Saturday, August 16, 2014

சமத்தான நடிகை சமந்தா இப்படி பண்ணிட்டாரே...!

இதுவரை சமத்து பொண்ணாக இருந்த சமந்தா, அஞ்சான் மூலமாக முதன் முறையாக தமிழில் பிகினி அவதாரம் எடுத்துள்ளார்.

நான் ஈ, நீதான் என் பொன் வசந்தம், போன்ற திரைப்படங்களில் மிகவும் கண்ணியமான ஆடை அணிந்து தமிழ் கூறும் நல்லுலக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமந்தா.

ராமய்யா ஒஸ்தாவய்யா தெலுங்கு திரைப்படத்தில் பிகினியில் நடித்திருந்தாலும், தமிழர்கள் பலருக்கும் இதை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தையும், வாட்டத்தையும் போக்க, நான் எதற்கும் அஞ்சமாட்டேன் என்று அஞ்சான் தமிழ் படத்தில் பிகினி உடைக்கு மாறியுள்ளார் சமந்தா.

படம் நெடுகிலும் குட்டை ஆடை கட்டி வந்தாலும், பாடல் காட்சி ஒன்றில் நான்கைந்து செகண்டுகளில் பிகினியில் தோன்றி மறையும் சமந்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் ரசிக சிகாமணிகள். ஹோம்லி பொண்ணு இப்படி ஆயிடுச்சே என்று பச்சாதாபபட்டவர்களும் உண்டு. சிலருக்கோ இந்த பொண்ணு உடம்புக்கு இதெல்லாம் ஓவரா இல்லை என்ற நினைப்பும் வந்து சென்றது.

எது எப்படியோ, தெலுங்கருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நான் தாராளமானவர்தான் என்று காண்பித்துள்ளார் சமந்தா. அந்த வகையில் தமிழகத்துக்கு மற்றொரு பிகினி நாயகி கிடைத்துவிட்டார். இந்நிலையில் இளைய தளபதி விஜய்யுடன், சமந்தா நடிக்கும், கத்தியிலும் இதுபோன்ற காட்சி இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது இயற்கைதான்.

0 comments:

Post a Comment

காப்பகம்