Tuesday, January 21, 2014

நடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்..!



தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கதாநாயகிகளாக தேடிப்பிடித்து சென்று கடலை போடுவார் சந்தானம். படப்பிடிப்பு பேக்கப் ஆனாலும் மணிக்கணக்கில் அம்மணிகளுடன் கலகலத்து விட்டே விடைபெறுவார். இதெல்லாம் ஆர்யா அவருக்கு காட்டிக்கொடுத்த ஜாலியோ ஜிம்கானா. ஆனால், இப்போது ஆர்யாவுக்கு பிக்கப் நடிகர் என்று சில நடிகர்கள் மேடைகளிலேயே அட்டாக் கொடுத்ததால் இனியும் நடிகைகளுடன் சகவாசம் வைத்துக்கொண்டால், இமேஜ் டேமேஜாகி விடும் என்று கடலை போடுவதை விட்டு விட்டார். அவரைப்பார்த்த சந்தானமும், காமெடியனுக்கு மட்டும் இமேஜ் இல்லையா? என்ன? என்று சொல்லிக்கொண்டு தானும் அரட்டையை நிறுத்தி விட்டார்.

யாராவது, நடிகைகள், தான் சீரியசாக காமெடி சீன் யோசித்துக்கொண்டிருக்குபோது அருகில் வந்து அமர்ந்து, வாயாடத் தொடங்கினால், செம காண்டாகி விடுகிறார். சிரிக்க வைக்க எதையாவது சிந்திக்கிறப்ப என்னை சீரியசாக்கிடாதே என்று அம்மணிகளை விரட்டியடிக்கிறார்.

ஆனால் இப்படி அவர் திடுதிப்பென்று மாறியதற்கு இமேஜ் மட்டுமே காரணமில்லையாம். கவுண்டமணி, வடிவேலு போன்ற மெகா காமெடியனகள் ரீ-என்ட்ரி ஆகியிருப்பதால், இந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்தால் வீணாகி விடுவோம் என்று உஷாரான சந்தானம், மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொள்வது முயற்சியாக தீவிரமாக யோசிக்கத் தொடங்கி விட்டாராம்.

 முன்பைவிட தான் நடிக்கும் காமெடி காட்சிகள் இனி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் சதா சிந்தனையிலேயே சிறகடிக்கிறாராம் சந்தானம். அதனால் அவரை பார்ப்பவர்களுக்கு அவர் சீரியசாக மாறிவிட்டது போலவே தெரிகிறதாம்.

0 comments:

Post a Comment

காப்பகம்