Saturday, August 16, 2014

பிள்ளைகளை டிவி பார்க்க வைத்து விட்டு கள்ளக்காதல் ஜோடி அறையில் உல்லாசம்

குலசேகரம்: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே செறுகோணத்தை சேர்ந்தவர் மலையன் (42). நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் காவியா (34 இருவரது பெயரும் மாற்றம்). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு மலையன், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது திருவட்டார் அருகே கல்லுபாலத்தை சேர்ந்த கீதா (34, பெயர் மாற்றம்) உடன் பழக்கம் ஏற்பட்டது. கீதாவுக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். கணவர் பிரிந்து சென்று விட்டார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அடிக்கடி கள்ளக்காதலி கீதாவுடன், மலையன் ஊர் சுற்றத் தொடங்கினார். இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரம் காவியா வுக்கு தெரியவந்தது. இதையடுத்து காவியா, கணவர் மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்தார். ஆசாரிபள்ளத்தில் உள்ள தாய் வீட்டின் அருகில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இதனால் கணவரின் கள்ளக்காதலுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டதாக காவியா நினைத்தார். இந்த நிலையில் நேற்று குலசேகரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காவியா புறப்பட்டார். இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது திருவட்டார் அருகே கல்லுபாலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, கணவரின் பைக் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பஸ்சில் இருந்த காவியா அடுத்த ஸ்டாப்பில் அவசரமாக இறங்கினார். நேராக கணவரின் பைக் இருந்த வீட்டுக்கு சென்றார். வீடு திறந்து இருப்பதை கண்டவர் உள்ளே நுழைந்தார். இரு பிள்ளைகள் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவர், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அதிரடியாக நுழைந்தார். அந்த அறையில் உள்ள கட்டிலில் கணவர் மலையன், கள்ளக்காதலி கீதாவுடன் அரைகுறை ஆடைகளுடன் இருப்பதை கண்டு ஆவேசம் அடைந்தார். உடனே அங்கேயே அழுது புரண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இது குறித்து உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு மலையன், காவியா, கீதா ஆகிய 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு கள்ளக்காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறினர். பின்னர் அவர்களிடம் தனித்தனியாக எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

0 comments:

Post a Comment

காப்பகம்