Sunday, August 17, 2014

உஷார்.. உஷார்... உயர் ரத்த அழுத்தம் - உங்களுக்கு 40 வயசாகிடுச்சா..?

மிதமிஞ்சிய ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்க வாதம், மூளையில் ரத்தக்குழாய் வெடிப்பு, அறிவுத்திறன் குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்தாலும், கால் தசைப்பிடிப்பு, தலைசுற்றல், உறக்கமின்மை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

 அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவர்களால் தங்களுடைய ரத்த அழுத்தத்தை மருந்தில்லாமல் இயற்கையாகவே குறைக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. மருந்துகளுக்கு பதிலாக இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


ரத்த அழுத்தம் குறைக்கும் முறை குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது, 

மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற தியானப் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைக்க இந்தப் பயிற்சிகள் உதவும். மெதுவாக மூச்சு விட்டபடி மென்மையான பாரம்பரிய இசையை தினமும் அரை மணி நேரத்திற்கு கேட்டால் ரத்த அழுத்தம் குறையும். ‘காஃபின்‘ நீக்கப்பட்ட காபி, சோயா, கொழுப்பில்லாத பால் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களையோ, காய்கறிகளையோ சாப்பிடுவது ரத்த அழுத்தம் குறைய உதவும்.

ஒருநாளைக்கு 3 கப் செம்பருத்தி டீ குடித்தவர்களுக்கு இதயத்தை பாதிக்கும் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள், ஆக்ஸிஜனை அதிகத் திறனோடுப் பயன்படுத்த இதயத்துக்கு உதவுகிறது. இதனாலும் இரத்த அழுத்தம் குறைகிறது. உணவில் உப்பைக் குறைப்பது ரத்த அழுத்தத்திற்கு மிக நல்லது. மேற்சொன்ன விஷயங்களை கடைபிடித்து ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற கொடுமையான நோய்களிலிருந்து உங்களை உஷாரா பார்த்துக்கோங்க.

0 comments:

Post a Comment

காப்பகம்