Tuesday, January 14, 2014

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

காப்பகம்