Saturday, January 18, 2014

பந்தா பேச்சுகள்தான் இன்னமும் குறையாத சிம்பு..!




விரல்வித்தை நடிகர் நடித்த படம் ஓடி ரொம்ப காலமாயிற்று. இருப்பினும் நடிகர் பேசும் பந்தா பேச்சுகள்தான் இன்னமும் குறைந்தபாடில்லை. தற்போது இரண்டு படங்களில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படங்கள் எப்போது திரைக்கு வரும் என்பதே புரியாத புதிராக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பசங்க டைரக்டரின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் விரல்வித்தை, அப்படத்தில் தானே தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். என்றபோதும், கையிலிருந்து காசை இறக்கத்தான் ரொம்ப கஷ்டப்படுகிறாராம்.

என் படத்துக்கு மார்க்கெட்டில் ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. என் படங்களின் வியாபாரம் குறைந்தபட்சம் 40 கோடி வரை செல்கிறது. அதனால், உள்ளூர், வெளியூர் மற்றும் தொலைக்காட்சி ரைட்சுக்கான பணத்தை வாங்கியே படத்தை முடித்து விடலாம் என்கிறாராம்.

இதையடுத்து, விநியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். என்றபோதும் கடைசியாக நடிகரின் நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே ஊத்திக்கொண்டதை காரணம் காட்டி, தம்பியின் படத்தை நம்பி இறங்கி வர தயங்கி நிற்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

காப்பகம்