Thursday, October 23, 2014

உடலில் எந்த உறுப்புகளை தானமாக பெற முடியும்..?

கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புகளையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.


ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்),

அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.

Friday, October 3, 2014

மார்பு பகுதிக்கு வலிமை தரும் செஸ்ட் ஃப்ளை இயந்திரம்


ஜிம்மில் பல்வேறு உபகரணங்கள் மார்பு பகுதி விரிவடைய இருக்கின்றன. அவற்றுள் இந்த செஸ்ட் ஃப்ளை இயந்திரம் விரைவில் பலன் தரக்கூடியது. செஸ்ட் ஃப்ளை இயந்திரம் மார்பு பகுதியிலுள்ள‌ தசைகளை மட்டும் குறிவைத்து பயிற்சி செய்ய‌ உதவுகிறது.

இவ்வகை இயந்திரங்கள் மல்லாந்து படுத்து (அ) உட்கார்ந்து பயிற்சி செய்யக்கூடிய‌ இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த இயந்திரங்கள் வசதியை அதிகரிக்க‌ பட்டைகள் (பேடுகள்) கொண்டுள்ளன‌. இதில் பயிற்சி செய்யும் போது பேடுகள் இடையேயான‌ தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்..

இந்த உடற்பயிற்சி இயந்திரம் கொண்டு டிரைசெப்ஸ்கள் மற்றும் தோள்களில், கூட பயிற்சிகள் செய்ய‌ முடிந்தாலும் இவை முழுக்க‌ முழுக்க‌ மார்பு தசைகளை வலுப்படுத்தவே இந்த உபகரணம் உதவுகிறது.

அழகான, வலிமையான மார்பகங்களை வேண்டும் என நினைக்கும் ஆண், பெண் இருபாலரும் இந்த உபகரணத்தை பயன்படுத்தலாம். வீட்டில் இதை வாங்கி செய்ய விரும்புபவர்கள் முதலில் ஜிம்மில் பயிற்சி பெற்ற பின்னர் நிபுணரின் ஆலோசனையின் பேரில் இதை பயன்படுத்தலாம்.

நிர்வாணமாக நடித்த காஜல் அகர்வால்.. எதிர்ப்பு தெரிவித்த சென்சார்..!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தெலுங்கு படம் ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’.

கிருஷ்ண வம்சி இயக்கிய இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்துக்கு தணிக்கை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

காரணம் காஜல் நடித்துள்ள படுகவர்ச்சியான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர். அதற்கு இயக்குநர் சம்மதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி தள்ளினர்.

பின்னர் வெட்டப்பட்ட காட்சிகள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சி (9 நொடி), பாடல் காட்சி ஒன்றில் காஜலின் தொடைப்பகுதி ஆபாசமாக தெரிவதுபோன்ற காட்சி (7 நொடி), மார்பகம் பகுதியை கொண்டு ஹீரோவை காஜல் இடிக்கும் காட்சி ( 6 நொடி, 2 முறை), 2வது நாயகி சித்ராவை வில்லன் மானப்பங்கப்படுத்தும் காட்சி (5 நொடி). இக்காட்சிகள் நீக்கியபிறகு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார்.

இப்போதெல்லாம் நடிகைகள் நிர்வாணமாகவும், கவர்ச்சியாகவும் நடிப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது போல.. முதலில் நடிகை ஸ்ருதிஹாசன் ’டி டே’ என்ற இந்திப்படத்தில் படும் கவர்ச்சியாக நடித்து பெரும் பரபரப்பை உண்டாக்கினர்.

இதில் படுக்கையறை காட்சிகளும் அடங்கும். அவரை தொடர்ந்து நடிகை சமந்தா அஞ்சான் படத்தில் பிகினிக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்போது நடிகை காஜல் அகர்வால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

வயசுப்பெண்கள் கூடி அரட்டை அடிக்கும் போது எதைப்பற்றி பேசுவார்கள் தெரியுமா..?

பெண்கள் அதுவும் வயசுப்பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள் சாப்பாட்டில் ஆரம்பித்து செக்ஸ் வரை எங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.

நேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும். செக்ஸ் ஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள்.


பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே.

மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள். குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் கேட்ஜட்ஸ் கெட்ஜெட்ஸ் பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கணவர்கள்  சமீபத்தில் வாங்கி வந்த பொருட்கள் பற்றி பெருமை பேசுவார்கள், பரிசாக கிடைத்த ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் போன் பற்றியும் சமீபத்தில் கிடைத்த எலக்ட்ரானிக் சமையலறை பொருட்கள் பற்றியும் பேசுவார்கள்.

பேஷன் தற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள் ஷாப்பிங் ஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும் 

கவுன்டவுனுடன் நிமிடத்தோடு மரண தேதியை அறிவிக்கும் புதிய வாட்ச்..!

இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்ல வேலையயும் சிறப்பா செய்யனும்,இன்னும் நிறைய சாதிக்க தோன்றும் என்கிறார் இதன் தயாரிப்பாளர். அந்த வாட்ச்தான் டிக்கர்  என்ற பெயருடன் மார்கெட்டுக்கு வந்துள்ளது.உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.

பெட்ரிக் கோல்டிங் என்பவர் இந்த வாட்சை தயாரித்து உள்ளார். இப்படி டெரரான ஒரு வாட்ச்சை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நம்ம எலலாரும் நமக்கு இருக்குற‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியா பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்தார்.

இந்த டிக்கர் வாட்ச் மத்த ஸ்மார்ட் வாட்ச் போல உங்கள உங்க வேலைகளை கண்டு சோர்வடைய வைக்காது, அதுக்கு பதிலா இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்லா வேலையயும் சிறப்பா செய்யனும், இன்னும் நிறைய சாதிக்கனும்னு தோனும். ஒரு சிறந்த மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ்றதுக்கு இந்த வாட்ச் கண்டிப்பா உதவிகரமாக‌ இருக்கும்.

அதற்காகத் தான் இந்த வாட்ச் டிஸைன் செய்யப்பட்டு உள்ளது. நமக்கு தரபட்ட வாழ்க்கை என்பது ஒரு முறை தான் எனவே இந்த வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளின் பயனையும் இந்த வாட்சோட துணையோட முழுமையாக‌ பெற வேண்டும் என்பது தான் இந்த வாட்ச்சோட தத்துவம் என்றார்.

இந்த வாட்ச் இன்றைய சந்தை மதிப்பில் ஆன்லைனில் $79 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கிறது. சந்தை மதிப்பில் ரூபாய் 4,871.26 க்கு கிடைக்கிறது என இதன் தயாரிப்பளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இப்படியும் சில மனிதர்கள்: உணவகத்தில் மோசமான கவனிப்பிற்கு பில்லை விட அதிகமான டிப்ஸ்..!


