பதில் தவறில்லை. முதல் முத்தத்தின் போது, இருவரும் உடல் ரீதியாக மிகவும் நெருக்கத்துடன் இருக்க வேண்டாம். அது எதிர்மறையான பல எண்ணங்களை உண்டாக்கி விடும்.

கண்களை மூடிக்கொண்டால் அந்த தருணத்தின் உணர்ச்சியையும் வெப்பத்தையும் அனுபவிக்க முடியும். அதனால் கண்களை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சு விடுவது முதல் முத்தத்தின் டிப்ஸ் ஆகும்.

முதல் முத்தம் என வரும் போது, அதற்கான இடம் மிகவும் முக்கியம். உங்கள் இருவருக்கும் அந்த அதிசய தருணத்தை அனுபவிக்க அது ஒரு விசேஷ இடமாக அமைய வேண்டும்.

முதல் முறை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்களிடம் அனுமதி கேட்காதீர்கள். அது அபத்தமாக தோன்றும். மேலும் உங்களை நெளிய வைக்கும் நிலைக்கு தள்ளி விடும்.

முதல் முத்தத்தை திறந்த வாயுடன் நேரடியாக ஆரம்பித்து விடாதீர்கள். இரண்டு உதடுகளையும் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின் உணர்ச்சியுடன் வெப்பத்துடன் மென்மையாக முத்தம் கொடுங்கள். முதல் முத்தம் கொடுக்கையில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கிய டிப்ஸ் இது.

பவுடர் ஃபவுன்டேஷனை எப்படி உபயோகிக்க வேண்டும்..?

மேக்-கப் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் தான். மேக்-கப் போடாத, மேக்-கப் பிடிக்காத பெண்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம். அழகின் மீது கவனம் செலுத்தும் அனைத்து பெண்களும், மேக்-கப் போட அலாதி பிரியம் கொண்டிருப்பார்கள். இதில் சில ஆண்களும் அடக்கமே. அடிப்படையாக மேக்-கப் போட விரும்புபவர்கள் பவுடர், லிப்ஸ்டிக், கண் மை போன்றவைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் போதிய அளவு அழகை கொண்டு வர முடியாது.

அப்படி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால், மேம்பட்ட மேக்-கப் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இன்றைய சந்தையில் எண்ணிலடங்கா மேக்-கப் பொருட்கள் வகை வகையாக கிடைக்கிறது. பெண்களும் அவற்றை வாங்கி உபயோகித்து, தங்களின் அழகை மேம்படுத்துகிறார்கள். அப்படி ஒரு வகை மேக்-கப் சாதனம் தான், நாம் பார்க்கப் போகும் பவுடர் ஃபவுன்டேஷன். பவுடர் ஃபவுன்டேஷன் என்பது நாம் உபயோகப்படுத்தும் பவுடரை போன்றது தான். ஆனால் சற்று இறுகிய நிலையில், இன்னும் தரமுள்ள மேக்-கப் சாதனமாக விளங்குகிறது.

பவுடர் ஃபவுன்டேஷன் நான்கு வகைப்படும். க்ரீம்-பவுடர் ஃபவுன்டேஷன், லிக்விட்-பவுடர் ஃபவுன்டேஷன், மினரல் பவுடர் ஃபவுன்டேஷன் மற்றும் பிரஸ்ட் பவுடர் ஃபவுன்டேஷன் ஆகிவைகள் தான். இவை அனைத்துமே சாதாரண சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம் மற்றும் கலவையான சரும வகைகளில் நன்றாக செயல்படும். பல பெண்கள் அதை பயன்படுத்தினாலும், அதை முறையாக பயன்படுத்த பலருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு முறையாக பயன்படுத்தாமல் போனால், உரிய விளைவுகளை பெற முடியாதல்லவா? அதனால் இப்போது பவுடர் ஃபவுன்டேஷனை முறையாக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

முதலில் மிதமான க்ளின்சரைப் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அனைத்து அழுக்கையும், எண்ணெயையும் நீக்கும். பின் டோனரை பயன்படுத்தி சருமத்தை நிறம்பதப்படுத்துங்கள். ஏனெனில் கழுவி நிறம்பதப்படுத்தப்பட்ட முகத்தில் தான் ஃபவுன்டேஷன் செய்ய வேண்டும்.

பின்பு சரியான மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி சருமத்தை மேம்படுத்த வேண்டும். இதனால் மாய்ஸ்சுரைசர் சருமத்தை பாதுகாக்கும் அடுக்காக இருக்கும். அதனால் ஈரப்பதம் வெளியேறாமல் சருமத்திலேயே இருக்கும். மேலும் காய்ந்த திட்டுகள் ஏதும் இருந்தால் கூட, அவைகளையும் இது நீக்கிவிடும். முக்கியமாக அதனை சருமத்தின் மீது குறைந்தது 3 நிமிடங்களாவது ஊற விட வேண்டும்.

