Friday, August 8, 2014

"அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள்"

கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம்
தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இர ுப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?

அடிக்கடி சூடு பிடிக்குதா..? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க....!

காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன.

கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இந்த காய்கறிகள் பயனுள்ளவையகாவே உள்ளன. ஆனால், இது முழுமையான பலன் அளிப்பதில்லை. கோடைக்காலங்களில், அதுவும் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலை குளுமையாக வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அந்த நாட்களில், இது போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

அனைத்து வகையான பருவநிலைகளிலுமே உடல் சூடு அதிகரித்து விடுவது பலருக்கும் பிரச்சனையான விஷயம் தான். அதன் காரணமாக ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகள், அரிப்பு மற்றும் பிற தோல் வியாதிகள், மூலம் மற்றும் பிற செரிமானக் கோளறுகள் போன்றவை வரிசையாக அணிவகுத்து உடலின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொள்ளும் மனிதர்கள், உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இங்கே அது போன்று சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்

 இஞ்சி:- காரமான மற்றும் சூட்டை அதிகரிக்கும் காய்கறியாக இஞ்சி உள்ளது. இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. அதன் காரத்தன்மைதான் சூட்டை அதிகரிக்கும் குணத்தைக் கொடுக்கிறது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். ஆனால், சிறதளவு இஞ்சியை உடலில் சேர்த்துக் கொண்டால் அது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெருமளவு இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு அதிகரித்து கெட்டுவிடும

 மிளகாய்:- மிளகு குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் குணங்கள் நிறைய உள்ளன. உடலின் இரத்த ஓட்டத்தை தூண்டக் கூடிய குணமுடைய மிளகாயில், உடல் சூட்டை அதிகரிக்கும் குணம் உள்ளது. எனவே மிளகாய் சாப்பிடும் போது சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும், நமது வாயில் உள்ள தோல் பகுதியை எரிக்கும் தன்மையும் மிளகு, மிளகாயின் காரத்திற்கு உண்டு - உஷார்

 கேரட்:-'பக்ஸ் & ஃபன்னி' முயல் குட்டியின் பேவரைட் சாப்பாடான கேரட்டில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அளவற்ற வகையில் உள்ளது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அதன் உறுதியான வண்ணம் உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் மூலம் உடல் சூடும் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே, உஷ்ணத்தை அதிகரிக்கும் கேரட்டை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நலம்.

வெங்காயம்:- எந்தவொரு உணவிலும் காரத்தை கூட்ட உதவும் காய்கறியாக வெங்காயம் உள்ளதால் தான், பல்வேறு சுவை மிக்க உணவுகளின் தயாரிப்பிலும் வெங்காயத்திற்கு பங்கு உள்ளது. ஆனால் இந்த வெங்காயத்தை அதிகளவு உட்கொண்டால், அதன் மூலம் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை நாம் அறியும் போது, வெங்காயம் உரிக்காமலே நமக்கு கண்ணீர் வந்து விடும். உடல் சூட்டை அதிகரிக்கும் குணமுடைய வெங்காயத்தை எடுத்து, உங்கள் கையின் அக்குளில் வைத்தால் உடல் சூடு தானாக மேலேறத் துவங்கி, உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி விடும். எனவே, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் வெங்காயத்திற்கு சொல்லுங்கள் 'NO'.

பச்சை இலைக் காய்கறிகள்:- கீரைகள், பசலை கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்று படித்திருப்போம். அவற்றில் அதிக அளவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் இருப்பதால், அவை மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளன. ஆனால், அதே பச்சை இலைக் காய்கறிகளில் புரதங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, அவற்றை சாப்பிடும் போது உடலில் சேரும் புரதங்களால் பெருமளவு வெப்பம் உடலில் உருவாகும். எனவே, உடலுக்குள் சூடு ஏற்படும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், பச்சை இலைகள் உள்ள காய்கறிகளை தவிர்ப்பது நலம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:-மேலே படித்த காய்கறிகள் எல்லாம் உடல் சூட்டை கூட்டக் கூடியவை தான். ஆனால், சத்தான இந்த காய்கறிகளை அளவாக உட்கொள்ளும் போது உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. எனவே, காய்கறிகளை முழுமையாக தவிர்த்து விடாமல், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மனதில் கொண்டு, நமக்குத் தேவையான அளவில் மட்டும் சாப்பிடுவது நல்லது.

