Sunday, December 22, 2013

கம்பர்



1. பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது (சோழநாட்டுத் திருவெழுந்தூர்)

2. இறந்த ஊர்: பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை

3. தந்தை: ஆதித்தன்

4. போற்றிவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்

5. காலம்: 12 ஆம் நூற்றாண்டு

6. சயங்கொண்டார், ஒட்ட்க்கூத்தர், புகழேந்தி புலவர் ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள்.

7. கம்பர் 1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.

8. நூல்கள்: ஏர் எழுபது, திருக்கை வழக்கம்(இரண்டும் உழவு பற்றியது), கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி

9. கம்பர் மகன் அம்பிகாபதி

10. அம்பிகாபதி எழுதியது அம்பிகபதிக்கோவை

11. சிறப்பு: கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், கல்வியில் பெரியர் கம்பர், வெண்பா பாடுவதில் வல்லவர், விருதப்பா பாடுவதில் வல்லவர்.

12. புகழுரைகள்:

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

 “கம்பனைப் போல் வள்ளுவனைப் போல்

 இலங்கோவடிகள் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”

 “யாமறிந்த புலவரிலே”

-பாரதி

 உழவின் சிறப்பு

 மேழி- கலப்பை, ஏர்; வேந்தர்- மன்னர்; ஆழி- மோதிரம்; சூழ்வினை-உண்டாகும் வறுமைத் துன்பம்; காராளர்- மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.

கம்பராமாயணம்

"தாதுகு சோலை தோறும் சன்பகக் காடு தோறும்
 போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்
 மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்
 ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே"

தாதுகு- மகரந்தம், போது- மலர், பொய்கை- குளம், பூகம்- கமுகம்(பாக்கு மரம்)

 "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

 நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

 அலகிலா விளையாட்டுடையார் அவர்

 தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"

உலவாக்கல்- உண்டாகுதல்( படைத்தல்); நிலைபெருத்தல்- காத்தல்; நீக்கல்-அழித்தல்; நீங்கலா- இடைவிடாது; அகிலா- அளவற்ற; அன்னவர்- அத்தகைய இறைவன்; தலைவன்- இறைவன்; சரண்- அடைக்கலம்

1. கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”

2. வழிநூல் என்றும் கூறுவர்.

3. காண்டங்கள்:

4. பாலகாண்டம்

5. அயோத்தியா காண்டம்

6. ஆரணிய காண்டம்

7. கிட்கிந்தா காண்டம்

8. சுந்தர காண்டம்

9. யுத்த கண்டாம்

 காண்டம்- பெரும் பிரிவு, படலம்- உட்பிரிவு




0 comments:

Post a Comment

காப்பகம்