சருமத்தில் உள்ள எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும் சரி, கன்சீலரை பயன்படுத்தி அதை மறைத்திடவும். பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க, சற்று அடர்த்தியான கன்சீலர்களை பயன்படுத்தவும். அதிலும் பயன்படுத்தும் கன்சீலர்களானது சரும வகைக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். கன்சீலரை நேரடியாக பயன்படுத்தும் போது, மேக்-கப் போடும் சிறிய பிரஷை பயன்படுத்தி போட வேண்டும். அதற்கு பிறகு தான் ப்ளென்டிங் செய்ய வேண்டும்.

பவுடர் ஃபவுன்டேஷனை முழுமையாக செய்து முடிக்க, ஒரு மேக்-கப் ஸ்பாஞ்சை பயன்படுத்தி, பவுடர் ஃபவுன்டேஷனை தடவ வேண்டும். இதற்கு ஒரு ஃபவுன்டேஷன் ப்ரஷும் தேவைபடும். ஆனால் பவுடர் ஃபவுன்டேஷனை தடவிய பின் எக்காரணத்திற்காகவும் விரல்களை பயன்படுத்தக் கூடாது.

முதலில் ஸ்பாஞ்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஃபவுன்டேஷனில் வைத்து ஒத்தி எடுக்கவும். ஒத்திய ஸ்பாஞ்சை முகம் முழுவதும் தடவ வேண்டும். அதிலும் நெற்றி, மூக்கு மற்றும் நாடியிலும் தடவலாம்.

ஒருவேளை பிரஷ் பயன்படுத்துவதாக இருந்தால், பிரஷை பவுடர் ஃபவுன்டேஷனில் நன்றாக சுழற்ற வேண்டும். பின் பிரஷில் இருக்கும் அதிகப்படியான பவுடரை உதறி விட வேண்டும். பின்பு முகத்தின் மீது வட்ட வடிவ இயக்கத்தில் மெதுவாக தடவ வேண்டும். பிறகு ஆங்கில எழுத்து 'S'-ஐ போல், கீழ்நோக்கி ஃபவுன்டேஷனை தடவ வேண்டும்.

பவுடர் ஃபவுன்டேஷன் செய்யும் போது, கவனமான முறையில் கலவை இருக்க வேண்டும். பின் நெற்றியில் ஆரம்பித்து முகம் முழுவதும் தடவியிருக்க வேண்டும். ப்ளென்டிங் செய்யும் போதும் வட்ட வடிவில் இயக்க வேண்டும். முக்கியமாக தடங்களோ, கோடுகளோ தெரியாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தும் ஃபவுன்டேஷன், சருமத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக பவுடர் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் முகம் பார்ப்பதற்கு செயற்கையாக காட்சி அளிக்கும்.

கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள் இதோ...!

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி... இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். எவ்வளவு தான் சோப்பை வைத்து அழுத்தித் தேய்த்தாலும் அந்த இடம் இருட்டாகவே இருக்கும். உங்கள் கால் சருமத்தை சரியாகப் பராமரிப்பதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். இயற்கையான வழிகளிலும் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்க முடியும்.

இப்போது நம் தொடைகளை மினுமினுக்க வைக்க உதவும் அத்தகைய பொருட்களைப் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

கற்றாழைப் பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.

இப்போதைக்குத் தக்காளியின் விலையை நினைத்தால் கொஞ்சம் கிறுகிறுக்கத்தான் செய்யும். இருந்தாலும், நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.

சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.

தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.

இதில் உள்ள கேட்டிகோலாஸ் என்ற என்சைம் நம் தோலுக்குப் பளபளப்பைக் கொடுக்க வல்லது. ஒரு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து எடுத்து, அந்த ஜூஸை 'அந்த' தொடைப் பகுதிகளில் தடவி உலர விட வேண்டும். அப்போது தான் அந்த என்சைம் தன் வேலையைக் காட்டும். அதன் பலனாக நமக்கு அழகான வெண்மையான தொடைகள் கிடைக்கும்!

மஞ்சளுடன் ஆரஞ்சு ஜூஸைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி பேஸ்ட்டை நீக்க வேண்டும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி-யும் மஞ்சளும் சேர்ந்து தொடைப் பகுதிகளில் உள்ள கருப்பைப் போக்கி, அவற்றை மினுமினுக்கச் செய்யும்.

