Thursday, September 4, 2014

ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா... ராகவா லாரன்சின் புதிய முயற்சி..!

சில ஆண்டுகளுக்கு முன்பு கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு வீடு இரு வாசல் என்ற படம் வெளியானது நினைவிருக்கலாம். ஒரே படத்துக்குள் இரு கதைகள் என்ற பாணியில் உருவாக்கப்பட்ட படம் அது.

அன்றைக்கு அது புதுமையான முயற்சியாக பார்க்கப்பட்டது. இப்போது அதைவிடப் புதுமையாக, ஒரு படத்துக்குள் இரு முழுமையான படங்களைக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘முனி' படத்தின் 3-ம் பாகமான ‘கங்கா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் களமிறங்கியுள்ள இவர், இப்படத்தை தொடர்ந்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.

தன் படத்துக்கு 'ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா... ஒண்ணு கிழவன், ஒண்ணு கருப்பு துரை' என்று தலைப்பிட்டுள்ளார். அதாவது, இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்கு பிறகு இன்னொரு படமாகவும் இதை எடுக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களிலும் இவரே கதாநாயகனாக நடிக்கிறார். ‘கருப்புதுரை' படத்திற்கு ராய் லட்சுமி கதாநாயகியாக தேர்வாகியுள்ளார். ‘கிழவன்' படத்தில் நடிக்க ஆண்ட்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்படங்களின் பாடல்களையும், வசனத்தையும் கவிஞர் விவேகா எழுதுகிறார். இசையை லியோன் மற்றும் புதியவர் ஒருவரும் அமைக்கவிருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பை நேற்று செய்தியாளர்களை அழைத்து அறிவித்தார் ராகவா லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் நாயகி ராய் லட்சுமியும் பங்கேற்றார்.
இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு சினிமாவை ஒரு டிக்கெட் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஒரே டிக்கெட்டில் ரெண்டு சினிமாவை பார்க்கக்கூடிய நிலையை உருவாக்கித் தரப் போகிறார் ராகவா லாரன்ஸ்.

0 comments:

Post a Comment

காப்பகம்