Thursday, September 11, 2014

விபசார வழக்கில் சுவேதாபாசுவுடன் சிக்கிய தொழில் அதிபர்..!

விபசார வழக்கில் சுவேதாபாசுவுடன் சிக்கிய தொழில் அதிபர் பெயரை அறிவிக்க வேண்டும் என நடிகைகள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த சுவேதாபாசு, சமீபத்தில் ஐதராபாத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.

பணம் சம்பாதிப்பதற்காகவே விபசாரத்தில் ஈடுபட்டதாக சுவேதா தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுவேதாவுக்கு ஆதரவாக அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை சாக்ஷி கூறியது:நடிகை சுவேதாவை மட்டும் போலீசார் குறி வைத்து செயல்படுவது ஏன்? மும்பை தொழில் அதிபரும் இதில் சிக்கி இருக்கிறார். அவர் பெயரை வெளியிடாதது ஏன்? அவரைப் பற்றி எந்த குற்றச்சாட்டும் சொல்லாமல் போலீசார் மௌனம் காப்பது ஏன்? அவர்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றனர். இதற்கு பின்னால் என்ன இருக்கிறது.


சுவேதா எந்த காப்பகத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது தாயார் சமீபத்தில் சுவேதாவை சந்திக்க சென்றிருக்கிறார் ஆனால் அனுமதிக்கப்படவில்லை. அவரிடம் பேசியபோது, ‘என் மகள் கிரிமினல் குற்றவாளி கிடையாது என கூறி அழுதார். சுவேதா பெயரை பிரபலப்படுத்துவது ஏன்? இதை தாங்க முடியாமல் அவர் எதிர்மறை முடிவு எடுத்தால் யார் பொறுப்பு.

இவ்வாறு சாக்ஷி கூறினார். அதேபோல் நடிகை குஷ்புவும் சுவேதாவை குற்றம் சொல்பவர்கள், அவருடன் பிடிபட்ட தொழில் அதிபர் யார் என்பதையும் சொல்ல வேண்டும் என கூறி இருக்கிறார். மற்ற ஹீரோயின்களும் இதற்கு ஆதரவாக இணைய தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

காப்பகம்