Tuesday, September 10, 2013

பள்ளி மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் போட்டி!


கூகுள் நிறுவனம் நடத்தும் படைப்பாக்கத் திறன் போட்டியில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும், இப்போட்டியில் பங்கேற்பது எளிது. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.

மாணவர்கள் ஏதேனும் ஒரு கதை, விளையாட்டு, இசைப் போட்டி, கார்ட்டூன் அல்லது ஏதேனும் ஒரு வித்தியாசமான படைப்பை பற்றி சிந்தித்து, MIT Media Lab உருவாக்கியுள்ள ஸ்கிராட்ச் (Scratch) புரோகிராமிங் லேங்க்வேஜை உபயோகித்து புதிதாக ஏதேனும் ஒன்றை உருவாக்கவேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் Scratch அல்லது  C+ + அல்லது Java  மொழியைப் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கலாம்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் ஒன்பது மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள டேப்லெட் அல்லது அதற்கு இணையான எலெக்ட்ரானிக் பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2013

விவரங்களுக்கு


0 comments:

Post a Comment

காப்பகம்