Wednesday, September 24, 2014

மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து சிகிச்சை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்த பெண் ராம் காலி பிரஜாபதி. பிரஜாபதியை கடந்த ஞாயிறு அன்று மாலை மின்சாரம் தாக்கியுள்ளது. அவர் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் அவரை மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். பெண்ணின் தலையை மட்டும் விட்டுவிட்டு பிற பகுதிகளை மண்ணுக்குள் புதைத்தனர். நேற்று காலை வரையிலும் பெண் மண்ணுக்குளே வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் அப்பகுதியை சேர்ந்த மீடியாக்களில் பரவியுள்ளது. ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி இந்த செய்தியை மீடியாவிற்கு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று பெண்ணை மின்சாரம் தாக்கியது. பின்னர் அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். செவ்வாய் கிழமை காலை அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மீடியாக்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசுக்கு பயந்து கிராம மக்கள் பெண்ணை மண்ணுக்குள் இருந்து எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை. நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று கூறியுள்ளா.ர்

ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது. என்று அவர் கூறியுள்ளார். இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment

காப்பகம்