ஷேவிங் செய்யாமல் வேக்சிங் செய்வதற்கான காரணங்கள்..!

உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது ஒரு திறமையான வழிமுறையாக எப்பொழுதும் கருதப்படுவதில்லை. அது உங்களுடைய முடி எவ்வளவு வேகமாக வளருர்றது, என்பதைப் பொறுத்து நீங்கள் தினமும் ஷேவ் செய்யவோ அல்லது மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தவோ வேண்டியிருக்கும்.

ஆனால், உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு வேறொரு மாற்று வழி இருக்கிறது என்பது தான் ஆறுதலான விஷயம். பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு நபர்களுக்கும் ஷேவிங்கை விட வேக்சிங் (மெழுகு பயன்படுத்துதல்) தான் சிறந்த வழிமுறையாக உள்ளது.

ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது நடைமுறையில் உள்ள விஷயமாகும். இவற்றைப் பயன்படுத்தும் போது, உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. அதுவும் கழுத்து, கைகளுக்கு அடியில் மற்றும் இடுப்பு பகுதிய என பல்வேறு இடங்களில் இவ்வாறான வெட்டுக் காயங்கள் ஏற்படும். இப்படிப்பட்ட ஷேவிங் வழிமுறையைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு நீங்களே ஆபத்தை தேடிக் கொள்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், வேக்சிங் செய்யும் போது, இந்த ஆபத்துகளைப் பற்றிய எண்ணமே வராதல்லவா!


மெழுகுகளை பயன்படுத்துவதால், முடிகளை வேரிலிருந்தே நீக்கி விடுவதால், அவை மீண்டும் முளைத்து வளர நீண்ட நாட்களாகும். ஆனால், நீங்கள் தினமும் ஷேவிங் செய்தால் கூட, இரண்டு வாரங்களுக்குள் முடி அடர்த்தியாக வளர்ந்து விடுவதை தவிர்த்திட முடியாது. அதே போல, நீங்கள் தினமும் ஷேவிங் செய்தால் தோலில் ஏற்படக் கூடிய எரிச்சலும் கூட, மெழுகு வேக்சிங் செய்யும் போது வராது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


நீங்கள் நீண்ட காலத்திற்கு முடியை நீக்கும் வழிமுறையை பயன்படுத்தி வந்தால், மெழுகு பயன்படுத்திய இடங்களில் முடி திரும்ப வருவதை அரிதாகவே காண முடியும். ஆனால், இடத்தில் ஷேவிங் செய்யும் போது முடி தொடர்ந்து அடர்த்தியாக வளரத் துவங்கும். மேலும், வேக்சிங் செய்யப்பட்ட இடத்தில் இதற்கு நேரெதிரான விளைவாக, முடிகள் மெலிதாக வளரும்.

வேக்சிங் என்று வந்தாலே வலி என்ற வார்த்தை நினைவுக்கு வரும். சூடான மெழுகை உங்களுடைய தோலின் மேல் போட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் முடிகளை பிய்த்து எடுப்பதுதான் வேக்சிங் வழிமுறையாகும். இதை சொல்லும் போதே, இந்த செயலில் அங்கியுள்ள வலி தெரியும். ஆனால், மெழுகின் அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இப்போது மாய்ஸ்சுரைஸர்களை கொண்ட மெழுகுகள் விற்கப்படுகின்றன. முடியை நீக்கத் தொடங்கும் முன்னதாக இதை தடவிக் கொண்டால், அந்த பகுதிகள் மென்மையாக விடுகின்றன. எனவே, மாய்ஸ்சுரைஸர்களை மெழுகில் சேர்த்து தடவுவதன் மூலம் அந்த பகுதியிலுள்ள சருமம் மென்மையாகி விடுவதால், முடியை முழுமையாக வெளியே உருவி எடுத்து விட முடியும். இவ்வாறு முடிகளை நீக்கிய பின்னர், தோலில் செதில்கள் போல எதுவும் இருப்பதில்லை.

கைகளுக்கு வாகான இடங்களைத் தவிர, பிற இடங்களில் ஷேவிங் செய்வது சர்க்கஸ் செய்வது போன்ற கடினமான விஷயமாகும். யார் வேண்டுமானாலும், ஷேவ் செய்ய முடியும் என்றாலும், அதற்கு வாகான நிலையை அறிந்து ஷேவ் செய்வதென்பது பிரம்ம பிரயத்தனம் எடுக்க வேண்டிய நிலையாக இருக்கும். எனவே, இருக்கவே இருக்கிறது வேக்சிங்! பயன்படுத்தி பலனடையுங்கள்!

