Thursday, August 21, 2014

அஜீரண பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம் - இதோ உங்களுக்காக...!

நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.

மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். இந்த அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பலன் அடைய முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்.

• வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமநிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. இதில் குறைவான அமிலத் தன்மை இருப்பதால் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

• துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

• பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது.

எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

• புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவையூட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்றில் அமிலத்தைக்குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.

வெட்கபடுகிறேன்,எனது இதயம் உடைந்து போய் உள்ளேன- ஜாக்கி சான்

போதை பொருள வழக்கில் மகன் கைது: வெட்கபடுகிறேன்,எனது இதயம் உடைந்து போய் உள்ளேன- ஜாக்கி சான்

பிரபல நடிகர் ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி ஜான் (வயது 31),தைவான் சினிமா நடிகர் கெய் கோ( வயது 23) ஆகியோர்   கடந்த வியாழக்கிழமை கைது செய்யபட்டனர். அவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில்  தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் ஜெய்சி ஜான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தனது மகன் கைதானது குறித்து பிரபல நடிகர் ஜாக்கி ஜான்  எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் இந்த நிலையில்  அவர் தனது சமூக வலைதளத்தில்   இதற்கு நான் வெட்கபடுகிறேன், எனது இதயம் உடைந்து போய் உள்ளேன் என கூறி உள்ளார்

இனையதளத்தில் அவர் எழுதி உள்ளதாவது:

“ இந்த பிரச்சினை தொடர்பாக, நான் கோபமாகவும் அதிர்ச்சிகரமாகவும் உணர்கிறேன். நான் பிரபலமானவன் என்ற அடிப்படையில் இதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன். தந்தை என்ற அடைப்படையில் எனது இதயம் உடைந்து போய் இருக்கிறேன்” ”ஜெய்சி மற்றும் நான்   இந்த சமூகத்திடமும் , பொதுமக்களிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்”

’’அனைத்து இளைஞர்களும் ஜெய்சியை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும் போதை பொருள் ஒரு தீங்கானது’’.

’’ஜெய்சி க்கு நான் கூறிக்கொள்கிறேன் தவறு செய்யும் போது  அதற்குரிய விளைவுகளை ஏற்று கொள்ள வேண்டும். உனது தந்தை என்ற நிலையில் வருபவைகளை உன்னுடன் சேர்ந்து எதிர்கொள்ள போகிறேன் ’’


இவ்வாறு அவர் அதில் எழுதி உள்ளார். 

அஞ்சான்: ஆன்லைன் விமர்சனங்கள் - உங்களுக்காக..!

“என் பாதையில் முள்ளைப் போட்டு விடாதீர்கள்” என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு கச்சை கட்டிகொண்டு ‘அஞ்சான்’ படத்தை வலைதளங்களில் கிண்டலடித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிண்டல்களில் சில:


* ‘அஞ்சான்’ சஸ்பென்ச யார் கிட்டயும் சொல்ல வேணாமாம். நான் படம் பாத்ததையே சொல்லல, போர வர்றவன் எல்லாம் கலாய்க்கிறான்.

- மேவரிக்

* இறைவா, அஞ்சானை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சூர்யா ரிஜக்ட் பண்ண லிங்குசாமியின் மற்ற இரண்டு கதைகளில் இருந்து எங்களை காப்பாற்று.

- மொக்கராசு

* “3 நாட்களில் ‘அஞ்சான்’ வசூல் 30 கோடிப்பு 30 கோடி”

“30 கோ..! டி நீ பாத்த..?”

“ஆமாப்ப்ப்பு.. 30 கோடிப்பு!!”

- மண்டசகாயம்

* தன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போறதில்லைன்னு மனைவி சொல்லிட்டே இருக்கா.. அஞ்சானுக்கு கூட்டிட்டு போனா என்ன? #ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

- நாட்டி நாரதர்

* அஞ்சான் படத்துல 20 நிமிடம் காட்சி குறைப்பு..! (கண்ணாடியை திருப்புனா மட்டும் எப்படி ஜீவா வண்டி ஓடும் ??)

