Sunday, August 17, 2014

“டீஸருக்கு வெற்றி விழா கொண்டாடும் போதே தெரியும், நீங்க பெருசா பல்பு வாங்குவீங்கன்னு”

சிங்கம்-2 படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் அஞ்சான். இந்த படம் டான் கதையில் உருவாகியுள்ளது. விஜய் நடித்த தலைவா படம் போன்று மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய பப்ளிசிட்டிகள் முடுக்கி விடப்பட்டு, தமிழகத்தின் முக்கியமான தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தியேட்டர் ரெஸ்பான்ஸை அறியும் நோக்கத்துடன் படம் வெளியான அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தேவி தியேட்டர் வளாகத்திற்கு அஞ்சான் படத்தை இயக்கியுள்ள டைரக்டர் லிங்குசாமி விசிட் அடித்தாராம்.


படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஓரமாக நின்று ரசிகர்கள் எந்த மாதிரியான காட்சிகளுக்கு எந்த மாதிரி ரியாக்சன் செய்கிறார்கள் என்பதை அறிந்தவர், படம் முடிகிற நேரத்தில் தியேட்டருக்கு வெளியே சில நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தாராம்.

ஆனால், அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட சில ரசிகர்கள், தூரத்தில் நின்றபடியே படம் ரொம்ப போர் என்று கத்திக்கொண்டே சென்றார்களாம். அதைக்கேட்ட லிங்குசாமி பலத்த அதிர்ச்சியடைந்து விட்டாராம். அதோடு, இதற்கு மேலும் இங்கு நின்றால் சரிவராது என்று உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து வெளியேறி விட்டாராம்.

0 comments:

Post a Comment

காப்பகம்