Friday, August 15, 2014

மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வந்த வெளிநாட்டு பெண்ணை நிர்வாணமாக்கி சில்மிஷம் செய்த ஊழியர்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வந்த வெளிநாட்டு பெண்ணை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி அவரிடம் சில்மிஷம் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் எம்.ஆர்.சி. நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு திருவான்மியூரில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம்பெண் கடந்த புதன்கிழமை வந்துள்ளார்.

சிகிச்சை பெற வந்த அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் எக்ஸ்ரே பிரிவுக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(37) அந்த பெண்ணிடம் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றால் தான் எக்ஸ்ரே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் பிறகு ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். அதன் பிறகு கார்த்திகேயன் எக்ஸ்ரே எடுக்கிறேன் என்ற பெயரில் அவரை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நேராக மைலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment

காப்பகம்