வேக்சிங் வழிமுறையைப் பயன்படுத்தி உங்களுடைய கால்களில் உள்ள முடிகளை நீக்க முயற்சி செய்யும் போது, உங்களுடைய தோலின் சருமத்திற்கும், நிணநீர் பைக்கும் இடையிலான பகுதியை முடிக்கால்கள் வழியாக நீங்கள் திறக்கிறீர்கள். இதனால் அவ்விடங்களில் வறண்ட சூழல் ஏற்படும். இந்த செயல்பாடு நடக்கும் போது திரவங்கள் ஒன்று சேருவதையும் நீங்கள் பார்க்க முடியும். இவற்றை ஒரு துணியில் துடைத்திடவும். இந்த பகுதி மீண்டும் மூடிக் கொள்ளும் வரையில், இவ்வாறு நீர் வந்து கொண்டிருக்கும். இந்த நச்சுத் தன்மை வாய்ந்த நீரை வேக்சிங் செய்யும் போது வெளியேற்றிட முடியும்.

உங்களுடைய தோல் மிகவும் சென்சிட்டிவ்வானது என்று நினைத்தால், ஷேவிங் செய்வதால் எண்ணற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனினும், வேக்சிங் முறையில் அலர்ஜிகள் வராமலிக்கக் கூடிய மெழுகுகளை வாங்கிப் பயன்படுத்திட முடியும் தீர்வு உள்ளது. சோயா அல்லது சர்க்கரையை அடிப்படையாக கொண்ட மெழுகுகளை பயன்படுத்துவதன் மூலம் எரிச்சல் வராமல் தவிர்க்க முடியும். மெழுகு தடவப்பட்ட துணிகளை பயன்படுத்துவதன் மூலம், சரியான அளவிற்கு மட்டுமே மெழுகை தடவிக் கொள்வதால் எரிச்சலை குறைத்திடவும் முடியும்.

வேக்சிங் செய்யாமல் நிறுத்துவதற்கு நீண்ட நாட்கள் ஆனாலும், அவற்றை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சி வேகத்தை குறைத்திட முடியும். வாக்ஸ் பயன்படுத்துவதை நிறுத்தும் நிலைக்கே நீங்கள் வராவிடினும் கூட, அவற்றை நெடுநாட்களுக்கு பயன்படுத்த அவசியமில்லாத நிலைகளை உங்களால் அடைந்திட முடியும். தங்களுடைய அழகை வேகமாக பராமரித்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும், இது ஒரு வரப்பிரசாதமாகும்.

நீங்கள் ஷேவிங் செய்யும் போது அடியில் உள்ள முடி, அதாவது உங்களுடைய தோலுக்கு அடியில் உள்ள முடிகளையும் கூட நீங்கள் வெட்டி விடுவீர்கள். இதன் மூலம் முடியின் முனை மழுங்கி விடவும், அந்த முடி சுருளாகவோ அல்லது பக்கவாட்டிலோ வளரத் துவங்கி விடும். இதனால் வலியை தரக்கூடிய தொற்றுகளும் கூட ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் கழுத்து மற்றும் பிகினி பகுதிகளில் ஏற்படும். ஆனால், முடியை வேரிலிருந்தே நீக்கி விடும் முறையாக வேக்சிங் உள்ளதால், வேக்சிங் செய்யும் போது இந்த பிரச்சனைகளை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை. புதிதாக வளர்ந்த முடியானது மெலிதாகவும் மற்றும் முனையில் சிறியதாகவும் இருக்கும். எனவே இதனை முடியின் மேல் பகுதியில் வைத்து பிடிப்பது சற்றே கடினமான காரியமாக இருக்கும். இந்த முடிகளை ஷேவிங் செய்வது சொல்ல முடியாத அனுபவமாகவே இருக்கும். எனவே, வேக்சிங் பயன்படுத்துங்கள், முழுமையான அழகைப் பெற்று பலனடையுங்கள்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைவிமர்சனம்

நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருடன் கதை விவாததத்திற்கு உதவியாக விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ் நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.

இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அகிலாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

அகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.


சந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்குகாக காத்துக்கொண்டிருக்கும் வேலையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.

பிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனரானாரா? அகிலாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

இயக்குனர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதானாமாக யோசித்து ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்து, அதில் கதையே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளை முடியும்போது இப்படத்தை பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், சமூக வளைய தளங்களில் கொடுக்கும் கமண்டுகளை மிக சாதுர்யமாக குழப்பி கமண்டு கொடுக்க முடியாதளவிற்கு தடுத்திருக்கிறார். இறுதிவரை இப்படத்தைப் பார்த்தப் பிறகுதான் கருத்தை சொல்ல முடியும் என்ற அளவிற்கு படத்தை இயக்கியிருக்கிறார்.