அமெரிக்காவை சேர்ந்த மெக்சைன் என்பவர் தனது மனைவியுடன் உணவு விடுதிக்கு சென்றுள்ளார். சர்வரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்துள்ளார்கள். 20 நிமிடம் கழித்து தண்ணீர் மட்டும் சர்வர் வைத்துள்ளார். மீண்டும் 40 நிமிடங்கள் கழித்து ஆர்டர் கொடுத்ததை சர்வர் எடுத்து வந்துள்ளார்.

உணவருந்தி வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.அங்கு உணவருந்த வந்த அனைவருக்கும் இதே நிலைமைதான். இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் முடிவெடுத்த தம்பதியினர் அந்த சர்வருக்கு டிப்ஸ் அளிப்பது என முடிவெடுத்து அவருக்கு உணவுக்கான பில் 66 டாலரோடு அதற்கு மேலாக‌ 100 டாலரை டிப்ஸாக வழங்கி சர்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தாமதத்திற்கு காரணம் சர்வர் அல்ல‌ உணவகத்தில் பணியாளர் பற்றாக்குறைதான். மொத்தம் 12 டேபிள்கள் அவர் ஒரு சர்வர்தான் இத்தனை டேபிளையும் கவனிப்பது சிரமம்தான் எனவே இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று மெக்சைன் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரின் பேஸ்புக் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் ஆதரவும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது. 

‘திருமணத்தில் தொடங்கிய கொடுமை கொலையில் முடிந்துவிட்டதே’ - அம்மா கதறல்

‘திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை கொடுமைப்படுத்தி, இப்போது கொலையும் செய்துவிட்டனரே’ என்று தாய் புஷ்பலதா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தாய் கதறல் கொலை செய்யப்பட்ட ஜெயசுவாசினியின் தாய் புஷ்பலதா, தந்தை சண்முகம், சகோதரர் மோகன்ராம் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயசுவாசினியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். அப்போது புஷ்பலதா கூறியதாவது:– ஏராளமான நகைகளை வரதட்சணையாக கொடுத்து கடந்த 2007–ம் ஆண்டு ஒரே ஆசை மகளை திருமணம் செய்து வைத்தோம். கோவை அவினாசிரோட்டில் உள்ள பெரிய மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் இந்த திருமணத்துக்கு வந்து இருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் இருந்தே எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அனைத்து பொருட்களையும் நாங்களே வாங்கி கொடுத்தோம். இரட்டைக்குழந்தை பிறந்த பின்னர் மகளை திரும்ப அனுப்பி வைக்கலாம் என்று கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, ‘ஜாதகம் சரியில்லை. இப்போது வர வேண்டாம்’ என்று தொடர்ந்து நாள் கடத்தி வந்தனர். குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு இப்போது கொலையும் செய்துவிட்டனர். திருமணத்தில் தொடங்கிய கொடுமை, கொலையில் முடிந்து ஒரே மகளை இழந்துவிட்டேன். எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைபோல் வேறு எந்த பெண்ணுக்கும் இனி நடக்க கூடாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புஷ்பலதா கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெயசுவாசினியின் சகோதரர் மோகன்ராம் கூறியதாவது:– கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தியதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினோம். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2007–ம் ஆண்டு ரெனால்டு கம்பெனி கார் பிரசித்தி பெற்று இருப்பதாகவும், கோவையின் சாலையில் முதன்முதலில் இந்த காரை ஓட்ட விரும்புவதாகவும், அந்த காரை வாங்கி தருமாறும் சந்தோஷ்குமார் கேட்டார். எங்கள் அக்காள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் செலவில் அந்த காரையும் வாங்கி கொடுத்தோம். ஜட்டி முதல் அனைத்தையும் கணவர் வீட்டினருக்கு வாங்கி கொடுத்தும், எங்களது குடும்ப குல விளக்கை கொன்றுவிட்டனர் என்று அண்ணன் மோகன் ராம் கண்ணீர் வடித்தபடி கூறினார்.

Thursday, October 2, 2014

விஷன் தமிழ்நாடு 2023 ஆப்ஸ் அறிமுகம்..!


தமிழ்நாட்டின் வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம் “விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.

இவர் விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை “விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச் சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி யிருக்கிறேன்” என்கிறார் இவர்.

போனில் விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர் சாராசரி ஆண்டு வருமானத்தை

2023ல் 6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.

விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.

யான் (2014) - திரைவிமர்சனம்

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார் துளசி. அவளை சாதுர்யமாக காப்பாற்றுகிறார் ஜீவா. அதோடு அவளை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.

அதன்பின்னர் அவள் பின்னாலேயே சுற்றி வரும் ஜீவா, ஒருநாள் துளசி தனது அப்பா நாசருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது அவளிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் நாசர் தன்னை வந்து சந்திக்குமாறு ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

நாசரை சந்திக்கும் ஜீவாவுக்கு எந்த வேலைவெட்டியும் இல்லை என்பதை அறிந்ததும், மேலும் கோபமடைந்த நாசர் ஜீவாவை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜீவா, எப்படியாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளவேண்டும் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை.

இறுதியில், டிராவல் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். வெங்கட் போஸ் மூலம் கஜகஸ்தான் செல்கிறார் ஜீவா. அங்கு ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கஜகஸ்தான் ஏர்ப்போட்டில் ஜீவாவின் உடமைகளை பரிசோதிக்கும் அந்நாட்டு போலீசார், அவரது சூட்கேசில் போதை மருந்து இருப்பதை கண்டறிகின்றனர். இதனால் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கஜகஸ்தானில் போதை மருந்து கடத்தினால் தலையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதனால் ஜீவாவுக்கும் தலையை துண்டிக்குமாறு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது ஜீவாவுக்கு. சக கைதியான தம்பிராமையா இவர் சென்ற சில நாட்களுக்குள் விடுதலையாகி வெளியே வருகிறார். அவரிடம் தனது நிலைமையை மும்பையில் உள்ள தனது குடும்பத்தாரிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறார் ஜீவா.

தம்பி ராமையாவும் மும்பைக்கு சென்று ஜீவாவின் குடும்பத்தாரிடம் அவரது நிலைமையை எடுத்துக் கூறுகிறார். இதையறிந்த துளசி, தன்னால்தான் ஜீவாவுக்கு இந்த நிலைமை ஆனது என்று மனமுடைந்து போகிறார். தானே அங்கு சென்று அவனை மீட்டு வருவேன் என்று சபதமேற்று கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறாள்.