- சேட்டு

* அஞ்சான் நல்லா இல்லைன்னு சொல்லல, நல்லா இருந்திருக்கலாம்னுதான் சொல்றோம் // இப்படிக்கு பாலீஷா விமர்சிக்குற குரூப்பு

- அறுவை சர்ஜன்

* அஞ்சான் மொக்கையா இருந்தாலும் தாங்கிப்பேன்டா, ஆனா அஞ்சானுக்கு பயந்து எக்ஸ்பேன்டபிள் 3 ரிலீஸ தள்ளி போட்டானுங்கன்னு சுட்டாங்க பாரு ஒரு வடை.. அதான்டா தாங்க முடியலை.

ரஜினி போல நான் சூப்பர் ஸ்டார் அல்ல: ஷாரூக் கான் பேட்டி

நடிப்பால் மட்டுமின்றி நாவன்மையாலும் மக்களைக் கவரும் பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான் நடிக்கத் தொடங்கி 26 ஆண்டுகள் ஆகின்றன. ‘ஃபவுஜி’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய இந்த வசீகர நட்சத்திரம், தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் தனது ‘ஹேப்பி நியூ இயர்’ என்னும் படத்துக்கான டிரெயிலரை வெளியிடத் தயாராக இருக்கிறார். 48 வயதான இந்த நட்சத்திரத்தை அவரது மும்பை அலுவலகத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து…

நடிப்பைப் பொறுத்தவரை நீங்களே உருவாக் கிக்கொண்ட சூத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டதாக உணர்ந்திருக்கிறீர் களா?

நான் வெகுஜன சினிமாவில் இருக்கிறேன். அதற்கென்று சில அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களின் எல்லைக்குள்தான் நான் இருக்கிறேன். அந்த வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வர வேண்டும் என்று நினைக்கும்போது ‘சக் தே இந்தியா’, ‘ஸ்வதேஷ்’, ‘மை நேம் ஈஸ் கான்’, ‘பஹேலி’, ‘அசோகா’ போன்ற படங்களில் நடிக்கிறேன்.

நான் வேலை செய்ய வேண்டுமே என்பதற்காக இந்த வேலையைச் செய்யவில்லை. பணத்துக்காகச் செய்யவில்லை. யாருக்கோ கட்டுப்பட்டுச் செய்யவில்லை. வேறு எந்த வேலையும் இல்லை என்பதற்காகச் செய்யவில்லை. இது உண்மையிலேயே அருமையான வேலை என்று நான் நினைப்பதால் செய்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அதன் கதை கோருவதைவிடவும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சம் இந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று இந்தத் துறையில் இருக்கும் யாராவது சொன்னால் அதை நாங்கள் செய்கிறோம். ஏனென்றால் இது வெகுஜன உலகம். வெகுஜனச் சந்தை. ஆனால், இதைக் கொஞ்சம் மாற்றலாமே, இப்படி நிறைய வந்துவிட்டதே என்றும் நான் சொல்வேன். மாற்றம் என்பது கொஞ்சம் தான் இருக்கும். வணிக சினிமா அளவுகோல்களிலிருந்து கொஞ்சம்தான் மாறியிருக்கும்.

எல்லாப் படங்களிலும் ஷாரூக் கான் ஷாரூக் கானாகவேதான் இருக்கிறார் என்று விமர்சகர்கள் சொல்லும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்னுடைய நடிப்புத் திறனை நான் அடக் கியே வாசிக்கிறேன். நான் என்னை சீரியஸான நடிகனாக நினைத்துக்கொள்வதில்லை ஆனால் அதற்காக நான் சீரியஸான நடிகர் அல்ல என்று அர்த்தமில்லை.