இன்றைய சினிமாவுலகில் ரசிகர்கள் எப்படி படம் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கதையே இல்லாத ஒரு திரைப்படம் என்று சொல்லி தனக்கே உள்ள வித்தியாசமான பாணியில் ரசிகர்கள் பார்க்கும்படி செய்திருப்பது இவருக்கே உரிய சிறப்பு.

தம்பிராமையா மட்டுமே பழகிய முகமாக வைத்து மற்ற அனைவரையும் புது முகங்களாக வைத்து அவர்களை பழகிய முகமாக தெரியும்படி செய்திருப்பது பார்த்திபனின் மேலும் ஒரு சிறப்பு.

நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோர் ஆகியோர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து புதுப்படம் என்று சொல்லமுடியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் ராம், தினேஷ், லல்லு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தம்பிராமையா ரசிகர்களுக்கு சோர்வடையவிடாமல் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். இளைஞர்களுடன் சேர்ந்துக் கொண்டு படம் முழுக்க இளைஞராகவே வலம் வருகிறார்.

இசையமைப்பாளர்கள் ஷரத், விஜய் ஆண்டனி, தமன், அல்ஃபோன்ஸ் ஜோசப் ஆகியோர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். ராஜ ரத்னம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மனித இனம் அழியப் போவது பூமியில் அல்ல..!: இப்படியும் ஒரு சினிமா..!

நவம்பர் மாதத்தில் வெளியாகப் போகும் ஒரு படத்துக்கு இப்போதே உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கிவிட்டது. 'அந்த' ஸ்டார் படமா?, அதுல அவ்வளவு நல்ல பாட்டு இருக்கா..?.. 2 'கீரோயினியா' (ஹீரோயின்), பரோட்டா சூரி இருக்காரா? என்று கேட்காதீர்கள்.

அழிந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து கிளம்பி அண்ட சராசரங்களை எல்லாம் கடந்து, அழுக்கில்லாத, ஒரு அழகிய பூமியைத் தேடும் படம் இது. படத்தின் பெயர் "இன்டர்ஸ்டெல்லார்".

"Mankind was born on Earth. It was never meant to die here''

இது தான் "இன்டர்ஸ்டெல்லார்" படத்தின் பஞ்ச் லைன்..!

கிறிஸ்டோபர் நோலன். பேட்மேனை மையமாக வைத்து டார்க் நைட் வரிசையில் 3 படங்களை இயக்கிய மெகா டைரக்டர். இவரது படங்களில் பேட்மேன் தான் ஹீரோ என்றாலும் அவர் 100 பேரை அடித்து துவம்சம் எல்லாம் செய்ய மாட்டார். வில்லன் கதாபாத்திரம் தான் பேட்மேனை விட பலம் வாய்ந்ததாக இருக்கும். மிரட்டலான பின்னணிக் காட்சிகள், பயமுறுத்தும் இசையுடன் உளவியல்ரீதியில் நம்மை பல கேள்விகளுக்கு உள்ளாக்கி, அடி மனதில் அச்சத்தை ஊட்டி திரைக் கதையை நகர்த்துவதில் அசகாய சூரர் நோலன்.

கனவுகளுக்குள் ஊடுருவி ஒருவரின் வாழ்க்கையை கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை மாற்றிப் போடும் கதையான இன்ஸப்ஷன் என்ற திரைப்படத்தைப் பார்த்தவர்கள் கிறிஸ்டோபர் நோலனை நன்றாக புரிந்து கொள்ள முடியும். லியானர்டோ டி காப்ரியோ நடித்த இந்தப் படத்தில் 3 அடுக்குகளாய் ஒருவரின் கனவுக்குள் புகுந்து (a dream within a dream within a dream) நிகழ்வுகள் வசப்படுத்தப்படும். இப்படி பிறரால் நுழைய முடியாத, யூகிக்க முடியாத தளத்தில் நின்று மெஸ்ஸி மாதிரி பந்தாடுபவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவர் தான் 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தை இயக்கியுள்ளார்.

மாத்யூ மெக்கொன்னாகி, ஆன்னி ஹேதவே, ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லன் பர்ஸ்டின், மைக்கேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தில்.