இறுதியில், துளசி, ஜீவாவை மீட்டு இந்தியா திரும்பினாளா? அவனுடன் ஒன்று சேர்ந்தாளா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இப்படத்தில் கூடுதல் மெருகேறியிருக்கிறார். பார்க்க அழகாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் கடினமான உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்காக இவர் இவ்வளவு காலம் காத்திருந்தது வீண் போகவில்லை. சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

துளசி திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். படத்தில் கதையின் தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி, நடிப்பிலும் மிளிர்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

துளசியின் அப்பாவாக வரும் நாசர் பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிகிறார். ஜெயப்பிரகாஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம் கண்ணில் நிற்கிறார். தீவிரவாதியாக வரும் நவாப் ஷாவின் நடிப்பும் பலே. தம்பி ராமையா, கருணாகரன், வெங்கட் போஸ் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும், அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.

புதுமையான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ரவி.கே.சந்திரனுக்கு பாராட்டுக்கள். படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் வென்றிருக்கிறார். கதையோட்டத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பலவீனம்தான். அவற்றை பின்வரும் படங்களில் ரவி.கே.சந்திரன் பின்பற்றுவார் என நம்புவோம். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு அபாரம். பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கிறார். அது திரையில் அழகாக பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலம் கூட்டியிருக்கலாம். ஏனோ, இவரது பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடல்களை தவிர, வேறு பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்காதது சற்று வருத்தமே.

மொத்தத்தில் ‘யான்’ சுறுசுறுப்பில்லை

அதிக நேரம் தூங்குவது நல்லதா..? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!


அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.

இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.

அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்குகிறதா 'ஐ'..?

தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து 'ஐ' படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை தயாரித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு அக்டோபர் 2-ஆம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக 'ஐ' தெலுங்கு பதிப்பினை வாங்கியிருக்கும் பிரசாத், "ஜாக்கிசான் வருகை குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு தெரிந்து விடும். பிரம்மாண்டமான விழாவாக விரைவில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

மேலும், 'ஐ' இந்தி பதிப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டலோன் வரவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 22ம் தேதி தீபாவளி வரவிருக்கும் பட்சத்தில், அம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தெலுங்கு இசை வெளியீடு, அதனைத் தொடர்ந்து இந்தி இசை வெளியீடு என்று இருக்கும் போது தீபாவளிக்கு 'ஐ' வெளிவர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், திரையரங்க விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடம் தீபாவளி படங்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்து, நவம்பர் 14ம் தேதி 'ஐ' வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்ட போது, "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்" என்று கூறினார்.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - இதைப்படிச்சு பாருங்க..!

நான் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். தாவரவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழி பிரீத்தி செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.

உயிரோடு செம்பருத்தி:- 32 மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் காகிதப் பூக்களாக மட்டுமே இருந்தன. அவள் வரைந்ததோ கருப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. அவளுடைய செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் அவளுடையதையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் புரியவில்லை.

எங்கள் ஆசிரியர் நிச்சயம் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. எல்லாரும் ரெக்கார்ட் நோட்டுகளைச் சமர்ப்பித்தோம்.

காகிதப் பூ போதும்:- எல்லோருடைய நோட்டுகளையும் ஆசிரியர் பார்த்தார். ஒவ்வொருவராக அழைத்துத் தன் கருத்தைச் சொல்லி ரெக்கார்ட் நோட்டுகளைக் கொடுத்தார். கடைசியாகப் பிரீத்தியின் செம்பருத்தி வரைந்த பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு “பிரீத்தி…. இங்கே வா” என்றார். நானும் பிரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். பெருமிதத்தோடு பிரீத்தி அருகில் சென்றாள். “நீ வரைந்த படம் தவறு. ஆங்காங்கே தவறு குறி போட்டிருக்கிறேன். புத்தகத்தைப் பார்த்து அவற்றை எல்லாம் சரி செய்து மீண்டும் வரைந்து கொண்டு வா” எனக் கோபமாகச் சொல்லி நோட்டைக் கையில் திணித்தார்.

அப்பொழுதுதான் நாங்கள் வரைந்த செம்பருத்திக்கும் பிரீத்தியின் செம்பருத்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் எனக்குப் புரிந்தது. நாங்களோ புத்தகத்திலுள்ள மலரை அச்சு வார்த்தாற் போல வரைந்திருந்தோம். அவளோ தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியைப் பார்த்து, பார்த்து ரசித்துத் தன் பென்சிலால் ஷேடிங் எல்லாம் கொடுத்துத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

அதைக் கண்ட ஆசிரியர் பூரித்துப் போய் அவளைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஒரு வட்டத்துக்குள் மட்டும் சிந்திக்கும் மனசால் பிரீத்தியின் தனித்துவத்தை அங்கீகரிக்க முடியவில்லை. அவளுடைய அபாரத் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவில்லை. அந்த ஆசிரியர்க்குத் தன்னுடைய கற்பிதங்களுக்கு அப்பால் பரந்து விரிந்த முறையில் காணும் பார்வை இல்லை.

எது புத்திசாலித்தனம்..? - இப்படித்தான் பொதுவான அளவுகோல்களால்தான் புத்திசாலித்தனம் வரையறை செய்யப்படுகின்றது. புத்திசாலித்தனம் என்பது கற்றுக்கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவுகோல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இவை மட்டும்தான் புத்திசாலித்தனமா? சொல்லப் போனால் மனப்பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹாவர்ட் கார்னர் என்னும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்ற ஒன்று தனித்துத் தோன்றுவதோ, இயங்குவதோ கிடையாது. அது ஒருவிதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் (problem solving) ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல், இவைதான் அந்தத் திறன் என 1983- ல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்தார் ஹாவர்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் (Frames of Mind) என்னும் புத்தகம் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உலுக்கும் வல்லமை படைத்தது. ஒருவருக்குக் கல்வி பல விஷயங்களைக் கற்றுத்தருவதை விடக் கற்பனைத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலுவாகப் பேசுகிறார் இவர்.

பன்முகப் புத்திக்கூர்மை:- மனித மூளையின் செயல்பாட்டின் பல நுணுக்கங்களைத் தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹாவர்ட். அவற்றுள் நம் அனைவரையும் அசரவைக்கும், மகிழ்விக்கும் ஒரு கண்டுபிடிப்பு உள்ளது. மனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்முகப் புத்திக்கூர்மை (Multiple Intelligence) நிச்சயமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலும் எட்டு விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும் என்றார் அவர். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முகப் புத்திக்கூர்மைகள் இருக்கின்றன.

