Tuesday, January 21, 2014

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன் - நஸ்ரியா உஷார்..!



 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது.

 இயக்குனர்களுடன் மோதல்போக்கு கடைபிடித்தால் பட வாய்ப்பு பறிபோகுமே என்று அவரிடம் கேட்டபோது, ‘நய்யாண்டி விவகாரம் வெளியில் தெரிந்தது ஒரு வகையில் எனக்கு பிளஸ்தான். என்னை வைத்து படம் எடுப்பவர்கள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை புரிந்துகொள்ள அந்த விவகாரம் உதவி இருக்கிறது. அதே நேரம், இனி சர்ச்சையில் சிக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

நஸ்ரியா தமிழில் நடித்துள்ள திருமணம் என்னும் நிக்ஹா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். ‘சல¢லால மொபைல்ஸ்‘ என்ற படத்துக்காக சொந்த குரலில் நஸ்ரியா பாட்டு பாடி இருக்கிறார்.

 இப்பாடல் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நஸ்ரியா தனது இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். தான் பாடிய பாடலுக்கு என்ன பொருள் என்பதை விளக்கி இருக்கிறார். ‘கோழிக்கோடு மலையாள பேச்சு வழக்கு இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது‘ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment

காப்பகம்