Sunday, December 22, 2013

போரில் முக்கியப் பங்கு

பாகிஸ்தானுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த மிக்-21 எப்.எல். ரக போர் விமானம் கடந்த 11-ஆம் தேதியன்று இறுதியாக விண்ணில் பறந்து சேவையில் இருந்து விடை பெற்றது.

இதனையடுத்து மிக் விமானங்களுக்குப் பதிலாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான சோதனை ஓட்டம் இன்று நிறைவு பெற்றதை அடுத்து விமானத்தை இந்திய விமானப்படை சேவையில் இணைப்பதற்கான 2-அம் நிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பத்திரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமானப்படை தளபதி பிரவுனிடம் வழங்கினார்.

0 comments:

Post a Comment

காப்பகம்