பன்முகப் புத்திக்கூர்மை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுத்துப் பலப்படுத்தவும் முடியும் அல்லது கவனிப்பார் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யவும் முடியும். படித்தவற்றை மனதில் நிறுத்தி அதை அப்படியே எழுதுவதோ, ஒப்பிப்பதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அதைத் தவிர மேலும் பல விதமான அறிவுத் திறன்களும் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - மொழித் திறன் (Verbal-Linguistic Intelligence), கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்(Mathematical-Logical Intelligence), இசைத் திறன் (Musical Intelligence), காட்சி மற்றும் வெளித் திறன்(Visual-Spatial Intelligence), உடல்கூறு மற்றும் விளையாட்டுத் திறன் (Bodily-Kinesthetic Intelligence), மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Interpersonal Intelligence), சிந்தனைத் திறன் (Intrapersonal Intelligence), இயற்கை சார்ந்த திறன் (Naturalistic Intelligence) என எட்டு விதமான புத்திக்கூர்மைகளைப் பற்றி அவர் பேசுகிறார்.

இவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டுதான் இருக்கின்றன. ஒருவருக்குச் சில திறன்கள் பிரகாசமாக இருக்கும். மற்றொருவருக்கு வேறு சில திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். வரும் வாரங்களில் உங்கள் திறனைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்!

Wednesday, October 1, 2014

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...

காஜூ மர்சு...

ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.

ஹாட் டாக்ஸ்...



அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.


நம்மூரு கப்பக்கிழங்கு....


அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ருபார்ப் இலைகள்...



ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.

சன்னாக்‌ஷி...


அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.

குரங்கு மூளை..




நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.


புகு மீன்...


புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கி பழம்...


ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.

விஷக் காளான்...



ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி..?

தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள்...?


1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு – பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

ஆசிய விளையாட்டில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய வீராங்கனை அதிகாரிகள் மீது சரமாரியாக சாடல்

சர்ச்சைக்குரிய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மிகவும் வேதனை அடைந்து தனக்கு அளித்த வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின்

எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சரிதாதேவி ஆக்ரோஷம் காட்டினார். எதிராளி நிலைகுலையும் அளவுக்கு சரமாரி குத்துகளை விட்டார். சரிதாதேவியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை காண முடிந்தது. ஆனால் 3 பேர் கொண்ட நடுவர்கள் குழு 2-வது ரவுண்டில் மட்டுமே சரிதாதேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

மற்ற மூன்று ரவுண்டுகளிலும் நடுவர்களின் அதிகபட்ச கருணை என்னவோ ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா  தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. சரிதாதேவி தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், ஜினா பார்க்கின் கையை நடுவர் பிடித்து உயர்த்தியதை கண்டு வியப்படைந்தனர். நடுவர்களுக்கு எதிராக அங்கிருந்த நமது நாட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினார்கள். சிலர் தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி எறிந்தனர். ‘நீங்கள்  குத்துச்சண்டையை கொன்று விட்டீர்கள்’ என்று சரிதாவின் கணவர் கோஷமிட்டார்.

இந்திய குத்துச்சண்டை குழுவினரும் கடும் அதிருப்திக்குள்ளானர்கள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதாதேவி கண்ணீர் விட்டு அழுதார். முன்னாள் ஆசிய சாம்பியனான 32 வயதான சரிதாதேவி மணிப்பூரைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளும் நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய செய்வதில் தோல்வி அடைந்துவிட்டனர். என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தொடந்து மனம் கலங்கிய நிலையிலே சரிதா தேவி காணப்பட்டார். போட்டி முடிந்த பின்னர் பரிசு அளிக்கப்பட்டது. பரிசு அளிக்கப்பட்ட இருந்த அரங்கிற்கு வந்த சரிதா தேவிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கத்தை கழுத்தில் அணியவும் மறுத்துவிட்டார். பின்னர் பதக்கத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். இது அங்கு இருந்தவர்கள் மனதை கலங்க செய்தது.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்கால குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் போட்டியிட போகிறேன். இது ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சரிதா கூறினார். மேலும் அவர் இந்திய அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார். "இச்சம்பவம் நடந்து 24 மணிநேரம் நடந்தும் எந்த ஒரு அதிகாரியும் என்னுடன் பேசவரவில்லை. நன்றாக இருக்கிறேனா என்று கூட கேட்கவில்லை. இந்திய அதிகாரிகள் பதக்கம் பெறுபவர்களுடன் போட்டோ எடுக்க மட்டும் அருகே வருகிறார்கள். வேறு எதுவும் செய்வது இல்லை." என்று சரமாரியாக தனது குற்றச்சாட்டை சரிதா தேவி முன்வைத்துள்ளார்.

Friday, September 26, 2014

ஜீவா (2014) - திரைவிமர்சனம்

ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் (சார்லி) வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா (மாரிமுத்து) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) இவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இவனும் அவளை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பா (டி.சிவா) வுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்.

அவளை பிரிந்த சோகத்தில் போதைக்கு அடிமையாகிறான் ஜீவா. அவனை போதையில் இருந்து மீட்டெடுக்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.

அங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இதற்கிடையில், ஜெனி எங்கு படிக்கிறாள் என்பதை ஜீவா தேடிக் கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக கூறுகிறார்.

இறுதியில், ஜீவா கிரிக்கெட்டில் சாதனை படைத்தாரா? கிரிக்கெட்டை தியாகம் செய்து ஜெனியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜீவாவாக வரும் விஷ்ணு, உண்மையான கிரிக்கெட் விளையாட்டு வீரருக்குண்டான தோற்றத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது.

இதுவரையிலான படங்களில் மீசை, தாடியுடன் பார்த்து ரசித்த விஷ்ணுவை, இப்படத்தில் பள்ளி சிறுவனாக காட்டுவதற்காக மீசையில்லாமல் காட்டியிருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.

ஜெனியாக வரும் ஸ்ரீதிவ்யா, குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்க குட்டைப் பாவடையுடன் வலம்வந்தாலும் அதிக கவர்ச்சி இல்லாமல் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்கிறார். கல்லூரி மாணவியாக வரும்போது பொறுப்பான பெண்ணாக அனைவர் மனதில் இடம்பிடிக்கிறார்.

ஜீவாவின் நண்பன் ரஞ்சித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண். கிரிக்கெட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட நேரத்தில் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மையே கலங்க வைக்கிறது.

சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. ஒருசில காட்சிகள் சிரிக்க முடிகிறதே தவிர, பெரும்பாலான காட்சிகள் போரடிக்கத்தான் வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டியிருக்கும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் பெறுகிறார்.

விஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து, கோச் ரவி, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் டி.சிவா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விளையாட்டை கதைக்களமாக கொண்ட படம் என்றாலே சுசீந்திரனுக்கு லட்டு சாப்பிடுகிற மாதிரி. கபடியை மையப்படுத்தி எடுத்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சுசீந்திரன், ஜீவா படத்தின் மூலம் உச்சம் தொட்டுவிட்டார்.

கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது. திறமையானவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படியெல்லாம் சிதறடிக்கப்படுகிறது என்பதை தைரியமாக எடுத்துக் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்.

மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மைதானத்தில் வீரர்களுடன் இவருடைய கேமராவும் இறங்கி விளையாடியிருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஜீவா’வில் ஜீவன் உண்டு.

Thursday, September 25, 2014

பெண்ணுக்கு மூன்றாவது மார்பு - பரபரப்பு தகவல்கள்..!

உலகிலுள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக கூட வழி தேடிக்கொண்டிருக்கும் நிலையில் பணத்தை வீணடிப்பதற்காகவே சிலர் வழி தேடிக்கொண்டிருக்கின்றனர். தற்போதுள்ள நடைமுறை பழக்கங்களை பார்த்தால் உலக அழிவு சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கின்றது.


பெண்ணொருவர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றில் நிகழச்சியொன்றுக்காக 20,000 அமெரிக்க டொலர் (இலங்கை பணம் ரூ.2,606,500) செலவு செய்து புதியதொரு மார்பை பொருத்தியுள்ளார் என்று கூறினால் நம்பவீர்களா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்மீன் எனும் பெண்ணே இவ்வாறு வித்தியாசமானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வளவோ சாதனையை செய்த வைத்தியத்துறையே இவ்வாறான சத்திரசிகிச்சையை செய்யமுடியாது என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 முதல் 60 வரையிலான வைத்தியர்களிடம் குறித்த பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இருந்தபோதிலும் வைத்தியர்களுக்கேயான நெறிமுறைகளை மீறக்கூடாது என்ற காரணத்தினால் இதனை செய்யமுடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அமெரிக்காவிலுள்ள சிறந்த வைத்தியொருவரினால் 2 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் குறித்த பெண்ணுக்கு 3ஆவது மார்பு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஜெஸ்மீனின் பெற்றோர் இவருடன் பேசுவதில்லையாம்.

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காகவே இவ்வாறு செய்துக்கொண்டேன். இதனை ஒரு அதிஷ்ட அங்கமாக நான் எண்ணுகிறேன். நான் பிரபல்யத்தை விரும்புகின்றேன்.

எனக்கு ஆண்களுடன் நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. இவ்வாறான எனது தோற்றம் கவர்ச்சியற்றதாகவே ஆண்களுக்கு தெரியும். அதனை நான் விரும்புகிறேன் என்று ஜெஸ்மீன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பிரபல நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்


விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார். கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இது தெலுங்கில் ரவிதேஜா நடித்து ஹிட்டான ‘கிக்’ படத்தின் ரீமேக் ஆகும்.

மேலும் ஆறு கன்னட படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. இவ்வளவு பிரபலமான கிரீத்தி விமான நிலையத்தில் மானபங்கம் செய்யப்பட்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கிரீத்தி கூறியதாவது:–

பெங்களூர் விமான நிலையத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரி ஒருவர் என்னை நெருங்கினார். திடீரென என்னிடம் சில்மிஷங்கள் செய்து கேவலமாக நடந்து கொண்டார். நான் தடுத்ததும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். இதை சில ஏர் இந்தியா ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எனககு உதவ வருவார்கள். என எதிர்பார்த்தேன் ஆனால் யாரும் வரவில்லை. எல்லோருமே அவர்களுடைய அதிகாரிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள். இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது..?

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தேகருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா..?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை  நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள். அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச்  சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை.


இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும் விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள்.  இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை  பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப்  போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும்,  மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால்  இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும்.  இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என  பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக்  குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா..? - இதைப்படிங்க..!

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.

தன்னம்பிக்கைக்கான பண்புகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.

2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.

3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள்.

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும்.

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது.

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

தொடர் முயற்சி

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண

ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.

''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்..!



''ஆவின் நிறுவனத்தின் எம்.டி. சுனில் பாலிவாலை டிரான்ஸ்ஃபர் பண்ணி காட்றேன் பாருங்க'' என சபதம் போட்டார் வைத்தியநாதன். ஆனால், சுனில் பாலிவாலுக்கு பதிலாகப் பதவியை பறிகொடுத்தார் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி.

