Tuesday, January 14, 2014

மணிரத்னமா...? ஓடும் பைனான்சியர்கள் .....




கடல் படத்தையடுத்து புதிய படம் தொடங்க உள்ளார் மணிரத்னம். இதற்காக 3 ஸ்கிரிப்ட் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தற்போது அவை முடிவடையும் தருவாயில் உள்ளது.

தமிழ், மலையாளத்தில் இயக்கவுள்ள காதல் கதை அம்சம் கொண்ட படத் தில் மல்லுவுட் ஹீரோ பஹத் பாசில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதேபோல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்கிரிப்ட்டில் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.

3வது ஸ்கிரிப்ட்டை இந்தியில் இயக்க எண்ணி உள்ளார். சில வருடங்களுக்கு முன்பே மகேஷ் பாபு நடிக்க பொன்னியின் செல்வன் என்ற படத்தை மணிரத்னம் இயக்குவதாக இருந்தது. அப்போது பேட்டி அளித்த மகேஷ்பாபு,மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது எனது கனவு. அது நிஜமாகும் நேரம் வந்திருக்கிறது என்றார்.

பின்னர் அது கைவிடப்பட்டது. தற்போது இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இதன் ஷூட்டிங் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

மணிரத்னம் படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறாரா என்று கேட்டதற்கு அவரது மனைவி நர்மதா ஷிரோட்கர் கூறும்போது, ஆமாம். இது பற்றி இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என் றார்.

ஆனால் அடுத்தடுத்து தோல்வி படங்கள் தந்ததால் மணிரத்னம் படத்துக்குபைனான்ஸ் பிடிப்பதில் சிக்கல் இருக்கிறதாம். இதை போக்கவும் அவர் தரப்பில் முயற்சி நடக்கிறதாம் 

0 comments:

Post a Comment

காப்பகம்