Tuesday, June 4, 2013

சென்சார் டெஸ்ட் மூலம் சர்க்கரை நோய் மற்றும் ஹார்ட் பிரச்னைகளுக்கு சிகிச்சை!


4 - Health censor


இப்பொதெல்லாம்  தினம்தோறும் உருவாகும் புது வியாதிகள் மட்டுமின்றி பழைய வியாதிகளைக் குணப் படுத்த அல்ல்து கட்டுப் படுத்த புதிய வகை கருவிகளையும் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இரத்த அழுத்தத்தை அளவிடும் முறையில் கருவி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



தற்போது உபயோகத்தில் இருக்கும் கருவிக்கு மாற்று கருவியாக இதை கண்டறிந்துள்ளனர். கடிகாரம் போன்ற இக்கருவியில் உள்ள சென்சார் இரத்த குழாயின் நாடித்துடிப்பு அலையை அளவிட்டு கணிக்கும் விபரங்களை பழைய தோள்பட்டை கருவி மூலம் அனுப்புகிறது.



இதன் மூலம் இதயத்துக்கு அருகிலுள்ள அழுத்தத்தை ஏயார்டா மூலம் அறியலாம். ஏயார்டா என்பது இதயத்திலிருந்து மில்லிமீட்டர் அளவு அருகில் இருப்பது. தோள் பட்டையை விட இவ்விடத்தில் அழுத்தம் அதிகம்.ஏயார்ட்டாவின் அழுத்தத்தை அளவிட்டால் மாத்திரமே சிகிச்சை பூரணமாக இருக்கும் என்றும் மேலும் மூளை மற்றும் இதயத்திற்கு அருகில் உள்ள இரத்த அழுத்த அளவை அறிவது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு சிகிச்சைகளில் அவசியம் என்றும் விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர்..



இப்படியாக இன்றைய நிலையில் மருத்துவத் துறைகளிலும் எத்தனையோ வியத்தகு கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அவற்றுடன் புதிய வரவாக இந்த சென்சார் மருத்துவ முறையும் பெரிய அளவில் இடம்பெறக் கூடும். வருடக்கணக்காக ராணுவத்தினர் தண்ணீருக்கடியில் உபயோகப்படுத்தும் சோனார் கருவியின் செயல்பாடுகளை ஒத்த அல்ட்ரா சவுண்டு தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைமுறையில் கொண்டுவர, அமெரிக்காவின் பஃபலோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். சோனாரின் சிறியதாக்கப்பட்ட வடிவைமைப்புடன் உள்ள கருவியை மனித உடலினுள் பொருத்துவதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர்.



உயிரியல் மருத்துவத்தின் முன்னேற்றமான இந்தக் கண்டுபிடிப்பு, நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் விதத்தில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தக் கூடும் என்று டாம்மாசோ மெலோடியா என்ற மின்பொறியியல் துணைப் பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.



இத்தகைய தொழில்நுட்பம் பத்து வருடங்களுக்கு முன்னரே வளர்ச்சி அடையத் துவங்கியது. ஆனால், ஆப்போது, ரேடியோ மின் காந்த அதிர்வெண் அலைகள் மூலம் சென்சார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் அதிக வெப்பம் வெளிப்பட்டது. மேலும், இத்தகைய மின்காந்த அலைகள், மனித தோல், தசை, திசுக்கள் போன்றவற்றில் ஊடுருவிச் செல்ல அதிக சக்தி தேவைப்பட்டது.



அத்துடன் மனிதனின் உடலில் 65 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால், அல்ட்ரா சவுண்ட் கதிர்களின் பயன்பாடு எளிதாக இருந்தது. அதனால், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித உடலினுள் பொருத்தப்படும் பேஸ்மேக்கர், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கணிக்கப் பயன்படும் கருவி போன்றவற்றை இயக்குவது எளிதாக இருக்கும் என்று டாம்மாசோ தெரிவித்தார்.



இதனை ஒத்த முறையில், ரத்தத்தில் குளுகோஸ் அளவை அறிவிக்கும் சென்சார்களை பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் அளவை கண்காணித்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய இன்சுலின் கருவியிலிருந்து தேவைப்பட்ட இன்சுலினை ரத்தத்தில் கலக்கச் செய்தல் சாத்தியமாகக் கூடும். இந்தத் தொழில்நுட்பத்தில் சாத்தியமாக்கக்கூடிய பயன்பாடுகள் அதிகம் உள்ளன. நாம் இவற்றிலிருந்து என்ன பெறமுடியும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும் டாம்மாசோ கூறினார்.



Soon, wireless body sensors to treat diabetes, heart failure!



 

 For decades, the military has used sonar for underwater communication.Now, researchers at the University at Buffalo are developing a miniaturized version of the same technology to be applied inside the human body to treat diseases such as diabetes and heart failure in real time.The advancement relies on sensors that use ultrasounds – the same inaudible sound waves used by the navy for sonar and doctors for sonograms – to wirelessly share information between medical devices implanted in or worn by people.


காப்பகம்