'மாதவரம் மூர்த்தியின் தலை உருண்டதற்கு காரணம் ஒரே ஒரு ஆள்தான்’ என பெயர் குறிப்பிடாமல் 'பால் கடத்தலுக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?’ என்ற தலைப்பில் கடந்த 14.9.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அந்த ஆள் வேறு யாருமில்லை வைத்தியநாதன்தான். ஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரம் சந்தி சிரிக்க காரணமாக இருக்கும் வைத்தியநாதன் அ.தி.மு.க புள்ளி. அவரைப் பற்றிய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார்கள் ஆவின் ஊழியர்கள். ''தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன் 1985-ல் ஆவினில் தானியங்கி பால் நிலையத்தில் 10 ரூபாய் தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தார். இப்போது முக்கியப் பதவியில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலம்தான் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்போது தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் பெயரில் அந்த பூத்துகளை மோசடியாக கைப்பற்ற ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்படிப் பெற்ற பூத்துகளில் தண்ணீரைக் கலந்து கொள்ளை லாபம் பார்த்தார். இதில் ருசி கண்டதால் ஆவினை கரையான்போல அரிக்க ஆரம்பித்தார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது ஜனார்தனன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியநாதனுக்கு நெருக்கம். இப்போது அவர் முன்னாள் அமைச்சராக இருக்கிறார். அவர் மூலம் பால் வண்டி கான்ட்ராக்ட்டை கைப்பற்றினார் வைத்தியநாதன். அதன் பிறகு வைத்தியநாதனின் வளர்ச்சி கிடுகிடு என உயர்ந்தது. அடுத்து 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நந்தனம் ஏரியா பூத் ஒன்றில் ஸ்டாலின் அப்போது ரெய்டு செய்தபோது வைத்தியநாதனின் தகிடுதத்தம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே ஆந்திராவுக்குத் தப்பிப் போனார் வைத்தியநாதன். ஆவினை கைவிட்டுவிட்டு தீபிகா என்ற பெயரில் தனியாக பால் பண்ணை நடத்தி 'பூஜா’ என்ற பெயரில் பால் விற்றார். இதில் அந்த விழுப்புரம் பிரமுகரும் பார்ட்னராக இருந்தார்.
2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஆவினுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தார். அவருக்கு அனைத்து ஆசிகளும் கிடைத்தன. விழுப்புரம் பிரமுகரும் அவருடைய சகோதரரும் வைத்தியநாதனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். அப்போதுதான் டேங்கர் லாரிகள்மூலம் பால் சப்ளை நடைபெறத் தொடங்கியது. அதில் கால் பதிக்க ஆரம்பித்தார் வைத்தியநாதன். டேங்கர் லாரி ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் கமிட்டியில் உட்கார்ந்து யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2006-ல் தி.மு.க ஆட்சி வந்ததும் மதிவாணன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது கருணாநிதி அருகில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகரை பிடித்து படிப்படியாக ஆவின் நிறுவனத்தின் உச்சாணியில் ஏறத் தொடங்கினார்.
2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது டேங்கர் லாரிகள்மூலம் பால் கொண்டு வரும் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டிப் பறந்தார். இதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். டெண்டர் கமிட்டி, தரக் கட்டுப்பாட்டு பிரிவு என ஆவினில் எல்லா இடங்களிலும் வைத்தியநாதனின் ஆட்கள்தான் இருப்பார்கள். வைத்தியால் உண்டுகொழுத்த அதிகாரிகள் நிறைய பேர் ஆவினில் இருக்கிறார்கள். பிளாட்டுகள், கடைகள், ஆடம்பரப் பொருட்கள் என வாங்கித் தந்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் குளிர்வித்துவிடுவார் வைத்தியநாதன்'' என்று பழைய வரலாறுகளை புரட்டிப் போட்டனர்.
பால் கடத்தல் பற்றி விவரித்தார்கள் விவரம் அறிந்தவர்கள். ''ஆவின் பால் பண்ணைகளுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இப்படி பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளில் சீல் வைக்கப்பட்டிருக்கும். டேங்கர் லாரிகளை வழியில் எங்காவது நிறுத்தி அந்த சீலை லாகவமாகப் பிரித்துப் பாலைத் திருடுவார்கள். அதற்குப் பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீரையோ அல்லது பவுடரையோ கலப்பார்கள். பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலரும் வைத்தியநாதனுக்கு உடந்தையாக இருந்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.
100-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்தியநாதன் இயக்கி வந்தார். இதில் பல லாரிகள் ஒரே பதிவு எண் கொண்டவை. ஒவ்வொரு லாரியிலும் தினமும் 2 ஆயிரம் லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு வந்தது. பாலில் கலப்படம் செய்வதைக் கண்டுபிடிப்பதற்காகவே ஆவினில் விஜிலன்ஸ் பிரிவு உண்டு. ஆனால், இந்த முறைகேடுகள் பற்றி விஜிலன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் பால் திருட்டைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி உதவியை நாடினார் ஆவின் எம்.டி சுனில் பாலிவால். பால் திருட்டு தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். முதல்வரின் ஒப்புதலுடன் அவர் எடுத்த நடவடிக்கையில்தான் இவ்வளவு விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இப்படி நடைபெறும் முறைகேடுகளால் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லமுடியாமல் ஆவின் முடங்கிப் போயிருக்கிறது'' என்றார்கள்.
வைத்தியநாதனை கைதுசெய்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தார் என்கிற விவரங்களை எல்லாம் வைத்தியநாதன் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். திருடப்பட்ட பால் தனியார் பால் நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் 10 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆவின் பொது மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
''வைத்தியநாதனை கைது செய்துவிட்டு, ஆவின் ஊழியர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துவிட்டால் மட்டும் போதாது. இந்த மெகா மோசடிக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் சிலரையும் கைதுசெய்ய வேண்டும். அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியையும் விசாரிக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தவறு இழைத்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீதும் ஆக்ஷன் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பழைய சீல் முறையை மாற்றி நவீன சீல் முறைக்குத் திட்டமிட்டிருக்கிறோம். இப்படி புதிய யுக்திகளை பின்பற்றி தவறுகளையும் மோசடிகளையும் தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.
வெளுத்தது எல்லாம் பாலாகிவிடுமா என்ன...?

நன்றி - ஜூனியர் விகடன்

Wednesday, September 24, 2014

மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து சிகிச்சை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்த பெண் ராம் காலி பிரஜாபதி. பிரஜாபதியை கடந்த ஞாயிறு அன்று மாலை மின்சாரம் தாக்கியுள்ளது. அவர் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் அவரை மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். பெண்ணின் தலையை மட்டும் விட்டுவிட்டு பிற பகுதிகளை மண்ணுக்குள் புதைத்தனர். நேற்று காலை வரையிலும் பெண் மண்ணுக்குளே வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் அப்பகுதியை சேர்ந்த மீடியாக்களில் பரவியுள்ளது. ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி இந்த செய்தியை மீடியாவிற்கு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று பெண்ணை மின்சாரம் தாக்கியது. பின்னர் அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். செவ்வாய் கிழமை காலை அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மீடியாக்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசுக்கு பயந்து கிராம மக்கள் பெண்ணை மண்ணுக்குள் இருந்து எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை. நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று கூறியுள்ளா.ர்

ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது. என்று அவர் கூறியுள்ளார். இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலிவுட் வாய்ப்பை நானாக தேடிப் போக மாட்டேன் - சமந்தா..!

இந்திய சினிமாவில் எந்த மொழியில் நடித்தாலும், அவர்களின் அல்டிமேட் இலக்கு பாலிவுட்டாகத்தான் இருக்கும். இந்திப் படங்களின் மார்க்கெட், மவுசு, அங்கு புழங்கும் பணம் அப்படி. ஆனால் அங்கு காலூன்றுவது அத்தனை சுலபமில்லை. வலுவான சினிமா பின்னணி, பெரிய இயக்குநர்கள் ஆதரவெல்லாம் தேவை.

தென் இந்திய சினிமாவிலிருந்து அசின், இலியானா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன், தமன்னா உள்ளிட்டோர் இந்திக்குப் போனார்கள். இவர்களில் ஸ்ருதி மட்டும் உள்ளே வெளியே என்ற லெவலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கு பெரிய ப்ரேக் இதுவரை கிடைக்கவில்லை. அசினுக்கு முதல் படம் ஓடியதோடு சரி. தமன்னா நடித்தவை அடுத்தடுத்து ப்ளாப் லிஸ்டில் சேர்ந்துவிட்டன.

