Saturday, August 23, 2014

வெள்ளி நகைகள் பாதுகாப்பும் பயன்களும்..! - இதோ உங்களுக்காக...


  • வெள்ளி நகைகள் பாதுகாப்பும் பயன்களும்
  • வெள்ளி நகைகள் வெப்பம் உண்டாக்கும் இயல்பு கொண்டவை.
  • உடலில் உண்டாகும் இசிவு எனும் நோயை அகற்றக்கூடியது.
  • மனதில் மிகுந்த குதூகலத்தை உண்டாக்கக் கூடியது.
  • மலச்சிக்கலை நீக்கும் ஆற்றல் பெற்றது.
  • உடலின் உள்ளே உள்ள கொதிப்பை அகற்றும் தன்மை கொண்டது.
  • மூளைக்கு மிகுந்த வலிமையை உண்டாக்கும் இயல்பு கொண்டது.
  • பெண்களுக்கு பெரும்பாலும் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளிலும் முழங்கை போன்ற மூட்டுப் பகுதிகளிலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு. இதற்கு ருமாட்டிக் “ஆர்த்தரைட்டிஸ்’ என்று ஆங்கிலத்தில் பெயர். இதனை அகற்ற பெண்கள் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளில் கால் விரல்களில் வெள்ளி நகை அணிய வேண்டும்.
  • காலில் அணியும் மெட்டியால் வலியில்லாமல் ஈஸியான சுகப் பிரசவம் ஏற்படும் என்பது ஒரு நம்பிக்கை.
  • காலில் அணியும் கொலுசு, தண்டையினால் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தியை மீட்டு ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி கூடும்.
  • தங்கம், வெள்ளி எந்த நகைகளாக இருந்தாலும் நெக்லஸ், செயின், கொலுசு, பிரேஸ்லெட், ஆரம் போன்றவற்றை வைக்கும்போது வளைத்துச் சுருட்டி வைக்கக்கூடாது. வளைத்தால் விரைவில் இணைப்பு விட்டு விடலாம். இதைத் தவிர்க்க நீளமான பெட்டியில் வைக்க வேண்டும்.
  • வெல்வெட் துணி, நல்ல வெள்ளைத் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் நகைகளை வைத்தால் நகைகள் புதிது போல் இருக்கும்.
  • உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்துக் கழுவித் துடைத்தால் பளிச்சென மின்னும்.
  • திருநீறு கொண்டு தேய்த்துக் கழுவினாலும் வெள்ளி நகைகள் கறுப்பு போய் மிளிரும்.

0 comments:

Post a Comment

காப்பகம்