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்க....? - இதைப்படிங்க..!

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.

பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா
காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே “எஸ்….” என்றோ அல்லது “சக்சஸ்” என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா..? அப்ப இதை முதலில் படிங்க..!

சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலிஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.


வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட் களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

ஆள் பிடிப்பது குற்றம்:-
 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்க லாம். துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட் களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளி நாட்டுக் கம்பெனியானது பணியாளருக் க்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்கு மிடம், உணவு, மருத்துவம், போக்கு வரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவச மாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவி லேயே இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக வும் உத்தரவாதம் தரவேண்டும்.

வங்கி உத்தரவாதம்:- எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பா விதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளி நாட்டுக் கம்பெனியிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு இங்கி ருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப் பீட்டை வழங்கிவிடும்.

போலிகளை தண்டிக்க முடியும்:-
“நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலை களுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக் கடை போட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்ற வைகள் எல்லாமே போலிகள் தான். போலிகள் மீது நட வடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களி டம் அதற்கான மேன் பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கி றது. இதற்கு ஒரே வழி மக்கள் விழிப்புடன் இருப்பது தான்’’ என்கிறார்கள்.

இண்டர்வியூ போகும் போது இப்படிதான் இருக்கணும்..!

பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம் எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும், நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆனால் அதுபோன்ற கேள்விக்கு, "என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றும், கமிட்டி உறுப்பினர்கள்தான், நேர்முகத் தேர்வில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பதிலை கட்டாயம் சொல்லக்கூடாது.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, முடிந்தளவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், அதுபோன்ற நேரங்களில் தரப்படும் வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை கேட்டு அவர்களை ஆச்சர்யப்பட வைக்க முடியும். இதனால் உங்களின் முக்கிய சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

நிறுவனத்தின் நடப்பு புராஜெக்ட்டுகள், எதிர்கால திட்டங்கள், நீங்கள் பணியமர்த்தப்படக்கூடிய இடம் மற்றும் பணியில் சேர வேண்டிய தேதி(தேர்வு செய்யப்பட்டால்) போன்றவை கேட்கப்படக்கூடிய சில முக்கிய கேள்விகள்.

மன அழுத்த சூழல்கள்

நேர்முகத் தேர்வின்போது, பல தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், கலந்துகொள்ளும் நபரிடம் மனஅழுத்தத்தை உண்டாக்க முயல்வார்கள். இதன்மூலம் அவர் எவ்வாறு react செய்கிறார் என்பதை அறிந்துகொள்வது அவர்களின் நோக்கம்.

ஏனெனில், ஒரு நிறுவனப் பணி என்பது, ரோஜா மெத்தையில் படுத்திருப்பது போன்றதோ அல்லது தென்றலில் இளைப்பாறுவது போன்றதோ அல்ல. அதிக சவால்களும், நெருக்கடிகளும், இக்கட்டான சூழல்களும் நிறைந்தது. இதற்கேற்ப ஒரு பணியாளர் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்.

எனவே, உங்களிடமிருந்து சரியான reaction வருகிறதா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். வருங்காலத்தில், பணியமர்த்தப்படக்கூடிய ஒருவரின் மனநிலையை சரியாக அறிந்துகொள்ளும் வகையில், Electro encephalograph போன்ற மருத்துவ உபகரணங்களை நிறுவனங்கள் பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதுபோன்ற சோதனையில், நீங்கள் வாயைத் திறந்து எதையும் பேசவில்லை என்றாலும்கூட, உங்களின் மாறும் முகபாவனைகள், உங்களின் உடல் மொழிகள் போன்றவற்றை ஆராய்ந்து அவர்கள் மனநிலையை கணித்து விடுவார்கள்.

ஒரே நேரத்தில்...


