Tuesday, January 21, 2014

குடியரசு தினத்தில் ரிலீஸாகும் படங்கள்.....



குடியரசு தினத்தையொட்டி ‘நேர் எதிர்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘கோலி சோடா’, ‘நினைத்தது யாரோ’ ஆகிய 4 புது படங்கள் ரிலீசாகிறது.

பொங்கலுககு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் வந்ததால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் பொங்கலுக்கு சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தற்போது அவை குடியரசு தினத்தையொட்டி வருகின்றன.

‘நேர் எதிர்’ படத்தில் ரிச்சர்ட், பார்த்தி வித்யா, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெய பிரதீப் இயக்கியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.

‘கோலி சோடா’ படம் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் தயாராகியுள்ளது. கிஷோர், பாண்டி போன்றோர் நடித்துள்ளனர். குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பரத் சீனி தயாரித்து உள்ளார்.

‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. நடிகை ஸ்ரீப்ரியா இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரிஷ், நித்யா மேனன் நடித்துள்ளனர். ஆண்களின் வக்கிரமங்களுக்கு எதிராக போராடும் இளம் பெண்ணை பற்றிய கதை.

‘நினைத்தது யாரோ’ படத்தை விக்ரமன் இயக்கியுள்ளார். நாயகனாக ரஜித், நாயகியாக நிமிஷா நடித்துள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், இமானுவேல் தயாரித்து உள்ளனர். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. ஸ்டுடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

0 comments:

Post a Comment

காப்பகம்