எதிர்காலம். சுற்றுச்சூழல் நாசமாகி, உலக நாடுகளின் பொருளாதாரங்கள் சீர்குலைந்து, பசியும் பட்டினியுமாக உலகம் அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் வாழும் இந்த 20ம் நூற்றாண்டு மனிதர்கள் தான் மிக முக்கிய காரணம். இந்த அழிந்து போன உலகிலிருந்து தொடங்குகிறது 'இன்டர்ஸ்டெல்லார்' பயணம். Interstellar என்பது 'இரு வேறு நட்சத்திரங்களுக்கு அல்லது உலகங்களுக்கு இடையிலான' என்று பொருள்.

Universe எனப்படும் நமது பேரண்டம் நம்மால் யூகிக்க முடியாத அளவுக்குப் பெரியதாய், விரிந்ததாய், விரிந்து கொண்டே இருப்பதாய் இருக்கிறது. இதில் தான் பல ட்ரில்லியன் நட்சத்திர மண்டலங்களும், சூரிய குடும்பங்களும், கிரகங்களும், தூசு மண்டலமும் பரவிக் கிடக்கின்றன. இதில் wormhole என்று ஒரு கொள்கையை சமீபகாலமாக முன் வைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது, இதற்கு சரியான அர்த்தத்தை நமது பாஷையில் சொன்னால், 'குறுக்கு சந்து' என்று பொருள் வரும். (துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து மாதிரி)

யுனிவர்ஸை ஒரு பேப்பராக நினைத்து விரித்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரின் ஒரு முனையில் ஒரு புள்ளியை வையுங்கள். இன்னொரு முனையில் இன்னொரு புள்ளியை வையுங்கள். இந்த தூரத்தை குறித்துக் கொள்ளுங்கள். இப்போது இரு புள்ளிகளும் ஒன்றின் மேல் ஒன்று வருவது போல பேப்பரை அப்படியே மடியுங்கள். இப்போது இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் பல மடங்கு குறைந்திருக்கும். இது தான் wormhole!. அண்டத்தின் மிகப் பரந்து விரிந்த தூரத்தை wormhole மூலம் துரிதமாய் கடக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அப்ப யுனிவர்ஸை மடக்க முடியுமா, வார்ம் ஹோல் இருக்கா என்று கேள்விகள் எழும். இவையெல்லாம் நானோ, கிறிஸ்டோபர் நோலனோ சொல்லும் கதை அல்ல. ஜெனரல் ரிலேட்டிவிட்டி தியரியைச் சொன்ன ஐன்ஸ்டீனும் அவருடன் இணைந்து ஹைட்ரஜன் அணு ஆராய்ச்சிகளைச் செய்த நேதன் ரோசனும் சொன்னவை. wormholeக்கு ஐன்ஸ்டீன்- ரோசன் பிரிட்ஜ் என்ற பெயரும் உண்டு. இவை வெறும் கற்பனையான் குறுக்கு சந்துகள் அல்ல, இயற்பியல் விதிகளின்படி இந்த சந்து சாத்தியமே என்கின்றனர் ஐன்ஸ்டீனும் ரோசனும்.

'இன்டர்ஸ்டெல்லார்' சினிமாவைப் பத்தி ஆரம்பித்துவிட்டு பிஸிக்ஸ் பாடம் நடத்துறியே என்று கோபமா?. வரும், தப்பில்லை. ஆனால், நாக்கையும் மூளையையும் 'நாக்குமுக்கா' போட வைக்கும் 'இஞ்சிமரபா' இயற்பியல் விஷயங்களை கொஞ்சம் புரிந்து கொண்டு இந்தப் படத்தைப் பார்த்தால் மேலும் ரசிக்க முடியும் என்பது நிச்சயம். இந்தப் படத்தின் கதை நாயகர்கள் wormhole மூலம் வேறோரு உலகைத் தேடி பயணிப்பதே 'இன்டர்ஸ்டெல்லார்' கதை.

சமீபத்தில் தான் இயக்குனர் அல்போன்ஸோ க்யூரோனின் கிராவிட்டி படம் வெளி வந்து, விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெளியே அல்லாடுவதை தத்ரூபமாகக் காட்டியிருந்தார். இதுவரை வந்த விண்வெளிப் படங்களிலேயே மிகச் சிறந்த, உண்மையிலேயே விண்வெளி எப்படி இருக்கும் என்பதைக் காட்டியவர் அல்போன்ஸோ க்யூரோன். கிராவிட்டி படத்தைப் பார்த்த உலக மக்களுக்கு அதைவிடச் சிறப்பான காட்சிகளுடன் படம் தந்தால் மட்டுமே கிறிஸ்டோபர் நோலனின் மானம் தப்பும். இது அவருக்குத் தெரியாதா.. இதனால் விண்வெளிக் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில் உலகம் வாழ லாயக்கில்லாத இடமாகிவிட, வேறு ஒரு உலகைத் தேடி கிளம்புகிறது நாஸா விஞ்ஞானிகள் குழு. இது ஏதோ விண்வெளி மையத்துக்கு போவது போல 2 நாள் வேலை அல்ல. நமது சூரிய மண்டலத்தை, புளுட்டோவை எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டிய பல வருடப் பயணம். வார்ம்ஹோலில் பயணித்து மனிதர்கள் வசிக்கக் கூடிய மாதிரி ஏதாவது கிரகம் இருக்கிறதா என்பதைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது இந்த விஞ்ஞானிகள் குழு. இதற்காக என்டூரன்ஸ் என்ற விண்கலத்தில் பயணிக்கின்றனர்... இவர்களது முயற்சி வெல்கிறதா... தேடலின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

