Tuesday, August 20, 2013

பொது அறிவு தகவல் துளிகள்!



• கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. 
 
• இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.
 

 
• தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.
 

 
• சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.
 

 
• உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.
 

 
• ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.
 

 
• உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.
 

 
• தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.

• அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
 

 
• உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.
 

 
• இந்தியாவின் முதல் பைலட் ஜே.ஆர்.டி.டாட்டா.


• இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பிய வீரன் அலெக்ஸாண்டர்.

• குதிரை லாயத்தில் வேலை செய்தவரின் மகன்தான் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். 
 
• எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே தம் வாழ்நாளில் பேனா பிடித்ததில்லை. பென்சில்தான்.
 

 
• கிரேக்க நாட்டு தேசியகீதம்தான் உலகின் மிக நீளமான தேசியகீதம். 128 வரிகள்.
• மின்சார ரயிலை இயக்க 16 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது. 
 
• உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் வளரக்கூடிய ஒரே பிராணி நாய்.

• அதிகாலை நேரத்தில் மட்டுமே வாத்துகள் முட்டையிடும்.
 

 
• கைக்குட்டை, பதினான்காம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

• எகிப்திய இதிகாசத்தில் "இசிஸ்' என்ற பெயர் "ராணி'யைக் குறிக்கின்றது.

• கடல் வழியே அனுப்பப்படும் தந்திக்கு "கேபிள்' என்று பெயர்.
 
• ஜப்பானில் மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதுவதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

• முதன் முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது. 
 
• தமிழ்ப் பத்திரிகைகளில் முதன் முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் மகாகவி பாரதியார்.
  

 
• ஜப்பானியர்களுக்கு 3 என்ற எண் பிடிக்காது.
 

 
• ஒரு குண்டூசியின் தலைப் பரப்பில் பத்தாயிரம் பாக்டீரியாக்களை அடுக்க முடியும்.
 
• இமய மலையில் வசிக்கும் யாக் எருமையின் பால் பழுப்பு நிறத்தில் இருக்கும். 
 
• டி.வி.ஆன்டெனா, சமயங்களில் இடிதாங்கியாகவும் செயல்படும்.

• டிப்பர் என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்குச் சென்று, இரையைப் பிடிக்கும்.
 

 
• ஆழ்கடலைப் பற்றி ஆராயக்கூடிய இயலுக்கு ஓஷனோகிராஃபி என்று பெயர்.
 

 
• இந்தியாவில் 22,000-க்கும் மேற்பட்ட ரெயில்வே லெவல் கிராஸிங்குகளுக்கு மூடுகதவே (கேட்) கிடையாது.
 

 
• இந்தியாவில் முதன் முதலாக மின்சார வசதியைப் பெற்றது கல்கத்தா நகரம்.
• 10 நிமிடங்கள் ஓடக்கூடிய கார்ட்டூன் திரைப்படத்துக்கு சுமார் 1,100 சித்திரங்கள் தேவைப்படும். 
 
மனிதனின் தும்மல் வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர்கள் தூரம் இருக்கும்.
• உலகிலேயே அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். 
 
• உலகிலேயே சீனாவில்தான் சைக்கிள்கள் அதிகம்.
 

 
• ஜோக்ஸ் சொல்லித் தருவதற்கென்றே ஒரு கல்லூரி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் உள்ளது.
 

 
• உலகில் அதிக அளவு கண்தானம் வழங்குபவர்கள் இலங்கைக்காரர்கள்தான்.
 

 
• கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒ
üவையாருக்கு மூன்று கோயில்கள் உள்ளன. 
• உலகிலேயே அதிக அளவில் தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியாதான்.

• முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.
 

 
• நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.

• ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.
 
• உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.
 

 
• பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.
 

 
• விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.
 

 
• ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.

• யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.
 
• விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.
 
• ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்.
 
 

பயனுள்ள வீட்டு குறிப்புகள்



பயனுள்ள வீட்டு குறிப்புகள்:

நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்புகள்:

1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.
 
2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.

3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.


4. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.

5. புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

6. தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.


7. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.


8. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.


9. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.

10. ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும். 

11.  பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.

12.  வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.

13. மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.

14. மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

15. பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

16. தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம். 

17. காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும். 

18. தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்.

19. துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

20. பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.

21. வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.

22. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.

சென்னையின் சுற்றுலா தளங்கள்...




சென்னையின் சுற்றுலா தளங்கள்...


மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

வள்ளுவர் கோட்டம் : உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை.

பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி. பருமன் இரண்டரை அடி. தேரின் உயரம் 101 அடி. அதன் மேலுள்ள கலசம் 5 அடி. தேரின் அடித்தள அடுக்கில் நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட குறள்களின் விளக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கருவறை, தரையிலிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது. 10 அடி அகலத்தில் எண்கோண வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.