உங்களின் மனவலிமையை அறியும் சோதனையில், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஒருவர் பின் ஒருவராக உங்களிடம் கேள்விகளை கேட்காமல், ஒரேநேரத்தில், பலவிதமான கேள்விகளை அனைவரும் கேட்பார்கள்.

இதுபோன்ற சூழலில், நீங்கள் இப்படி சொல்லக்கூடாது, "இப்படி கேட்டால் நான் எதற்கு பதில் சொல்வது? என்னால் பதில் சொல்ல இயலாது. தயவுசெய்து ஒவ்வொன்றாக கேளுங்கள்" என்பதுதான் அது.

மேலும், முக்கிய அம்சம் என்னவென்றால், உங்களின் முக பாவனையை கடுமையாகவும், குழப்பமாகவும் மாற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. உடலில் கலவரம் இருக்கக்கூடாது. நீங்கள் ஏதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

ஏனெனில், நேர்முகத் தேர்வு என்பது போர்க்களமல்ல. உங்களை சோதிக்கும் ஒரு களம்தான் என்பது எப்போதுமே மனதில் இருத்தப்பட வேண்டும்.

மாறாக, நீங்கள் இவ்வாறு கூறவேண்டும், "நீங்கள் அனைவரும் கேட்ட கேள்விகளில், இந்த கேள்விக்கு முதலில் பதிலை சொல்கிறேன். பிறகு இந்த கேள்விக்கும், அதனையடுத்து, மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்" என்று எந்த பதட்டமும் இல்லாமல், மிருதுவாக கூற வேண்டும்.

இதைத்தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். நேர்முகத் தேர்வு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் எந்தவித எரிச்சலையோ, சலிப்பையோ அல்லது சோர்வையோ, எந்த வகையிலும் கட்டாயம் வெளிப்படுத்தவேக் கூடாது. அப்படி வெளிக்காட்டினால், அதுவே தகுதியிழப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

ஒரு முக்கிய தாரக மந்திரத்தை நினைவில் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நேர்முகத் தேர்வுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதற்கும்தான்.

"எப்போதும் உனது நிதானத்தை இழந்துவிடாதே" என்பதுதான்

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க சில குறிப்புகள்...!

இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை.

அத்தகைய சூழலில்தான் நமக்கு இயற்கை வழிப்படி அழகை மேம்படுத்தும் முறைகள் நினைவிற்கு வரும், உங்களுக்கு 100 சதவீதம் பலன் தரும் இந்த இயற்கை அழகு குறிப்புகளை உபயோகப்படுத்தி என்றென்றும் அழகாகவும், இளமையாகவும் இருங்கள்.

க‌ரு‌‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறைய…

முக‌த்‌தி‌ல் ஆ‌ங்கா‌ங்கே கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் தோ‌ன்‌றி முக‌த்தை அ‌சி‌ங்கமா‌க்கு‌கிறதா? எ‌ளிதான வ‌ழிக‌ளி‌ல் அவ‌ற்றை ‌நீ‌க்‌கி ‌விடலா‌ம்.

கொ‌த்‌தும‌ல்‌லி இலையை அரை‌த்து ‌விழுதா‌க்‌கி ஒரு நாளை‌க்கு 3 வேளை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறையு‌ம்.

அதே‌ப் போல 1 தே‌க்கர‌ண்டி கடலை எ‌ண்ணெயுட‌ன் 1 தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சாறை‌க் கல‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதனை முக‌த்‌தி‌ல் பூ‌சி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறைய‌த் துவ‌ங்கு‌ம்.

ஏதே ஒரு நா‌ள் செ‌ய்து‌ ‌வி‌ட்டு‌விடாம‌ல், கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் மறையு‌ம் வரை தொட‌ர்‌ந்து செ‌ய்வது ந‌ல்லது.

சரும பா‌தி‌ப்புகளை‌த் த‌வி‌ர்‌க்க…

‌நீ‌ங்க‌ள் கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் மாமர ‌இலைகளை‌ப் போ‌ட்டு கொ‌தி‌க்க ‌விடவு‌ம். அ‌ந்த ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கவு‌ம். இதுபோ‌ன்று மா இலைகளை‌ப் போ‌ட்டு‌க் கு‌ளி‌த்து வ‌ந்தா‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு சரும நோ‌ய்களை‌த் தடு‌க்கலா‌ம். ஏ‌ற்கனவே சரும பா‌தி‌ப்பு இரு‌ந்தாலு‌ம் ‌விரை‌வி‌ல் மற‌ை‌ந்து‌விடு‌ம்.

