Thursday, September 11, 2014

அவன்-இவனுக்கு பிறகு மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா..!


தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்ட விஷால் சினிமாவுக்கு வந்து இன்றோடு 10 வருடங்கள் முடிவடைந்து விட்டது. தற்போது ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடித்து வரும் விஷால், சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளார். இதுதவிர சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.

விஷால் நடிப்பு மட்டுமின்றி விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தில் தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.

பாலா இயக்கத்தில் அவன்-இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். தற்போது இப்படத்தில் விஷால்தான் நாயகன் என்றாலும், ஆர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து நடிக்கவுள்ளாராம். இப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

காப்பகம்