அரங்கம்:
தோரண வாயில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூண்கள் ஏதுமில்லாத அரங்கத்தின் நீளம் 220 அடி; அகலம், 100 அடி. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்று. 4,000 பேர் வரை அமரலாம். அரங்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. மேல் மாடியில் மைய மாடமாக ஒரு தாழ்வாரம் உள்ளது. அது, குறள் மணிமாடம்.

குறள் மணிமாடம்:
இம்மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன.

வேயா மாடம்:
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நீர்நிலைகள் உள்ளன. அவை, கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் பிம்பங்களைக் காணும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் : சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் இருக்கிறது. 1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. கீழ்த்தள ஹால் பெரியது. 1950களில் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் இந்த ஹாலினை அலங்கரிக்கிறது. பல தலைவர்களோடு எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அரியப் புகைப்படங்கள் இல்லம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது.


மாமல்லபுரம் : தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கபடுகிறது. இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவில் இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700 - 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.

சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா (வண்டலூர் பூங்கா) : அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா சென்னையின் தெற்கு பகுதியில் 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது.

கிண்டி தேசியப் பூங்கா : சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் மில்பர்ட்டு ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது, பின்னர் 1958ல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது.

வேடந்தாங்கல் : வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது (மொத்தப் பரப்பு 30 ஹெக்டேர்). இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

விவேகானந்தர் இல்லம் : விவேகானந்தர் இல்லம் சென்னையில் உள்ளது. இது 'ஐஸ் ஹவுஸ்' (Ice House) எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1900 ஆம் ஆண்டு ஆறு வாரங்கள் தங்கியிருந்தார். இந்த கட்டிடம் 1877 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது சென்னையில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

சாந்தோம் தேவாலயம் : சாந்தோம் சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் செயிண்ட் தாமசு என்ற கிறித்தவ புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. சான் தோம் என்றால் புனித தோமா என்று பொருள். உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி இயேசு கிறித்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். கி.பி72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு இத்தாலிய உலகப்பயணி மார்கோ போலோ 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார்.

தமிழக மலை வாசஸ்தலங்கள்!



தமிழக மலை வாசஸ்தலங்கள்:

கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்:
1. பிரையண்ட் பார்க்
2.தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
3.தூண் பாறைகள்
4.கவர்னர் தூண்
5.கோக்கர்ஸ் வாக்
6.அப்பர் லெக்
7.குணா குகைகள்
8.தொப்பித் தூக்கிப் பாறைகள்
9.மதி கெட்டான் சோலை
10.செண்பகனூர் அருங்காட்சியம்
11.500 வருட மரம்
12.டால்பின் னொஸ் பாறை
13.பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
14.பியர் சோலா நீர்வீழ்ச்சி
15.அமைதி பள்ளத்தாக்கு
16.குறிஞ்சி ஆண்டவர் கோயில்
17.செட்டியார் பூங்கா
18.படகுத் துறை
19.வெள்ளி நீர்வீழ்ச்சி
20.கால்ஃப் மைதானம்
21.தற்கொலை முனை

ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்:
1.ரோஜா பூங்கா
2.படகு இல்லம் 
3.தாவரவியல் பூங்கா
4.தொட்டபெட்டா சிகரம்
5. குழந்தைகள் பூங்கா 

பிற பார்க்க வேண்டிய இடங்கள் :
1.கொடநாடு
2.பகாசுரன் மலை
3.பைகாரா நீர்வீழ்ச்சி
4.முதுமலை வனவிலங்குகள் சரணாலயம்
5.கோத்தகிரி

"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)"




பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)


APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்

BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்

DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

EUGENIA RUBICUNDA - சிறுநாவல்

GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்

HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி

JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்

KIWI - பசலிப்பழம்

LYCHEE - விளச்சிப்பழம்

MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி

O - வரிசை
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்

PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்

QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்

TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்

UGLI FRUIT - முரட்டுத் தோடை

WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE - விளாம்பழம்

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்படி?



வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்படி?

இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். 

ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில்  சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

1. http://subscene.com/
2. http://www.opensubtitles.org/
3. http://www.moviesubtitles.org/
 
 
 
பொதுவாக சப்-டைட்டில் கோப்புகள் .SRT or .SUB என்ற பார்மேட்டில் முடியும். உங்களுக்குத் தேவையான சப்-டைட்டிலை டவுன்லோடு செய்து விட்டு அந்த படத்தின் பெயரை சப்-டைட்டிலுக்கும் Re-name செய்து விட்டால் படத்தைக் கிளிக் செய்து பார்க்கும் போது தானாக வந்து விடும்.

Example : Movie Name – Dookudu.avi , Sub-title Name – Dookudu.srt
 
 
இல்லாவிட்டால் VLC மீடியா ப்ளேயரில் படத்தினைத் திறந்து விட்டு மெனுவில்Video -> Subtitles Track -> Open File என்று கிளிக் செய்து நீங்கள் டவுன்லோடு செய்த சப்-டைட்டிலைத் தேர்வு செய்தால் போதும். 

தமிழக பல்கலைக்கழகங்கள்!