நான் நிறைய நடித்திருக்கிறேன். அதுபற்றி எனக்குப் பெருமிதமும் கர்வமும் உண்டு. நான் மேடை நாடகங்களில் நடிப்பைப் பயின்றவன். வீதி நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒத்திகை இல்லாமல் நடித்திருக்கிறேன். விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான நாடகங்களில் நடித்திருக்கிறேன். பஞ்சாபி சீரியலில் நடித்திருக்கிறேன். டிவி ஷோக்கள் செய்திருக்கிறேன். சினிமாவில் நடித்திருக் கிறேன். அடி மட்டத்திலிருந்து படிப்படியாக மேலே வந்திருக்கிறேன். ஒன்றும் தெரியாத ஒருவரால் 25 ஆண்டுகளாகச் சீராக வளர்ச்சி பெற முடியாது. பிரியாணி எப்படிச் செய்வது என்று சொல்வது அலுப்பூட்டும் விஷயம். சாப்பிடுவது அருமையான விஷயம். நான் அதைத்தான் செய்துகொண்டிருக் கிறேன்.

ரஜினிகாந்தைப் பற்றிக்கூட இதே விமர்சனத்தைத்தான் முன்வைக்கிறார்கள். நீங்கள் நடிப்பை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டுமா என்பதுதான் கேள்வி.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார். நான் சூப்பர் ஸ்டார் அல்ல. நான் உழைக்க வேண்டும். நான் என்னைப் புதிதாகக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். என்னை மட்டுமல்ல, என்னைச் சுற்றியுள்ள சினிமாவையும் புதிதாகக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உங்களால் காமெடி செய்ய முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். நான் கடைசியாக காமெடி செய்த படம் பாத்ஷா. மறுபடியும் மக்கள் விரும்பும் விதத்தில் காமெடி செய்யலாம் என்று நான் முடிவுசெய்தேன். என்னால் அதுவும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ செய்தேன். அதற்கு முன்னால் ‘ஜப் தக் ஹை ஜான்’. அது கவித்துவமாகச் செய்யப்பட வேண்டிய பாத்திரம். அப்படியும் ஒரு மனிதன் இருக்கிறான் என்று மக்களை நம்பவைக்க வேண்டும். அது காதல் கதை. ஒரு ஆண், பெண், கடவுள் ஆகியவர்களுக்கிடையேயான முக்கோணக் காதல். அதிலும் செயற்கையான காட்சிகள் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் அது வெகுஜன சினிமா. அதிலும் ரொமான்ஸ் இருக்கும். ஏனென்றால் அது வெகுஜன சினிமா. இந்த வெகுஜன சினிமாவுக்குள் நான் நானாக தோன்றும்போதும் வித்தியாசமாக இருப்பது எப்படி என்பதுதான் எனக்கு நான் உருவாக்கிக்கொள்ளும் சூத்திரம்.

நேர்மையாகச் சொல்லப்போனால் ‘ஸ்வதேஸ்’, ‘சக் தே இந்தியா’, ‘அசோகா’ ‘பஹேலி’ போன்ற படங்கள் எடுப்பதற்கு எளிதானவை. யதார்த்தமாக எடுப்பது சுலபம். யதார்த்தமான கதைகளில் நாம் செட்டுக்குச் சென்று, பேப்பரில் என்ன இருக்கிறதோ அதைப் பேசினால் போதும். ஒரு கனவை, நிஜமற்ற ஒரு காட்சியை, நம்ப முடியாத விஷயத்தை உள்வாங்கி நம்பும் விதத்தில் வெளிப்படுத்துவதுதான் கஷ்டம். இதுபோன்ற வேடங்களில் நான் கடவுளோடு மல்லுக்கு நிற்க வேண்டும். உலக சாம்பியனாக வேண்டும். இதையெல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவது ஒரு நடிகனுக்குச் சாதாரண விஷயமல்ல.

