Saturday, January 18, 2014

பெண்களே உஷார் உஷார்...

பெண்களே உஷார் உஷார்...
 

வெளி இடங்களில் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்...!

துபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டின் பெண்கள் பயன் படுத்தும் டாய்லெட்க்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண் ஒருவர், உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி அடிப்பதை கேட்டு திடுக்கிட்டார்.

செல்போனை எடுத்து பார்த்த அந்த பெண் , அதில் டாய்லெட்டை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாண படபதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து, சூப்பர் மார்கெட்டின் நிவாகியிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணிபுரியும் ஒரு இந்தியருக்கு சொந்தமானது என்று தெரியவந்து,

அவர் கைது செய்யப்பட்டு 3 மாதம் ஜெயில் என்றும் தீர்ப்பாகியது, அதுக்குபிறகு துபாயை விட்டும் வெளியேற்ற படுவார்.

வெளியே எந்த இடங்களிலும் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்.

பட்டன் சைஸ் கேமராக்கள் எல்லாம் உலா வரும் காலம் இது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் கூட வெளி ஆட்களை கொண்டு ரிப்பேர் போன்ற வேலைகள் (குறிப்பாக டாய்லெட், பெட்ரூம் போன்ற இடங்களில்) முடிந்தபின்பு அந்த இடங்களை சோதனை செய்து பார்த்துகொள்ளுங்கள்.
நன்றி:முக்கியசெய்திகள்

0 comments:

Post a Comment

காப்பகம்