Wednesday, September 10, 2014

பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவர் எரித்துக்கொலை 3 பேர் கைது..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவர் எரித்துக்கொலை 3 பேர் கைது : -

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம்பிடித்தவர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போனில் படம் பிடிப்பு:- ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கண்ணன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 20). இவர் பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதை குளித்து கொண்டிருந்த அந்த பெண் பார்த்து பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் சுதாகரின் வீட்டில் சொல்லி இரு வீட்டினரும் சுதாகரை கண்டித்ததாக தெரிகிறது.

மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தை கூட்டி சுதாகரை விசாரிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன சுதாகர் கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீடடுக்கு சென்று தங்கி விட்டார்.

தீ வைப்பு:- இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை விடியற்காலையில் உடல் முழுவதும் தீக்காயத்துடன் வீட்டுக்கு வந்த சுதாகர் பெற்றோரிடம் தன்னை சிலர் வழிமறித்து தாக்கி உடல் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக சுதாகரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னை சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டதாக தெரிவித்தார்.

3 பேர் கைது:- அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் தந்தை கண்ணியப்பன் (வயது 43), சகோதரர் முருகன் (20), உறவினரான மற்றொரு முருகன் (33) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

காப்பகம்