யதார்த்தமான ஒரு களத்தில் போய் நின்றதுமே என்னுடைய வேலை 80 சதவீதம் முடிந்துவிடுகிறது. உதாரணமாக மைதானத் தில் ஹாக்கி கோச்சாக நடிப்பது. நிஜ உல கின் பின்னணியில் என்னைக் கொண்டுபோய் நிறுத்தினால் நான் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். நிஜமற்ற பாத்திரங்களில் நடிக்க ஒரு நடிகர் தனது கற்பனையையும் அந்தப் பாத்திரத்தின் மீதான தனது நம்பிக்கையையும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டும். ஆட்டிசம் என்பது புதிதுதான்; ஆனால் ஆட்டிசம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களைப் பார்த்திருப்பீர்கள். தேவதாஸாக நடிப்பது சுலபம். ஏனென்றால் எல்லா ஆண்களும் அப்படித்தான். யதார்த்தமற்ற, அதீதமான கதாபாத்திரங்களை நடிப்பதுதான் கஷ்டம். நம்ப முடியாத ஒரு உலகத்தை உருவாக்கி அதற்குள் உங்களை ஈர்த்து நம்ப வைக்க வேண்டும். இது ரொம்பவும் கஷ்டமானது.

புனைவு சில சமயம் நடப்பை விடவும் ஆழமாக உண்மைக்குள் சென்றுவிடுகிறது என்று ஃப்ரெஞ்ச் இயக்குநர் ழான் க்லாட் காரியர் சொல்லியிருக்கிறார்…

புனைவு நமது மிக ஆழமான ஆசை களை நிறைவேற்றிக்கொள்ளும் விருப்பம் கொண்டது. நீங்கள் பறக்க விரும்புகிறீர்கள். ஆனால் முடியாது. புனைவு இதை நிறைவேற்றுகிறது.

பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலைத் தாண்டுவதுதான் இப்போது புதிய இலக்கா?

200 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. எண்களைத் தாண்டிவிடலாம். கனவுகள் நெகிழ்வானவை. என்னுடைய படம் நன்றாக ஓட வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் நான் மேலும் பெரிய படம் எடுக்க முடியும். ‘ஹேப்பி நியூ இயர்’ நன்றாக ஓடினால் ‘ரா ஒன் 2’ எடுக்கலாம். மறுபடியும் சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசையாக இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் உங்கள் மனநிலை எந்த அளவு மாறியிருக்கிறது?

நான் மேலும் தனியனாகிவிட்டேன். நான் பார்ட்டியில் நேரத்தைக் கழிக்காமல் என்னுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் எப்போதும் என்னைப் பார்க்கவும் பேசவும் விரும்புகிறார்கள். எப்போதும் விளக்குகள் ஒளிர்கின்றன. குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ட்விட்டரில் எப்போதும் ஏதாவது நடக்கிறது. என் முகத்தில் எப்போதும் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கதவைச் சாத்திக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

கடமை என்னிடம் கோருவதைவிடவும் அதிகமாக நான் மக்களை மகிழ்ச்சியடைய வைக்கிறேன். சில சமயம் பிழைப்புக்காக. சில சமயம் நண்பர்களுக்காக… 25 ஆண்டுகளில் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். இனிமேலும் எனக்கு மகிழ்ச்சி தராத விஷயங்களைச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. இங்கே வா, அங்கே வா, என் படத்தைப் பார் என்றெல்லாம் என்னைக் கூப்பிடுகிறார்கள். எனக்குப் போகப் பிடிக்கவில்லை. படம் எடுப்பது என் வேலை. அவ்வளவுதான். வேறு எந்த அறிவும் எனக்குத் தேவையில்லை.

‘கிங் அங்கிள்’ படத்தில் நடித்தபோது நடந்தே செல்வேன். காலை ஆறரை மணிக்கு மெஹ்பூப் ஸ்டூடியோவுக்கு நடப்பேன். மதியம் இரண்டரை மணிக்குத் திரும்ப வருவேன். மக்கள் என்னை நிறுத்திப் பேசுவார்கள். அப்போது ‘தீவானா’ ஹிட் ஆகியிருந்தது. நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நான் எப்போது ஸ்டார் ஆனேன் என்பதும் எனக்குத் தெரியாது.

காப்பகம்