கனடாவின் பனிப் பிரதேசமான அல்பெர்ட்டா மற்றும், லாஸ் ஏஞ்சலெஸ் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தியேட்டர்களில் வரும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நவம்பர் 5ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறதாம். நவம்பர் 6ம் தேதி இங்கிலாந்திலும், 7ம் தேதி அமெரிக்காவிலும் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் பார்ப்பவர்களை அந்தக் கதையுடனேயே முழு அளவில் கலக்க வைத்து, சம்பவங்களை நாம் நேரில் அனுபவிப்பது மாதிரி உணர வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் 

மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வந்த வெளிநாட்டு பெண்ணை நிர்வாணமாக்கி சில்மிஷம் செய்த ஊழியர்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வந்த வெளிநாட்டு பெண்ணை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி அவரிடம் சில்மிஷம் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் எம்.ஆர்.சி. நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு திருவான்மியூரில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம்பெண் கடந்த புதன்கிழமை வந்துள்ளார்.

சிகிச்சை பெற வந்த அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் எக்ஸ்ரே பிரிவுக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(37) அந்த பெண்ணிடம் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றால் தான் எக்ஸ்ரே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் பிறகு ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். அதன் பிறகு கார்த்திகேயன் எக்ஸ்ரே எடுக்கிறேன் என்ற பெயரில் அவரை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நேராக மைலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

எல்லோருக்கும் 40-45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29ல் நடந்துவிட்டது

எல்லோருக்கும் 40 முதல் 45 வயதில் நடக்க வேண்டியது தனக்கு 29 வயதில் நடந்துள்ளது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் இது நம்ம ஆளு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நயன், சிம்பு இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகக் கூட செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து சிம்பு கூறுகையில்,

ஒரு ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்க்ள் என்று செய்தி வெளியானால் அவர்கள் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். அத்தகைய எதிர்பார்ப்பு இது நம்ம ஆளு படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

எனக்கு ரஜினி மற்றும் அஜீத்தை மிகவும் பிடிக்கும். அதற்காக விஜய்யை வெறுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

தனுஷ் தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் எனக்கு போட்டி தான். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன்.

முதல் முறை கத்திகுத்து வாங்கினால் தான் வலிக்கும். அது போன்று இரண்டாவது முறை காதல் தோல்வி ஏற்பட்டதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்னுள் ஆன்மீக வழியில் சில மாற்றங்கள் நடந்துள்ளது. எல்லோருக்கும் 40 முதல் 45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29 வயதிலேயே நடந்திருக்கிறது.

நான் மக்களுக்காக பாடுபடுவேன். அதற்காக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் செய்யாது. பணம் இருந்தால் மக்கள் சேவை செய்யலாம். நானும் மக்கள் சேவையை துவங்கப் போகிறேன் என்றார் சிம்பு.

‘அஞ்சான்’ - திரைவிமர்சனம்

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரி இடத்தில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.

அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.

கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷ்னர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் மும்பையின் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அணுப்புகிறார்.

இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.

கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றதாக கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திரையில் காண்க....

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கலக்கலாக அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகலபடுத்தியிருக்கிறார். படத்தில் பேசும் பஞ்ச் வசனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் சமந்தா சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். சந்துருவாக வரும் வித்யூத் ஜாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரையும் சுற்றுலா அனுப்பும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. யுவன் பாடிய  ‘காதல் ஆசை...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. சூர்யா பாடிய  ‘ஏக் தோ தீன் சார்...’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல்களில் வரும் நடனக் காட்சிகள் நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் தெரிகிறது.

மும்பை நகரத்தின் இரவு காட்சியை சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏதும் வைக்கவில்லை இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை மையமாக வைத்து லிங்குசாமி கதையில் வைத்திருக்கும் திருப்புமுனை இயக்குனரின் சாமார்த்தியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாயகியின் பெயரில் கூட திருப்புமுனை வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அஞ்சான்’ சூப்பர்..!

