Wednesday, September 24, 2014

பாலிவுட் வாய்ப்பை நானாக தேடிப் போக மாட்டேன் - சமந்தா..!

இந்திய சினிமாவில் எந்த மொழியில் நடித்தாலும், அவர்களின் அல்டிமேட் இலக்கு பாலிவுட்டாகத்தான் இருக்கும். இந்திப் படங்களின் மார்க்கெட், மவுசு, அங்கு புழங்கும் பணம் அப்படி. ஆனால் அங்கு காலூன்றுவது அத்தனை சுலபமில்லை. வலுவான சினிமா பின்னணி, பெரிய இயக்குநர்கள் ஆதரவெல்லாம் தேவை.

தென் இந்திய சினிமாவிலிருந்து அசின், இலியானா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன், தமன்னா உள்ளிட்டோர் இந்திக்குப் போனார்கள். இவர்களில் ஸ்ருதி மட்டும் உள்ளே வெளியே என்ற லெவலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கு பெரிய ப்ரேக் இதுவரை கிடைக்கவில்லை. அசினுக்கு முதல் படம் ஓடியதோடு சரி. தமன்னா நடித்தவை அடுத்தடுத்து ப்ளாப் லிஸ்டில் சேர்ந்துவிட்டன.

அடுத்து சமந்தாவும் பாலிவுட்டுக்கு போகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ரபாசா நல்ல வசூலைக் குவித்தது. எனவே சம்பளத்தையும் ஏற்றிவிட்டார். இந்த வெற்றி தந்த கையோடு பாலிவுட் போவார் சமந்தா என்று வந்த செய்திகளை அடியோடு மறுத்துள்ளார்.

எனக்கு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களே போதும். கைவசம் நல்ல படங்கள் உள்ளன. இந்திப் படம் வேண்டும் என்று நானாக தேடிப் போக மாட்டேன். ஒருவேளை அதுவாக அமைந்தால் பார்க்கலாம், என்றார்.

இப்போது தமிழில் கத்தி, பத்து எண்ணுறதுக்குள்ள, எண்ணி ஏழு நாள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

0 comments:

Post a Comment

காப்பகம்