Pages - Menu

Pages

Sunday, August 24, 2014

லிங்காவில் ரஜினியின் புதிய பஞ்ச் டயலாக்..!

ரஜினி படம் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், சிவாஜி மற்றும் இயந்திரன் படங்களில் அவ்வளவாக பஞ்ச் இல்லையென்றாலும் அவற்றின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக திருப்திப்படுத்தியது.


நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்திருக்கும் ரவிக்குமார் கதையை ஒட்டிய பரபரப்பான பல வசங்களை எழுதியுள்ளதாக தெரியவருகிறது. லிங்கா படத்தில் ரஜினியின் பாத்திரம், ராஜ வம்சத்தில் பிறந்த ஒருவன் மக்களுக்காக பாடுபட்டு ஒரு அணையை கட்ட திட்டமிடுவதாகவும் அதை செய்யும் பொருட்டு வரும் காட்சியில் பின்வரும் பஞ்ச் வசனம் வருவாதகவும் எதிர்ப்பர்க்கபடுகிறது.

"எனக்கு ஹிந்து வேண்டாம், முஸ்லிம் வேண்டாம், கிறிஸ்டியன் வேண்டாம், செட்டியார், நாடார், முதலியார் யாரும் வேண்டாம், இந்தியனா இருக்கறவன் மட்டும் என் கூட வாங்க" என்று வரும் அந்த குறிப்பிட்ட காட்சி திரியாரங்குகளில் பட்டையை கிளப்பும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment