Friday, January 17, 2014

அமலாபாலின் - புது ஆசை....



சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அமலாபால் தெரிவித்தார். அனுஷ்கா, தமன்னா போன்றோர் ராணி, இளவரசி வேடங்களில் நடிக்கின்றனர்.

நயன்தாராவும் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். சிலர் விலைமாது வேடத்தில் நடித்து விருதுகள் வாங்கியுள்ளனர்.

அமலாபாலுக்கு காதல் பட வாய்ப்புகளே கிட்டியுள்ளன. கதாநாயகர்களுடன் ‘டூயட்’ ஆடவே பயன்படுத்தப்பட்டு உள்ளார். இது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அமலாபால் வீர சேகரன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சிந்து சமவெளி படத்தில் மாமனாரை காதலிக்கும் பெண்ணாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

‘மைனா’ படத்தின் வெற்றி அவரை பிரபலபடுத்தியது. தெய்வ திருமகன், காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், ‘தலைவா’ போன்ற படங்களில் நடித்தார்.

 தற்போது ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில், தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார்.

அமலாபால் கூறும் போது, ‘கிராமத்து கதையம்சம் உள்ள படத்தில் நான் அறிமுகமானதால் அது போன்ற படவாய்ப்புகள் நிறைய வந்தன. ஒரே மாதிரி நடிக்க பிடிக்கவில்லை.

சரித்திர கதையம்சம் உள்ள படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. அது போன்ற கேரக்டரை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்’ என்றார்.

0 comments:

Post a Comment

காப்பகம்