தமிழக பல்கலைக்கழகங்கள்:

தமிழகத்திலுள்ள பல்கலைகழகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பெயர் மேல் சொடுக்கி அவற்றுக்கான இணையதளத்திற்கு செல்லலாம்.
  1. அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை
  2. அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
  3. அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி
  4. அழகப்பா பல்கலைக்கழகம்
  5. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
  6. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
  7. பாரதியார் பல்கலைக்கழகம்
  8. பெரியார் பல்கலைக்கழகம்
  9. காந்தி கிராமிய ஊரகப் பல்கலைக்கழகம்
  10. இந்திய தொழிற்நுட்ப நிறுவனம்
  11. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
  12. மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
  13. அன்னை தெரசா பெண் பல்கலைக்கழகம்
  14. தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
  15. தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம்
  16. தமிழ் நாடு கால்நடை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம்
  17. தமிழ் நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
  18. தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
  20. சென்னைப் பல்கலைக்கழகம்
  21. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  22. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
  23. தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
  24. தமிழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

பயனுள்ள இணையதள தொகுப்புகள்!



பயனுள்ள இணையதள தொகுப்புகள்:

இங்குள்ள சில இணைப்பி(லிங்க்)-ல் ஏதேனும் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றுள்  உள்ள நம்பகத்தன்மையை பார்த்து பயன்படுத்தவும்.

1. Voter ID Online Registration

2. பட்டா / சிட்டா அடங்கல்

3. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

4. வில்லங்க சான்றிதழ்

5. பிறப்பு சான்றிதழ்

6. இறப்பு சான்றிதழ்

7. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

8. இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

9. ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு (E-டிக்கெட்) முன் பதிவு

     I. TNSTC

     II. IRCTC.co.in

     III. Yatra.com

     IV. Redbus.in

10. விமான பயண சீட்டு

     I. Cleartrip

     II. Myke My Trip

     III. Ezeego1

11. BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

12. Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

     I. Oximall.com

     II. Rechargeitnow.com

     III. Itzcash.com

13. E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

14. E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி

     I. Ebay.co.in

     II. Indiatimes.com

     III. Rediff.com

15. Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி

     I. Icicidirect.com

     II. Hdfcsec.com

     III. Religareonline.com

     IV. Kotaksecurities.com

     V. Sharekhan.com

16. மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

     I. Sbi.co.in

     II. Indianbank.in

     III. Ibo.in

     IV. Bankofindia.com

     V. Bankofbaroda.com

     VI. Axisbank.com/b>

     VII. Hdfcbank.com

17. பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி

     I. Tn.gov.in

     II. Tnresults.nic.in

     III. Dge3.tn.nic.in

     IV. Dge2.tn.nic.in

     V. Pallikalvi.in

     VI. Southindia.com

     VII. Chennaionline.com

     VII. Chennaionline.com

18. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

19. இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

     I. Classteacher

     II. Lampsglow

     III. Classontheweb.com

     IV. Edurite

     V. Cbse.com

20. 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

21. UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

     I. Tnpsc.gov.in

     II. Upsc.gov.in

     III. Upscportal.com

     IV. Iba.org.in

     V. Rrcb.gov.in

     V. Trb.tn.nic.in

22. உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி

     I. Employmentnews.gov.in

     II. Omcmanpower.com

     III. Naukri.com

     IV. Monster.com

23. இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

     I. Ssbrectt.gov.in

     II. Bsf.nic.in

     III. Indianarmy.nic.in

24. இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

25. Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி

     I. Skype.com

     II. Gmail.com

     III. Yahoochat

     IV. Meebo

26. அடிப்படை கணினி பயிற்சி

     I. Homeandlearn.co.uk

     II. Intelligentedu.com

     III. Ehow.com

27. சிறார்களுக்கு கணினி பயிற்சி

28. இ – விளையாட்டுக்கள்

     I. Zapak.com

     II. Miniclip.com

     III. Pogo.com

     IV. Freeonlinegames

     V. Roundgames.com

29. ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்

     I. Google.com

     II. Wikipedia.com

     III. Hotmail.com

     IV. Yahoo.com

     V. Ebuddy.com

     VI. Skype.com

30. தகவல் அறியும் உரிமை சட்டம்

     I. Rti.gov.in

     II. Rtiindia.org

     III. India.gov.in

     IV. Rti.org

31. சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி

     I. Incredibleindia.org

     II. India-tourism.com

     III. Theashokgroup.com

     IV. Smartindiaonline.com

32. திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி

     I. Tamilmatrimony.com

     II. Kalyanamalai.net

     III. Bharatmatrimony.com

     IV. Shaadi.com

33. குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய

34. ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள

     I. Koodal.com

     II. Freehoroscopesonline.in

35. இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி

36. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்

37. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்

     I. Tnfinds.com

     II. Justdial.com

38. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்

     I. Tnfinds.com

     II. Justdial.com

     I. Tnfinds.com

     II. Justdial.com

     I. Tnfinds.com

     II. Justdial.com

     II. Justdial.com
 
 

காப்பகம்