சரும பா‌தி‌ப்புகளை‌ப் போ‌க்குவ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு அ‌திக மு‌க்‌கிய‌த்துவ‌ம் உ‌ண்டு. ஒ‌வ்வொரு சரும பா‌தி‌ப்புகளை ‌போ‌க்க ஒ‌வ்வொரு வ‌ழி‌யி‌ல் பூ‌ண்டை‌ப் பய‌ன்படு‌த்து வே‌ண்டு‌ம்.

அதும‌ட்டும‌ல்லாம‌ல் பரு‌க்களு‌க்கு‌ம் பூ‌ண்டு ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. கா‌தி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் தொ‌ற்று‌க் ‌கிரு‌மி பா‌தி‌ப்புகளு‌‌க்கு பூ‌ண்டு எ‌ண்ணெ‌ய் ‌சிற‌ந்த மரு‌ந்தாக அமையு‌ம்.

இரண்டாவது குழந்தையின் வருகைக்கு தயாராவதற்கான டிப்ஸ்…!

குழந்தைச் செல்வம் தான் சிறந்த செல்வமாகும். ஒரு வீட்டின் அழகு அந்த வீட்டில் இருக்கும் மழலைச்செல்வங்களை பொருத்தே இருக்கும். குழந்தை இல்லாத வீடு வெறும் நான்கு சுவர்களால் செய்த அறைதான். வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மழலைப்பேச்சும் குறும்புகளும் நம்மை பெரிதும் மகிழ்ச்சியடைய செய்யும்.

நமது குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை என்றாலே மகிழ்ச்சிதான். நீங்கள் இன்னும் உங்கள் முதல் குழந்தையின் வரவு அளித்த மகிழ்ச்சியில் இருந்து மீண்டுவரவில்லை என்றாலும் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பது அறிந்தால் அது இன்னும் கூடுதல் சந்தோஷத்தை அளிக்கும். ஆம்! நீங்கள் ஏற்கனவே இந்த பாதையை கடந்து வந்ததால் கருவுறுவது உங்களுக்கு முதல்முறை இல்லை. எனினும், உங்கள் இரண்டாவது குழந்தையின் வருகையால் உங்களுக்கு சில கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றது.

ஒரு குழந்தையின் வருகைக்கு சில விரும்பத்தக்க முன்னேற்பாடுகளையும் தேர்வுகளையும் செய்வதற்கான தருணம் இதுதான். உங்கள் வீட்டில் எல்லாமே மாறுபடக்கூடிய தருணமும் இதுதான். உங்கள் முதல் குழந்தை தனது தங்கையைப் பற்றியோ, தம்பியைப் பற்றியோ கேட்கத் தொடங்குவாள். வீட்டில் இரண்டு குழந்தைகளை சமாளிப்பது மிகக்கடினமான வேலையாகத் தான் இருக்கும். எனினும், இரண்டாவது குழந்தை வரவிருக்கும் சமயத்தில் நாம் நல்லதையே நினைக்க வேண்டும்.

இரண்டாம் முறை கருவுற்றிருப்பது உங்களை சீக்கிரமே தளர்வடையச் செய்யும். ஏன்னெனில், நீங்கள் இந்த சமயத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்க நேரிடும். ஒன்று உங்கள் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுவது இரண்டாவது உங்கள் முதல் குழந்தை கவனித்து கொள்ளுவது. உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். பிரசவம் முடிந்த 6 முதல் 8 வாரங்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். ஏன்னெனில், அச்சமயம் உங்கள் கைக் குழந்தையையும் கவனிக்க வேண்டி இருக்கும். ஆகவே இரண்டாம் முறை கருவுற்றிருக்கும் வேளையில், பெற்றோர்களுக்கான சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம்.