அடுத்து சமந்தாவும் பாலிவுட்டுக்கு போகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ரபாசா நல்ல வசூலைக் குவித்தது. எனவே சம்பளத்தையும் ஏற்றிவிட்டார். இந்த வெற்றி தந்த கையோடு பாலிவுட் போவார் சமந்தா என்று வந்த செய்திகளை அடியோடு மறுத்துள்ளார்.

எனக்கு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களே போதும். கைவசம் நல்ல படங்கள் உள்ளன. இந்திப் படம் வேண்டும் என்று நானாக தேடிப் போக மாட்டேன். ஒருவேளை அதுவாக அமைந்தால் பார்க்கலாம், என்றார்.

இப்போது தமிழில் கத்தி, பத்து எண்ணுறதுக்குள்ள, எண்ணி ஏழு நாள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை - சுருதிஹாசன்..!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்..?

"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"

சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில் பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல் இரண்டு வரிகள்.

அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப் பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும் நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து வருகின்றன.

திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி. ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப் பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.

ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும், நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி, பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.

அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான போக்கு தானா?

இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும், சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய் இருப்பதை அனுமதிப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்..?

Monday, September 22, 2014

பாலியல் பொம்மைக்குரிய உடல்வாகு கொண்ட பெண்..? - இதைக்கொஞ்சம் கேளுங்க..!

பாலியல் பொம்மைக்குரிய உடலமைப்பு வேண்டும் என்பதற்காக பெண்ணொருவர், 30,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை செலவு செய்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கெனன் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த விக்டோரியா வைல்ட் எனும் 30 வயதுடையு பெண்ணே; இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவரது, உதடு பிதுங்கி இருக்கும்படியும் மார்பு பெரிதாக இருக்கும்படியும் இவர் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல், கண் இமைகளையும் இவர் பெரிதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்புகளை பெரிதாக்குவதற்காக 25,000 பவுண்டும் மூக்குக்கு 3,000 பவுண்டும் கண் இமை மற்றும் நெற்றிப்பரப்புக்கு 2,000 பவுண்டுக்களும் இவர் செலவு செய்துள்ளார்.

பெஷன் ஷோக்களில் கிடைத்த பணம் மற்றும்  காதலனது உதவியுடனுமே இவர் இச்சிகிச்சைகளை செய்துள்ளார்.

'தற்போது, எனது உடலமைப்பு பாலியல் பொம்மை போல காட்சியளிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னை பார்த்து பலர் முறைக்கின்றனர். ஆனால் நான் எனது அழகையெண்ணி பெருமையடைகின்றேன்.

சிறுவயதிலிருந்தே இவ்வாறானதொரு பொம்மை போன்று காட்சியளிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் இவ்வாறான உடலமைப்பை பெறுவதற்கு எனது காதலுனும் சம்மதித்தார்.

'என்னை காணும் ஆண்களை நான் கவர்ந்து விடுகின்றேன். எனது காதலனும் மற்றையோர் என்னை பார்த்து ரசிப்பதை விரும்புகின்றார். நான் பிரபலமாக இருக்கவே விரும்புகின்றேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் முதல் தடவை இதுதான்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மகளை கட்டாயப்படுத்தி 2,000 பேருடன் உறவுகொள்ள வைத்த தாய்..!

பெண்ணொருவர், தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவுகொள்ள வைத்த கொடூர சம்பவம் வட இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஜக்குலின் மார்லிங்க் என்ற பெண்ணே இத்தகைய கொடூர செயற்பாட்டில் தனது மகளான ஆனாபெல்லை ஈடுபடுத்தியுள்ளார்.

ஜக்குலின் மார்லிங் பாலியல் குழுவொன்றுக்கு தனது மகளை அடிமையாக்கியுள்ளார்.

ஆனாபெல்(48) தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர், 'தி டெவில் ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் கொலின் பேட்லியுடன் ஜாக்குலின் மார்லிங் உறவு கொள்வதை 7 வயதில் ஆனாபெல் கட்டாயப்படுத்தலின் கீழ் பார்த்துள்ளார்.

ஆனாவுக்கு 11 வயது இருக்கையில் பேட்லி அவரை 2 முறை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

ஆனாவுக்கு 13 வயது இருக்கையில் அவரை அவரது இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு கொள்ளும் செயற்பாட்டில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைத்துள்ளனர்.

பேட்லி, ஆனாவை முதல் முறை வல்லுறவுக்குட்படுத்தும்போது 'இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் நீ நரகத்திற்கு செல்வாய்' என்று கூறி மிரட்டியுள்ளார்.

அந்த பாலியல் குழுவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்க ஆனா போன்ற சிறுமிகள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

'பகலில் பாடசாலை மாணவியாகவும் இரவில் பாலியல் அடிமையாகவும் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்றேன்' என்று ஆனாபெல் தெரிவித்துள்ளார்.

17 வயதில் கர்ப்பமான ஆனா குழந்தையை பெற்ற பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வழக்கில், பேட்லிக்கு 11 ஆண்டுகளும் ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தற்போது ஆனா இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்து அசத்திய அஜீத்..!


தல அஜீத்தோட மனிதாபிமானம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத். ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருடைய கார் டிரைவர் விலை மலிவான செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்ததை அஜீத் பார்த்துள்ளார். அவர் முன்னால், அந்த போனை வைத்துக்கொண்டு அப்போது வந்த அழைப்பைகூட எடுத்துபேச ரொம்பவும் தயங்கியுள்ளார்.

அதனை புரிந்துகொண்ட அஜீத், உடனே அருகிலுள்ள செல்போன் கடையில் காரை நிறுத்தச் சொல்லி, விலையுயர்ந்த ஐ போன் ஒன்றை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், கார் ஓட்டும்போது ஹெட் செட் அணிந்து வண்டியை ஓட்டுமாறு டிரைவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

5-வது முறையாக போலீஸ் உடை அணிகிறாரா அஜீத்..?


அஜீத் போலீஸ் உடையில் நடித்த ‘ஆஞ்சநேயா’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் ஒரு சில படங்கள்  அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. இதுவரை 4 படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்துள்ள அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் போலீஸ் உடையில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் துப்பறியும் காட்சிகளில் வரும் அஜீத், போலீஸ் உடையணிந்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து, மிகவும் அழகான தோற்றத்துடன் வலம் வருகிறாராம்.

அஜீத்தின் 55-வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக ஆடியோ வெளியீடை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க..!

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்... இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும்.

இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும்.

கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு 'எம்பிரியோ’ என்று பெயர். மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் 'ஃபீட்டஸ்’ என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது.

எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது; மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க..!

