Friday, August 22, 2014

3 வார்த்தை சொன்ன சிம்புவை 2 வார்த்தையால் காயப்படுத்திய‌ ஹன்சிகா..?

சிம்பு உடனான காதல் பிரிவு காரணமாக ஹன்சிகா உடைந்துபோய்விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். நடந்ததோ வேறு…லவ் பிரேக்கப் பற்றி நினைத்து சோர்ந்து போகாமல், தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா. சிம்பு உடனான காதல் முறிவை அவர் மறந்துவிட்டார். ஆனால் சிம்பு – ஹன்சிகா காதலையும் பிரிவையும் மீடியாக்கள் விடுவதாக இல்லை.

சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பபட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. ”இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட குணம். ஏன்னா நான் அந்த மாதிரியான குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கேன். என்று சொன்னதன் மூலம் சிம்புவின் குடும்பத்தை குறைத்து மதிப்பிடுவதுபோல் பதில் சொல்லி இருக்கிறார் ஹன்சிகா.

தொடர்ந்து பேசிய ஹன்சிகா, பிரிவு ஏற்படுறதுக்கு முன்னாடி என்கிட்ட அவர் (சிம்பு) ரெண்டு வார்த்தைதான் சொன்னாரு. அதனால காயப்பட்டு நானும் ரெண்டு வார்த்தை பேசினேன். ஆனா அவரை காயப்படுத்துறதுக்கு எனக்கு விருப்பமில்ல. இப்பவும் அவர் நல்லாயிருக்கணும்னு வாழ்த்துறேன்.” என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

காதல் பிரிவுக்கு பின்னர் நடைபெற்ற ‘வாலு’ படத்தில் கடைசிகட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன் இணைந்து நடித்துக் கொடுத்தார் ஹன்சிகா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டது. இதன் பிறகு அவர் ‘வேட்டை மன்னன்’ படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலும் ஹன்சிகாவுக்கு வரப்போகிறது. என்ன செய்யப்போகிறாரோ?

0 comments:

Post a Comment

காப்பகம்