Monday, January 20, 2014

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்!




”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ”என்று மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், தனது சம்பள விபரத்தை தெரிவிக்க கூடாது என பெண்ணின் கணவர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து பெண்ணின் கோரிக்கையை அலுவலகம் நிராகரித்தது.

இதனால் அந்த பெண், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ கணவரின் சம்பள விவரத்தை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இது போன்று வரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் நிராகரிக்க கூடாது.

அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது. மேலும், அபராதத்திற்குரிய செயல் என டெல்லி உள்துறை அலுவலகத்திற்கு தகவல் ஆணையர் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மக்களின் வரி பணத்திலிருந்து தான் வழங்கப்படுகி றது. மேலும், அவர்களின் சம்பள பட்டியலை தெரிவிப்பது ஆர்டிஐ சட்டத்தின்படி கட்டாயமாகும். எனவே, இதுபோன்று சம்பளவிபரத்தை தெரியபடுத்துவது மூன்றாவது நபருக்கு தெரிவிப்பதாக கருத இயலாது.

இது போன்று சம்பள விபரம் கேட்டு வரும் விண்ணப்பங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்க இயலாது என கூறி நிராகரிக்க முடியாது”என்று அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

காப்பகம்