அது இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ். பல வருடங்களாக அந்த ஒரே பஸ், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மார்க்கமாக சென்று கொண்டிருப்பதால், அந்த பஸ் ரொம்பவே தள்ளாடிவிட்டது. இழுத்து இழுத்து அது செல்வதால் விவரம் தெரிந்த பயணிகள் அதில் ஏறமாட்டார்கள். அநேகமாக நாலைந்து பயணிகள் ஏறுவார்கள். ஏறியதும் ஆளுக்கொரு சீட்டில் கால் நீட்டி படுத்துவிடுவார்கள்.

அன்று இரவு பத்து மணி இருக்கும். மழை இதோ இப்போதே வந்துவிடுவேன் என்பதுபோல் மிரட்டிக்கொண்டிருந்தது. 60 வயதைக் கடந்த முதியவர், அந்த பஸ்சில் ஏறினார். முன் பகுதி இருக்கைகளில் நாலைந்து பேர் இருந்தும், படுத்தும் தூங்கிக்கொண்டிருக்க இவர் பின்பகுதியில் போய் அமர்ந்துகொண்டார்.

பஸ் 10, 15 கிலோமீட்டர் கடந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை ஏற்றிவிட்டார்கள். அவளுக்கு 30 வயதிருக்கும். நாகரிக தோற்றம். அங்கும் இங்கும் பார்த்தவள் முகத்தை சுழித்தாள். அந்த முதியவரை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். பாதுகாப்பு தேடுபவள்போல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள். அவருக்கும் தூக்கம் வரும் வரை பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம்.   கண்டக்டர் வந்தார். சற்று தூரத்தில் உள்ள ஊர் ஒன்றுக்கு டிக்கெட் எடுத்தாள்.

முதியவரிடம் பேசிக்கொண்டே வந்தாள். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். தனது நண்பர் ஒருவர் கிராமத்தில் இறந்துவிட்டார். இறுதிக் காரியம் முடித்துவிட்டு திரும்பி வருகிறேன் என்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் அவர் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் தெரிவித்து விட்டார். அந்த அளவுக்கு பக்குவமாக கேள்விகளைப் போட்டு பதில்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவருக்கு தூக்கம் வருவது போலிருந்தது. அவளுக்கு ஒன்றிரண்டு முறை போன் வந்துகொண்டிருந்தது. அதை எடுத்து பேசாமல் அவள் மெசேஜ் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தாள். பஸ் அப்போதுதான் திணறி திணறி இருட்டான பகுதிக்குள் புகுந்து சற்று வேகமெடுத்திருந்தது.

திடீரென்று அவள் புடவை முந்தானையை சரிய விட்டாள். ஜாக்கெட்டின் முதல் பட்டன் பகுதியை இழுத்து கிழித்தாள். முதியவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, அவரோடு நெருக்கமாக அமர்ந்தாள். ‘உங்களை பற்றிய முழுவிவரமும் எனக்கு தெரியும். சமூகத்தில் மரியாதையான ஆள் நீங்க. என் உடை இப்படி ஆவதற்கு நீங்கதான் காரணம் என்று இப்பவே என்னால் கூச்சல்போட்டு பஸ்சை நிறுத்த முடியும். பஸ் போலீஸ் நிலையத்திற்கு போகும். உங்க மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்திடும்..’ என்று மிரட்டும் தொனியில் பேசினாள்.

அவர் கெட்ட கனவு கண்டவர்போல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெலவெலத்து போனார். அந்த இரவு நேரத்திலும் வியர்த்தது.

‘மரியாதையாக கையில் கிடக்கிற வாட்சையும், மோதிரத்தையும் கழற்றி கொடுங்க..’ என்றவள், அவரது சட்டை காலரை நீக்கி கழுத்தை பார்த்தாள். பளிச்சென்ற தங்க சங்கிலியும் கிடந்தது. ‘எல்லாத்தையும் கொடுத்திடுங்க. நான் அடுத்த பஸ் ஸ்டாப்பில் சைலண்டாக இறங்கி போயிடுறேன்..’ என்றாள்.

‘தராவிட்டால் என்ன பண்ணுவே?’ பயத்துடன் வாய் குழற கேட்டார்.

அடுத்த ஊர் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்திடும். அங்கே என்னை எதிர்பார்த்து என் ஆட்கள் நிற்கிறார்கள். இப்பவே நான் கூச்சலை ஆரம்பித்து, அந்த நிறுத்தம் வரும் வரை தொடருவேன். அங்கே பஸ்சில் ஏறும் அவர்கள், உம்மை நையப்பு டைத்துவிடுவார்கள். தட்டிக்கேட்கக்கூட நாதி இருக்காது. கிழவன் பஸ்சில் இளம் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்டான் என்றால் ஊரே நம்பும். உடம்பை புண்ணாக்க போகிறாயா?’ என்று அவள் ஒருமையில் பேசி, தான் கைதேர்ந்த திருடி என்பதை அவருக்கு புரியவைத்தாள்.

அவர் அப்படியே குத்துக்கல் போல் இருக்க, அவளே மோதிரம், தங்க சங்கிலி, வாட்ச் எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டாள்.

அமைதியாக இருந்த அவர் கூச்சல் போட்டு எல்லோரையும் எழுப்பிவிடலாமா? என்று யோசித்தபோது அவள், ‘கண்டக்டர் ஸ்டாப் வந்துடுச்சி’ என்று கத்தினாள்.

பஸ் மெல்ல மெல்ல குலுங்கி நிற்க முயற்சிக்க, தூரத்து வெளிச்சத்தில் ரோட்டில் மூன்று தடியன்கள் நின்றிருந்தனர். அவர்கள் அருகில் ஒரு காரும் நின்றிருந்தது. ‘சத்தம் போட முயற்சிக்காதே. மூன்று பேரும் பஸ்சில் ஏறி உன்னை பந்தாடிவிடுவார்கள். நீ கிழித்த ஜாக்கெட் அப்படியே இருக்கிறது பார்த்தாயா!’ என்றாள்.

பஸ் நின்றது. வேகமாக இறங்கிய அவள், அந்த தடியர்களிடம் இவரை அடையாளங்காட்டினாள். அவர்கள் சைகையால் ‘வாயை பொத்திக்கொண்டு செல்’ என்று சைகையால் மிரட்டினார்கள். அவள் தடியர்களோடு காரில் ஏறினாள். இவர் இருந்த பஸ்சும் கிளம்பியது.

அவர்கள் திட்டமிட்டு காரில் வந்து, அவளை பயன்படுத்தி வழிப்பறி செய்திருக்கிறார்கள். காரியம் முடிந்ததும், அதே காரில் முந்திச் சென்று காத்திருந்து, அவளை ஏற்றிச்சென்றுவிட்டார்கள்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க!

காப்பகம்