Saturday, January 4, 2014

அதுவே, தியானம்..!




தினமும் உறங்குகிறோம் நாம், தூக்கமே இல்லாமல் வாழவே முடியாது. அதாவது கண்டிப்பாக இந்த உடலுக்கு "ஓய்வு" தேவை. ஓய்வு அவ்வளவு முக்கியதானது. நாம் வெறுமனே அமர்ந்து இருந்தாலும் அல்லது படுத்து தூங்கினாலுமே கூட சக்தி விரயமாகிறது, அதாவது உடல் உழைக்கிறது. காரணம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் சக்தி தேவை. அதுவும் தூங்கும் போது தான் அதிக எண்ணங்கள் மனதில் அலைபாயுகின்றன.

ஆக, நம்முடன் நம் ஆயுள் வரை வரும் உடலை நாம் காக்கின்றோம் ஆனால் மனதிற்கு எப்படி ஓய்வு கொடுப்பீர். அது கூட ஓய்வு பெற்றால் தான் புத்துணர்ச்சியுடன் விளங்கும். மேல் மனதில் வினாடிக்கு 2 ஆயிரம் எண்ணங்களும், உன்னை அறியாமல் அடி மனதில் வினாடிக்கு 4 கோடி எண்ணங்களும் (குறைந்தபட்சம்) பரிசீலிக்கபடுகிறது.

அப்படிபட்ட மனதிற்கு ஓய்வு கொடுத்தால் எவ்வளவு நன்றாக வேலை செய்யும், சரி காலாகாலத்துக்கும் உன்னிடம் பயணிக்கும் அற்ப உடலுக்கு ஓய்வு தருகிறாய், மனதிற்கு? மனதிற்கு ஓய்வு அளிப்பது என்றால் என்ன தெரியுமா..?!

அதுவே, தியானம்..!

0 comments:

Post a Comment

காப்பகம்