மறுமுறை உபயோகித்தல்:-உங்கள் முதல் குழந்தையின் சில பொருட்களை குறிப்பாக அவர்களின் துணிமணிகள் போன்றவற்றை தனியாக எடுத்துவைத்து மறுமுறை உபயோகிக்கலாம். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வெளியில் எடுத்து செல்லும்போது அவர்களுக்குரிய ஆடைகளை அணிவிக்கலாம். வீட்டில் இருக்கும் போது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் முதல் குழந்தையின் ஆடைகளை அணிவிக்கலாம். இதேபோல், உங்கள் முதல் குழந்தையின் உபயோகப்படுத்தாத பாட்டில்கள் மற்றும் மற்ற பொருட்களையும் இந்த சமயத்தில் உபயோகிக்கலாம். இதுபோன்ற சிலவற்றை நீங்கள் இரண்டாம் குழந்தை கருவுற்றிருக்கும் போது செய்யலாம்.

சிறந்த சலுகைகள்:-உங்கள் கைக்குழந்தைக்கு தேவைப்படும் டயபர்களின் சிறந்த சலுகைகளை கவனித்து வர வேண்டும். உங்கள் கைகுழந்தைக்கான சைஸ் 1 டயபர்களை வாங்கி வைத்து குழந்தை பிறந்த பிறகு உபயோகப்படுத்தலாம். உங்கள் இரண்டாம் குழந்தை வருகைக்கு முன் செய்யும் முன்னேற்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

சீக்கிரம் தயாராகும் உணவுகள்:-இரண்டாவது முறை கருவுற்றிருக்கும் சமயத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் வீட்டில் சில பதபடுத்தப்பட்ட உணவுவகைகள், உறைந்த மற்றும் உலர்ந்த உணவுவகைகளை வாங்கி வையுங்கள். இதனால் இரண்டாவது குழந்தையின் வருகைக்கு பிறகு இவை உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட உதவும். இது எல்லா பெற்றோர்களும் பின்பற்ற வேண்டிய குழந்தை வளர்ப்பு டிப்ஸ்களில் ஒன்றாகும்.

பொம்மைகள் வைக்கும் பெட்டிகள்:-உங்கள் படுக்கை அறையில் பொம்மைகள் வைக்கும் பெட்டிகளை தயாராக வைத்திருங்கள். இது நீங்கள் உங்கள் கைக்குழந்தைக்கு பால் புகட்டும்போது உங்கள் முதல் குழந்தை விளையாடுவதற்கு உதவியாக இருக்கும். இரண்டாவது குழந்தையின் வருகையின்பொது பெற்றோர்கள் பின்பற்றவேண்டிய குழந்தைவளர்ப்பு டிப்ஸ்கள் சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைத்தல் நமது வேலை சுலபமாகிவிடும்.

சுத்தமாக வைக்க வேண்டும்:-உங்கள் குழந்தையின் வருகைக்கு முன் உங்கள் குழந்தையின் அறையை சுத்தப்படுத்துவது கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இது உங்கள் குழந்தையை கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிடம் இருந்து பாதுகாக்க உதவும். இது நீங்கள் இரண்டாவது குழந்தையின் வருகைக்கு முன் உடனே மற்றும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்றாகும்.

உறவினர்களை வீட்டிற்கு அழைத்தல்:-உங்கள் குடும்பத்தினர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களின் உதவியை பெறுங்கள். உங்கள் கருவுற்றிருக்கும் காலம் மற்றும் பிரசவ நேரங்களில் அவர்கள் உங்களுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இது உங்கள் முதல் குழந்தையை சமாளிப்பதற்கும் உங்களை பார்த்துக்கொள்ளவும் எளிமையாக இருக்கும்.

முதல் குழந்தையை தயார்படுத்துவது:-இது பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய குழந்தைவளர்ப்பு டிப்ஸ்களில் ஒன்றாகும். உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவளிடம் தனது தங்கை/தம்பி யின் வரவைப்பற்றி கூறி தயார்படுத்த வேண்டும். அதனை நினைத்து சந்தோஷப்பட வைக்க வேண்டும். அவளது தங்கை/தம்பி யோ அவளுக்கு சிறந்த நண்பனாக இருப்பான் என்று கூறுங்கள்.

காப்பகம்