Monday, December 30, 2013

20 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்...!!!




கோலிவுட்டின் மற்றொரு நம்பகமான ஹீரோவாக உருவெடுத்து வரும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெருவெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்தது. இவர் தற்பொழுது “மான் கராத்தே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.


மான் கராத்தே திரைப்படம் தற்பொழுதுதான் உருவாகிவரும் சூழலில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமைகள் ஏற்கெனவே 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கள் பரவியிருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்தான் ரிலீசிற்கும் முன்பாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படும். அத்தகைய சாதனையை சிவகார்த்திகேயன் மிகக் குறைந்த காலத்திலேயே, மிகக் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துப் பெற்றிருக்கிறார்.


மான் கராத்தே திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனத்தில், அவரது முன்னால் உதவி இயக்குனரான திருக்குமரனால் இயக்கப்பட்டு வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.


ஹன்சிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

காப்பகம்