புரதம் - இதன் முக்கியத்துவமும், புரதத்தின் செயல்பாடுகளும்..!

புரதம் - இதன் முக்கியத்துவம்:-புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

புரதத்தின் செயல்பாடுகள்:- புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு

இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன.

பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

உணவுப் பொருட்கள் சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள
புரதத்தின் அளவு (கிராம் / 100 கிராம் /)

சோயாபீன்ஸ் 43.2

கொண்டைக்கடலை,
உளுந்து, பச்சை பயறு 22
மற்றும் துவரை

நிலக்கடலை, முந்திரி 23
மறறும் பாதாம் பருப்பு

மீன் 20

இறைச்சி 22

பசும்பால் 3.2

முட்டை (ஒரு முட்டையில்) 13.3

வாய் புண் அறிகுறிகளும் மற்றும் அதனை தவிர்க்கும் முறைகளும்...!

வாய்புண் என்பது வாய், உள் உதடு, கன்னத்தின் உட்பக்கங்களில் ஏற்படுவது. உணவு உண்ணும் போதும், ஏதாவது குடிக்கும் போதும், பல்தேய்க்கும் போதும் இது அதிக வலியினை ஏற்படுத்தும். ஐந்தில் ஒருவருக்கு அடிக்கடி வாய்புண் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வாய் புண்ணின் பிரிவு வகைகள்…

சிறிய புண் : 2-6 மில்லிமீட்டர் வரை இருக்கும். இரு வாரங்களுக்குள் தானே ஆறிவிடும்.

பெரிய புண்: அகலமாகவும், ஆழமாகவும் இருக்கும். ஆறுவதற்கு பல வாரங்கள், மாதங்கள் ஆகும்.

குண்டூசி முனை போன்ற ஹெர்பஸ் வகை சிறு சிறு புண்கள்.

அதிக வேலை பளு, சரியான தூக்கமின்மை, மன உளைச்சல், உணவு போன்றவையும், பொய்பல் சரியாக இல்லாததும் வாய் புண் ஏற்பட பொதுவான காரணங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

இரும்பு சத்து குறைவு வைட்டமின் பி12 குறைவு மற்றும் உணவுப் பாதை குடல் நோய்கள் போன்றவையும் வாய் புண்ணுக்குக் காரணமாகும். புகை பழக்கத்தை விடும் போது முதலில் சற்று அதிகமான வாய் புண் ஏற்படும். ஆனால் அது எளிதில் மறைந்து விடும். சில மருந்துகளாலும் வாய் புண் ஏற்படலாம்.

வாய் புண் அறிகுறிகள்:-உதடுகளின் உள்ளே, நாக்கு, வாயின் உள்ளே மேல் பக்கம், உள் கன்னங்களில் வலியுடன் கூடிய புண் தோன்றும். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்துடன் வட்டமாக சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் ஜுரத்துடன் நெறி கட்டி இருக்கும். இதன் தீவிரத்தினைப் பொறுத்து உங்கள் மருத்துவரோ, பல் டாக்டரோ சிகிச்சை அளிப்பார்.

வாய்புண் தவிர்க்கும் முறைகள்:-

சர்க்கரை பாகில் ஊறிய, காரம், எண்ணையில் மிதக்கும் ஆசிட் தன்மை மிக்க உணவுகளை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

வாயில் `சூயிங்கம்’ மெல்லுவதை நிறுத்துங்கள்.

புகையிலை, புகை பிடித்தல் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.

அதிக காபி, டீ வேண்டாம். புண் சற்று பெரிதாய் இருப்பின் மருத்துவ சிகிச்சை அவசியம்.

இவைகளை பின்பற்றினால் தொப்பையை விரட்டலாம்..!

உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது ஆண்களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதில் அக்கறை கொள்ளவேண்டும். எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்.

இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் எள்ளை அதிகம் சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை வேகவைத்து தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவையாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும் போதும் பயன்படுத்தலாம்சோம்பை அவித்து தண்ணீர் குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

தினமும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கவும். ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை குறைக்கும். வாழைத்தண்டு, அருகம்பூல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறையும்.

ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் - தெரியலனா இதைப்படிங்க..!

நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண் டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண் டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல்படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட் டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற் றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோ யால் அவதிபடுபவர் களுக்கு சிறந்த தீர் வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்தாவும் பயன்படு கிறது. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட் டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது.

கருப்பை பலவீனமாக இருந்தால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சினை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.

காப்பகம்